என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hiccups"

    • கழுத்தருகில் ஏதாவது கட்டிகள் இருந்தாலும் விக்கல் ஏற்படும்.
    • தண்ணீரை வேகமாக குடிக்கலாம்.

    மார்பையும் வயிற்றையும் இணைக்கும் பகுதி உதரவிதானம் (டயப்ரம்) எனப்படுகிறது. இது நம் வாழ்நாள் முழுவதும் விடாது செயல்படும் உறுப்பாகும். இது மூச்சு விடுவதற்கும், உணவு வயிற்றுக்கு செல்வதற்கும் துணை செய்கிறது. இந்த தசைப்பகுதி திடீரென விரிந்து சுருங்கும் போது விக்கல் ஏற்படுகிறது.


    காரணங்கள்

    ஜீரணக் கோளாறு, குறைந்த அளவு புரதச்சத்துள்ள உணவுகளை எடுப்பது, கொழுப்புச் சத்துள்ள உணவை அதிகமாக உட்கொள்வது, அதிக காரத்துடன் உணவை எடுத்துக் கொள்வது, மாவுப் பண்டங்கள் அதிகமாக சாப்பிடுவது, ருசியான சாப்பாடு என்று மூச்சு விடக் கூட முடியாதபடி அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது, வேகவேகமாக சாப்பிடுவது போன்றவற்றால் இந்த தசைப்பகுதி சுருங்கி விரிவதால் விக்கல் ஏற்படுகிறது.

    கல்லீரல் வீக்கம், இரைப்பை வீக்கம், உணவுக் குழாய் பாதிப்பு, நுரையீரலின் அடிப்பாகத்தில் நீர் கோர்த்துக் கொள்ளுதல், சிறுநீரகச் செயலிழப்பு நோயாளிகளுக்கு ரத்தத்தில் ரசாயன கழிவுகள் வெளியேற்றப்படாமல் தேங்கும் பொழுது, கழுத்தருகில் ஏதாவது கட்டிகள் இருந்தாலும் விக்கல் ஏற்படும். ஏனெனில் பெர்னிக் என்னும் நரம்பு கழுத்து தண்டுவடத்திலிருந்து ஆரம்பித்து மார்புப் பகுதிக்குள் உதரவிதான தசை வரை வருகிறது.


    கண் சிவத்தல், கண்ணீர் வருதல், தொண்டை வறட்சி மற்றும் தொடர்ந்து விக்கல் ஏற்படும் போது வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாமல் மன உளைச்சல் ஏற்படுவது உண்டு. தொடர்ச்சியாக விக்கல் இருந்தால் இது பல பிரச்சினைகளுக்கான எச்சரிக்கையாக இருப்பதால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.

    விக்கலை தடுக்கும் முறைகள்:

    1) மூச்சு விடுவதை தற்காலிகமாக நிறுத்தும்போது விக்கல் நின்று விடும். இதனால் தான் மூச்சை இழுத்துப் பிடித்தாலோ, தம் பிடித்தாலோ விக்கல் சட்டென்று நின்று விடுகிறது.

    2) தண்ணீரை வேகமாக குடிக்கலாம். தண்ணீர் குடிக்கும் போது நாம் மூச்சு விடுவதில்லை. அப்போது உதரவிதான தசை இயல்பாக சுருங்கி விரிவதால் விக்கலும் நின்றுவிடும்.


    3) அதிர்ச்சியாக ஏதாவது பேசினால் நாம் திடீரென விக்கித்துப் போய்விடுவோம். அதன் பலனாகவும் விக்கல் நின்று விடும்.

    4) சீரகம், திப்பிலி இரண்டையும் வறுத்து பொடி செய்து சிறிதளவு தேனில் சாப்பிட விக்கல் நின்று விடும்.

    வேக வேகமாக உணவைச் சாப்பிடுவது, மிகச் சூடாக சாப்பிடுவது, தேவையான அளவுக்கு தண்ணீர் அருந்தாதது போன்றவை விக்கலுக்கு முக்கிய காரணங்கள்.
    சாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது காற்றை உள் இழுக்கிறோம். அப்போது மார்பு தசைகள் விரிகின்றன. மார்புக்கும், வயிற்றுக்கும் இடையில் நுரையீரலை ஒட்டியுள்ள உதரவிதானமும் அப்போது விரிகிறது. உடனே, தொண்டையில் உள்ள குரல்நாண்கள் திறக்கின்றன. அப்போது நுரையீரலுக்குள் காற்றின் அழுத்தம் குறைகிறது. அதேநேரம் நுரையீரலுக்குள் காற்று செல்ல அதிக இடம் கிடைக்கிறது.

    இதனால் நாம் சுவாசிக்கும் காற்று, திறந்த குரல்நாண்கள் வழியாக தங்கு தடையின்றி நுரையீரல்களுக்குள் நுழைந்துவிடுகிறது. இதுதான் இயல்பாக நிகழும் சுவாச நிகழ்வு. சில நேரங்களில், மார்பு பகுதியில் உள்ள நரம்புகள் உதரவிதானத்தை எரிச்சல்படுத்தினால், அது மூளைக் கட்டுப்பாட்டை மீறி, தன்னிச்சையாக திடீர் திடீரென்று சுருங்க ஆரம்பித்துவிடும். அப்போது குரல்நாண்கள் சரியாக திறப்பதில்லை.

    அந்த மாதிரி நேரங்களில் நாம் சுவாசிக்கும் காற்று குரல் நாண்களின் குறுகிய இடைவெளி வழியாகத்தான் நுரையீரலுக்குள் சென்று திரும்ப வேண்டும். அப்போது அந்த காற்று, புல்லாங்குழலில் காற்று தடைபடும்போது இசையொலி உண்டாவதைப் போல, தொண்டையில் ‘விக்... விக்...’ என்று ஒரு விநோத ஒலியை எழுப்புகிறது. இதுதான் ‘விக்கல்’.

    வேக வேகமாக உணவைச் சாப்பிடுவது, மிகச் சூடாக சாப்பிடுவது, தேவையான அளவுக்கு தண்ணீர் அருந்தாதது போன்றவை விக்கலுக்கு முக்கிய காரணங்கள். வலி நிவாரணி மாத்திரைகள், ஸ்டீராய்டு மாத்திரைகளை சாப்பிட்டாலும் விக்கல் வரும். இரண்டு நாட்களுக்கு மேல் விக்கல் தொடர்ந்தால், அது நோய்க்கான அறிகுறி என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    உதாரணத்துக்கு, இரைப்பையில் அல்சர் இருக்கும்போது, சிறுநீரகம் பழுதாகி ரத்தத்தில் யூரியா அளவு அதிகரிக்கும்போது விக்கல் வரும். உதரவிதானத்தில் நோய் தொற்று, கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய் தொற்று, குடல் அடைப்பு, மூளைக் காய்ச்சல், கணைய அழற்சி, பெரினிக் நரம்புவாதம் போன்றவற்றாலும் விக்கல் வரும். மூச்சை நன்றாக உள்ளிழுத்து அடக்கிக்கொள்ளுங்கள். 20 எண்ணும் வரை மூச்சை வெளியில்விட வேண்டாம்.

    பிறகுதான் மூச்சை வெளியில்விட வேண்டும். இப்படி 5 முறை செய்தால் விக்கல் நின்றுவிடும். வேகமாக ஒரு சொம்பு குளிர்ந்த தண்ணீர் குடித்தால், விக்கல் நின்றுவிடும். ஒரு தேக்கரண்டி சர்க்கரையை நாக்கில் வைத்து அதை தானாக கரையவிட்டால், விக்கல் நிற்கும். ஏதேனும் ஒரு வகையில் தும்மலை உண்டாக்கினால், விக்கல் நிற்கும். சில நிமிடங்கள் நீடிக்கும் விக்கலுக்கே நாம் பயந்துபோகிறோம். அமெரிக்காவில் சார்லஸ் ஆஸ்பார்ன் என்பவர் 68 ஆண்டுகளுக்கு தொடர்ந்து விக்கல் எடுத்துக் கின்னஸ் ரிக்கார்டு செய்திருக்கிறார். அம்மாடியோவ்!
    ×