search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் கொரோனா தொற்று அதிகரிப்பு - தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதார துறையினர் தீவிரம்
    X

    குமரியில் கொரோனா தொற்று அதிகரிப்பு - தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதார துறையினர் தீவிரம்

    • மாவட்டம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தப் பட்டு வருகிறது.
    • தினமும் 2, 3 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது

    நாகர்கோவில் :

    தமிழகத்தில் மீண்டும் கொேரானா பாதிப்பு அதிக ரிக்க தொடங்கியுள்ளது.

    இதையடுத்து முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வரு கிறது. பள்ளித்தேர்வுகளை முன்கூட்டியே நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. கொரோ னாவை கட்டுப்படுத்தும் விதத் தில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண் டும் என்று அரசு வேண்டு கோள் விடுத்துள்ளது. மாவட்டம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தப் பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்திலும் மருத்துவ முகாம்கள் நடை பெற்று வருகிறது. நடமாடும் மருத்துவ குழு மூலமாகவும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளிலும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தில் ஏற்கனவே நடந்து வரும் மருத்துவ முகாம்களில் தினமும் 2, 3 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் சளி பாதிப் பால் 25-க்கும் மேற்பட் டோர் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    இது ஒரு புறம் இருக்க கொரோனா பாதிப்பும் அதிகரித்து வருவதாக குமரி மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே கடந்த மாதத்தில் 15 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் இந்த மாதத்தில் இதுவரை 25-க்கும் மேற் பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவு றுத்தப்பட்டுள்ளது. அரசு தெரிவித்துள்ள விதிமுறை களை கடைபிடிக்க வேண் டும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. குமரி மாவட்ட எல்லை பகுதிகளிலும் சுகா தா ரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள்.

    வெளிநாடுகளில் இருந்து வருபவர்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    Next Story
    ×