search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Healthy Life"

    வேக வேகமாக உணவைச் சாப்பிடுவது, மிகச் சூடாக சாப்பிடுவது, தேவையான அளவுக்கு தண்ணீர் அருந்தாதது போன்றவை விக்கலுக்கு முக்கிய காரணங்கள்.
    சாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது காற்றை உள் இழுக்கிறோம். அப்போது மார்பு தசைகள் விரிகின்றன. மார்புக்கும், வயிற்றுக்கும் இடையில் நுரையீரலை ஒட்டியுள்ள உதரவிதானமும் அப்போது விரிகிறது. உடனே, தொண்டையில் உள்ள குரல்நாண்கள் திறக்கின்றன. அப்போது நுரையீரலுக்குள் காற்றின் அழுத்தம் குறைகிறது. அதேநேரம் நுரையீரலுக்குள் காற்று செல்ல அதிக இடம் கிடைக்கிறது.

    இதனால் நாம் சுவாசிக்கும் காற்று, திறந்த குரல்நாண்கள் வழியாக தங்கு தடையின்றி நுரையீரல்களுக்குள் நுழைந்துவிடுகிறது. இதுதான் இயல்பாக நிகழும் சுவாச நிகழ்வு. சில நேரங்களில், மார்பு பகுதியில் உள்ள நரம்புகள் உதரவிதானத்தை எரிச்சல்படுத்தினால், அது மூளைக் கட்டுப்பாட்டை மீறி, தன்னிச்சையாக திடீர் திடீரென்று சுருங்க ஆரம்பித்துவிடும். அப்போது குரல்நாண்கள் சரியாக திறப்பதில்லை.

    அந்த மாதிரி நேரங்களில் நாம் சுவாசிக்கும் காற்று குரல் நாண்களின் குறுகிய இடைவெளி வழியாகத்தான் நுரையீரலுக்குள் சென்று திரும்ப வேண்டும். அப்போது அந்த காற்று, புல்லாங்குழலில் காற்று தடைபடும்போது இசையொலி உண்டாவதைப் போல, தொண்டையில் ‘விக்... விக்...’ என்று ஒரு விநோத ஒலியை எழுப்புகிறது. இதுதான் ‘விக்கல்’.

    வேக வேகமாக உணவைச் சாப்பிடுவது, மிகச் சூடாக சாப்பிடுவது, தேவையான அளவுக்கு தண்ணீர் அருந்தாதது போன்றவை விக்கலுக்கு முக்கிய காரணங்கள். வலி நிவாரணி மாத்திரைகள், ஸ்டீராய்டு மாத்திரைகளை சாப்பிட்டாலும் விக்கல் வரும். இரண்டு நாட்களுக்கு மேல் விக்கல் தொடர்ந்தால், அது நோய்க்கான அறிகுறி என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    உதாரணத்துக்கு, இரைப்பையில் அல்சர் இருக்கும்போது, சிறுநீரகம் பழுதாகி ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும்போது விக்கல் வரும். உதரவிதானத்தில் நோய் தொற்று, கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய் தொற்று, குடல் அடைப்பு, மூளைக் காய்ச்சல், கணைய அழற்சி, பெரினிக் நரம்புவாதம் போன்றவற்றாலும் விக்கல் வரும். மூச்சை நன்றாக உள்ளிழுத்து அடக்கிக்கொள்ளுங்கள். 20 எண்ணும் வரை மூச்சை வெளியில்விட வேண்டாம்.

    பிறகுதான் மூச்சை வெளியில்விட வேண்டும். இப்படி 5 முறை செய்தால் விக்கல் நின்றுவிடும். வேகமாக ஒரு சொம்பு குளிர்ந்த தண்ணீர் குடித்தால், விக்கல் நின்றுவிடும். ஒரு தேக்கரண்டி சர்க்கரையை நாக்கில் வைத்து அதை தானாக கரையவிட்டால், விக்கல் நிற்கும். ஏதேனும் ஒரு வகையில் தும்மலை உண்டாக்கினால், விக்கல் நிற்கும். சில நிமிடங்கள் நீடிக்கும் விக்கலுக்கே நாம் பயந்துபோகிறோம். அமெரிக்காவில் சார்லஸ் ஆஸ்பார்ன் என்பவர் 68 ஆண்டுகளுக்கு தொடர்ந்து விக்கல் எடுத்துக் கின்னஸ் ரிக்கார்டு செய்திருக்கிறார். அம்மாடியோவ்!
    மத்திய தரைக்கடல் உணவுமுறைப்படி உணவு உட்கொள்வதால் இதய நோய்க்கு வழிவகுக்கும் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவற்றின் அபாயத்தை குறைக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.
    மத்திய தரைக்கடல் பகுதி உணவுமுறை (மெடிட்டரேனியன் டயட்), உடல்நலம் காக்க உதவும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    வழக்கமான மத்திய தரைக்கடல் உணவு முறையில், அதிகளவிலான காய்கறிகள், பழங்கள், பீன்ஸ், தானியங்கள் மற்றும் தானியப் பொருட்கள் அடங்கியிருக்கும்.

    சமீபத்திய ஆய்வுகளின்படி, மனச்சோர்வைக் குறைக்க இந்த உணவுமுறை உதவும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், மெடிட்டரேனியன் டயட் என்றால் என்ன? அது எப்படி உங்களுக்கு உதவும் என்பது தெரியுமா?

    வழக்கமான மெடிட்டரேனியன் டயட்டில், அதிகளவிலான காய்கறிகள், பழங்கள், பீன்ஸ், தானியங்கள் மற்றும் தானியப் பொருட்கள் அடங்கியிருக்கும். உதாரணமாக, முழுத் தானிய பிரட், பாஸ்தா, கைக்குத்தல் அரிசி ஆகியவற்றைக் கூறலாம்.

    மிதமான அளவிலான மீன், வெள்ளை இறைச்சி மற்றும் சில பால் பொருட்களும் இதில் அடங்கும்.

    இந்த உணவுப் பொருட்கள் எல்லாம் ஒன்று சேரும்போது உடல்நலனுக்கு நல்லது என்கிறார், இங்கிலாந்து இதய அறக்கட்டளையின் மூத்த உணவு ஆலோசகரான விக்டோரியா டெய்லர்.

    மத்திய தரைக்கடல் உணவுமுறைப்படி உணவு உட்கொள்வதால் இதய நோய்க்கு வழிவகுக்கும் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவற்றின் அபாயத்தை குறைக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.

    மேலும், இந்த உணவுமுறையைப் பின்பற்றினால், நீண்ட ஆயுளுடன், உடல் எடை கூடாமல் இருக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    மது அருந்துபவர்கள் மட்டுமே கல்லீரல் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று நினைப்பது தவறு. பரம்பரை, வைரஸ், அதிக எடை, சில மருந்துகள் என பல காரணங்களால் ஆண்-பெண் இருபாலாரும் கல்லீரல் பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.
    மருத்துவத்தில் பல நோய்களைப் பற்றியும், அவைகளை வருமுன் காப்பது பற்றியும் நாம் நன்கு கேட்டு, படித்து அறிந்து வருகின்றோம். அவற்றினை கடை பிடித்தும் வருகின்றோம். ஆனால் சில பொதுவான அதிகமாக காணப்படும் பாதிப்புகள் நம் கண்களிலும் கவனத்திலும் தவற விட்டு விடுகின்றோம். அதில் ஒன்றுதான் நம் கல்லீரல் பாதுகாப்பு.

    மது அருந்துபவர்கள் மட்டுமே கல்லீரல் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று நினைப்பது தவறு. பரம்பரை, வைரஸ், அதிக எடை, சில மருந்துகள் என பல காரணங்களால் ஆண்-பெண் இருபாலாரும் கல்லீரல் பாதிப்பிற்கு ஆளாகின்றனர்.

    சில உடல் சொல்லும் அறிகுறிகளை நாம் கவனிக்க வேண்டும்.

    * அடிக்கடி உடல் சோர்வாகவும், பலவீனமாகவும் இருக்கின்றதா?

    சில சமயம் முதுகுவலி, வயிற்று வலி, கீழ் காலில் சவுகர்யமின்மை ஏற்படுகின்றதா?

    * வயிற்று பிரட்டல், பசியின்மை ஏற்படுகின்றதா?

    * உடல் நிறமோ, கண்ணின் வெள்ளைப் பகுதியோ மஞ்சளாக இருக்கின்றதா?

    * அதிக எடை இருக்கின்றதா? அதனை குறைப்பது மிகவும் கடினமாக இருக்கின்றதா?

    * கழுத்து, கை உள் மடிப்பு பகுதிகளில் அடர்ந்த கறுப்பு நிறம் இருக்கின்றதா?

    * உங்கள் சருமம் ஆரோக்கியமற்று இருக்கின்றதா?

    * வயிற்று வலி, பிடிப்பு போன்றவை ஏற்படுகின்றதா?

    * தலைவலி, குழப்பம், கவனக்குறைவு ஏற்படுகின்றதா?

    * எப்போதும் பசி, அதன் காரணமாக அதிகம் சர்க்கரை, கார்போஹைடிரேட் உணவு உண்ணுதல் போன்ற பாதிப்புகள் உள்ளதா?

    * என்னவென்றே தெரியாத உடல்நலமின்மை உள்ளதா?

    இவைகளில் அனைத்துமோ, சிலவோ இருக்குமானால் உடனடியாக மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இது கொழுப்பு நிறைந்த கல்லீரலின் பாதிப்பாக இருக்க வாய்ப்புகள் அதிகமுண்டு. இதற்கு உடனடியாக முறையான கவனம் கொடுக்கவில்லை என்றால் கல்லீரலில் அதிக பாதிப்பு, இருதய பாதிப்பு, பக்க வாதம், சர்க்கரை நோய், புற்று நோய் என பல கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம்.

    இன்று குறைந்தது 500-க்கும் மேற்பட்ட வேலைகளை கல்லீரல் செய்கின்றது.

    * உடலில் நச்சுக்களை நீக்குகின்றது.

    * குளுகோசினை சேமித்து தேவைப்படும் போது சக்தியாக வெளியிடுகிறது.

    * ரத்தத்தில் கிருமிகளை நீக்குகின்றது.

    * ரத்தத்தில் தீங்கு விளைவிக்கும் பொருட்களை நீக்குகின்றது. இப்படி விவரித்துக் கொண்டே போகலாம்.

    * இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த கல்லீரல் கொழுப்பு சேர்ந்த கல்லீரலாக மாறும் போது அது வீக்கம் பெறுகின்றது. பெரிதாகின்றது. அதனுடைய வேலைகளை முறையாக செய்ய முடியாமல் போகின்றது.

    * அதிக எடை ஆகியவை கொழுப்பு கல்லீரலுக்கு முக்கிய காரணம் ஆகின்றன.

    * கல்லீரலில் 10 சதவீதம் சரியாக வேலை செய்தால்தான் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

    கல்லீரலை ஆரோக்கியமாய் வைத்துக் கொள்வது எப்படி?

    * நோயினை எதிர்ப்பது என்பது நோய் வராமல் பாதுகாத்துக் கொள்வது ஆகும்.

    * அளவான எடை இருக்குமாறு நம்மை காக்க வேண்டும். அதிக எடையினை குறைப்பது கல்லீரலில் உள்ள கொழுப்பினை குறைக்க உதவும்.

    * விகிதாச்சார உணவு அவசியம். அதிக கலோரி சத்து உள்ள உணவு, அதிக கொழுப்பு, மைதா வகைகள், அதிக பாலிஷ் செய்த அரிசி, சர்க்கரை இவற்றினைத் தவிருங்கள். நார் சத்து மிகுந்த உணவுகள், பழங்கள், காய்கறிகள், முழு தானிய உணவுகள், கொட்டைகள், விதைகள் இவைகளை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

    * அன்றாடம் உடற்பயிற்சி செய்யுங்கள். இது உங்கள் கல்லீரல் கொழுப்பினை குறைக்கும்.

    * மது, புகை, புகையிலை போன்ற நச்சுப் பொருட்களை அடியோடு தவிர்ப்போம்.

    * உங்கள் சுகாதாரப் பொருட்களை மற்றவர்களுடன் பங்கு போட வேண்டாம்.

    * கல்லீரலுக்கான ஏ, பி. வைரஸ் தவிர்க்க நடைபயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள். இது அவசியம்.

    * மது அருந்துபவர்கள், அருந்தாதவர்கள் இருவரும் கொழுப்பு நிறைந்த கல்லீரல் நோய்க்கு தீர்வாக மேலும் சில வழிமுறைகளை பின்பற்றலாம்.

    * அளவான முறையில் காபி அருந்தலாம். காபியில் உள்ள கேபின் கல்லீரலில் ஏற்படும் முறையற்ற என்ஸைம்கள் அளவினை சரி செய்யும்.

    * கீரைகள், பச்சை காய்கறிகள் பெரிதும் உதவும்.

    * டோஃபு எனப்படும் சோயா பன்னீரினை அளவாய் பயன்படுத்தவும்.

    * மீன், ஒமேகா -3 இவை கல்லீரல் வீக்கம், கொழுப்பு இரண்டினையும் வெகுவாய் குறைக்கும்.

    * ஒட்ஸ் உணவினை காலை உணவாக உட்கொள்ளலாம்.

    * வால் நட்ஸ் எனப்படும் பாதாம்பருப்பு தினமும் 3-4 எடுத்துக்கொள்ளலாம்.

    * கொழுப்பு குறைந்த பால் உபயோகிக்கலாம்.

    * ஆலிவ் எண்ணெயினை சமையலில் பழக்கிக் கொள்ளுங்கள்.

    * பூண்டினை அன்றாட உணவில் அவசியம் சேர்க்க வேண்டும்.

    * கிரீன் டீ ஒரு வேளையாவது பருகுங்கள்.

    * பீட்ரூட் ஜூஸ் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்.

    மேலும் எப்போதும் சுறுசுறுப்பாய் இருங்கள். ஒரே இடத்தில் அமர்ந்த படியே இருக்காதீர்கள். தினமும் 20 நிமிட உடற்பயிற்சி செய்யுங்கள்.

    கொழுப்பினை உணவில் வெகுவாய் குறையுங்கள்.

    சர்க்கரை அளவினை கட்டுப்பாட்டில் வையுங்கள்.

    மேலும் ஆல்கஹால், வறுத்த, பொரித்த உணவுகள், அதிக உப்பு, அதிக அசைவம் இவற்றினைத் தவிருங்கள்.
    கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்றால் எத்தனை பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் இந்த அறிகுறிகள் இருந்தால் நாம் கல்லீரலைப் பற்றி கவனம் செலுத்த வேண்டும் என்று எடுத்துக் கொள்ளலாம்.
    கல்லீரல் சுமார் 500 விதமான வேலைகளை செய்கின்றது. அப்படிப்பட்ட கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்றால் எத்தனை பாதிப்புகள் ஏற்படும். ஆக ஒவ்வொருவரும் கல்லீரலை பாதுகாக்க அதிக கவனம் செலுத்த வேண்டும். கீழ்கண்ட அறிகுறிகள் இருந்தால் நாம் கல்லீரலைப் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும் என்று எடுத்துக் கொள்ளலாம்.

    * நீண்ட கால சோர்வு, எப்பொழுதும் மெத்தனமாக இருத்தல்
    * தலைவலி, மூட்டுகளின் வலி, தசைகளில் வலி
    * அதிக வியர்வை, அஜீரணம், வயிற்றுவலி
    * மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, மனஉளைச்சல்
    * வாய் துர்நாற்றம், அதிக எடை இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனைப்பெறவும்.
    தமிழகத்தில் கண் தானம் குறித்த விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் ஏற்படுத்தி வருகின்றன.
    தமிழகத்தில் சுமார் 7 லட்சம் பேர் பார்வையின்றி தவித்து வருகின்றனர். மக்களிடம் இருக்கும் தவறான நம்பிக்கைகளின் காரணமாக பலரும் கண் தானம் செய்ய தயங்குவதால் ஆண்டுக்கு சராசரியாக 6 ஆயிரம் கண்கள் மட்டுமே தானமாக கிடைக்கின்றன. தமிழகத்தில் சாலை மற்றும் ரெயில் விபத்துகளில் சிக்கியும், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டும், தற்கொலை செய்துகொண்டும், தினமும் பலர் இறக்கின்றனர். இவ்வாறு ஆண்டுக்கு 5 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் இறக்கின்றனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சென்னையில் மட்டும் ஆண்டுக்கு 60 ஆயிரம் பேரும் இறக்கின்றனர். இவர்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவானவர்களின் கண்களே தானமாக கிடைக்கின்றன.

    தமிழகத்தில் கண் தானம் குறித்த விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் ஏற்படுத்தி வருகின்றன. இருந்தாலும் இறந்தவர்களின் கண்களை தானம் செய்ய பொதுமக்கள் பலர் முன்வருவது இல்லை.

    தமிழகத்தில் தானமாக கிடைக்கும் அத்தனை கண்களையும் பயன்படுத்த முடிவது இல்லை. ஆண்டுக்கு கிட்டத்தட்ட 4 ஆயிரம் கண்களை மட்டுமே பயன்படுத்த முடிகிறது. ஒருவர் இறந்த குறிப்பிட்ட நேரத்துக்குள் கண்களை அகற்றினால்தான் அவற்றை பயன்படுத்த முடியும்.

    இறந்தவர்கள் பற்றிய தகவல் தாமதமாக கிடைத்தால், அவர்களிடம் இருந்து எடுக்கப்படும் கண்கள் பயன்படாது. அதேபோல, முதியவர்களிடம் இருந்து எடுக்கப்படும் கண்களில், ஒரு சிலரது கண்களில் செல்கள் குறைவாக இருக்கும் என்கிறார்கள். அந்த கண்களையும் பயன்படுத்த முடிவது இல்லை. இதுபோன்ற காரணங்களால், ஆண்டுக்கு கிட்டத்தட்ட 2 ஆயிரம் கண்களை பயன்படுத்த முடிவதில்லை.

    ஒருவர் உயிரிழந்தவுடன் குடும்பத்தினரும், உறவினர்களும் சோகத்தில் இருப்பார்கள். அந்த நேரத்தில், ‘இறந்தவரின் கண்களை உடனடியாக தானம் செய்ய வேண்டும்‘ என்ற எண்ணம் தோன்றுவது இல்லை. ஒருசிலர்தான் அதுபற்றி யோசிக்கிறார்கள்.

    இறந்தவரை ஊனத்தோடு புதைத்தால் அடுத்த பிறவியில் அவர் ஊனத்தோடு பிறப்பார் என்ற மூடநம்பிக்கை மக்களிடையே பரவலாக உள்ளது.

    உலக அளவில் இலங்கையில் கண் தானம் அதிகம் உள்ளது. இந்தியாவில் கண் தானம் செய்வதில் குஜராத் மாநிலம் முதல் இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு ஆண்டுக்கு சுமார் 1,000 கண்கள் தானமாக கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
    வாழை இலை குளியல் தற்போது மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. இனிமேல் வாழை இலைக் குளியலின் மருத்துவத்தையும், மகத்துவத்தையும் பார்ப்போம்
    இன்றைய சூழ்நிலையில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் நாகரிகம் என்ற பேரில் இயற்கைக்கு மாறாக ஒருபுறம் பல்வேறு செயல்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. இருந்தாலும் மறுபுறம் இயற்கை சார்ந்த விவசாயம், பாரம்பரிய உணவு முறைகள், பாரம்பரிய வைத்திய முறைகள் என நமது முன்னோர்கள் சொல்லி தந்த பல்வேறு பழக்க, வழக்கங்கள் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் ஒன்றுதான் வாழை இலை குளியல். அது என்ன வாழை குளியல் என்கிறீர்களா? நமது சித்தர்களின் வழிகாட்டுதலின் பேரில் பல ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்த இந்த வாழை இலை குளியல் தற்போது மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

    வாழை மரம், மக்களை வாழ வைக்கும் மரம் என்று கூறுவது உண்டு. வாழை மரத்தில் உள்ள அத்தனை பொருட்களுமே மனிதர்களுக்கு மிகுந்த பயன் அளித்து வருகிறது.

    வாழை கிழங்கு செயலிழந்த சிறுநீரகத்தை செயல்பட வைக்கும். சிறுநீரக கற்களை எளிதில் கரைக்கும். சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல், அரிப்பு, நீர்குத்தல், விட்டு விட்டு வரும் சிறுநீர், சிறுநீர் அடைப்பு, சிறுநீர் தாரையில் ஏற்படும் சதை அடைப்பு, சிறுநீரக பிரச்சினைகளால் ஏற்படும் இரண்டு கால் வீக்கம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கிறது.

    வாழை தண்டு, வாழைப்பூவில் செய்யப்படும் பல்வேறு பாரம்பரிய உணவுகள் நம்மோடு இணைந்து வருகிறது. வாழை இலையில் சாப்பிடுவது என்பது ஒரு தனி சுவையாக இருக்கும். வாழை இலையில் தொடர்ந்து உணவு சாப்பிடுவர்களுக்கு முகம் பிரகாசமாக இருக்கும் என்பது பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் வாழை சருகுகள், வாழை இலை நார் ஆகியவை பூ கட்ட உதவுகிறது.

    சரி...இனிமேல் வாழை இலைக் குளியலின் மருத்துவத்தையும், மகத்துவத்தையும் பார்ப்போம்.



    இயற்கை மருத்துவ ஆர்வலர்கள் இந்த வாழை இலைக் குளியலை தொடர்ந்து செய்து வருகிறார்கள். உடல் முழுவதும் நீளமான 2 வாழை இலைகளை கீழே நீளவாக்கில் போட்டு அதன்மேலே வாழை இலை குளியல் செய்ய உள்ள நபரை படுக்க வைக்க வேண்டும். பின்னர் அவர் உடல் மேல் மேலும் மூன்று நீளமான வாழை இலைகளை வைத்து உடல் முழுவதும் மூன்று முதல் நான்கு இடங்களில் இறுக்கம் இல்லாமல் கட்டிவிட வேண்டும். மூக்கு மற்றும் கண் பகுதியில் சிறிது துவாரம் விட வேண்டும். இதுபோல உள்ள நிலையில் இளம் வெயில் நேரத்தில் 45 நிமிடம் இருக்க வேண்டும்.

    அவ்வப்போது வாழை இலை குளியலில் ஈடுபட்டவரிடம் பேசிக்கொண்டிருக்க வேண்டும். அவர்களுக்கு ஏதேனும் தொந்தரவு இருந்தால் உடனடியாக அவிழ்த்துவிட வேண்டும். தொந்தரவு இல்லை என்றால் குறித்த நேரம் வரை வைத்திருக்கலாம். சரியாக வைத்து அவிழ்த்து பார்க்கும்போது உடலில் இருக்கும் கெட்ட நீர்களை அதிக அளவில் வெளியேற்றிவிடும். இதுபோல தொடர்ந்து செய்யும்போது உடலில் உள்ள பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். இந்த வாழை இலை குளியலை தொடர்ந்து மூன்று நாட்கள் செய்யலாம். மேலும் இந்த வாழை இலை குளியலோடு புற்றுமண் குளியல், மூலிகை தைல குளியல், மூலிகை வெந்நீர் குளியல், மூலிகை பற்று போன்ற பலவகையான சிகிச்சையை சேர்த்தும் செய்யலாம்.

    வாழை இலை குளியலின் மூலம் மூட்டுவலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி, மணிக்கட்டு வலி, தலைவலி, ஒருபக்க தலைவலி, மூக்கடைப்பு, நுரையீரல் பிரச்சினை, முதுகுவலி, தொடைவலி, தோல் வியாதி, ரத்தக் கொதிப்பு, சர்க்கரைவியாதி, பாத எரிச்சல், தூக்கமின்மை உடலில் ஏற்படும் கெட்ட வாடை, உடல் பருமன் போன்ற பிரச்சினைகள், நோய்களை விரட்டி அடிக்கலாம்.

    மேலும், காளஞ்சகபடை(அவசியம் தொடர்ந்து போட வேண்டும்), முழங்காலுக்கு கீழே ஏற்படும் கால் நரம்புவலி, உடல் சோர்வு, சிறுநீரக செயலிழப்பு, சுவாச மண்டலம் நன்கு செயல்பட்டு மூச்சு நன்கு இழுத்துவிட உதவுவது போன்ற நோய்களை தீர்க்கும் அருமருந்தாகவும் வாழை இழை குளியல் அமைகிறது.

    உடலுக்கு புத்துணர்ச்சியையும், புதுப்பொலிவையும் தரும். உடலில் உள்ளுறுப்புகளுக்கும், வெளிஉறுப்புகளுக்கும் மகத்துவம் தரும் ஒரு இயற்கை மருத்துவம் இது ஆகும்.

    வாழை இலை குளியல் செய்யும் முன்பு கவனிக்க வேண்டியவை:- வாழை இலை குளியலுக்கு முன்பு சிறுநீர் கழித்துவிட வேண்டும். எளிய உணவுகள் சாப்பிட்டிருக்கலாம். எளிமையான கதர் துணி அணிந்திருந்தால் நல்லது. நெற்றி பகுதியில் கைக்குட்டை அளவு ஈரத்துணியை கட்டியிருக்க வேண்டும். தேவையான அளவிற்கு தண்ணீர் குடித்து இருக்க வேண்டும். அவரின் உறவினர்கள் ஒருவர் உடன் இருப்பது நல்லது. வாழை இலை குளியல் முடிந்து இலைகளை அவிழ்த்த பிறகு அந்த இலைகளை கால்நடைகள் சாப்பிடாத வகையில் ஒதுக்குபுறமாக போட்டுவிட வேண்டும். உடலில் உப்புநீர் மேலே படிந்திருக்கும் சூழல் இருப்பதால் சற்று நேரம் கழித்து ஒரு சிறு குளியலை போட்டுக் கொள்ளலாம். என்ன வாழை இலை குளியலுக்கு நீங்க ரெடியாகிட்டீங்களா?.

    தி.தட்சிணாமூர்த்தி, மூலிகை உடலியக்க மருத்துவர், தஞ்சை
    உடல் நலத்தினை வெகுவாய் பாதிக்கும் கவலை, மனஉளைச்சல் போன்றவற்றிலிருந்து எப்படி வெளியில் வருவது என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    அடிக்கடி மருத்துவத்தில் கூறப்படுவது கவலை, மனஉளைச்சல் போன்றவை உடல் நலத்தினை வெகுவாய் பாதிக்கும் என்பதுதான். அநேகர் கூறும் சில வார்த்தைகள் என்ன தெரியுமா? குறைந்தது 10 வருடம் முன்னாடி இதெல்லாம் நான் செய்திருந்தால் எனக்கு இன்று மனநலம், உடல் நலம் இரண்டும் நன்றாக இருந்திருக்கும் என்பதாகும். நாமும் அவ்வாறு சொல்லாதிருக்க கீழ்கண்ட வழி முறைகளை இன்றிலிருந்தே கடைபிடிப்போம்.

    * வாழ்வின் இளமை காலத்தில் ‘என்னால் இவ்வளவு உழைக்க முடியாது. போராட முடியாது’ என்று சொல்லி மெத்தனமாக இருந்து விட்டால் அதுவே பிற்காலத்தில் மிகுந்த மனஉளைச்சலை ஒருவருக்குத் தந்துவிடும். எனவே தன்னால் முடிந்தவரை ‘சவாலை ஏற்று செயலாற்றுவது’ நிறைந்த மனநிறைவினை ஒருவருக்கு அளிக்கும்.

    * சிலருக்கு மற்றவர்களைப் பற்றிய குறை, குற்றங்களை கூறிக் கொண்டே இருக்க வேண்டும். இது அவர்களின் குணம். ஆனால் இந்த குணம் பிற்காலத்தில் அவர்களை மனஉளைச்சல் உடையவராக மாற்றி விடும். எனவே இந்த தரக்குறைவான குணத்தினை இன்றே மாற்றிக் கொள்ள வேண்டும்.

    * தனக்கு மட்டுமே வேலை அதிகம் என்று சொல்லிக் கொண்டு சிலர் வீட்டில் உள்ளவர்களுடன் நேரம் செலவழிக்க மாட்டார்கள். மனைவி, குழந்தைகள் எல்லாம் இவர் வீட்டில் இவருக்கு சம்பந்தம் இல்லாதவர்களாக இருப்பார்கள். வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடம் ஒரு வார்த்தை கூட சிரித்து பேச மாட்டார்கள். இத்தகையோர் விரைவிலேயே மனஉளைச்சலுக்கு ஆளாவதால் பல நோய் தாக்குதல்கள் இவர்களுக்கு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. பூமி நம் தலைமீது சுற்றுவதில்லை. சூரியனும், சந்திரனும் நம்மை கேட்டு உதிப்பதில்லை. அப்படியிருக்க ஏன் நாமே தான் எல்லாம் செய்கின்றோம் என்ற நினைப்பு இருக்க வேண்டும். குடும்பம், ஓய்வு இவற்றுக்கு கண்டிப்பாய் சிறிது நேரம் ஒதுக்குங்கள். இது நம் ஆரோக்கியத்தினைக் கூட்டும்.

    * உடற்பயிற்சிக்கு நேரமே இல்லை என்று கூறுபவர்களை அவர்களது உடலே நோயை கொடுத்து தண்டித்து விடுகின்றது. 30 நிமிட துரித நடைபயிற்சி அநேக நன்மைகளை அள்ளித் தரும்.

    * நன்றி சொல்ல பழகுங்கள். காலை வெயிலுக்கு, மலரும் பூவுக்கு, மற்றவர்களின் சிறிய உதவிக்கும் நன்றி சொல்ல பழகுங்கள்.

    * எதிலும் ‘பயம்’ என முடங்காதீர்கள். தவறுகளுக்கு மட்டுமே அஞ்ச வேண்டும். முயற்சிகளுக்கு அஞ்சுவது ஒருவரை வெகுவாய் பலவீனப்படுத்தி விடும்.

    * பிறருக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை. பிறரை வேதனைப்படுத்தாது இருங்கள். காரணம் கோபப்படுபவர்களே அதிக அசிடிடி, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர்.



    * மிகவும் சோர்ந்த பிறகு ஓய்வு எடுப்பது தவறு. குறிப்பிட்ட நேரம் வேலை செய்தபின் நாமே சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.

    * தன்னைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருப்பவர்கள் எப்பொழுதும் படபடப்புடனேயே இருப்பார்கள். ஆகவே பிறரைப் பற்றியும் சிந்தியுங்கள். இதனால் உங்கள் சிந்தனை, பேச்சு இரண்டும் தெளிவாகும்.

    * சிறு நன்மைகள், நற்செயல்களை கண்டு மனதில் மகிழ்ச்சி அடையுங்கள். புன் முறுவல் செய்யுங்கள். சிரியுங்கள். இது இறைவன் தந்த உடல் நல, மனநல மருந்து.

    * உங்களை மிகவும் பலவீனமானவராகவும், பரிதாபத்திற்குரியவராகவும் நினைக்காதீர்கள். சுய பரிதாபம் வேண்டாம். இது ஒருவரை நிரந்தர நோயாளி ஆக்கி விடும்.

    மேற் கூறப்பட்டவைகள் பொதுவில் கூறப்படும் அறிவுரைகள் அல்ல. உடல் நலனுக்காக செய்யப்பட்ட சில ஆய்வுகளின் முடிவுகள் ஆகும். இனியாவது இவைகளை கடை பிடிப்போமாக. 
    வீட்டை சுத்தமாக வைத்திருப்பது நோய்களைத் தவிர்க்கும் ஒரு முக்கிய வழி. வீட்டையும், நம்மையும் சுத்தமாக வைத்திருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
    வீட்டை சுத்தமாக வைத்திருப்பது நோய்களைத் தவிர்க்கும் ஒரு முக்கிய வழி. தினமும் நான் பெருக்கி, துடைத்து, தூசு தட்டி செய்தாலும் சில அழுக்குகள் கறைகள் நீங்கவே இல்லையே என்று அலுத்துக் கொள்பவர்களுக்கான சில குறிப்புகள்.

    * எவர்சில்வர் வாஷ்பேசின் மற்றும் ஷெல்ப் உடையவர்கள் எத்தனை சுத்தம் செய்தாலும் சுத்தமாகத் தெரிவதில்லையே என்று அலுத்துக் கொள்கின்றீர்களா? பேபி எண்ணெய், ஆலிவு எண்ணெய் என்ற மிக மென்மையான எண்ணெய் சிறிது எடுத்து பேப்பர் டவல் கொண்டு நன்கு துடையுங்கள். பொருட்கள் பளிச்சிடும். இப்படியா குறிப்பு சொல்வது எனக் கூற வேண்டாம். சில துளி எண்ணெயே போதும்.

    * காய்கறி வெட்டும் போர்டை எத்தனை சுத்தம் செய்தாலும் ஒருவித வாடையுடன் இருக்கின்றதா, ஒரு எலுமிச்சையினை பாதியாக நறுக்கி அதில் ஒரு பாதியினை போர்டில் நன்கு தேய்த்து ஒரு அரை மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். பின் அதனை நீரில் நன்கு கழுவி விட்டால் எந்த துர்நாற்றமும் இன்றி கறைகளும் இன்றி இருக்கும்.

    * காய்கறிகளும், பழங்களும் ‘பிரஷ்சாக’ இருக்க வேண்டும். பப்பிரேப் அல்லது இதற்கான பிரத்யேக உறைகளில் பழங்களையும், இதற்கான உறையில் காய்கறிகளையும் போட்டு வையுங்கள்.

    * வாஷ்பேசினில் ஆப்ப சோடா மாவு போட்டு ஒரு மணி நேரம் கழித்து சுடுநீர் ஊற்றுங்கள். வாஷ்பேசின், பாத்திரம் சுத்தம் செய்யும் இடம் இவை துர்நாற்றம் இன்றி இருக்கும்.

    * வெள்ளை வினிகர் கொண்டு பிரிட்ஜ் உள்ளே நன்கு துடைத்து விடுங்கள் ஒரு கல் ஆப்ப சோடாவினை பிரிட்ஜினுள் வையுங்கள். பிரிட்ஜ் வாடை இன்றி இருக்கும்.



    * மிக முக்கியமான, குழந்தைகள் தொடக்கூடாத மருந்துகளை சிகப்பு பேனாவில் ஒரு அட்டை பெட்டியில் போட்டு உயரே வையுங்கள்.

    * ஷர்ட், பேண்டில் சூயிங்கம் ஒட்டிக் கொண்டு விட்டதா? முதலில் துணியினை நன்கு தோய்த்து சுத்தம் செய்து காய வையுங்கள். பின்னர் அத்துணியினை பிரிட்ஜ் மேல் பிரீசரில் சிறிது நேரம் வையுங்கள். பிறகு எடுத்தவுடன் எளிதாய் சூயிங்கம் பிரிந்து வந்து விடும்.

    * ஒரு ஸ்பிரே பாட்டிலில் சிறிது பேக்கிங் சோடா போட்டு தண்ணீர் ஊற்றி கரைத்து வீட்டின் கறை படிந்த மூலைகளில் ஸ்ப்ரே செய்து சிறிது நேரம் சென்று பஞ்சு போட்டு துடைக்க அழுக்கு கறைகள் நீங்கி விடும்.

    * உங்கள் ஷூக்களுக்குள் குறிப்பாக ஸ்போர்ட்ஸ் ஷூக்குள் அவ்வப்போது சிறிது பேக்கிங் சோடா தூவி வையுங்கள். சிறிது நேரம் சென்று நன்கு தட்டி விடுங்கள். ஷீ வாடை இன்றி இருக்கும்.

    * ஜன்னல்கள் பிசுபிசுவென அழுக்கால் இருக்கின்றதா? சிறிது வெள்ளை வினிகரை தண்ணீரில் கலந்து ஜன்னலில் நன்கு தடவி பஞ்சு கொண்டு துடைத்து விடுங்கள்.

    * மைக்ரோவேவ் சுத்தம் செய்ய மைக்ரோவேவ் பாத்திரத்தில் நீர் ஊற்றி எலுமிச்சை துண்டுகளை அதில் வெட்டி போட்டு உள்ளே வைத்து 5 நிமிடம் நன்கு சுட வையுங்கள். பிறகு உள்ளே சுத்தமான துணி கொண்டு துடையுங்கள். சுத்தம் செய்யும்போது தகுந்த கையுறைகளை அணிந்து செய்யுங்கள்.

    உணவு மூலம் பல்வேறு சத்துக்கள் கிடைத்தாலும் வைட்டமின் டி சத்து என்பது சூரிய ஒளிக்கதிரில் இருந்து கிடைக்க கூடியது.
    இப்போது அனைவரும் குளிர்சாதன வசதியை எதிர்பார்க்கிறார்கள். வீட்டில் தூங்கும் போது குளிர்சாதன வசதியை பெறுகிறார்கள். காரில் செல்லும் போதும் அலுவலகத்தில் இருக்கும் போதும் ஏ.சி.யை அனுபவிக்கிறார்கள். மேலும் ஓட்டல்களுக்கு சென்றாலும் ஏ.சி. அறையை தேடி செல்கிறார்கள். இப்படி சொகுசு வாழ்க்கைக்கு அடிமையாகி குளிர்சாதன வசதியை நோக்கி செல்பவர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆட்படுகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு சூரியனின் ஒளிக்கதிர் அவர்கள் மேல் விழாத நிலை உள்ளது. இப்படிப்பட்டவர்களுக்குத்தான் வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது.

    தாவரங்களுக்கு எவ்வாறு சூரிய ஒளிக்கதிர் தேவைப்படுகிறதோ அதே போன்று தான் மனிதர்களுக்கும் சூரியஒளிக்கதிர் தேவையாகிறது. மனிதன் உயிர் வாழவும், உடல் உறுப்புகள் பலமிக்கதாக இருக்கவும் பல்வேறு சத்துக்கள் தேவைப்படுகிறது. உணவு மூலம் பல்வேறு சத்துக்கள் கிடைத்தாலும் வைட்டமின் டி சத்து என்பது சூரிய ஒளிக்கதிரில் இருந்து கிடைக்க கூடியது. வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவது இயற்கை. சூரிய ஒளி உடலில் படவில்லை என்றால் வைட்டமின் டி சத்து குறைபாடு ஏற்படும்.

    இதனால் உடலில் எலும்பு, தசை சம்பந்தமான நோய்கள் தாக்கும். இன்று பலர் இந்த நோய்களால் தாக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். அப்போது தான் அவர்களுக்கு சூரிய ஒளி உடலுக்கு தேவை என்பதும் அது கிடைக்காததால் இப்படி நோய் தாக்குகிறது என்பதும் தெரிகிறது. காலை வெயிலும் மாலை வெயிலும் உடலுக்கு நல்லது. மதியம் உச்சி வெயில் என்பது உடலுக்கு கெடுதலை தரும். பல்வேறு நோய்களையும் ஏற்படுத்தும். சூரிய ஒளி பட வேண்டும் என்பதற்காக மதியம் உச்சி வெயிலில் நடமாட கூடாது.

    காலை வெயில் தான் வைட்டமின் டி சத்து கிடைக்க ஏதுவானதாகும். எனவே வைட்டமின் டி சத்து குறைபாடு உடையவர்கள் காலை வெயிலில் காலார நடந்து வர உடலுக்கு தேவையான சத்து கிடைத்து விடும். சில ஆலயங்களில் சூரிய வழிபாடு கூட நடைபெறுவது உண்டு. யோகாசனத்தில் சூரிய நமஸ்காரம் என்ற உடற்பயிற்சியும் சூரியனை மையப்படுத்தியே உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த சூரிய நமஸ்காரம் காலை நேரத்தில் சூரிய உதயத்தில் செய்யும் போது உடல் உறுப்புகள் நன்கு வேலை செய்யும்.

    மாயா, திருச்சி. 
    நம்முடைய மூதாதையர்கள் சாப்பிட்ட அனைத்து உணவுப் பொருட்களுமே ஒரு வகையில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் மருந்தாக இருந்தது.
    நம்முடைய மூதாதையர்கள் சாப்பிட்ட அனைத்து உணவுப் பொருட்களுமே ஒரு வகையில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் மருந்தாக இருந்தது. ஆனால் இன்றைக்கு பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் நாம் அதிலிருந்து விலகி பெரும்பாலான உணவுகள் நம்முடைய ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் உள்ளது என்பதே ஏற்றுக்கொள்ள முடியாத கசப்பான உண்மை. ஆனால் இன்றைக்கும் ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படும் பெரும்பாலானவை உணவுப்பொருட்கள் தான்.

    நீர் மனிதனுக்கு இன்றியமையாதது. கொதிக்க வைத்து ஆறிய நீர் மிகவும் நல்லது. குழந்தைகள், வாதநோயாளிகள், பத்தியமுள்ளவர்களுக்கு புழுங்கல் அரிசி நல்லது. அவல் பலத்தை அதிகரிக்கும். கோதுமை ஆண்மையை பெருக்கும். வெந்தயம் கசப்பு சுவை உடையது. சீதக்காய்ச் சலுக்கு சிறந்தது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். எள் எலும்புகளுக்கு பலம் தரும். கூந்தலுக்கு வலுவை தரும். இதை சாப்பிட்ட பின் குளிர்ந்த நீரை அருந்த வேண்டும்.

    உளுந்து உணவுப் பொருட்களில் சிறந்தது. ஆண்மையை பெருக்கும். பெண்களுக்கு இடுப்புக்கு வலிமை கொடுக்கும். மாதவிலக்கை சீராக்கும். இதை சாப்பிட்டால் உடல் பருக்கும். அதேபோல் சவ்வரிசியும் சுக்லத்தை அதிகரிக்கும். பயறு வகைகள் உடலுக்கு நல்லது. தானியங்களில் பயறு சிறந்தது. பாசிப்பயறு நோயாளிகளுக்கு நல்லது. வேர்க்கடலையை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் வளரும், ஆண்மை உண்டாகும்.

    பாதாம் பருப்பு உடலுக்கு புஷ்டியை தந்து, ஆண்மையைப் பெருக்கும். பெருஞ்சீரகம் பசியைத் தூண்டி, வயிற்று நோயை அகற்றும். பெருங்காயம் தேக வாயுவை குறைத்து, வயிற்று நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகவும் அமைகிறது. மஞ்சள் ரத்ததை சுத்திகரிக்கும். புண்களை ஆற்றும். மிளகு இருமல், சளியை குறைக்கும். தினமும் இரண்டு மிளகை சாப்பிட்டால் இருதயநோய் வராது.

    சேனைக்கிழங்கை சமைத்து சாப்பிட்டால் ரத்தமில்லா மூலம் குணமாகும். இஞ்சி வயிற்றை சுத்தம் செய்யும். கத்திரிப் பிஞ்சு வயிற்று வலிக்கு நல்லது. கோவைக்காயை சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண் மறையும். அதேபோல் மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டால் வயிற்றுப் புண் குணமாகும்.

    தேங்காய் குளிர்ச்சித்தன்மை உடையது. தோல் நோய்களைக் குணமாக்கும் சக்தி உண்டு. வெள்ளரிப்பிஞ்சு உடலுக்கு மிகவும் நல்லது. வாழையின் அனைத்துப் பகுதிகளும் நமக்கு பயன்படுகின்றன. வாழைப்பூ ரத்த மூலத்திற்கு சிறந்தது. வாழைப்பிஞ்சு சர்க்கரை நோய்க்கு நல்லது. அனைத்து வகை காய்கறிகளும் நமது உடலுக்கு மிகவும் நல்லது.
     
    நீண்ட முதுமையிலும் நிம்மதி ஏற்பட வேண்டும் என்பதுதான் வாழ்க்கையின் நோக்கமாக இருந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன் ஐம்பது வயதை ஓய்வு பெறும் வயது என்று சொன்னார்கள்.
    நீண்ட முதுமையிலும் நிம்மதி ஏற்பட வேண்டும் என்பதுதான் வாழ்க்கையின் நோக்கமாக இருந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன் ஐம்பது வயதை ஓய்வு பெறும் வயது என்று சொன்னார்கள். பிறகு அரசு அலுவலர் ஓய்வு வயது ஐம்பத்தைந்து ஆயிற்று. பிறகு ஐம்பத்தெட்டு என்றும் நிற்கிறது. இப்போது மைய அரசில் ஓய்வு பெறும் வயது அறுபதாக உள்ளது. துணைவேந்தர்கள், நீதியரசர்கள், விசாரணைக்குழுத் தலைவர்கள், தேர்வாணைய உறுப்பினர்கள் என்ற பதவிகளில் வயது அறுபதிலிருந்து எண்பது வரை கூடச் செல்கிறது.

    அறுபது என்பதை முதுமையின் இளமை என்றும், எண்பதை முதுமையின் இடைநிலை என்றும் எண்பதைத் தாண்டினால் முதுமையின் வளர்நிலை என்றும் முதுமை நல மருத்துவர்கள் அண்மையில் எழுதுகின்றனர். ஒரு நாட்டின் செழிப்புக்கும் சிறப்புக்கும் குழந்தைகள் நலம், மகளிர் நிலை, இளையோர் வளம் இவைகளைக் கணக்கிடுவதைப்போல முதுமைச் செல்வத்தையும் ஓர் அளவுகோலாகக் கொண்டு வரையறுத்து வளர்ந்த நாடுகள் பெருமிதமாகத் திட்டங்களைத் தீட்டுகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்னர் மனித வாழ்வுக்கு எல்லை வரையறுத்துப் பார்த்தனர். யாரோ வகுத்த கணக்கு அறுபது ஆண்டுகளுக்குப் பெயரிட்ட நிலையில் நின்றுள்ளது.

    உலக நாடுகளிலேயே எண்ணினால் பத்து, பதினைந்து நாடுகளைத்தான் செல்வ நாடுகள் என்று அழைக்கின்றனர்.

    வறுமைக்கோடும், தாண்ட முடியாத கேடும் பல நாடுகளை இருளிலேயே தள்ளி வைத்திருக்கின்றன. காலம் மாற மாறக் கதிரொளி பரவி வருகின்றவாறே நலவாழ்வு, தூய்மை, துப்புரவு, வசதியான இல்லம், தடையில்லாத மின்சாரம், தூய்மையான நீர், மாசில்லாமல் வீசும் காற்று, இனப்பெருமிதம், நல்லிணக்கம், தடுக்கி விழுந்த இடத்திலெல்லாம் எடுத்துக் காக்கத் தெருவுக்கு ஒரு மருத்துவமனை என்று செல்வ நாடுகள் மக்கள் வாழ்க்கை நடைமுறைக்கும், சீர்மைக்கும் ஆவன செய்துள்ளன.

    உலக நாட்டவர்களே தங்கள் நோய்களைக் குணப்படுத்திக்கொள்வதற்குச் சிறந்த மாநகரம் சென்னை என்று மருத்துவமனைகளில் சேர்க்கின்றனர். அமெரிக்க மருத்துவரைத் தேடிச் சென்ற இந்தியத் தலைவரைப் பார்த்து எங்கள் மருத்துவர், கல்லீரல் மாற்று அறுவைக்காகச் சென்னை சென்றிருக்கிறார் என்று கூறினார்களாம்.

    நம் நாட்டு இதய மருத்துவர் தன்னுடைய சொற்பொழிவை முடித்தபோது, ‘நொறுங்கத்தின்றால் நூறு வயது வாழலாம்’ என்று எங்கள் தமிழில் ஒரு முதுமொழி உண்டு என்று கூறி அனைவரும் நூறாண்டு வாழவேண்டும் என்று முடித்தாராம். அதற்கு யாரும் ஜப்பானில் கைதட்டவில்லை. ஏனென்றால் 120 வயதைத் தாண்டியவர் தான் அருகில் இருந்த மருத்துவர் என்று பின்னர் தெரிய வந்தது. குழந்தைகளுக்கு உரிமைச் சட்டம் இருப்பதைப்போல, இளைஞர்களுக்கு வாய்ப்புகள் வலியுறுத்தப்படுவதைப்போல, மகளிருக்கு எந்தத்துறையிலும் மறுப்பு சொல்லக்கூடாது என்ற முன்னேற்றப் படிகளில் முதியோருக்குச் சலுகைகளும், வாய்ப்புகளும் வழங்க வேண்டுமென்று வாதிட்டுப் பல நாடுகளில் நடைமுறைப்படுத்தினர்.

    விமானப்பயணம், ரெயில்பயணம், வாடகை கார்கள், உயரங்காடிகள், பல்கலைக்கழகப் படிப்பு ஆய்வுகள், மாபெரும் உணவகங்கள், உல்லாசமாகத் தங்கும் விடுதிகள், விளையாட்டு போட்டிக்காட்சிகள் அங்கிங்கெனாதபடி எங்கும் அறுபது வயதைக் கடந்த முதியவர்களுக்குப் பாதிக்கட்டணம் தான், எனக்கு எப்போது வயதாகும், பாதிக் கட்டணத்தில் உலகமெங்கும் பறந்து வரலாம் என்று ஓர் இளைஞன் மகிழ்ச்சியோடு கேட்டானாம். இந்த நிலையை எட்டுவதற்கு நமது அரசு மகத்தான முன்னேற்றங்களைச் செய்ய வேண்டும். தமிழகம் இதற்குத் தலைமை தாங்க வேண்டும்.

    தமிழில் பேரிளம் பெண் என்ற அழகிய சொல் முதுமையான மகளிரைக் குறிப்பதாகும். பெண்களுக்கு முதுமையே இல்லை என்ற சிந்தனை ஓட்டம் வியக்கத்தக்கதாகும். முதியோர் நலன் காப்பதற்காகவே இளமை ததும்பும் செவிலியர் முழு நேரப் பணியில் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.

    தமிழகத்தில் முதுமை காரணமாக உழைத்துச் சம்பாதித்து வாழ முடியாமலும், உறவினர்களின் ஆதரவற்ற நிலையிலும், உணவுக்கு வழியில்லாது துயரப்படும் முதியோர்களின் நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கு உதவிடும் நோக்கில் 1962-ம்ஆண்டு முதல் “தமிழ்நாடு முதியோர் உதவித்தொகை திட்டம் தொடங்கப்பெற்றது.“ திட்டம் தொடங்கிய நாளில் மாதம் 20 ரூபாய் உதவித்தொகை வழங்கினர். இப்போது ரூ.200 வழங்கப்படுகிறது.

    இத்திட்டத்தில் 60 முதல் 64 வயதுள்ளவர்களுக்கு மாதம் ரூ.200 உதவித்தொகை வழங்கப்படுகிறது. 65 முதல் 69 வயது நிரம்பியவர்களுக்கு மாதம் ரூ.500- ம், 80 வயதை கடந்தவர்களுக்கு ரூ.750 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இச்சலுகை பெற 60 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். கணவன்- மனைவி இருவரின் ஆண்டு வருமானம் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் இருக்கக்கூடாது. கணவன்- மனைவி பெயரில் வங்கிக் கணக்கில் ரூ.10,000-க்கு மேல் வைப்புத்தொகை இருக்கக்கூடாது. பிள்ளைகளின் வருமானம் பெற்றோரின் கணக்கில் எடுத்துக் கொள்ளலாகாது. அரசாங்கத்தின் மூலம் வேறு ஏதாவது வழியில் உதவித் தொகை பெறுவோருக்கும் உதவித்தொகை வழங்கப்படாது.

    மேலும் மூத்த குடிமக்கள் பஸ், ரெயில், விமானங்களில் பயணம் செய்தால் 25 சதவீதம் கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் என்பதை உறுதி செய்வதற்கான ஆவணங்கள் (அடையாள அட்டை, தேர்தல் அடையாள அட்டை, தனி நபர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், வங்கிக் கணக்கு, பணியில் இருந்து ஓய்வு பெற்றதற்கான சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ் உட்பட வயது அல்லது பிறந்த தேதியை உறுதி செய்துள்ள ஏதாவது ஒரு ஆவணத்தைக்) காட்டிச் சலுகை பெறலாம்.

    இத்தகைய கட்டுகள் இல்லாமல் ஏறத்தாழ நூறு மடங்குக்கு மேல் வாய்ப்புகளை முதியோர் பெறவேண்டும். அந்தச் செலவினம் பெரிய செலவாகும், அரசு நினைத்தால் செய்து முடிக்கலாம்,

    நீடித்த முதுமைக்கு நிம்மதி பெற்றுத் தரவேண்டும் என்கிற ஆர்வத்தை அரசு தனது உயரிய நோக்கமாகக் கொண்டு மற்றைய நாடுகளுக்குத் தலையளவு இல்லையென்றாலும் மார்பளவுக்காவது சீர்பெற்றுத் திகழ வேண்டும் என்று விழைகிறோம். முதியோரின் ஏக்கமூச்சு பெருமூச்சல்ல; எரிமூச்சு. அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீராக அமையலாகாது. நாட்டுக்கு நலிவு தரும் நோயைத் துடைக்க வேண்டும். முதியோரின் முக மலர்ச்சியும் நாட்டின் நல் வளர்ச்சியாகும்.

    அவ்வை நடராசன், முன்னாள் துணை வேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்
    இரத்த தானம் செய்தால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படாது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. எந்தபாதிப்பும் இல்லாதபட்சத்தில் தாராளமாக ரத்ததானம் செய்து வரலாம்.
    ‘இரத்த தானம் செய்தால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படாது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து சீரான இடைவெளியில் ரத்த தானம் செய்து வந்தால் புற்றுநோய் பாதிப்பில் இருந்தும் விடுபடலாம், ஆக்ஸிஜனேற்ற அளவை அதிகரிக்கலாம் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ரத்த தானம், ஆயுளையும் அதிகரிக்க செய்யும். தொடர்ந்து ரத்த தானம் செய்வதன் மூலம் உடல் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக செயல்பட்டு வாழ்நாளை நீட்டிக்க செய்யும். நோய் எதிர்ப்பு மண்டல அமைப்பையும் வலுப்படுத்தும்.

    இரத்த தானம் செய்வதன் மூலம் ரத்த சிவப்பு அணுக்கள் புதிதாக உற்பத்தியாகும். அப்படி ரத்த சிவப்பணுக்கள் மறுசுழற்சி செய்யப்படுவதன் மூலம் உடல் புத்துணர்ச்சி பெறும். உடலில்இருந்து கார்பன் டை ஆக்ஸைடை நீக்கவும் உதவும். ஒருமுறை ரத்த தானம் செய்யும்போது உடலில் இருந்து 650 கலோரி செலவாகும். அதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைய வாய்ப்பிருக்கிறது.

    அதே வேளையில் ரத்ததானம் செய்வதற்கு ஏதுவான உடல் அமைப்பை பெற்றிருந்தால் மட்டுமே அதை செய்ய வேண்டும். ரத்ததானம் செய்வதற்கு முன்பு நாடி துடிப்பு, ரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை, ஹுமோகுளோபின் அளவு போன்ற பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். அதேபோல் ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி, எச்.ஐ.வி. பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். எந்தபாதிப்பும் இல்லாதபட்சத்தில் தாராளமாக ரத்ததானம் செய்து வரலாம். 
    ×