search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hindu temples"

    • இந்த ஆலயம் சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
    • மேரு மலையின் அமைப்பில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயத்தின் கோபுரம் 31 மீட்டர் உயரம் கொண்டது.

    மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ளது, கஜூராஹோ என்ற பகுதி. இந்தப் பகுதியானது, கி.பி. 500 முதல் கி.பி. 1300 வரை வட இந்தியாவின் குறுநில மன்னர்களாக இருந்த சந்தேல அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. அப்போது கி.பி.950 முதல் கி.பி.1150-க்கு உட்பட்ட 200 ஆண்டு காலத்திற்குள், கஜூராஹோ நினைவுச்சின்னங்கள் கட்டமைக்கப்பட்டதாக வரலாற்றுப் பதிவு சொல்கிறது.

    இங்கு இந்து மற்றும் சமணம் சார்ந்த கோவில்கள் பல இருக்கின்றன. இங்குள்ள சிற்றின்பம் சார்ந்த சிற்பங்கள் உலகப் புகழ்பெற்றவை. கஜூராஹோ பகுதியில் உள்ள நினைவுச்சின்னங்கள் அனைத்தும் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இங்கு அமைந்த கோவில்களில் ஒன்றுதான் கந்தாரிய மகாதேவர் ஆலயம்.

    இதனை சந்தேல மன்னர்களில் ஒருவரான வித்தியாதரன் என்பவர், தன்னுடைய ஆட்சி காலத்தில் (1003-1035) கட்டியிருக்கிறார். கஜூராஹோ மேற்கு பகுதி நினைவுச்சின்ன தொகுப்பில் உள்ள கோவில்களில், இதுவே மிகப்பெரியது. இந்த ஆலயம் சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேரு மலையின் அமைப்பில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயத்தின் கோபுரம் 31 மீட்டர் உயரம் கொண்டது.

    இந்தக் கோவில் கோபுரமானது, 84 சுருள் வடிவிலான விமானங் களைக் கொண்டிருக்கிறது. இந்தக் கோவிலின் மொத்த நீளம் 102 அடி, அகலம் 67 அடி, உயரம் 102 அடியாகும். இங்கு அருள்பாலிக்கும் மூலவரான கந்தாரிய மகாதேவர் வீற்றிருக்கும் கர்ப்பக்கிரக மேடையானது, 4 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இந்த ஆலயம், குகை போன்று சிறிய வாசலைக் கொண்டிருக்கிறது. எனவே சூரிய ஒளி புகும் வகையில், கோவில் சுவர்களில் சாளரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

    • கோவிலுக்கு அருகே சரயுபுஷ்கரணி உள்ளது.
    • அவரது வடிவழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

    தமிழ்நாட்டில் உள்ள ராமர் கோவில்களில், வடுவூர் கோதண்டராம சுவாமி கோவில் பிரசித்திப்பெற்றது. தட்சிண அயோத்தி என அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் மூலவராக கோதண்டராமர், சீதாதேவியுடன் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அவரது வடிவழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

    'மையோ! மரகதமோ! மழை முகிலோ, அலை கடலோ! ஐயோ இவன் வடிவு என்பதோர் அழியா அழகுடையோன் என்றும் கண்டோம், கண்டோம், கண்டோம், கண்ணுக்கினியானை கண்டோம்' என்று அனுபவிக்கும் படியாய், ஸ்ரீ கோதண்டராமர் சீதாப்பிராட்டி, லட்சுமணன், அனுமனுடன் திவ்யதரிசனம் தருகிறார். ஸ்ரீ ராமநவமி விழா 10 நாட்கள் பிரமோற்சவத்துடன் விமரிசையாக கொண்டாடப்படும். அப்போது நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தை பார்ப்பவர்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும் என்பது நம்பிக்கை.

    தல வரலாறு : இதிகாச நாயகனான ராமன், தந்தை தசரதனின் ஆணையின்படி 14 ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்டார். அடர்ந்த கானகத்தில் அவர் நடமாடி வந்தபோது, அங்குள்ள முனிவர்கள் அவரை அங்கேயே தங்கி இருக்கவேண்டும் என்று மன்றாடி கேட்டுக்கொண்டனர். அவதார நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு ராமன் முனிவர்களை சமாதானப்படுத்தி மேற்கொண்டு செல்ல தடைவிதிக்கக்கூடாது என்று கூறினார். அதற்கு முனிவர்கள் சம்மதிக்கவில்லை. இதனால் ராமன் என்ன செய்வதென்று சிந்தித்தார். முடிவில் தன் கையாலேயே தன்வடிவத்தைத்தானே விக்ரகமாக செய்து தனது ஆசிரமத்து வாசலில் வைத்துவிட்டு உள்ளே சீதையுடன் இருந்தார்.

    முனிவர்கள் மறுமுறை ராமனை தரிசிக்க வந்தபோது, ஆசிரமத்து வாசலில் அழகெல்லாம் ஓர் உருவாய் திரண்ட வடிவழகுடன் கூடிய ராமன் செய்த விக்ரகத்தை வணங்கி விட்டு உள்ளே சென்றார்கள். அப்போது அவர்கள் ராமனிடம் இந்த தண்ட காரண்யத்தை விட்டு செல்லக்கூடாது என்று மீண்டும் வேண்டிக்கொண்டனர். அப்போது ராமன் நான் வேண்டுமா? அல்லது ஆசிரமத்து வாசலில் உள்ள எனது அர்ச்சை உருவம் வேண்டுமா? என்று கேட்டார். ராமனின் விக்ரகத்தின் அழகில் மெய் மறந்து இருந்த முனிவர்கள் அந்த திவ்ய விக்ரகத்தையே விரும்பினார்கள். உடனே விக்ரகத்தை முனிவர்களிடம் கொடுத்த ராமன் அங்கே எழுந்தருளிவிட்டார்.

    அந்த விக்ரகத்தை திருக்கண்ணப்புரத்தில் ராமர் சன்னிதியில் பிரதிஷ்டை செய்து நீண்டகாலம் வழிபட்டு வந்திருக்கிறார்கள். அதனால்தான் திருக்கண்ணப்புரம் பெருமாளை பாடிய குலசேகர ஆழ்வார், இந்த ராமனை மனதில் கொண்டு, தனது பெருமாள் திருமொழியில் 'மன்னுபுகழ் என்ற எட்டாம் திருமொழியில், சிலை வளைத்தாய், சிலைவலவர், ஏமருவுஞ்சிலை வலவா, வளையவொரு சிலை அதனால், ஏவரி வெஞ்சலை வலவா' என பாடியுள்ளார்.

    ஸ்ரீ சவுரி ராஜனாகிய கண்ணபிரான் எழுந்தருளியிருக்கும் திருக்கோவிலில் கிளைச்சன்னிதியில் ராமன் இருந்ததால் இப்பதிகத்தை அவர்பாடினார். இந்த ராமர் விக்ரகம் ஒரு காலத்தில் அங்கிருந்து அகற்றப்பட்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகிலுள்ள தலைஞாயிறு என்ற ஊரில் மரத்தடியில், சீதை, லட்சுமணன், பரதன், அனுமன் விக்ரகங்களுடன் மண்ணுக்கடியில் மறைத்து வைக்கப்பட்டது.

    பல ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சையை ஆண்டு வந்த மராட்டிய மன்னரின் கனவில், பெருமாள் சென்று தான் தலைஞாயிறு அருகே மண்ணுக்கடியில் புதையுண்டு கிடப்பதாகவும், அதை வெளியில் எடுத்து கோவில்கட்டி, ஆராதனை செய்யும்படியும் உத்தரவிட்டார். அதன்படியே மன்னரும் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று விக்ரகங்களை மண்ணில் இருந்து வெளியே எடுத்தார்.

    அப்போது அந்த ஊர் மக்கள் திரண்டு வந்து, சிலைகளை அங்கிருந்து எடுத்துச்செல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே லட்சுமணன், பரதன், சிலைகளை மன்னர் அவர்களிடம் கொடுத்து அவர்களை சமாதானப்படுத்தி, ஸ்ரீ கோதண்டராமர், சீதை, அனுமன் சிலைகளை பல்லக்கில் எடுத்துக்கொண்டு வந்தார். அந்த சிலைகளை தஞ்சையில் பிரதிஷ்டை செய்ய எண்ணி கொண்டு வரும் வழியில் வடுவூர் வந்தபோது நள்ளிரவு ஆகிவிட்டது. அங்கு தங்கி இளைப்பாறி, விக்ரகங்களை வடுவூர் கோவிலில் வைத்து இருந்தார்.

    இந்த எழிலார்ந்த விக்ரகங்களை கண்ட அவ்வூர் மக்கள் அவற்றை வடுவூரிலேயே பிரதிஷ்டை செய்யவேண்டும் என்று மன்னரிடம் கேட்டுக்கொண்டனர். விக்ரகங்களை மன்னர் மீறி எடுத்து சென்றால், தாங்கள் அனைவரும் உயிரை மாய்த்து கொள்வதாக கூறினர். உடனே மன்னனும் மனமுவந்து அந்த விக்ரகங்களை அங்கேயே பிரதிஷ்டை செய்தார். பின்னர் லட்சுமணன் விக்ரகத்தையும் புதிதாக செய்தனர்.

    சரயுபுஷ்கரணி :

    தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் 20 கிலோ மீட்டர் தூரத்தில் பறவைகள் சரணாலயமான வடுவூர் ஏரிக்கரையில் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு அருகே சரயுபுஷ்கரணி உள்ளது. கிழக்கு பார்த்த கோவிலின் முகப்பில் 61 அடி உயரமுள்ளதும், 5 அடுக்குகளும் கொண்ட ராஜகோபுரம் உள்ளது.

    கோவிலில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் தை மாதம் வெள்ளிக்கிழமைகளில் தாயார் எழுந்தருளி சேவை தருவது வழக்கம். ஆடிப்பூரம், கனுப்பண்டிகை நாட்களில் தாயார் ஊஞ்சல் உற்சவம் இங்கு நடக்கும். இந்த மண்டபத்தின் தெற்கில் உள்ள சன்னிதியில் லட்சுமி, ஹயக்கிரீவர் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர். பிரபையில் காளிங்கநர்த்தன கண்ணபிரான் உபய நாச்சியாருடன் விளங்குகிறார். பெருமாள் சன்னிதிக்கு நேர் எதிரில் கண்ணாடி அறையும் பெரிய திருவடி (கருட) சன்னிதியும் மேற்கு நோக்கி உள்ளன.

    மகாமண்டபத்தின் வடக்குப்பக்கம் சுவரையொட்டி வரிசையாக மூலவர்களாக விக்னேசுவரர், ஆதிசேஷன், ஆண்டாள், உடையவர் முதலியன ஆழ்வார்கள் உள்ளனர். இதையொட்டியுள்ள தெற்கு நோக்கிய சன்னிதிக்குள் வாசுதேவன், ஸ்ரீதேவி, பூதேவி, செங்கமலத்தாயாருடன் மூலவராகவும், ஸ்ரீ கோபாலன் ருக்மணி சத்யபாமாவுடன், உற்சவராகவும் காட்சி தருகிறார். அர்த்த மண்டபத்தில் வடகிழக்கு மூலையில் பெரிய நிலைக்கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது.

    அந்த கண்ணாடியினுள்ளே கோதண்டராமரின் பிரதிபிம்ப சேவை கிடைக்கும். ஆலய தல விருட்சம் வகுள மரம் ஆகும். இந்த ஆலயத்தில் தினமும் 6 கால பூஜைகள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் அட்சயதிரிதியை, ஆடிமாதம் ஆற்றங்கரையில் தீர்த்தவாரி, புரட்டாசியில் தேசிகன் உற்சவம், நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, தை அமாவாசை தீர்த்தவாரி, மாசிமகம், பங்குனி மாதம் ஸ்ரீ ராமநவமியையொட்டி புனர்பூச நட்சத்திரத்தில் தொடங்கி 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும்.

    அமைவிடம் : வடுவூர் ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து 13 கிலோ மீட்டர் தூரத்திலும், தஞ்சையில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் பஸ்சில் சென்றால் 40 நிமிட பயண தூரத்தில் வடுவூரை அடையலாம்.

    • இந்த தலத்துக்கு `பஞ்சலிங்க ஷேத்திரம்' என்ற பெயர் உண்டு.
    • இறைவியின் பெயர் மரகதாம்பிகை.

    எங்கும் நீக்கமற நிறைந்தவரும், தென்னாடுடையவரும், எந்நாட்டவருக்கும் இறைவனாகிய சிவபெருமான், தனது பரிவாரங்களோடு எழுந்தருளி உள்ள நடுநாட்டு திருத்தலங்களுள் ஒன்று, திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவில் ஆகும். 'காடு' என்பது வட மொழியில் 'வனம்', 'ஆரண்யம்' என்ற பெயர்களால் குறிக்கப்படும். புளிய மரத்தை வடமொழியில் 'திந்திரிணி' என்பர். இவ்வூர் புளியமரக் காடுகளால் சூழப்பட்டு இருந்ததால் 'திந்திரிணி வனம்' எனப் பெயர் பெற்றது. இந்தப் பெயர் காலப்போக்கில் மருவி 'திண்டிவனம்' என்று மாறியது.

    இக்காட்டில் இருந்து அருள்புரிந்து வரும் ஈசனை 'திந்திரிணீஸ்வரர்' எனவும், 'திண்டீச்சரமுடையார்' எனவும் பக்தர்கள் அழைத்து பக்தியோடு வழிபட்டு வந்தனர். கிழக்கு நோக்கிய 7 நிலை ராஜகோபுரம், விமானம் ஆகியவை, வியாச முனிவரால் ஸ்தாபிக்கப்பட்டதாகும். உயர்ந்து அமைந்த நெடிய திருச்சுற்று இக்கோவிலுக்கு தனி அழகினைத் தருகிறது.

    கோவில் அமைப்பு

    நீண்ட கொடிமரம், பலிபீடம், ரிஷபம் ஆகியவற்றை கடந்து சென்றால் கருவறையில் திந்திரிணீஸ்வரர் மிகப்பெரிய மூர்த்தியாக லிங்கமாக காட்சி அளிக்கிறார். இவரது இடது புறத்தில் மரகதாம்பிகை அம்பாள் தனி சன்னிதியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் செல்வகணபதி, தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை மற்றும் சண்டிகேஸ்வரர் தனித்தனி சன்னிதிகளில் காட்சி அளிக்கின்றனர். காசி, ராமேசுவரத்துக்கு அடுத்தபடியாக ஆத்ம ஆஞ்சநேயர் இக்கோவில் பிரகாரத்தில் உள்ளார். கோபுரத்தின் உள் நுழைவு வாசலில் பைரவரும், சூரியனும் உள்ளனர். இந்தக் கோவிலில் அமைந்துள்ள 7 நிலை ராஜகோபுரம் பிரமிடு அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.

    தல வரலாறு

    இக்கோவில் கி.பி.1015-ம் ஆண்டுகளுக்கு முன்னர் சோழ வம்சத்தை சார்ந்த குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. இக்கோவிலின் கீழ்ப்பகுதி கருங்கல்லாலும், மேற்பகுதி செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. திந்திரிணீஸ்வரரை திண்டி, முண்டி, கிங்கிலி, கிலாலி, வால்மீகி போன்ற முனிவர்கள் வணங்கி, முக்தி பெற்றதாக கூறப்படுகிறது. வால்மீகி முனிவர் வழிபட்ட இந்தக் கோவிலில் இறைவன் பஞ்சலிங்க வடிவங்களைக் கொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

    திந்திரிணீஸ்வரர், திருமூலநாதர், கரகண்டேஸ்வரர், ஞானகுரீஸ்வரர், பக்த பிரகலாதீஸ்வரர் ஆகிய 5 திருமேனிகளோடு ஈசன் எழுந்தருளி இருப்பதால் இந்த தலத்துக்கு `பஞ்சலிங்க ஷேத்திரம்' என்ற பெயர் உண்டு. இறைவியின் பெயர் மரகதாம்பிகை. இங்கு வழிபட்டால் சகல பாவங்களும் விலகும் என்கிறது தலபுராணம். இந்த ஆலயத்தில் அன்னை மரகதாம்பிகை வேண்டும் வரம் அருளும் தாயாக குடிகொண்டிருக்கிறாள். அம்மனுக்கு பச்சை சேலை சாத்தி வழிபட்டால் வேண்டிய வரங்கள் எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம். கோவிலின் தல வரலாறு அங்குள்ள சுவற்றில் தமிழ் எழுத்துக்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

    கோவிலின் சிறப்பு

    திண்டிவனம் நகரின் மையத்தில் உள்ள இக்கோவிலின் சிறப்பை, திருநாவுக்கரசர் ஷேத்திரக்கோவை திருத்தாண்டகத்தில் `கயிலைநாதனை கண்டு பேறு பெறக்கூடிய தலங்களுள் திண்டிவனமும் ஒன்று' என்று சிறப்பித்து பாடியுள்ளார். மரகதாம்பிகை அம்பாளின் திருவுருவமும், கருணை பார்வையும் பக்தர்களுக்கு அருளை வாரி, வாரி வழங்கும் தன்மையாய் உள்ளது. உத்தியோக சிக்கல் நீங்குதல், திருமணம் கைகூடல், வியாபாரம் பெருகுதல், உடல் நலிவு, குழந்தை பாக்கியம் வேண்டி வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியையும், வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கும் எலுமிச்சை பழ தீபமிட்டு பிரார்த்தனை செய்தால் வேண்டியவை நிறைவேறும் என்பது நம்பிக்கை ஆகும்.

    அம்மனை வழிபடும் சூாியன்

    மாசி மாத மகா சிவராத்திரி அன்று 4-வது கால பூஜையில் எந்தவித செயற்கை ஏற்பாடும் இன்றி, இயற்கையாக சூரிய ஒளி மரகதாம்பிகை அம்பாள் மீது உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை படும் அதிசய நிகழ்வும் நடைபெறும். முன்காலத்தில் சிவராத்திரி அன்று 4-ம் கால பூஜையில் சூரிய பகவான் மரகதாம்பிகையை வழிபட்டதாக ஐதீகம்.

    முக்கிய திருவிழாக்கள்

    சித்திரை பெருவிழா 10 நாட்கள், சித்ரா பவுர்ணமி, ஆனித்திருமஞ்சனம், ஆடிப்பூரம், நவராத்திரி 10 நாட்கள், அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், ஆருத்ரா உற்சவம், ரதசப்தமி, சிவராத்திரி, மாசி மகம், மரகதாம்பிகை அம்பாளுக்கு ஆடி மாதத்தில் சந்தன அலங்காரம், 63 நாயன்மார்களுக்கு குருபூஜை நடக்கிறது.

    • அம்பாளுக்கு ஸ்ரீகற்பகவல்லி எனும் திருநாமம்.
    • சாமுண்டீஸ்வரிக்கு தனிச்சந்நிதி அமைந்துள்ளது.

    திருவாரூரில் இருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி செல்லும் வழியில் உள்ளது பூவனூர் திருத்தலம். நீடாமங்கலத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த ஊர். அற்புதமான இந்த ஊரில்தான், தமிழகத்தில் வேறு எந்த ஆலயத்திலும் இல்லாத வகையில் கோவில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீசாமுண்டீஸ்வரி.

    திருப்பூவனூர் என்றும் பூவனூர் என்றும் அழைக்கப்படுகிற இந்தத் தலத்தில் சிவபெருமானின் திருநாமம் ஸ்ரீபுஷ்பவன நாதர். இவருக்கு ஸ்ரீசதுரங்க வல்லபநாதர் எனும் திருநாமமும் உண்டு. அம்பாளுக்கு ஸ்ரீகற்பகவல்லி எனும் திருநாமம். ஸ்ரீராஜராஜேஸ்வரி எனும் திருநாமத்துடனும் அழைக்கப்படுகிறாள் அம்பாள்.

    அதென்ன சதுரங்க வல்லபநாதர் என்ற பெயர்?

    தெற்கே பாண்டிய நாட்டு மன்னன் வசுசேனன், மிகுந்த சிவபக்தி கொண்டவன். இவரின் மனைவி காந்திமதி. இவர்களின் ஒரே வருத்தம்... அள்ளியெடுத்துக் கொஞ்சி விளையாட ஒரு குழந்தை இல்லையே... என்பதுதான்! வேண்டாத தெய்வங்களில்லை... செய்யாத தர்மங்களில்லை. சதாசர்வ காலமும் சிவத்தையே நினைத்து மனமுருகிப் பிரார்த்தனை செய்து வந்தார்கள். அந்த ராஜதம்பதிக்கு அருளுவதற்கு திருவுளம் கொண்டார் சிவபெருமான்.

    நீராடுவதற்காக குளத்துக்கு வந்தார் மன்னர். அங்கே தாமரை மலரில் சங்கு ஒன்றைக் கண்டார். அந்தச் சங்கினை கையில் எடுத்த போது, அந்தச் சங்கு பெண் குழந்தையாக உருவெடுத்தது. மனம் பூரித்து நெகிழ்ந்து போனார். 'எம் சிவமே எம் சிவமே' என்று நெக்குருகிப் போனார். அந்தக் குழந்தைக்கு ராஜராஜேஸ்வரி எனப் பெயரிட்டு வளர்த்தார்.

    சப்தமாதர்களில் ஒருத்தியாகத் திகழும் சாமுண்டிதேவியானவள், ராஜராஜேஸ்வரிக்கு வளர்ப்புத்தாயாக இருந்து அரவணைத்து வளர்த்து வந்தாள். சகல கலைகளையும் கற்றுக் கொடுத்தாள்.

    ராஜராஜேஸ்வரி, சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்றாள். முக்கியமாக, சதுரங்கத்தில் ராஜராஜேஸ்வரி வெல்லவே முடியாதவள் என்று போற்றப்பட்டாள்.

    ராஜராஜேஸ்வரிக்கு உரிய வயது வந்தது. திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் மன்னர். மகளைப் போலவே, சதுரங்க விளையாட்டில் சிறந்து விளங்குபவரையே திருமணம் செய்துவைக்கத் தீர்மானித்தார்.

    மன்னரின் அறிவுப்புக்குப் பின்னர் ஒருநாள், சதுரங்கப் போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு தேசத்தின் ராஜகுமாரர்களும் வந்திருந்தனர். அனைவரும் சதுரங்க ஆட்டத்தில் ராஜராஜேஸ்வரியிடம் தோற்றுப் போனார்கள். மகளுக்கு ஏற்ற ஒரு வரனும் அமையவில்லையே என்பதுதான் பெருங்கவலையாக இருந்தது மன்னனுக்கு.

    பல தலங்களுக்குச் சென்று வழிபட்டார் மன்னர். அப்படி தலங்களுக்கு வந்து மகளுடன் வணங்கி வந்தவர், திருப்பூவனூர் திருத்தலத்துக்கும் வந்தார். புஷ்பவனநாதரைத் தரிசித்தார். மனமுருக வேண்டினார்.

    மறுநாள்... திருப்பூவனூருக்கு அருகே மன்னர் தங்கியிருந்த இடத்துக்கு வயதான பெரியவர் ஒருவர் வந்தார். அங்கே மன்னரின் மகளான ராஜராஜேஸ்வரியிடம், 'என்னுடன் சதுரங்கம் விளையாடி ஜெயிக்க முடியுமா உன்னால்?' என்று கேட்டார். இதைக் கண்டு மன்னர் கலங்கிப் பதறினார். ஆனால் மகளோ இதை ஓர் விளையாட்டாக எடுத்துக் கொண்டு விளையாட்டுக்கும் போட்டிக்கும் சம்மதித்தார்.

    முதியவருக்கும் ராஜராஜேஸ்வரிக்கும் ஆட்டம் ஆரம்பமானது. சதுரங்க விளையாட்டில் முதியவர் வென்றார். மன்னர் வேதனை அடைந்தார். கொடுத்த வாக்குறுதிப்படி, மகளை திருமணம் செய்துவைக்க வேண்டுமே... அதுவும் கிழவருக்கா திருமணம் செய்துவைப்பது என்று கண்ணீருடன் சிவபெருமானை வேண்டினார். அப்போது, முதியவர் மறைந்தார். சிவபெருமான் தோன்றினார். நெடுஞ்சாணாக விழுந்து நமஸ்கரித்தார். ராஜராஜேஸ்வரியும் நமஸ்கரித்தார். சதுரங்கத்தில் ராஜராஜேஸ்வரியை வென்றதால், புஷ்பவனநாதருக்கு சதுரங்கவல்லப நாதர் என்றும் மன்னருக்கு மகளாகப் பிறந்த உமையவளுக்கு, தலத்தின் கற்பகவல்லியுடன் ஸ்ரீராஜராஜேஸ்வரி எனும் திருநாமமும் அமைந்தது என்கிறது ஸ்தல புராணம். மேலும் பிராகாரத்தில் சாமுண்டீஸ்வரிக்கு தனிச்சந்நிதியும் அமைந்துள்ளது.

    பூவனூர் திருத்தலத்துக்கு வந்து சதுரங்க வல்லபநாதரையும் ஸ்ரீராஜராஜேஸ்வரியையும் ஸ்ரீசாமுண்டீஸ்வரரையும் மனதார வழிபட்டு பிரார்த்தனை செய்துகொண்டால், குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். வாழ்வில் இதுவரை இருந்த தடைகளெல்லாம் தகர்த்து அருளுவார்கள் என்கிறார்கள் பக்தர்கள்.

    • தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
    • இந்த கோவிலில் தினமும் பல்வேறு பூஜைகள் நடத்தப்படுகிறது.

    சர்வதேச சுற்றுலா தலமாகவும், கோடை வாசஸ்தலமாகவும் விளங்கும் கொடைக்கானலில், ஆனந்தகிரி முதல் தெருவில் பிரசித்திபெற்ற பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் கொடைக்கானல் மலைப்பகுதி பக்தர்கள் மட்டுமின்றி, கொடைக்கானலுக்கு சுற்றுலா வருவோரும் அம்மனை வழிபட்டு செல்கிறார்கள். வரங்களை அள்ளிதரும் கொடை வள்ளலாக கொடைக்கானல் மாரியம்மன் இருக்கிறார்.

    இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் தினமும் பல்வேறு பூஜைகள் நடத்தப்படுகிறது. இதுதவிர தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கொடைக்கானல் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் சுமார் 15 நாட்கள் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

    இந்த திருவிழாவில் கொடைக்கானல் பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள மலைக்கிராம மக்கள், தேனி, மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் பங்கேற்பார்கள். திருவிழாவின்போது அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சிகள், கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த திருவிழாவில் முதல் நாளில் போலீசார் சார்பில் முதல் மண்டகப்படி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கொடைக்கானல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாதி, மத பேதமின்றி ஒன்றாக கொண்டாடும் திருவிழாவாகவும் இது உள்ளது.

    இதற்கிடையே கோவிலில் கடந்த 1978-ம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு 1996-ம் ஆண்டும், மீண்டும் கடந்த 2010-ம் ஆண்டும் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து ஆகமவிதிப்படி கொடைக்கானல் மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது கோவில் முழுவதும் புதுப்பிக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.

    இந்தநிலையில் 13 ஆண்டுகளுக்கு பிறகு கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    • இங்கு உள்ள துர்க்கை அம்மன் சக்தி வாய்ந்தது.
    • இத்தலத்தில் ஐந்து நந்திகள் உள்ளன.

    சுவாமி : அருள்மிகு தேனுபுரீசுவரர்.

    அம்பாள் : அருள்மிகு ஞானாம்பிகை.

    மூர்த்தி : முருகன், இராமர், மதவாரணப்பிள்ளையார், சப்த கன்னியர், துர்க்கை, மகாலிங்கம், சம்பந்தர், பைரவர்.

    தீர்த்தம் : ஞான தீர்த்தம்.

    தலவிருட்சம் : வன்னி மரம்.

    கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற தேனுபுரீஸ்வரர் கோவில் உள்ளது.

    தலச்சிறப்பு : இங்கு உள்ள துர்க்கை அம்மன் சக்தி வாய்ந்தது ஆகும். பராசக்தி தனித்து தவம் செய்வதற்கு இத்தலத்தை தேர்ந்தெடுத்து இறைவனை பூஜித்து வர இறைவன் பராசக்தியின் தவத்திற்கு உவந்து தமது சடைமுடியுடன் காட்சி கொடுத்த சிறப்புடையது இத்தலம். விசுவாமித்திர முனிவர் காயத்திரி சித்திக்கப் பெற்று பிரம்மரிஷி என்ற பட்டம் இத்தலத்தில் பெற்ற சிறப்புடையது.

    வாலியைக் கொன்றதால் ஏற்பட்ட சாயஹத்தி தோஷத்தை இராமர் இங்கு தன் வில்லின் முனனயால் கோடி தீர்த்தம் என்ற கிணற்றை தோற்றுவித்து அதன் நீரால் இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டு போக்கிக் கொன்டார். இத்தலத்தில் இராமர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கம் இராமலிங்கம் என்று வழங்கப்படுகிறது. மாளவ தேசத்து தர்மசர்மா என்ற அந்தணனுக்கு மேதாவி முனிவரின் சாபத்தால் ஏற்பட்ட நாய் வடிவம் இத்தலத்தில் உள்ள ஞானவாவி தீர்த்தத்தின் ஒரு துளி நீர் பட்டதால் சாபம் நீங்கப் பெற்றான்.

    இத்தலத்தில் ஐந்து நந்திகள் உள்ளன. அனைத்தும் சந்நிதியில் இருந்து விலகியே உள்ளன. திருவலஞ்சுழி, பழையாறை மேற்றளி, திருச்சத்தி முற்றம் ஆகிய தலங்களில் உள்ள இறைவனைப் பணிந்து நண்பகல் பொழுதில் பட்டீச்சுரம் வந்த திருஞானசம்பந்தருக்கு வெய்யிலின் கொடுமை தாக்காமல் இருக்க இத்தலத்து இறைவன் சிவகணங்கள் மூலம் முத்துப் பந்தல் அளித்து அதன் குடை நிழலில் சம்பந்தர் தன்னை தரிசிக்க வரும் போது நந்தி மறைக்காமல் இருக்க நந்தியெம் பெருமானை விலகி இருக்கச் சொல்லி அருளிய சிறப்பு உடையது. வெளிப் பிராகாரத்தில் வடக்குக் கோபுர வாயிலில் துர்க்கை அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.

    தலவரலாறு :

    சோழ அரசர்கள் காலத்தில் பழையாறையில் அரச மகளிர் வசிப்பதற்கான மாளிகை இருந்தது. அந்த மாளிகைக் கோட்டையின் வடக்கு வாசலில் குடி கொண்டிருந்தவள் இந்த துர்க்கை. சோழர்கள் காலத்திற்குப் பிறகு இந்த துர்க்கையை அங்கிருந்து கொண்டு வந்து பட்டீஸ்வரம் கோவிலில் பிரதிஷ்டை செய்தார்கள். பட்டீஸ்வரம் துர்க்கையை பக்தர்கள் ராகுகால நேரங்களிலும், செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும், அஷ்டமி, நவமி திதிகளிலும் வழிபடுதலைச் சிறப்பாக கருதுகின்றனர்.

    துர்க்கை இங்கு சாந்த சொரூபியாக, கருணை வடிவமாக எட்டு திருக்கரங்கள் கொண்டு அருள் பாலிக்கிறாள். இவ்வன்னை மகிஷன் தலைமீது நின்ற கோலத்துடன் சிம்ம வாகனத்துடன் திரிபங்க ரூபமாய், எட்டுத் திருக்கரங்களுடனும், முக்கண்களுடன், காதுகளில் குண்டலங்களோடு காட்சி தருகிறாள். காளி மற்றும் துர்க்கைக்கு இயல்பாக சிம்ம வாகனம் வலப்புறம் நோக்கியதாக காணப்படும். ஆனால் சாந்த சொரூபிணியான இந்த துர்க்கைக்கு சிம்ம வாகனம் இடப்புறம் நோக்கி அமைந்து உள்ளது. அபயகரத்துடன் சங்கு சக்கரம், வில், அம்பு, கத்தி, கேடயம், கிளி ஆகியவற்றை தாங்கி அருள் பாலிக்கிறாள்.

    நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9.௦௦ மணி வரை.

    திருவிழாக்கள் :

    ஆனி – முதல் நாளில் ஞானசம்பந்தர் முத்துப் பந்தல் பெற்ற திருவிழா,

    ஆடி – வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு,

    மார்கழி – அமாவாசை.

    கோயில் முகவரி :

    அருள்மிகு தேனுபுரீசுவரர் திருக்கோவில்,

    பட்டீஸ்வரம் அஞ்சல் - 612 703,

    கும்பகோணம் வட்டம்,

    தஞ்சை மாவட்டம்.

    • இறைவன் அருணஜடேசுவரர் என்று அழைக்கப்படுகிறார்.
    • இந்த ஆலயம் திருப்பனந்தாள் திருத்தலம் என்றும் அழைக்கப்படுகிறது.

    உலககெங்கும் வியாபித்து நிற்கும் சிவபரம்பொருள் ஆன்மாக்கள் தன்னை வழிபட்டு உய்வுபெறவேண்டும் என்ற கருணையுடன் எழுந்தருள்பாலிக்கும் அருள்நிலையங்களே திருக்கோவில்களாகும். அத்தகைய திருக்கோவில்களில் தேவாரப்பதிகங்கள் பெற்றவை மிக சிறப்புடையவை. அவைகளில் ஒன்றாக வடகாவிரி எனப்படும் கொள்ளிடம் மற்றும் மண்ணியாற்றிற்கு இடையே அமைந்துள்ள தலமே திருப்பனந்தாள். இங்குள்ள பெரியநாயகி உடனுறை அருணஜடேசுவரர் ஆலயம், தருமை ஆதீனத்திற்குட்பட்ட 27 கோவில்களில் ஒன்று.

    முற்காலத்தில் மட்டுமல்ல தற்காலத்திலும் 'தண்பொழில் சூழ் பனந்தாள்' என்ற ஞானசம்பந்தர் திருவாக்கிற்கேற்ப, பனை மரங்கள் நிறைந்திருக்கும் இடம் என்பதால் இவ்வாலயம் உள்ள ஊர், 'திருப்பனந்தாள்' என்று பெயர் பெற்று விளங்குகிறது. இவ்வாலய இறைவன், பனை மரத்தின் கீழ் எழுந்தருளிய சுயம்பு மூர்த்தியாவார். பிரணவ மந்திர உபதேசம் பெற விரும்பிய அம்பிகை, இத்தலத்திற்கு வந்து அருந்தவம் இயற்றி ஞானோபதேசம் பெற்றதால் இது 'உபதேசத் தலம்' என்றும் அழைக்கப்படுகிறது.

    சிவபெருமானின் யோக குரு வடிவமே, தட்சிணாமூர்த்தி. இவர் எல்லா சிவாலயங்களிலும் தென்முகமாக அமர்ந்திருப்பார். ஆனால் சில ஆலயங்களில் மூலவரே குருவாக (சிவ குரு) இருந்து அருள்பாலிப்பதும் உண்டு. அத்தகைய விசேஷமான ஆலயங்களில் இதுவும் ஒன்று. நவக்கிரக குருவின் தோஷத்தால் திருமணத்தில் தடை ஏற்பட்டு வருந்துவோர், இதுபோன்ற சிவ குரு தலங்களை தரிசித்தால் நவக்கிரகங்களின் தோஷம் அகன்று உடனடியாக திருமணம் நடந்தேறும் என்பது ஐதீகம். மூலவரே சிவ குருவாக அருள்பாலிக்கும் இத்தலத்தை, அட்டநாகங்களில் ஒன்றான வாசுகியின் மகள் சுமதி வழிபட்டு திருமண வரம் பெற்று, அரித்துவசன் என்ற மன்னனை மணந்ததாக செஞ்சடைவேதியர் எழுதிய 'திருப்பனந்தாள் தல புராணம்' கூறுகிறது.

    இத்தல இறைவனுக்கு அனுதினமும் மாலை சூட்டி வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள், தாடகை என்ற பெண். ஒரு நாள் மாலை சாத்தும்போது அவளது மேலாடை சரிந்தது. உடல் அவயங்கள் தெரிய மாலை சாத்துவது தவறு என்று கருதியவள், தன்னுடைய மேலாடையை ஒரு கையால் பிடித்தவாறு மாலை சாத்த முயன்றாள். ஆனால் அவளால் முடியவில்லை. இதைக் கண்ட பெருமான், அவளது பக்திக்கு இரங்கி, தன்னுடைய பாணத்தை சற்றே முன்னோக்கி வளைத்து மாலையை பெற்றுக்கொண்டார். அப்படி சாய்ந்த பெருமான், அதன்பிறகு நிமிரவில்லை. லிங்கத்தை நிமிர்த்த பல முயற்சிகள் மேற்கொண்டும் அது நடக்கவில்லை.

    திருக்கடவூரில் இறைவனுக்கு அனுதினமும் குங்கிலிய புகை போடுவதை திருப்பணியாக செய்துக் கொண்டிருந்த குங்கிலியக்கலய நாயனார், சிவலிங்கம் வளைந்திருக்கும் செய்தி கேட்டு திருப்பனந்தாள் வந்தார். சிவலிங்கத்திற்கு ஒரு மாலை சூட்டி, அந்த மாலையுடன் லிங்கத்தை ஒரு பெருங்கயிற்றால் கட்டி, கயிற்றின் மறுமுனையை தன் கழுத்தில் கட்டிக்கொண்டு 'அன்புக்கு வணங்கிய அரனே என் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும்' என்று மனமுருகி வழிபட்டு சிவலிங்கத்தை இழுத்தார். யானைகளாலே நிமிர்த்த முடியாத சிவலிங்கம், மனிதன் முயன்றால் உயிர் அல்லவா போய்விடும். ஒரு பக்தைக்காக தலை சாய்ந்த ஈசன், இன்னொரு பக்தருக்காக நிமிர்ந்து நின்று அருள்பாலித்தார்.

    தேவார பதிகங்கள் பாடல் பெற்ற ஆலயங்களில் காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்த 39-வது திருத்தலம் இது. ஆலயத்தின் பெயர் 'தாலவனம்'. தமிழில் தாடகைஈச்வரம். இறைவன் அருணஜடேசுவரர் என்று அழைக்கப்படுகிறார். இனிய தமிழில் 'செஞ்சடையப்பர்' என்பது அவரது பெயர். இறைவியை தமிழில் பெரியநாயகி என்றும், வடமொழியில் பிரகன்நாயகி என்றும் சொல்கின்றனர். தேவலோக கற்பகத் தருவிற்கு இணையானது, பூலோகத்தில் உள்ள பனை மரம். அதுவே இவ்வாலயத்தின் தலவிருட்சமாக இருக்கிறது. இவ்வாலயத்தில் பிரம்ம தீர்த்தம், ஐராவத தீர்த்தம், தாடகை தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், ஆதிசேஷ தீர்த்தம், அரித்துவச தீர்த்தம், நாககன்னிகை தீர்த்தம், தருமசேன தீர்த்தம், கூப தீர்த்தம், மண்ணியாறு முதலாகிய தீர்த்தங்கள் ஆலயத்தின் உள்ளும் புறமும் இருக்கின்றன.

    இவ்வாலய இறைவனை அம்பிகை, பிரம்மன், திருமால், சூரியன், ஆதிசேஷன், நாகக்கன்னி, ஐராவதம் என்னும் வெள்ளை யானை, குங்கிலியக்கலய நாயனார், கவிகாளமேகப் புலவர், தாடகை, வேடுவர் தலைவனான சங்குகண்ணன், அந்தணர் குலத்தில் உதித்து வழிப்பறி செய்து கொண்டிருந்த நாகுன்னன் உள்ளிட்ட பலர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். சிவ - பார்வதி திருமணத்தைக் காண அனைவரும் கயிலாயத்தில் குவிந்ததால், வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தது. இதை சரி செய்வதற்காக அகத்தியரை சிவபெருமான் தெற்கு நோக்கி அனுப்பிவைத்தார். அப்படி வந்த அகத்தியர் சிவனை வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று. திருஞானசம்பந்தரால் இவ்வாலயத்தில் ஒரு பதிகம் பாடப்பெற்றுள்ளது. இவ்வாலய முருகப்பெருமானை அருணகிரிநாதர் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

    ஆலய அமைப்பு

    ஏழு நிலைகளுடன் மேற்கு நோக்கிய ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. அதைத் தாண்டி உள்ளே செல்ல 16 கால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் தாடகையால் சாத்தப்பட்ட மாலையை ஏற்றுக்கொள்ள பெருமான், தலை குனிந்தது, சாய்ந்த சிவலிங்கத்தை மன்னன் யானைகளை கட்டி இழுத்து நிமிர்த்த முயன்றது, குங்கிலியக்கலய நாயனார் தன் கழுத்தில் கயிறு கட்டி சிவலிங்கத்தை நிமிர்த்தியது போன்ற காட்சிகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக வடக்கே அலங்கார மண்டபம் உள்ளது. வெளிப்பிரகார சுற்றில் அலங்கார மண்டபத்தை ஒட்டி, நாகக்கன்னி உருவாக்கிய நாககன்னி தீர்த்தம் உள்ளது. வடமேற்கில் யாகசாலையும், கிழக்கில் அம்பாள் கோபுரமும், மேற்கிலுள்ள இரண்டாவது கோபுரத்தை அடுத்த உட்பிரகாரசுற்றில் வவ்வால் நெற்றி மண்டபமும் இருக்கிறது. இதில் குங்கிலியகலய நாயனார் மற்றும் சொக்கநாதர் சன்னிதிகள் உள்ளன.

    உட்பிரகாரச்சுற்றில் அம்பாளின் தனிச் சன்னிதி உபதேச அமைப்பில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய இந்தச் சன்னிதிக்காகவே கிழக்கு கோபுரம் ஏற்படுத்தப்பட்டது. அம்பாள் சன்னிதிக்கு முன்பு பலிபீடம், நந்தி உள்ளன. இச்சன்னிதியில் அம்பாள், தேஜஸ்வினியாக வீற்றிருக்கிறார். அம்மன் சன்னிதி முன்பாக துவாரபாலகிகள் உள்ளனர். கிழக்கில் நவக்கிரகங்கள், கோவிலின் தல விருட்சமான ஆண் மற்றும் பெண் பனை மரங்கள் உள்ளன. தல விருட்சத்திற்கு அருகில் கிணறு உள்ளது, இந்த கிணற்றின் வழியாகவே நாக கன்னிகை இறைவனை வழிபட வந்ததாக கூறப்படுகிறது.

    இவ்வாலய இறைவனை 12 வாரங்கள் வழிபட்டு வந்தால் ஞானமும், அறிவும் சித்திக்கும். நாகதோஷம் காலசர்ப்ப தோஷம் உள்ளோர் நாக கன்னிகைக்கு வேண்டிக்கொண்டு நாக கன்னிகை தீர்த்தத்தில் மூழ்கி வழிபட வேண்டும். ராகு காலங்களில் பாலாபிஷேகம் செய்வதும் பலன் தரும். காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும் இவ்வாலயத்தில், ஆறு கால பூஜை நடைபெறுகின்றன.

    கடந்த 2003-ம் ஆண்டு இவ்வாலயத்தில் கும்பா பிஷேகம் நடைபெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்குப்பின் இன்று (வெள்ளிக்கிழமை) கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. இந்த ஆலயத்துடன் இணைத்து, திரிபுரசுந்தரி உடனுறை ஊருடையப்பர் திருக்கோவில், காசிமடத்தைச் சேர்ந்த விசாலாட்சி உடனுறை காசிவிசுவநாதர் திருக்கோவில் மற்றும் சிற்றாலயங்கள் சிலவற்றிற்கும் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.

    அமைவிடம்

    தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கும்பகோணத்தில் இருந்து 20 கிலோமீட்டர் வடக்கில் அமைந்துள்ளது, திருப்பனந்தாள் திருத்தலம்.

    -நெய்வாசல் நெடுஞ்செழியன்.

    • இந்த கோவில் விநாயகர் சிலை உயரமானதாக கருதப்படுகிறது.
    • விநாயகரின் பின்பகுதியில் ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ளது.

    நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை தரணியின் மேற்கு நோக்கி சில கிலோ மீட்டர் சென்றால் பிள்ளையாருக்காக தோன்றிய ஒரு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் பெயர் பிள்ளையார்பட்டி.

    சோழர்களின் அழகிய ஆலயத்தோடு எழில்மிகு தோற்றத்துடன் அமைந்திருக்கிறது இங்குள்ள ஹரித்ரா விநாயகர் கோவில். பிள்ளையார்பட்டி கோவிலில் உள்ள ஹரித்ரா விநாயகர் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவர். இந்த கோவிலில் உள்ள ஹரித்ரா விநாயகரை மாமன்னன் ராஜராஜ சோழன் பிரதிஷ்டை செய்ததாக கூறப்படுகிறது.

    தல வரலாறு

    ராஜராஜ சோழன் தனது வாழ்க்கையில் பல்வேறு சாதனைகளையும், சிறப்புகளையும் பெற்றிருந்தார். அதனை உலகுக்கு எடுத்து காட்டும் விதமாக அதிசயங்களே அசந்து போகும் அளவுக்கு அமைக்கப்பட்ட அற்புதமான ஆலயம் பெருவுடையார் கோவில் எனப்படும் தஞ்சை பெரிய கோவில்.

    பெரிய கோவிலை பிரதிஷ்டை செய்வதற்காக ராஜராஜ சோழன், புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலில் உள்ள சிற்பக் கூடத்தில் இருந்து நந்தி மற்றும் விநாயகர் சிலைகளை யானை பூட்டிய தேரில் வைத்து எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.(காவிரியின் பிறப்பிடமாக இருக்கும் கர்நாடக மாநிலம் குடகில் இருந்து இந்த பிள்ளையாரை எடுத்து வந்ததாகவும் மற்றொரு கருத்து நிலவுகிறது.)

    தேர் அச்சு முறிந்தது

    அப்படி வரும் வழியில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த தேரின் அச்சு முறிந்து தேர் நின்று விட்டது. அப்போது வீரர்கள் முறிந்த தேர் அச்சை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். வீரர்கள் தேர் அச்சை சரி செய்த பின்னும் தேர் அந்த இடத்தில் இருந்து நகன்று செல்லவில்லை.

    இதனால் இந்த இடத்தில் தான் விநாயகர் கோவில் கொண்டு இருக்க விரும்புகிறார் என கருதிய ராஜராஜ சோழன், விநாயகர் சிலையை தஞ்சை பெரிய கோவிலுக்கு எடுத்து செல்ல வேண்டாம் என முடிவு செய்து அச்சு முறிந்து தேர் நின்ற இடத்தில் விநாயகரை பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பினார்.

    பிள்ளையார்பட்டி

    இதுவே பிள்ளையார்பட்டி ஹரித்ரா விநாயகர் கோவில் ஆகும். இதனால் இந்த ஊர் பிள்ளையார்பட்டி என பெயர் பெற்றது. இந்த கோவிலில் உள்ள விநாயகரை வழிபட்டால் தீய வினைகள் அகலும் என்றும் கிரக தோஷங்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பக்தா்கள் தங்களை தற்காத்துக்கொள்ள முடியும் என்பதும் பக்தர்கள் நம்பிக்கை.

    மேலும் நோயற்ற வாழ்வை அளித்து ஆயுள் பலத்தை அளிக்கும் சக்தி இத்தலத்தில் உள்ள விநாயகருக்கு உண்டு என்பதால் இந்த கோவிலுக்கு பக்தர்கள் வந்து செல்ல தவறுவது இல்லை.

    சோழர் கால கட்டிட அமைப்பு

    தற்போது உள்ள இந்த கோவில் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. சோழர் கால கட்டிட அமைப்பில் கோவில் அமைந்துள்ளது. 11 அடி உயரமும், 5 அடி அகலமும் உள்ள பிள்ளையாரை பீடத்தி்ல் அமர்த்தி அதன் மீது ஆலயத்தை கட்டியதாக கூறப்படுகிறது. அதற்கான அடையாளங்களும் உள்ளன.

    இந்த கோவிலில் பெரிய பிள்ளையாரை தரிசிக்க மிகவும் அடக்கமாக செல்ல வேண்டும் என்பதற்காக சிறிய நுழைவாசல் அமைக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

    கோவில் குடமுழுக்கு

    பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த கோவிலில் குடமுழுக்கு வருகிற 9-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி கோவிலில் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இந்த கோவிலில் பிள்ளையார் மட்டுமின்றி அய்யப்பன், சிவன், நவக்கிரக சன்னதிகளும் அமைந்துள்ளன.

    இந்த கோவிலில் சிவன், நவக்கிரகம், பைரவர் ஆகிய சன்னதிகள் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது சிறப்பம்சம் ஆகும். இந்த கோவிலில் கார்த்திகை சோமவார வழிபாடு, பிரதோஷம், அஷ்டமி பூஜை, கிருத்திகை வழிபாடு ஆகியவை விமரிசையாக நடக்கும்.

    கடன் நிவர்த்தி விநாயகர்

    இந்த கோவிலில் உள்ள ஹரித்ரா விநாயகர் பக்தர்களால் கடன் நிவர்த்தி விநாயகர் என அன்போடு அழைக்கப்படுகிறார். காரணம் இங்கு நடைபெறும் சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டில் தொடர்ந்து 8 முறை கலந்து கொண்டு வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். தீராத கடன் பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    ராகு-கேது தோஷம், திருமண தடை நீங்கும். வினை தீர்ப்பான் விநாயகர் என்ற சொல்லுக்கு ஏற்ப பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் வல்லமை பெற்றவர் இக்கோவில் விநாயகர்.

    சிறப்பு வழிபாடு

    பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி மற்றும் கார்த்திகை சோமவார வழிபாடு மிக விமர்சையாக நடைபெறும். மேலும் பிரதோஷ வழிபாடும் இக்கோவிலில் நடைபெறுவது தனி சிறப்பு. பிரதோஷ தினத்தன்று நந்தியெம்பெருமானுக்கு மஞ்சள், பால், திரவியப்பொடி, தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படும்.

    அஷ்டமி பூஜை அன்று கால பைரவருக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்படும். தற்போது இக்கோவிலில் புதிதாக அகஸ்தியர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வியாழக்கிழமைதோறும் அகஸ்தியர் வழிபாடும் நடைபெறுகிறது.

    தலவிருட்சம்

    பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் காலை 7.30 மணி முதல் 10 மணி வரையும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் சாமி தரிசனம் செய்யலாம். கோவில் தலவிருட்சமாக வில்வமரம் அமைந்துள்ளது. இந்த மரம் சிவனின் நேர் எதிரில் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும்.

    இந்த கோவிலில் அய்யனார், நாகலம்மன், முருகன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்கள் தனி சன்னதியில் உள்ளனர். விநாயகரின் பின்பகுதியில் ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ளது. வயிற்றுப்பகுதியில் ராகு-கேது அமைந்திருப்பது இத்திருத்தல மகிமையை எடுத்துக்காட்டும் விதமாக உள்ளது. ஹரித்ரா விநாயகருக்கு புளியோதரை, சர்க்கரை பொங்கல் படையலிட்டு வழிபடுவது கூடுதல் சிறப்புகளை தரும் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் ஹரித்ரா விநாயகர் மனம் உருகி வேண்டும் பக்தர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பார் என்பதில் எள்ளளவும் அய்யம் வேண்டாம் என்பதே பக்தர்களின் கூற்றாகும்.

    நந்தி வாகனத்தில் விநாயகர்

    இந்த கோவில் விநாயகர் சிலை உயரமானதாக கருதப்படுகிறது. இந்த விநாயகர் அருமையான சிற்ப வேலைபாடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளார். இத்தகைய சிலை அமைப்புகளை காண்பது அரிது என கூறப்படுகிறது. வழக்கமாக கோவில் கட்டி பிரதிஷ்டை செய்வது வழக்கம். ஆனால் இந்த கோவில் பிரதிஷ்டை செய்து இதன் பிறகு கோவில் கட்டப்பட்டது தனி சிறப்பு ஆகும். இக்கோவிலில் பிள்ளையாருக்கு வாகனமும் மாறுகிறது. முன்பகுதியில் மூஷிக வாகனத்துக்கு பதில் நந்தியே எழுந்தருளியிருக்கிறார்.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    தஞ்சையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு செல்ல தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் இருந்து பஸ் வசதி உள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் தஞ்சை புதிய பஸ் நிலையம் வந்து அங்கிருந்து ஆட்டோ, ஷேர் ஆட்டோ, மினி பஸ் மூலம் சென்று வரலாம்.

    சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வர வேண்டும். பின்னர் அங்கிருந்து தஞ்சை புதிய பஸ் நிலையத்துக்கு சென்று அங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள பிள்ளையார்பட்டி பிள்ளையாரை தரிசிக்கலாம். தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் தஞ்சைக்கு வந்து அங்கிருந்து மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.

    • இந்த கோவிலின் தல வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது.
    • சிக்கல் சிங்காரவேலவரை தரிசித்தால் சிக்கல்கள் யாவும் நீங்கிடும் என்பது ஐதீகம்.

    நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் எனும் ஊரில் ஸ்ரீவேல் நெடுங்கண்ணி அம்மன் சமேத ஸ்ரீநவநீதேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 83- வது தலமாகும். 72 மாடக்கோவில்களில் ஒன்று மேலும், மாமன்னன் கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட 72 மாடக்கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலின் ராஜகோபுரம் சுமார் 80 அடி உயரத்தில் 7 நிலைகளை கொண்டுள்ளது.

    இங்கு சிங்காரவேலவர் (முருகன்) தனி சன்னதியிலும், கோமளவல்லி தாயார் சமேத ஸ்ரீகோலவாமன பெருமாள் தனிக்கோவில் கொண்டும் அருள்பாலிப்பது தனிச்சிறப்பாகும். குழந்தைவரம் அருள்பவராக வீற்றிருக்கிறார். இங்கு முருகப்பெருமான் அம்மை, அப்பருக்கு நடுவில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அதனால், இங்கு சிங்காரவேலவர் குழந்தைவரம் அருள்பவராக வீற்றிருக்கிறார்.

    தலவிருட்சம் குடமல்லிகை. தீர்த்தம் அமிர்த தடாகம் என்றழைக்கப்படும் க்ஷீரபுஷ்குரணி (பாற்குளம்).ஸ்ரீகோலவாமனப் பெருமாள் நீராடி இத்தல இறைவனை வழிபட்ட தீர்த்தம் கயாதீர்த்தம், லட்சுமிதீர்த்தம் ஆகும். இதுபோல் சைவமும் ,வைணவமும் இணைந்த கோவில்கள் தமிழகத்தில் சில மட்டுமே உள்ளன. இக்கோவிலை பற்றி திருஞானசம்பந்தர் "மடங்கொள் வாளைகுதி கொள்ளும் மணமலர்ப் பொய்கைசூழ் திடங்கொள்

    மாமறையோரவர் மல்கிய சிக்கலுள் விடங்கொள் கண்டத்து வெண்ணெய்ப் பெருமானடி மேவிய அடைந்துவா மும்மடி யாரவர் அல்லல் அறுப்பரே" என தேவாரத்தில் பாடியுள்ளார். மேலும், இத்தல முருகனை பற்றி அருணகிரிநாதர் திருப்புகழில் 2 பாடல்கள் பாடியுள்ளார்.

    கோவிலின் தல வரலாறு

    இந்த கோவிலின் தல வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. விண்ணுலகத்தில் இருக்க கூடிய காமதேனு பசு ஒருமுறை பஞ்சம் காரணமாக மாமிசம் உண்டுவிட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த சிவபெருமான் அந்த பசுவிற்கு சாபம் வழங்கினார். சாபத்தினால் மிகவும் கவலையுற்ற காமதேனு, இறைவனிடம் இறைஞ்சி சாப விமோசனம் கோரினார். மனம் இறங்கிய சிவபெருமான் பூலோகத்தில் மல்லிகை வனம் உண்டு அங்குள்ள தலத்தில் நீராடி அங்குள்ள இறைவனை வணங்கினால் சாபம் நீங்கும் என அருளினார். அதன்படியே இன்றைய சிங்காரவேலவர் கோவில் அமையப்பெற்றுள்ள இடத்தில் உள்ள குளத்தில் நீராடி சாப விமோசனம் பெற்றார் காமதேனு.

    அதன் பொருட்டு காமதேனு பசுவின் மடியில் பெருகிய பால் பாற்குளத்தை உருவாக்கியது. அதுவே இன்றும் புனிதகுளமாக கருதப்படுகிறது. வசிஸ்ட மாமுனி, அந்த பாலில் இருந்து கிடைத்த வெண்ணையை கொண்டு அங்கேயே சிவலிங்கம் வடித்து வழிபட்டார். தன்னுடைய பூஜை முடிந்த பின்பாக அந்த சிவலிங்கத்தை அவர் எடுக்க முற்பட்ட போது அது சிக்கி கொண்டு வர மறுத்தது அதன் பொருட்டே இந்த ஊருக்கு சிக்கல் என பெயர் வந்தது என்ற நம்பிக்கையும் உள்ளது.

    சிக்கல் சிங்காரவேலவரை தரிசித்தால் சிக்கல்கள் யாவும் நீங்கிடும் என்பது ஐதீகம்.

    கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்கள்

    சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை பிரமோற்சவ விழாவும், ஐப்பசி மாதத்தில் நடைபெறும் கந்தசஷ்டி விழாவும், கார்த்திகை மாதத்தில் நடைபெறும் திருக்கார்த்திகை விழாவும் மிகவும் சிறப்புவாய்ந்ததாகும். இக்கோவிலில் தினமும் 6 கால பூஜைகள் நடைபெறும். இங்கு வேண்டிய பிரார்த்தனைகள் நிறைவேறியதும், வெண்ணெய்நாதருக்கு அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் உச்சிகால பூஜையின் போது வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.

    64 சக்தி பீடங்களில் ஒன்று

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த சிக்கல் சிங்காரவேலவர் கோவில் அம்மனின் 64 சக்தி பீடங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் அன்னை உமையவள் முருகப்பெருமானுக்கு சூரனை வதம் செய்ய சக்தி எனும் வேல் வழங்கியதால் வேல்நெடுங்கண்ணி எனும் சக்தியாயதாக்ஷியாக அருள்பாலிக்கிறாள். இங்கு மரகதலிங்கம் (மரகதவிடங்கர்) உள்ளது கூடுதல் சிறப்பாகும்.

    தரிசன நேரம்: காலை 6 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்டு மதியம் 12.30 மணிக்கு நடை அடைக்கப்படும். தொடர்ந்து, மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    கோவில் அமைவிடம்

    இக்கோவிலுக்கு, வந்து தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினம் வந்தடைந்து, அங்கிருந்து நகர பஸ்களில் ஏறி 5 கி.மீ தூரம் உள்ள சிக்கல் என்ற ஊரில் இறங்கி கோவிலை வந்தடையலாம்.

    அல்லது, திருவாரூர் வந்தடைந்து அங்கிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ள சிக்கல் வந்து இறங்கி சாமி தரிசனம் செய்யலாம்.

    • இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
    • இக்கோவில் அம்மன் பரிமளநாயகி.

    மனிதர்கள் தங்கள் வாழ்நாளில் செய்யும் புண்ணியங்கள் மற்றும் பாவங்களுக்கு ஏற்ப அவர்களின் வாழ்நாளில் நற்பலன்கள் மற்றும் தண்டனைகளை ஈசன் வழங்குகிறார். அதே நேரத்தில் எதிர்பாராத வகையில் தன்னை அறியாமல் தனது பக்தர்கள் செய்யும் பாவங்களை அவர்களுக்கு தகுந்த நேரத்தில் சுட்டிக்காட்டி மீண்டும் அந்த பாவத்தை அவர்கள் செய்யாமல் தடுக்கிறார். இதன் மூலம் தீய வினைகளில் இருந்து தனது பக்தர்களை காக்கும் ஈசன் வினை தீர்க்கும் ஈசன் என்று அழைக்கப்படுகிறாா்.

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே விற்குடியில் உள்ள வீரட்டானேஸ்வரர் கோவில் பக்தர்கள் தீய வினைகளை தீர்த்து வைப்பதாக நம்பப்படுகிறது.

    சுயம்பு லிங்கம்

    விற்குடி வீரட்டானேஸ்வரர் கோவில் மூலவர் வீரட்டானேஸ்வரர். தாயார் ஏலவார்குழலி, பரிமள நாயகி. தல விருட்சம் துளசி ஆகும். கோவில் தீர்த்தமாக சக்கர தீர்த்தம், சங்குதீர்த்தம் ஆகிய குளங்கள் உள்ளன. கோவில் அமைந்துள்ள ஊர் திருவிற்குடி என அழைக்கப்பட்டு காலப்போக்கில் தற்போது விற்குடி என அழைக்கப்படுகிறது.

    இக்கோவிலில் சிவனுக்குரிய அனைத்து விழாக்களும் கொண்டாடப்படுகிறது.

    இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இக்கோவில் ராஜகோபுரம் 5 நிலைகளை உடையது. இதன் எதிரில் சக்கர தீர்த்தம் உள்ளது. இது படித்துறைகளும் சுற்றுச்சுவரும் கொண்ட பெரிய குளம்.

    நாகலிங்க சிற்பம்

    இக்குளத்தில் தீர்த்தக்கரையில் விநாயகர் கோவில் உள்ளது. கோபுர வாசலை கடந்து உள்ளே நுழைந்ததும், எதிரில் வலது புறமாக உள்ள முதல் தூணில் நாகலிங்கச்சிற்பம் அழகாக உள்ளது. வெளிப்பிரகாரத்தில் பிருந்தையை, திருமாலுக்காக இறைவன் துளசியாக எழுப்பிய இடமும், திருமால் வழிபட்ட சிவாலயமும் உள்ளன. உள்பிரகாரத்தில் வலமாக வரும் போது மகாலட்சுமி, வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், பள்ளியறை, பைரவர், சனிகவான், தனிக்கோவில் கொண்டுள்ள பைரவர், நவக்கிரகங்கள், சூரியன், சந்திரன், ஞானதீர்த்தம் என அழைக்கப்படும் கிணறு, பிடாரி முதலிய சன்னதிகள் உள்ளன.

    இக்கோவிலில் சலந்தரனைச் சம்ஹாரித்த மூர்த்தி ஜலந்த்தரவதமூர்த்தி என அழைக்கப்படுகிறாா். இக்கோவிலில் சண்டிகேஸ்வரர் சன்னதியும் உள்ளது. தினமும் 4 கால பூஜைகள் இந்த கோவிலில் நடக்கிறது.

    சொந்த வீடு

    மேலும் இக்கோவிலில் வந்து வழிபடுவோருக்கு விரைவில் சொந்த வீடு கட்டி குடியேறும் பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. மேலும் புதிய வீடு கட்டிக்கொண்டிருக்கும் போது தடை ஏற்பட்டால் விற்குடி வீரட்டானேஸ்வரர் கோவிலுக்கு வந்து வழிபட்டு இங்கிருந்து கல் எடுத்து சென்று, அந்த கல்லை வைத்து கட்டினால் தடைகள் நீங்கி விரைவில் நல்ல முறையில் கட்டுமான பணிகள் நிறைவு பெறும் என கூறப்படுகிறது. மேலும் முன்னோர்களின் சாபத்தால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டால்

    தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

    இக்கோவில் அம்மன் பரிமளநாயகி. பிருந்தை என்ற சொல்லுக்கு துளசி என்பது பொருள். கற்பிற்சிறந்த அப்பெண்மணியின் நினைவாக, துளசி தான் இங்கு தல விருட்சம். இந்த கோவில் வாஸ்து தோஷ நிவர்த்தி தலமாகவும் போற்றப்படுகிறது.

    ஜலந்தராசூரன்

    ஒரு முறை இந்திரன், தான் என்ற அகந்தையுடன் சிவனை தரிசிக்க கைலாயத்துக்கு வந்தார். இதை அறிந்த சிவன் சேவகன் வடிவம் எடுத்து கைலாய வாசலில் நின்று, உள்ளே செல்ல முடியாதபடி தடுத்தார். இதனால் கோபமடைந்த இந்திரன், தன் வஜ்ராயுதத்தால் சிவனை அடித்தார். அப்போது சிவபெருமான் தன் நெற்றிக்கண்ணை திறந்தார். காவல் காப்பவர், சிவன் என்பதை அறிந்த இந்திரன், ஆணவத்தால் தான் செய்த செயலை மன்னிக்க வேண்டினார்.

    அப்போது கோபத்தில் தன் உடலில் ஏற்பட்ட வியர்வைத்துளியை பாற்கடலில் தெளித்தார் சிவன். அதில் ஒரு அசுர குழந்தை தோன்றியது. இந்த குழந்தை பிரம்மனின் தாடியை பிடித்து இழுக்க வலி தாங்காத பிரம்மனின் கண்களிலிருந்து கண்ணீர் தோன்றி அந்த துளியும் குழந்தையின் மீது விழுந்தது. இப்படி சிவனின் வியர்வை துளி, பாற்கடல் நீர், பிரம்மனின் கண்ணீர் துளி ஆகிய ஜலத்தினால் உருவான அசுரன் என்பதால் இந்த குழந்தைக்கு "ஜலந்தராசூரன்' என பெயர் வைக்கப்பட்டது.

    வரம் வாங்கினான்

    அவன் பெரியவன் ஆனதும் 3 உலகும் ் தனக்கு அடிமையாக வேண்டும் என்றும், தனக்கு சாகாவரமும் வேண்டும் என பிரம்மனிடம் கேட்டான். பிரம்மன் மறுத்தார். அப்போது ஜலந்தராசூரன், தர்ம பத்தினியான என் மனைவி பிருந்தை எப்போது மனதளவில் கெடுகிறாளோ அப்போது எனக்கு அழிவு வரட்டும், என பிரம்மனிடம் வரம் வாங்கினான். இதனால் இவனது அட்டகாசம் அதிகமானது. கடைசியில் சிவனையே அழிக்க சென்றான். சிவன் அந்தணர் வேடமிட்டு, அசுரன் முன்பு வந்து நின்று, தன் காலால் தரையில் சக்கர வடிவில் ஒரு வட்டம் போட்டார். இந்த சக்கரத்தை எடுத்து உன் தலையில் வை. அது உன்னை அழிக்கும் என்றார். ஆணவம் கொண்ட ஜலந்தரன் என் மனைவியின் கற்பின் திறனால் எனக்கு அழிவு வராது என சவால் விட்டான்.

    ராமாவதாரம்

    இந்த நேரத்தில், திருமாலை அழைத்த சிவன், திருமாலே தாங்கள் ஜலந்தராசூரனைப் போல் வடிவெடுத்து, அவன் மனைவி பிருந்தை முன் செல்லும்படி கூறினார். சிவன் கூறியபடி திருமால் செய்ய தனது கணவன் தான் வந்திருக்கிறார் என வீட்டிற்குள் அழைத்தாள் பிருந்தை. ஒரு நொடியில், மாற்றானை தன் கணவன் என பிருந்தை நினைத்ததால் அவளது மனம் களங்கமடைந்தது. இந்தநேரத்தில், சக்கரத்தை அசுரன் எடுத்து தலையில் வைக்க அவன் கழுத்தை சக்கரம் துண்டித்து விடுகிறது. இதை அறிந்த பிருந்தை, தன் கணவன் அழிய காரணமாக இருந்த விஷ்ணுவிடம், நான் கணவனை இழந்து வருந்துவது போல, நீங்களும் உன் மனைவியை இழந்து வருந்த வேண்டும், என சாபம் கொடுத்து விட்டு தீக்குளித்தாள். இதனால் தான், விஷ்ணு ராமாவதாரம் எடுக்க வேண்டி வந்தது.

    சக்கரத்தை பெற்றார்

    பிருந்தையின் சாபத்தினால் விஷ்ணுவுக்கு பித்து பிடித்தது. பித்தை தெளிவிக்க பிருந்தை தீக்குளித்த இடத்தில் சிவன் ஒரு விதை போட்டார். இந்த விதை விழுந்த இடத்தில் துளசி செடி வளர்ந்தது. இந்த துளசியால் மாலை தொடுத்து திருமாலுக்கு சாற்ற பித்து விலகுகிறது. அசுரனை அழிக்க காரணமாக இருந்த சக்கரத்தை சிவனிடம் திருமால் கேட்டார். அதை பெறுவதற்காக ஆயிரம் தாமரைகளால் சிவனை பூஜித்தார். சிவனின் திருவிளையாடலால் 2 பூ குறைந்தது. திருமால் தன் இருகண்களையும் எடுத்து, சிவனை பூஜிக்க மகிழ்ந்த சிவன் சக்கரத்தை திருமாலுக்கு கொடுத்தார். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இக்கோவில் குடமுழுக்கு கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ந் தேதி நடந்தது. விற்குடி வீராட்டானேஸ்வரர் ேகாவில் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும் மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்திருக்கும்.

    பிருந்தையின் சாபத்தால் சீதையை பிரிந்த ராமா்

    கற்பிற்சிறந்த பிருந்தையை ராமர் ஏமாற்ற இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிருந்தையின் கணவர் ஜலந்தராசூரனை சிவன் வதம் செய்தாா். இதனால் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்த பிருந்தை தான் தனது கணவனை இழந்து தவிப்பது போல நீங்களும்(திருமால்) உங்கள் மனைவியை இழந்து தவிப்பீர்கள் என சாபம் அளித்து விட்டு தீக்குளித்து உயிர் துறந்தாள். இதனால் ராமாவதாரம் எடுத்த விஷ்னு தனது மனைவி சீதையை பிரிந்து தவித்தார் என புராண வரலாறு கூறுகிறது. இதன்மூலம் கற்பிற்சிறந்த பெண்ணின் சாபம் கடவுளையும் விட்டு வைக்கவில்லை என்பது தெளிவாகிறது.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள விற்குடியில் வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினத்துக்கு வந்து நாகை- கங்களாஞ்சேரி- திருவாரூர் சாலையில் உள்ள விற்குடி பிரிவு சாலைக்கு சென்று அங்கிருந்து 2 கி.மீட்டர் தொலையில் உள்ள இக்கோவிலை அடையலாம். தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் நாகப்பட்டினத்துக்கு வந்து மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம். நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 24 கி.மீட்டர் தொலைவில் இந்த கோவில் உள்ளது.

    • நெல்லையப்பர் கோவில் பல கட்டங்களில் பல மன்னர்களால் கட்டப்பட்டது.
    • நெல்லையப்பர் கோவில் தூண்கள் அனைத்தும் சிற்ப வேலைபாடுகள் நிறைந்துள்ளன.

    நெல்லையில் உள்ள டவுனில் பிரசித்திபெற்ற நெல்லையப்பர் கோவில் அமைந்துள்ளது. கலைநயத்துடன் கட்டப்பட்டு உள்ள இந்த கோவிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்துக்கு மேலாக ஒரு வெள்ளைநிற நந்தி படுத்திருக்கிறது. அடுத்து உள்ளே சென்றால் சுமார் 9 அடியில் விநாயகர் வீற்றிருக்கிறார்.

    மூலவரை சுற்றி 3 பிரகாரங்கள் இருக்கின்றன. முதல் பிரகாரத்தில் எல்லா கோவில்களை போல தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சன்னிதிகள் உள்ளன. கோவிந்தபெருமாள் சிவனுக்கு அருகிலேயே சயனித்திருக்கிறார்.

    2-வது பிரகாரம் சற்று பெரியது. இங்கு ஏழிசை சுரங்கள் இசைக்கும் தூண்கள் உள்ளன. அவற்றை தட்டிப்பார்த்தால் சுரங்களின் ஒலி கேட்கும். இந்த பிரகாரத்தில் தான் தாமிரசபை உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்டலட்சுமி, சனீ்ஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.

    3-வது பிரகாரம் மிகவும் பெரியது. 3 யானைகள் கூட இதில் சேர்ந்து நடக்கலாம். அவ்வளவு அகலம் கொண்டது. இந்த பிரகாரத்தில் இருந்து அம்மன் மண்டபம் வழியாக அம்மன் சன்னிதிக்கு செல்லலாம். இங்கு ஆஞ்சநேயர், அய்யப்பன், வடிவு அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோருக்கு தனி சன்னிதிகள் இருக்கின்றன. கோவிலின் மிகப்பெரிய உள்தெப்பம் இருக்கிறது.

    இந்த 3-வது பிரகாரத்தில் முருகப்பெருமானுக்கு தனியாக பெரிய சன்னதி உள்ளது. ஆறுமுகமாய், மயில் வாகனனாய் வள்ளி, தெய்வானையுடன் சந்தனக்காப்பில் நின்று அருள்புரிகிறார் முருகன். இந்த கோவிலில் உள்ள விநாயகர் பொல்லாப் பிள்ளையார் என்றும், முருகப்பெருமான் ஆறுமுகப்பெருமான் என்றும் அழைக்கப்படுகின்றனர். இக்கோவிலில் சிவபெருமான் நெல்லையப்பராக காட்சி அளிக்கிறார். அன்னை காந்திமதி அம்பாள் தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார். நெல்லையப்பர் கோவில் இரு மூலவரை கொண்ட துவிம்மூர்த்தி என்ற வகை கோவில் ஆகும். இரு மூலவர்களாக சுவாமி நெல்லையப்பர் லிங்க வடிவத்திலும், கோவிந்தராஜர் சயன கோலத்திலும் அருகருகே தனித்தனி சன்னிதிகளில் பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.

    தமிழ்நாட்டில் உள்ள முக்கிமான 5 சிவசபைகளில் நெல்லையில் உள்ள நெல்லையப்பர் காந்திமதி கோவில் தாமிர சபையை கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. சிவபெருமான் நடனமாடிய 5 முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோவில் திருத்தலமும் ஒன்று என்பது சிறப்பு.

    வியப்பை ஏற்படுத்தும் கோபுரங்கள்

    நெல்லையப்பர் கோவிலில் தெற்கு பிரகாரத்துக்கு நடுவே தட்சணாமூர்த்தி சன்னதிக்கு முன்னதாக சங்கிலி மண்டபம் எனும் அற்புதமான கலை நுட்பத்துடன் கூடிய பகுதி அமைந்துள்ளது. அதை ஒட்டி நடுகோபுரமும் கொள்ளை அழகு. பிரகார மண்டபத்தில் உயரமாக பெரிய கல்தூண்கள் அந்த இடத்தையே அழகூட்டி காட்டுகின்றன.

    கோவிலில் உள்ள தெற்கு பிரகாரம் சுமார் 387 அடி நீளம் கொண்டதாகவும், சுமார் 42 அடி அகலம் கொண்டதாகவும் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கோவிலுக்கு திருப்பணி செய்தவர்களும், மன்னர் பெருமக்களும் சிலையாக காட்சி தருகின்றனர்.

    இதைபோல் மேற்கு பிரகாரமும் பிரமிக்கத்தக்கது. இது சுமார் 285 அடி நீளம் கொண்டதாகவும், சுமார் 40 அடி அகலம் கொண்டதாகவும் அமைந்து பிரம்மாண்டமாக காட்சி தருகிறது. இதன் நடுவே மேலகோபுரம் அமைந்துள்ளது. இங்கே உள்ள சுதை வடிவிலான பிள்ளையார் நம்மை கொள்ளை கொள்கிறார். சுமார் 387 அடி நீளமும் 42 அடி அகலமும் கொண்டு அமைந்திருக்கிறது வடக்கு பிரகாரம். இந்த பிரகாரத்தில் நின்றசீர் நெடுமாறன் அரங்கம் அமைந்துள்ளது. மேலும் சுவாமிக்கு அபிஷேகத்திற்கு எடுக்கப்படும் ஆறுகால தீர்த்தக்குண்டம் இங்கே உள்ளது.

    அடுத்து ஈசான மூலையில் யானை கூடம் அமைந்துள்ளது. கிழக்கு பிரகாரம் சுமார் 295 அடி நீளத்திலும் 40 அடி அகலத்திலும் அமைந்துள்ளது. இதன் வடக்கு பக்கம் 78 தூண்களுடன் சோமவாரம் மண்டபம் அமைந்துள்ளது.

    நெல்லையப்பர் சன்னதியை ஒட்டி நுழைவாயில் கோபுரமும், அதேபோல் காந்திமதி அம்பாள் சன்னதியை ஒட்டி நுழைவாயில் கோபுரமும் அமைந்துள்ளது. இந்த சிறப்புமிக்க 2 கோபுரங்களும் பார்க்கவே அவ்வளவு வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

    அற்புதம் மிக்க இசைக்கல்வெட்டு

    இந்த கோவிலில் கிழக்கு நோக்கிய சன்னிதி வாயிலின் இருபக்கமும் துவார பாலகர்கள் காவல்புரிய, உள்ளே கருவறையில் வெட்டுப்பட்ட லிங்கத்திருமேனியாய் காட்சி அளிக்கிறார் நெல்லையப்பர். பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த நெல்லையப்பர் கோவில் பல கட்டங்களில் பல மன்னர்களால் கட்டப்பட்டது. தற்போது இருக்கும் நிலை வரை நின்றசீர் நெடுமாற பாண்டியனால் கட்டப்பட்டது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இங்கு வேறு எங்கும் காண முடியாத அற்புதம் மிக்க இசைக்கல்வெட்டு ஒன்று உறைந்து கிடக்கிறது. அது கம்பி வேலியிட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதில் தாளலயம் பற்றியும், தாளத்தில் உள்ள அங்கங்கள் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன.

    சீர் கொண்டு செல்லும் அம்பாள்

    பெண்கள் திருமணம் முடிந்து கணவர் வீட்டுக்கு சீர் கொண்டு செல்வது போல் காந்திமதி அம்பாளும் தனது திருக்கல்யாணத்தின் போது சீர் கொண்டு செல்கிறாள்.

    ஐப்பசி பிரம்மோற்சவத்தின் முதல் 10 நாட்கள் அம்பாள் சிவனை மணக்க வேண்டி தவமிருபார். 10-ம் நாளில் கம்பை நதிக்கு எழுந்தருள்வார். 11-ம் நாள் மகாவிஷ்ணு தன் தங்கையை மணந்து கொள்ளும்படி சிவனை அழைப்பார். சிவனும் அவரது அழைப்பை ஏற்று அம்பாளை மனம் செய்வார். திருக்கல்யாணத்தின்போது அம்மன் சீர் கொண்டு செல்கிறார். அப்போது பக்தர்கள் மணமக்களுக்கு திருமண ஆடைகள் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது.

    பெருமை சேர்க்கும் மண்டபங்கள்

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் பெருமை சேர்க்கும் வகையில் பல மண்டபங்கள் உள்ளன.

    அவைகளின் விவரங்கள்:-

    ஆயிரம் கால் மண்டபம்

    இந்த மண்டபம் 520 அடி நீளமும் 63 அடி அகலமும், ஆயிரம் தூண்களையும் கொண்டுள்ளது. மண்டபத்தின் உச்சிஷ்ட கணபதி நம்மை ஈர்க்கும் தோற்றமுடையது. திருக்கல்யாணம் நடைபெறும் மண்டபம் கீழ்ப்பகுதியில் ஆமை ஒன்றினால் தாங்கப்படுவது போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. மகாவிஷ்ணுவே ஆமை வடிவத்தில் வந்து இறைவனை பூஜிப்பதாக ஐதீகம்.

    ஊஞ்சல் மண்டபம்

    96 தத்துவங்கள் தெரிவிக்கும் விதமாக 96 தூண்களை உடையது இந்த மண்டபம். திருக்கல்யாண வைபவம் முடிந்த பின் சுவாமி அம்பாள் ஊஞ்சலில் அமர்ந்த கோலமும், ஆடி மாத வளைகாப்பு திருவிழாவும் இந்த மண்டபத்தில் தான் நிகழும். இங்குள்ள யாளி சிற்பங்கள் சிறப்புடையவை.

    சோமவார மண்டபம்

    இந்த மண்டபம் சுவாமி கோவிலில் வட பக்கத்தில் அமைந்துள்ளது. கார்த்திகை சோமவார நாளில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நிகழும் மண்டபம். தற்பொழுது நவராத்திரிக்கு இங்கு வைத்து பூஜை நிகழ்கிறது. இந்த மண்டபம் 78 தூண்களை உடைய பெரிய மண்டபம் ஆகும்.

    சங்கிலி மண்டபம்

    சுவாமி கோவிலையும் அம்மன் கோவிலையும் இணைப்பதால் இந்த மண்டபம் சங்கிலி மண்டபம் என பெயர் பெற்றுள்ளது. 1647-ம் ஆண்டு வடமலையப்ப பிள்ளையன் அவர்களால் கட்டப்பட்டது. இந்த மண்டபத் தூண்களில் வாலி, சுக்ரீவன், புருஷாமிருகம், பீமன், அர்ச்சுனன் சிலைகள் கண்ணை கவரும்.

    மணிமண்டபம்

    இந்த மண்டபத்தின் மத்தியில் பெரிய மணி ஒன்று தொங்குவதால் மணிமண்டபம் என்று பெயர் பெற்றது. நின்றசீர் நெடுமாற மன்னரால் உருவாக்கப்பட்டது இந்த மண்டபம். ஒரே கல்லில் சுற்றி சுற்றி பல சிறு தூண்கள் உள்ளன. ஒவ்வொரு சிறிய தூணை தட்டினாலும் ஒவ்வொரு வாத்திய ஒலி தோன்றும். சுவரங்கள் மாறுபட்டு வரும். மரக்கட்டையில் மான் கொம்பு மாட்டி தட்டினால் அற்புதமான, சரியான சுவரம் கிடைக்கும். மொத்தம் 48 சிறிய தூண்கள் உள்ளன. தமிழ்நாட்டின் இசைத்தூண்கள் அமைந்துள்ள திருக்கோவில்களில் காலத்தால் முற்பட்ட இசை தூண்கள் இவை என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.

    வசந்த மண்டபம்

    100 தூண்களை உடைய இந்த மண்டபத்தில் கோடைகாலத்தில் வசந்த விழா நடைபெறும். சுற்றிலும் சோலையாய் மரங்கள் உள்ளன. இந்த சோலைவனம் 1756-ம் ஆண்டு திருவேங்கிட கிருஷ்ண முதலியார் அவர்களால் அமைக்கப்பட்டது.

    சிறப்பு பெற்ற சிற்ப தூண்கள்

    நெல்லையப்பர் கோவில் தூண்கள் அனைத்தும் சிற்ப வேலைபாடுகள் நிறைந்துள்ளன. ஒரு தோளில் கைக் குழந்தையை வைத்துக்கொண்டு மறுபக்கம் தன் பெரிய பிள்ளைக்கு சோறு ஊட்டும் அன்புத்தாய், அன்பர்களுக்கு அருள் பாலிக்கும் ஆஞ்சநேயர், மனைவியை வெளியே அழைத்து செல்லும் அக்கால கணவன்-மனைவியின் தோற்றம், ஐந்தறிவு ஜீவனுக்கும் தன் குழந்தை என்றால் கொள்ளை பிரியம் தான் என்பதை உணர்த்தும் சிற்பம், குழந்தை கண்ணனை கொல்ல வந்து கண்ணனால் கொல்லப்பட்ட அரக்கி கையில் குழந்தையுடன், வீரபத்திரர், கர்ணன், அர்ஜுனன் போன்ற ஒரு சிற்பங்கள் அவற்றில் செய்யப்பட்டுள்ள நுண்ணிய வேலைபாடுகள் காண்போரின் மனதை கொள்ளை கொள்ள செய்யும்.

    இந்த சிற்பங்களில் எலும்பு, நரம்பு, நகம் தெரிகிறது. அச்சிலைகள் அணிந்துள்ள அணிகலன்களின் வடிவங்கள், கை, கால், முட்டிகள், கண்களில் தெரியும் ஒளி என அவை சிலைகள் அல்ல உயிருடன் வந்த கலை என்ற எண்ணம் நமக்கு தோன்றும்.

    • இங்குள்ள இறைவன், ‘வசிட்டேசுவரர்’, ‘கருவேலநாதர்’, ‘கருணாசாமி’ என்ற பெயர்களில் வணங்கப்படுகிறார்.
    • இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

    தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்குட்பட்ட 88 கோவில்களில் ஒன்று கரந்தை கருணாசாமி கோவில் என்றழைக்கப்படும் வசிஷ்டேஸ்வரர் கோவில் ஆகும். பல்லவர் கால கரந்தை வசிஷ்டேஸ்வரர் கோவில், திருநாவுக்கரசரின் அடைவுத் திருத்தாண்டகப் பாடலில் குறிப்பிட பெற்ற சிறப்புடைய தலமாகும்.

    முதலாம் பராந்தக சோழன், உத்தம சோழன், முதலாம் ராஜராஜசோழன் காலத்திய கல்வெட்டுகள், இக்கோவிலில் காணப்படுகிறது. கரிகாலச்சோழனுக்கு கருணை பாலித்த இக்கோவிலில் இறைவனை சப்தரிஷிகளில் ஒருவரான வசிஷ்டர் வழிபட்டதால் வசிஷ்டேஸ்வரர் என்றும் கருணாசாமி, கருந்திட்டை மகாதேவன் என்றும் அழைக்கப்படுகிறார்.

    தஞ்சையின் வடதிசையில் உள்ள நகரப்பகுதி 'கருத்திட்டைக்குடி' என்று அழைக்கப்படுகிறது. தற்போது 'கரந்தட்டான்குடி' என்றும், 'கரந்தை' என்றும் அழைக்கப்படும் இந்த ஊர், வெண்ணாற்றிற்கு தெற்கிலும், வீரசோழ வடவாற்றிற்கு வடக்கிலுமாக இரு ஆறுகளுக்கு இடையே அமைந்த வளமான பகுதியாகும். தஞ்சைக்கு எவ்வளவு பழமை உண்டோ, அதனைவிட அதிக பழமை இந்த ஊருக்கு உண்டு. கரந்தையின் கிழக்குப்பகுதி மையத்தில் திகழும் பழம்பெரும் கலைச்சிறப்புமிக்கதாக கருணாசாமி கோவில் விளங்குகின்றது. இங்குள்ள இறைவன், 'வசிட்டேசுவரர்', 'கருவேலநாதர்', 'கருணாசாமி' என்ற பெயர்களில் வணங்கப்படுகிறார். இறைவியின் திருநாமம், 'பெரியநாயகி', 'திரிபுரசுந்தரி' என்பனவாகும். 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்தக் கோவில், ஒரு அற்புத சமய கலைச் சின்னமாகும். இங்குள்ள மூலவர் சிவலிங்கம், வசிஷ்ட முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வணங்கப்பட்ட சிறப்பு கொண்டது என்கிறார்கள்.

    சப்தரிஷிகளில் ஒருவராக திகழ்பவர், வசிஷ்ட ரிஷி. கற்பின் இலக்கணமாக திகழும் அருந்ததி, இவரது மனைவியாவார். இவர்கள் இருவருக்கும் சிற்ப உருவங்கள் காணப்படும் ஒரே கோவிலாக இந்த ஆலயம் உள்ளது. தென்முக குருவாக அருளும் தட்சிணாமூர்த்தியும், அவரது வலப்புறம் குருபத்தினியான அருந்ததியோடு வசிஷ்ட மகரிஷியும் அமர்ந்து இருபெரும் குருக்களாக ஞானமும், செல்வமும், அன்பும், அருளும் ஒருங்கே வாரி வழங்கிடும் அற்புத திருக்கோவில் இது. பங்குனி மாதத்தில் காலை சூரியனின் ஒளி, மூலவரின் சிவலிங்க திருமேனியில் தொடர்ந்து மூன்று நாட்கள் விழும் சிறப்புக்குரிய ஆலயம். இந்தக் கோவிலில் நடைபெறும் ஏழூர் பல்லக்கு திருவிழா, வெட்டிவேர் பல்லக்கு முதலிய சிறப்பு உற்சவங்கள், திருவிழாக்கள், தஞ்சாவூர் பகுதியில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

    இக்கோவிலின் கருவறை, விமான கட்டிடக்கலை, கருவறை சுவர்களில் காணப் பெறும் மிகச்சிறந்த சிற்பங்கள் போன்றவை, சோழர் கால வரலாற்றில் புதிய அரிய பல தகவல்களை தருகின்றன. கோவிலில் மூன்று வாசல்கள் உள்ளன. ஒன்று கிழக்கு திசையில் குளத்தை நோக்கி அமைந்துள்ளது. கரந்தை மக்கள் வந்து வழிபட்டுச் செல்ல தெற்கு நோக்கிய கோபுர வாசலாய் மற்றொன்று உள்ளது. மற்றொரு வாசல் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. நுழைவு வாசல்களை ஒட்டியுள்ள மகாமண்டபம் பிற்காலத்து திருப்பணியாகும். இதன் தரையில் ஒருவர் விழுந்து வணங்குவது போன்ற சிற்பமும் அதையொட்டி ஒரு கல்வெட்டும் உள்ளன.

    கோவிலின் கிழக்கு முகப்பில் மிகப்பெரிய குளம் ஒன்று உள்ளது. தஞ்சையில் உள்ள மிகப்பெரிய கோவில் குளங்களுள் இதுவும் ஒன்றாகும். சோழ மன்னர்களில் ஒருவரான கரிகால் சோழ மன்னனுக்கு, கருங்குஷ்டம் என்னும் தோல் நோய் இருந்துள்ளது. அவர் அந்த நோயை தீர்க்க பல்வேறு சிகிச்சை முறைகளை கையாண்டும் பலன் கிடைக்காமல் போனது.

    இந்த நிலையில் அவரது கனவில் தோன்றிய கடவுள் கருணாசாமி, 'இந்தக் கோவில் குளத்தில் ஒரு மண்டலம் (48 நாட்கள்) புனித நீராடி வழிபட்டால் கருங்குஷ்டம் தோல் நோய் தீர்ந்து விடும்' எனறு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கரிகால் சோழன் இந்தக் குளத்தில் ஒரு மண்டலம் புனித நீராடி கருணாமூர்த்தியை வழிபட்டுள்ளார். இதனால் அவருக்கு தோல் நோய் நீங்கியது.

    அன்று முதல் இந்தப் பகுதி 'கருந்தட்டான்குடி' என்று அழைக்கப்பட்டு, தற்போது 'கரந்தை' என்று அழைக்கப்படுகிறது. தொடர்ந்து 48 நாட்கள் இந்த குளத்தில் புனித நீராடி கருணாசாமியை வழிபாடு செய்தால் நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. திருமணம், உயர்கல்வி, ஞானம், உயர் பதவிகள், ஆட்சித்திறமை, செல்வம், பகை வெல்லுதல், ஆற்றல் ஆகியவற்றை வேண்டுவோருக்கு, வேண்டியதை அருளிடும் இந்த தெய்வீக திருத்தலத்திற்கு அனைவரும் ஒருமுறை தவறாமல் சென்று கருணாசாமியின் அருளைப் பெறுவோம்.

    ஆரூண், பிள்ளையார்பட்டி.

    ×