search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "INDvSL"

    • 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.
    • முதல் போட்டியின் தோல்விக்கு இலங்கை பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது.

    புனே:

    இந்தியா, இலங்கை அணிகள் மோதிய முதல் டி20 போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது .இந்த போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அத்துடன் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.

    இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து சஞ்சு சாம்சன் விலகியுள்ளார். காயம் காரணமாக மீதமுள்ள இரு டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன் விளையாட மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஜிதேஷ் ஷர்மா விளையாடுவார் என அறிவித்துள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளும் மோதும் இரண்டாவது டி20 போட்டி புனே மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.

    முதல் போட்டியில் கிடைத்த தோல்விக்கு இலங்கை அணி பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது.

    • முதல் டி20 போட்டியில் பீல்டிங் செய்தபோது சஞ்சு சாம்சன் காலில் காயம் ஏற்பட்டது.
    • மீதமுள்ள போட்டிகளில் சஞ்சு சாம்சன் விளையாட மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    மும்பை:

    இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. போட்டியில் பீல்டிங் செய்தபோது இந்திய வீரர் சஞ்சு சாம்சன் காலில் காயம் ஏற்பட்டது.

    இந்நிலையில், இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து சஞ்சு சாம்சன் விலகியுள்ளார். காயம் காரணமாக மீதமுள்ள இரு டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன் விளையாட மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஜிதேஷ் ஷர்மா விளையாடுவார் என அறிவித்துள்ளது.

    • இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
    • அந்த அணி இந்திய அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது.

    மும்பை:

    இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இந்திய அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது.

    இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடருக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி20 தொடரில் மூத்த வீரர்கள் ரோகித், விராட், கே.எல்.ராகுல் ஆகியோர் இடம்பெறவில்லை.

    காயம் காரணமாக கடந்த டி20 உலக கோப்பையில் இருந்து ஒதுங்கி இருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் இந்திய டி20 அணியில் இடம் பெறவில்லை.

    இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு மூத்த வீரர்களான ரோகித், கோலி ஆகியோர் அணிக்கு திரும்புகின்றனர். இந்த அணிக்கு ரோகித் தலைமை தாங்குகிறார். இந்த இரு தொடர்களுக்குமான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அப்போது இடம்பெறவில்லை.

    இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜஸ்பிரீத் பும்ரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:

    ரோகித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் அய்யர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.

    • துவக்க வீரர் பதும் நிசங்கா, தனஞ்செய டி சில்வா ஆகியோரை விரைவில் அவுட் ஆக்கினார் ஷிவம் மவி.
    • இலங்கை அணியின் கேப்டன் தசுன் சனகா, ஹசரங்கா டி சில்வா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

    இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்தது.

    துவக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 37 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஷூப்மான் கில்(7), சூர்யகுமார் யாதவ் (7), சஞ்சு சாம்சன் (5) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 29 ரன்களில் விக்கெட்டை இழந்தார். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய தீபக் ஹூடா ஆட்டமிழக்காமல் 41 ரன்களும், அக்சர் பட்டேல் ஆட்டமிழக்காமல் 31 ரன்களும் சேர்த்ததால் இந்தியா கவுரவமான ஸ்கோரை எட்டியது.

    இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்தனர். துவக்க வீரர் பதும் நிசங்கா(1), தனஞ்செய டி சில்வா (8) ஆகியோரை விரைவில் அவுட் ஆக்கினார் ஷிவம் மவி. அதன்பின்னரும் சீரான இடைவெளியில் இலங்கை விக்கெட்டுகள் சரிந்தன. அசலங்கா 12 ரன்னிலும், குஷால் மென்டிஸ் 28 ரன்னிலும், பனுகா ராஜபக்சே 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    கேப்டன் தசுன் சனகா, ஹசரங்கா டி சில்வா ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. ஹசரங்கா 21 ரன்களும், தசுன் சனகா 45 ரன்களும் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். இதனால் ஆட்டம் கடைசி வரை விறுவிறுப்பாக சென்றது.

    கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலையில், அக்சர் பட்டேல் வீசிய அந்த ஓவரை எதிர்கொண்ட கருணாரத்னே, 3வது பந்தில் சிக்சர் அடித்து நம்பிக்கை அளித்தார். ஆனால் 5வது பந்தில் கசுன் ரஜிதா ரன் அவுட் ஆனதால் நம்பிக்கை தகர்ந்தது. கடைசி பந்தில் 4 ரன் தேவைப்பட்ட நிலையில், அந்த பந்தில் கருணாரத்னே ஒரு ரன் எடுத்து, இரண்டாவது ரன்னுக்கு ஓடியபோது மறுமுனையில் தில்சன் ரன் அவுட் ஆனார். இதனால், இலங்கை அணி 160 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கருணாரத்னே 23 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    இதனால் இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் ஷிவம் மவி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். உம்ரான் மாலிக், ஹர்சல் பட்டேல் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    • துவக்க வீரர் இஷான் கிஷன் 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 37 ரன்கள் சேர்த்தார்
    • கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 29 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

    இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அணியை வழிநடத்துகிறார். இந்திய அணியில் சிவம் மவி, ஷூப்மான் கில் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமாகி உள்ளனர்.

    டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்தது.

    துவக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் 3 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஷூப்மான் கில்(7), சூர்யகுமார் யாதவ் (7), சஞ்சு சாம்சன் (5) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 29 ரன்களில் விக்கெட்டை இழந்தார். கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய தீபக் ஹூடா ஆட்டமிழக்காமல் 41 ரன்களும், அக்சர் பட்டேல் ஆட்டமிழக்காமல் 31 ரன்களும் சேர்த்ததால் இந்தியா கவுரவமான ஸ்கோரை எட்டியது.

    இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.

    • இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
    • குறைவான பவுண்டரி தூரம் கொண்ட மும்பை மைதானம் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது.

    மும்பை:

    இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி இந்தியா பேட்டிங் செய்கிறது.

    இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டயா அணியை வழிநடத்துகிறார். இந்திய அணியில் சிவம் மவி, ஷூப்மான் கில் சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமாகி உள்ளனர்.

    குறைவான பவுண்டரி தூரம் கொண்ட மும்பை மைதானம் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது. 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் என கணிக்கப்பட்டிருப்பதால், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்திருக்கிறது. எனவே, முதலில் ஆடும் இந்தியா அதிக ரன்ரேட் வைத்தால் மட்டுமே வெற்றியை வசமாக்க முடியும் என்ற நிலை உள்ளது.

    • இலங்கையை விட இந்திய மைதானங்கள் நன்றாக இருக்கும்.
    • இந்திய அணிக்கு எதிரான ஆட்டம் எப்போதுமே சவாலாகத்தான் இருக்கும். இந்த முறை எங்களிடம் சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் மும்பையில் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் உலகக்கோப்பை போட்டிக்கு உதவும் என்று இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவில்தான் நடக்கிறது. அந்த வகையில் நாளை தொடங்கும் 20 ஓவர் கிரிக்கெட்தொடர் எங்களுக்கு பயனுள்ளதாக அமையும். இந்தியாவின் மைதானங்கள் குறித்து நாங்கள் அறிவதற்கு இந்த தொடர் உதவியாக இருக்கும். உலகக்கோப்பை தொடருக்கு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் முக்கியமானவை. எங்கள் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பலருக்கு இந்தியாவில் விளையாடிய அனுபவம் கிடையாது. அந்த வகையில் இது எங்களுக்கு மிக முக்கியமான தொடர்.

    இலங்கையை விட இந்திய மைதானங்கள் நன்றாக இருக்கும். அதுவும் எங்கள் வீரர்களுக்கு சாதகமாக அமையும். உலகக்கோப்பை டி20 தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை. இந்திய அணி பலமாக உள்ளது. அதனை வெல்ல மிக சிறப்பாக இலங்கை விளையாட வேண்டும். இந்திய அணிக்கு எதிரான ஆட்டம் எப்போதுமே சவாலாகத்தான் இருக்கும். இந்த முறை எங்களிடம் சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இலங்கையில் நடந்த லங்கா ப்ரீமியர் லீக் (எல்.பி.எல்) இளம் வீரர்களை அடையாளம் காண உதவியது. இதில் கிடைத்த அனுபவம் எங்களுக்கு கைகொடுக்கும்.

    ஆசிய மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் மைதானங்களுக்கு இடையில் வித்தியாசங்கள் உள்ளன. ஆசிய நாடுகளுக்கு ஆஸ்திரேலிய மைதானங்கள் நன்கு பழக்கப்பட்டவை கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் - தசுன் ஷனகா (கேப்டன்), பதும் நிஸ்ஸங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்கா, சாமிக்க கருணாரத்னா, சதீர சமரவிக்ரமா, குசல் மெண்டிஸ், பானுக ராஜபக்ஷ, அஷேன் பண்டாரா, மஹீஷ் தீக்ஷனா, டில்ஷான் ராஜதுஞ்சனா, டில்ஷான் மதுஞ்சனகா, டில்ஷான் மதுஞ்சன, மதுஷான், லஹிரு குமாரா, நுவன் துஷாரா

    • ஆடுகளத்தின் தன்மை, வீரர்களின் திறமை ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து வீரர்கள் தேர்வு இருக்கும்.
    • 2022-ம் ஆண்டு எனக்கு மேஜிக்கல் ஆண்டாக இருந்தது.

    மும்பை:

    இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஆட்டம் மறறும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

    இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் மும்பையில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி உள்ளிட்டோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஒவ்வொரு வீரருக்கும் போதுான வாய்ப்பு வழங்கப்படும் என்று கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    2022-ம் ஆண்டு எனக்கு மேஜிக்கல் ஆண்டாக இருந்தது. ஒரு சிறிய ஓய்வை எடுத்துக் கொண்டு எனது உடல் தகுதியை மேம்படுத்திக் கொண்டு அணிக்கு திரும்பி உள்ளேன்.

    20 ஓவர் உலக கோப்பையை வெல்ல நினைத்தோம். ஆனால் கடந்த ஆண்டு அது நடக்காமல் போனது. 2023-ல் நடைபெறும் உலக கோப்பையை வெல்வது தான் எனது புத்தாண்டு தீர்மானமாகும்.

    எதிர்காலத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். ஒவ்வொரு வீரருக்கும் போதுமான வாய்ப்பை வழங்குவோம். ஆடுகளத்தின் தன்மை, வீரர்களின் திறமை ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து வீரர்கள் தேர்வு இருக்கும்.

    விபத்தில் காயம் அடைந்த ரிஷப்பண்ட் வேகமாக குணமடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். இந்த விபத்து துரதிர்ஷ்டவசமானது. அவருக்காக அணியில் உள்ள அனைத்து வீரர்களும் விரைவில் குணமடைய பிரார்த்தி வருகிறார்கள்.

    இவ்வாறு ஹர்திக் பாண்ட்யா கூறியுள்ளார்.

    இனிவரும் காலங்களில் ஹர்திக் பாண்ட்யா 20 ஓவர் அணிக்கு கேப்டனாக இருப்பார். ரோகித் சர்மா டெஸ்ட், ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக தொடர்ந்து நீடிப்பார்.

    • மூத்த வீரர்களை பொறுத்தவரை அடுத்த 20 ஓவர் உலக கோப்பையில் இடம் பிடிப்பது கடினம் தான்.
    • கடந்த ஆண்டில் இந்தியா அதிகபட்சமாக மொத்தம் 40 சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் விளையாடியது. 31 வீரர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

    மும்பை:

    இந்தியாவுக்கு வருகை தந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு அரங்கேறுகிறது.

    இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டயா அணியை வழிநடத்த உள்ளார். 2024-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு சரியான வீரர்களை அடையாளம் காண்பதற்கான தொடக்கமாக இந்த தொடர் அமையும்.

    அத்துடன் ஹர்திக் பாண்ட்யாவை 20 ஓவர் அணிக்கான நிரந்தர கேப்டனாக நியமிப்பதற்கான அடித்தளமாகவும் இந்த தொடர் இருக்கப்போகிறது. மூத்த வீரர்களை பொறுத்தவரை அடுத்த 20 ஓவர் உலக கோப்பையில் இடம் பிடிப்பது கடினம் தான். அதனால் இனி அவர்கள் ஒதுங்கி விடுவதற்கு வாய்ப்புள்ளது.

    கடந்த ஆண்டில் இந்தியா அதிகபட்சமாக மொத்தம் 40 சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் விளையாடியது. 31 வீரர்கள் பயன்படுத்தப்பட்டனர். இதே போல் இந்த ஆண்டிலும் பரிசோதனை முயற்சியாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காராக அதிரடி வீரர் இஷான் கிஷனுடன், ருதுராஜ் கெய்க்வாட் அல்லது சுப்மான் கில் இறங்குவார்கள்.

    மிடில் வரிசையில் துணை கேப்டன் சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் பலம் சேர்க்கிறார்கள். பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப்சிங், உம்ரான் மாலிக் நம்பிக்கை அளிக்கிறார்கள். கடந்த ஆண்டில் ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர்4 சுற்றில் இலங்கையிடம் தோல்வி அடைந்த இந்திய அணி அதற்கு பழிதீர்க்க இது சரியான தருணமாகும்.

    ஆசிய சாம்பியனான இலங்கை அணி தசுன் ஷனகா தலைமையில் அடியெடுத்து வைக்கிறது. பதும் நிசாங்கா, ராஜபக்சே, தனஞ்ஜெயா டி சில்வா, குசல் மென்டிஸ், சுழற்பந்து வீச்சாளர் வானிந்து ஹசரங்கா என்று அந்த அணியில் திறமையான வீரர்கள் இருப்பதால் கடும் சவால் அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. குறைவான பவுண்டரி தூரம் கொண்ட மும்பை மைதானம் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது. அதனால் ரசிகர்கள் ரன் விருந்தை எதிர்பார்க்கலாம்.

    2-வது பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். இவ்விரு அணிகளும் இதுவரை சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் 26 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 17-ல் இந்தியாவும், 8-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:- இந்தியா: இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட் அல்லது சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷல் பட்டேல், அர்ஷ்தீப்சிங், உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல்.

    இலங்கை: பதும் நிசாங்கா, குசல் மென்டிஸ், தனஞ்ஜெயா டி சில்வா, சாரித் அசலங்கா, ராஜபக்சே, தசுன் ஷனகா (கேப்டன்), ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, தீக்ஷனா, தில்ஷன் மதுஷன்கா, லாஹிரு குமாரா. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
    • நாளைய போட்டியில் புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

    மும்பை:

    இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

    இதில் பங்கேற்க ஷனகா தலைமையிலான இலங்கை அணி வீரர்கள் கொழும்பில் இருந்து விமானம் மூலம் மும்பை வந்து சேர்ந்தனர்.

    இந்தியா-இலங்கை அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி நாளை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கிறது. இப்போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

    இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக ஹர்த்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    பேட்டிங்கில் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், சுப்மன் கில், ராகுல் திரிபாதி ஆகிய வீரர்கள் உள்ளனர். பந்து வீச்சில் அர்ஷ்தீப்சிங், சாகல், அக்சர் பட்டேல், ஹர்ஷல் பட்டேல், உம்ரான் மாலிக் ஆகியோர் உள்ளனர். ஆல் ரவுண்டர்கள் தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர் உள்ளனர்.

    முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ள இந்திய அணி, 20 ஓவர் போட்டியில் சாதிக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய போட்டியில் புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று தெரிகிறது.

    இலங்கை அணியில் அவிஷ்க பெர்னாண்டோ, குஷல் மெண்டீஸ், தனஞ்செய டிசில்வா, ஹரன்கா, அசலங்கா, கருரத்னே, நிசாங்கா, தீக்ஷனா, லகிரு குமார பனுகா ராஜபக்சே, ரஜிதா போன்ற வீரர்கள் உள்ளனர்.

    அந்த அணி வீரர்கள் சமீபத்தில் இலங்கை பிரிமீயர் லீக் 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடி இருந்தனர்.

    இந்திய சுற்றுப்பயணத்துக்கு முன்னதாக நடந்த போட்டியில் இலங்கை வீரர்கள் நல்ல அனுபவத்தை பெற்று இருப்பார்கள். இது தங்களுக்கு இந்திய சுற்றுப்பயணத்தில் உதவும் என்ற நம்பிக்கையுடன் இருப்பார்கள்.

    இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் இப்போட்டி தொடர் விறு விறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இந்தியா: ஹர்த்திக் பாண்ட்யா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், சுப்மன் கில், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் பட்டேல், அக்சர் பட்டேல், சாகல், ஷிவம் மவி, முகேஷ் குமார், உம்ரான் மாலிக்.

    இலங்கை: தசுன் ஷனகா (கேப்டன்), அவிஷ்க பெர்னாண்டோ, அசலாங்கா, அஷேன் பண்டார, தனஞ்செய டிசில்வா, நிசாங்கா, ஹசரன்கா, குஷல் மெண்டிஸ், பனுகா ராஜபக்சே சமிகா, கருண ரத்னே, லகிரு குமாரா, மதுஷன்கா, பிரமோத் மதுஷன், ரஜிதா, தீக்ஷனா, சமரா விக்ரமா, துஸத் வெல்லுகே, நுலன் துஷாரா.

    • இளம் வீரர்களை ஒருங்கிணைத்து இலங்கை அணிக்கு கடுமையான நெருக்கடியை அவர் கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.
    • நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற வலுவான அணிகள் கேப்டன்ஷிப் மாற்றத்தின்போது சிக்கல்களை சந்தித்துள்ளன.

    இந்தியா- இலங்கை அணிகள் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் மோதவுள்ளது. இரு அணிகளும் ஜனவரி 3 முதல் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும். இந்த தொடருக்கான டி20 கேப்டனாக நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை பிசிசிஐ நியமித்துள்ளது.

    இந்த நிலையில் ஹர்திக் குறித்து இலங்கையின் முன்னாள் மூத்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குமார் சங்ககாரா பெரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

    கேப்டன்ஷிப்பை மாற்றுவது, புதிய கேப்டனின் கீழ் விளையாடுவது என்பது எப்போதுமே சவாலாகத்தான் இருக்கும். ஆனால், ஹர்திக் பாண்ட்யா மிக எளிதாக தனது புதிய கேப்டன் பொறுப்பை கையாள்வார் என்று கருதுகிறேன். கேப்டன்ஷிப் மாற்றம் என்பது கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாதது. அதற்கு அனைத்து வீரர்களின் ஒத்துழைப்பும் அவசியம்.

    நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற வலுவான அணிகள் கேப்டன்ஷிப் மாற்றத்தின்போது சிக்கல்களை சந்தித்துள்ளன. ஆனால், ஹர்திக் பாண்ட்யாவிடம் கேப்டனுக்கான அனைத்து தகுதிகளும் உள்ளன. இளம் வீரர்களை ஒருங்கிணைத்து இலங்கை அணிக்கு கடுமையான நெருக்கடியை அவர் கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    உலகின் மிகப்பெரிய லீக்கான இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) முதல்முறையாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார்.

    தனது முதல் சீசனில் ஹர்திக் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தது குஜராத். அணியின் அறிமுகப் போட்டியிலும், கேப்டனான முதல் போட்டியிலும் ஹர்திக் அபாரமாக செயல்பட்டு அணியை ஐபிஎல் சாம்பியனாக்கினார்.

    அதைத் தொடர்ந்து, நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கான கேப்டனாகவும் ஹர்திக் தேர்ந்தெடுக்கப்பட்டார். அங்கும் தொடரை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டார்.

    • ஒருநாள் போட்டிகளுக்கு இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மா தேர்வு.
    • முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் இடம் பெற்றனர்.

    இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. அந்த அணியுடன் டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், துணை கேப்டனாக சூர்யா குமார் யாதவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிக்கு கேப்டனாக ரோகித் சர்மாவும், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒருநாள் தொடரில் இந்திய அணி வேகப்பந்து பிரிவில் முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் இடம் பெற்றனர். 


    இரு அணிகளுக்கும் இடையே முதல் ஒருநாள் போட்டி கவுகாத்தியில் ஜனவரி 10ந் தேதி நடைபெறுகிறது. கொல்கத்தாவில் ஜனவரி 12ந் தேதி 2வது ஒருநாள் போட்டியும், திருவனந்தபுரத்தில் ஜனவரி 15ந் தேதி 3வது ஒருநாள் போட்டியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி விபரம் வருமாறு: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கீப்பர்), இஷான் கிஷன் (வி.கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்.), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப். யாதவ், அக்சர் படேல், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.

    ×