search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Guru Bhagavan"

    • மனமுருகி பாடுங்கள்.
    • பண மழையில் நனையலாம்.

    "வானவர்க் கரசே! வளம் தரும் குருவே!

    காணா இன்பம் காண வைப்பவனே!

    பொன்னிற முல்லையும் புஷ்ப ராகமும்!

    உந்தனுக்களித்தால் உள்ளம் மகிழ்வாய்!

    சுண்டல் தானியமும் சொர்ண அபிஷேகமும்!

    கொண்டுனை வழிபடக் குறைகளைத் தீர்ப்பாய்!

    தலைமைப் பதவியும் தனித்தோர் புகழும்!

    நிலையாய் தந்திட நேரினில் வருக!''

    "நாளைய பொழுதை நற்பொழுதாக்குவாய்!

    இல்லற சுகத்தினை எந்தனுக் களிப்பாய்!

    உள்ளத்தில் அமைதி உறைத்திடச் செய்வாய்!

    செல்வ செழிப்பும் சேர்ந்திட வைப்பாய்!

    வல்லவன் குருவே! வணங்கினோம் அருள்வாய்!

    என்று மனமுருகி பாடுங்கள். பண மழையில் நனையலாம். "பார் போற்ற வாழலாம்''.

    • இந்த கோவில் முருகனுக்குரிய ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடு.
    • தேவர்களைக் காக்க முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க இங்கு வந்தார்.

    குரு பகவானுக்குரிய தலங்களில் பிரதான இடம் பெறுவது, முருகனுக்குரிய ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் ஆகும். தேவர்களைக் காக்க முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க இங்கு வந்தார். அப்போது, தேவர்களின் குருவான பிரகஸ்பதி அசுரர்களைப் பற்றியும், அவர்களது குணம் பற்றியும் முருகனுக்கு எடுத்துச் சொன்னார். இதனால், இத்தலம் குரு தலமாகக் கருதப்படுகிறது.

    இங்குள்ள மேதா தட்சிணா மூர்த்தியும் விசேஷமானவர். இவர், கூர்மம் (ஆமை), அஷ்ட நாகம், அஷ்ட யானை களுடன் கூடிய பீடத்தின் மீது காட்சி தருகிறார். வலதுகையில் சிவபெருமானுக் குரிய ஆயுதமான மழுவும், இடக்கையில் மானும் உள்ளது.

    இவருக்குப் பின்புறமுள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும், கிளி வடிவில் உள்ளது. தட்சிணாமூர்த்தியின் இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண முடியாது. குரு தோஷம் உள்ளவர்கள், குரு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் அவசியம் ஒரு முறையாவது சென்று வரவேண்டிய தலம் இது.

    • குரு பரிகார தலங்கள் தமிழகமெங்கும் உள்ளன.
    • குரு பகவானை வழிபட்டால் கோடி நன்மை உண்டாகும்.

    ஆன்மிக பூமியான தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆலயங்கள் நிறைந்துள்ளன. நவக்கிரக கோவில்களும் நட்சத்திர கோவில்களும் இங்குதான் உள்ளன. குரு பரிகார தலங்கள் தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் உள்ளன. அவற்றில் முக்கியமான ஆலயங்கள் பற்றி பார்ப்போம்.

    தென்குடி திட்டை

    திட்டை திருத்தலம், தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வசிஷ்டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் மங்களாம்பிகை என்பதாகும். இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்ற நிலையில் குரு பகவான் ராஜ குருவாக வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்திலும் காண முடியாத தனிச் சிறப்பாகும்.

    பாடி திருவலிதாயம்

    சென்னைக்கு அருகில் உள்ள பாடி திருவலிதாயத்தில் அமைந்துள்ள வலிதாய நாதர் கோவில், குரு பகவான் வழிபட்ட தலமாகும். வியாழ பகவான், தான் செய்த ஒரு தவறால், தனது தமையனின் மனைவி மேனகையிடம் சாபம் பெற்றார். இதற்கு விமோசனம் கிடைக்க மார்க்கண்டேய மகரிஷியின் உதவியை நாடினார். அவரது ஆலோசனை படி, இத்தலத்து சிவனை வணங்கினார். அவருக்கு காட்சி தந்த சிவன், விமோசனம் கொடுத்தருளினார். குருவுக்கு இங்கு சன்னிதி உள்ளது. இவர் சிவனை வணங்கும் வகையில் மேற்கு நோக்கி இருப்பது சிறப்பான அமைப்பு.

    திருச்செந்தூர்

    குரு பகவானுக் குரிய தலங்களில் பிரதான இடம் பெறுவது, முருகனுக் குரிய ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் ஆகும். தேவர்களைக் காக்க முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க இங்கு வந்தார். அப்போது, தேவர்களின் குருவான பிரகஸ்பதி அசுரர்களைப் பற்றியும், அவர்களது குணம் பற்றியும் முருகனுக்கு எடுத்துச் சொன்னார். இதனால், இத்தலம் குரு தலமாகக் கருதப்படுகிறது.

    இங்குள்ள மேதா தட்சிணா மூர்த்தியும் விசேஷமானவர். இவர், கூர்மம் (ஆமை), அஷ்ட நாகம், அஷ்ட யானைகளுடன் கூடிய பீடத்தின் மீது காட்சி தருகிறார். வலதுகையில் சிவபெருமானுக் குரிய ஆயுதமான மழுவும், இடக்கையில் மானும் உள்ளது. இவருக்குப் பின்புறமுள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும், கிளி வடிவில் உள்ளது. தட்சிணாமூர்த்தியின் இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண முடியாது. குரு தோஷம் உள்ளவர்கள், குரு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் அவசியம் ஒரு முறையாவது சென்று வரவேண்டிய தலம் இது.

    குருவித்துறை

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள குருவித்துறை சித்திரரதவல்லப பெருமாள் கோவிலில், ஒரே சன்னிதியில் குரு பகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர். அசுர குருவான சுக்ராச்சாரியார், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் 'மிருத சஞ்சீவினி' மந்திரம் கற்றிருந்தார். இதனால், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் யுத்தம் நடக்கும்போது, அவர் எளிதாக அசுரர்களை உயிர்ப்பித்தார். அந்த மந்திரத்தை கற்க விரும்பிய தேவர்கள், தங்கள் படையிலிருந்து ஒருவரை சுக்ராச்சாரியாரிடம் அனுப்ப முடிவு செய்தனர்.

    தேவகுரு பிரகஸ்பதியின் (வியாழன்) மகன் கசன், அந்த மந்திரத்தை கற்று வருவதாகச் சொன்னான். அதன்படி சுக்ராச்சாரியாரிடம் சென்றவன், அவரது மகள் தேவயானியிடம் அன்பு செலுத்துவது போல நடித்தான். அவரிடம் மந்திரத்தைக் கற்று வந்தான். கசன், தேவகுலத்தைச் சேர்ந்தவன் என்பதை அறிந்த அசுரர்கள், அவனை எரித்து சாம்பலாக்கி, சுக்ராச்சாரியார் பருகிய பானத்தில் கலந்து கொடுத்துவிட்டனர்.

    கசனைக் காணாத தேவயானி, தந்தையிடம் அவனைக் கண்டுபிடித்துத் தரும்படி வேண்டினாள். சுக்ராச்சாரியார் அவனை உயிர்ப்பித்தார். மகனைக் காணாத குரு பகவான், அவனை அசுரலோகத்தில் இருந் து மீட்டு வர அருளும்படி, இங்கு பெருமாளை வேண்டி தவமிருந்தார். சுவாமி, சக்கரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டு வந்தார். குரு பகவானுக்கு அருளிய பெருமாள், இங்கே எழுந்தருளியுள்ளார்.

    பட்டமங்கலம்

    கிழக்கு நோக்கிய அனுக்கிரக தட்சிணாமூர்த்தி, சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் அருளுகிறார். இவரது சன்னிதிக்குப் பின்புறம் படர்ந்து விரிந்த பெரிய ஆல மரம் உள்ளது. பக்தர்கள் இம்மரத்தையும் சேர்த்து வலம் வரும் வகையில் சன்னிதி அமைந்துள்ளது. சன்னிதி முன் மண்டபத்தில் ராசிக்கட்டம் உள்ளது. இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி பிரதானம் என்பதால், பக்தர்கள் முதலில் இவரையே தரிசிக்கிறார்கள். வியாழக்கிழமை குரு ஓரை நேரத்தில் (மதியம் 1 - 2 மணி) இவருக்கு விசேஷ அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். மதுரையில் இருந்து 65 கி.மீ., திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாக 90 கி.மீ., தூரத்தில் திருப்புத்தூர் இருக்கிறது. இங்கிருந்து 8 கி.மீ., தூரத்தில் பட்டமங்கலம் அமைந்துள்ளது.

    அகரம் கோவிந்தவாடி

    காஞ்சீபுரம் - அரக்கோணம் பேருந்து வழியில், கம்மவார்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி அகரம் கோவிந்தவாடி கோவிலுக்குச் செல்லலாம். இத்தலத்திலும் தட்சிணாமூர்த்தியே குருவாக அருளாட்சி புரிகிறார். இது சிறந்த குரு பரிகாரத் தலம். இவர், வியாக்யான தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.

    தக்கோலம்

    வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் - பேரம்பாக்கம் வழியில் தக்கோலம் உள்ளது. இத்தலத்து இறைவன் வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடித்து அமர்ந்திருக்கிறார். தலையைச் சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் உத்கடி ஆசனத்தில் அமர்ந்த திருவுருவை இங்கு தரிசிக்கலாம்..

    குருபகவான் தட்சிணாமூர்த்தி

    திருவடிகள் போற்றி போற்றி போற்றி

    • பாவங்களைப் போக்குபவர் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் ஆயிற்றே.
    • வியாழக்கிழமையில் திரளான பக்தர்கள் வந்து குருவை ஆராதித்துச் செல்கிறார்கள்.

    ஆலங்குடியைப்பொறுத்தவரை ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் கருவறை கோஷ்டத்தில் தரிசனம் தரும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியே குரு பகவானாக, நவக்கிரக தோஷத்தை நீக்குபவராக வழிபடப்படுகிறார். வருடத்துக்கு ஒருமுறை நிகழும் குருப்பெயர்ச்சியின் போது இங்கே லட்சார்ச்சனை நடைபெறும்.

    ஆலய பிரகாரத்திலேயே நெய் தீபங்கள் கிடைக்கின்றன. 25 தீபங்கள் வாங்க வேண்டும். அதில், முதல் தீபத்தைக் கலங்காமல் காத்த விநாயகர் சந்நிதியில் ஏற்றி வைத்து வணங்க வேண்டும். ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர், ஸ்ரீஏலவார் குழலம்மை உட்பட அனைத்து தெய்வங்களையும் தரிசித்து விட்டு, மவுனமாக பிரகார வலம் வந்து, கொடிமரம் அருகே விழுந்து வணங்கி விட்டு, குரு பகவானுக்குப் பரிகாரமாக நாம் ஏற்ற வேண்டிய 24 தீபங்களையும் ஏற்றி வைக்க வேண்டும்.

    'மொத்தமாக தீபங்களை ஏற்றக்கூடாது. 24 சுற்றுக்கள் வலம் வர வேண்டும். ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு தீபம் ஏற்ற வேண்டும்' என்ற நடைமுறையும் இங்கே சொல்லப்படுகிறது. தீபங்கள் ஏற்றுவதற்கு முன் ஆலய அர்ச்சகரை ஒரு முறை கலந்தாலோசித்துவிட்டுச் செய்வது உத்தமம்.

    பிரம்மனின் மூல மந்திரம் 24 என்கிற எண்ணிக்கையில் இருப்பதால், இங்கே 24 தீபங்கள் ஏற்றப்படுகின்றன. இப்படிச் செய்வதால், குருவினால் ஏற்பட்ட சகல தோஷங்களும் விலகுகின்றன. தீபங்கள் ஏற்றி குரு பகவானின் அருள் பெற்ற பின்னர் திருக்கோயிலை மூன்று முறை வலம் வர வேண்டும். அப்படி ஒவ்வொரு முறை வலம் வரும்போதும் கொடி மரத்தின் கீழே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும் என்கிறது தல புராணம்.

    சுயம்பு லிங்க மூர்த்தியான ஆபத்சகாயேஸ்வரரின் புராணக் கதைகள் இன்னும் முடிவில்லை. இந்த ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் குருவை தரிசிப்பதில் எந்த அளவுக்கு முனைப்பாக இருக்கிறார்களோ, அந்த அளவுக்கு ஈசனான ஆபத்சகாயேஸ்வரரையும் தரிசிக்க வேண்டும். அவர்தம் தேவியான ஏலவார் குழலம்மையையும் வணங்க வேண்டும். எத்தகைய கொடுஞ்செயல்கள் புரிந்தவனும், ஆலங்குடி சேத்திரம் வந்து, 'ஆபத்தில் இருந்து என்னைக் காப்பாற்று இறைவா' என்று வேண்டித் துதித்தால், ஆபத்சகாயேஸ்வரர் மன்னித்து அருள்வதாகத் தல புராணம் சொல்கிறது.

    சுவாசனன் என்பவன் ஓர் அரசன். ஆனால், கொடுங் கோலன். நாட்டு மக்களைத் துன்புறுத்தியே வாழ்ந்தான். அவனது அட்டூழியத்தைத் தாங்க முடியாத பிற மன் னர்கள், அவனைக் கொன்றுவிட்டனர். எம தூதர்கள் வந்து அவனை எமலோகம் இழுத்துச் சென்றனர். அவன் செய்த பாவங்களைப் பட்டியலிட்டு கூறினர் எமதர்மனிடம். 'இத்தகைய கொடுங்கோலனான இவன் பூலோகத்தில் பிசாசாக அலைய வேண்டியது விதி' என்று எமன் சொல்ல, அதன்படி பூலோகத்தில் பிசாசாகத் திரிந்தான். முன் ஜென்மத்தில் செய்த நல்வினைப் பலனால், அகத்திய மாமுனியைச் சந்தித்தான் சுவாசனன். அவரது அறிவுரைப்படி, காசி ஆரண்யம் எனப் படும் ஆலங்குடித் திருத்தலம் வந்து புனித நீராடி, ஸ்ரீஆபத் சகாயேஸ்வரரை தரிசித்தான்.

    பாவங்களைப் போக்குபவர் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரர் ஆயிற்றே! சுவாசனனது பாவங்கள் அனைத்தையும் விலக்கி, அவன் இழந்த செல்வத்தையும், ராஜ்யத்தையும் திரும்பக் கொடுத்தாராம் இந்த ஈசன்.

    ஆலயத்தினுள் எண்ணற்ற திருமேனிகளின் தரிசனம் காணலாம். கலங்காமல் காத்த விநாயகரை வணங்கி உள்ளே நுழைந்தால் முதல் பிரகாரம். எதிரே தெற்கு நோக்கிய ஏலவார் குழலி அம்மையின் தரிசனம். கொஞ்சம் உள்ளே போய் மேற்கு நோக்கித் திரும்பி இரண்டாவது வாயிலைக் கடந்ததும், உள்ளே சூரிய பகவான், உத்சவர் சுந்தரமூர்த்தி, சோமாஸ்கந்தர் தரிசனம்.

    இதை அடுத்து நால்வர், சூரியேசர், சோமேசர், குரு மோகே சுரர், சோமநாதர், சப்தரிஷி நாதர், விஷ்ணுநாதர், பிரம்மேசர் ஆகிய லிங்கத் திருமேனிகளின் தரிசனத்தோடு காசி விசுவநாதர், விசாலாட்சி மற்றும் அகத்தியரையும் வணங்கிப் பேறு பெறலாம். தொடர்ந்து தரிசனத்தில் நின்ற கணபதி, வள்ளி, தெய் வானை சமேத ஸ்ரீசுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், கல்யாண சாஸ்தா, சப்தமாதா, நவக்கிரகம், ஸ்ரீநடராஜர், பைரவர், சந்திர பகவான் என்று தரிசனம் நீள்கிறது. கோஷ்டத்தில் காட்சி தரும் ஸ்ரீலிங் கோத்பவரும், சுக்கிரவார அம்மன் சந்நிதியும் அவசியம் தரிசிக்க வேண்டியவை.

    ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் திரளான பக்தர்கள் வந்திருந்து குருவை ஆராதித்துச் செல்கிறார்கள். குருப்பெயர்ச்சி காலம் என்றால், கூட்டத்துக்கும் கோலாகலத்துக்கும் கேட்கவே வேண்டாம். ஆலங்குடி திமிலோகப்படும். குருவின் பார்வை என்பது ஒவ்வொரு ஜாதகருக்கும் முக்கியம். குருவின் பார்வை சிறக்காததால்தான், பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் போக நேரிட்டது. வாழ்க்கையில் நிம்மதியைத் தொலைக்கும்படி ஆனது. ஒரு ஜாதகத்தில் சுலபமான இடத்தில் குருவின் பார்வை விழுந்தால்தான், அந்த ஜாதகரின் வாழ்க்கை சிறக்கும். உத்தியோகம், குழந்தைப் பேறு உள்ளிட்ட பல வளங்களையும் வழங்குபவர் குரு பகவான்.

    மூலவர் குரு பகவானுக்கு அபிஷேகம் செய்து வணங்க, ஆலயத்தில் கட்டணம் கட்ட வேண்டும். உத்சவருக்கு அபிஷேகம் என்றால், கட்டணம் கட்ட வேண்டும். அபிஷேகத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு குரு பகவான் உருவம் பதித்த இரண்டு கிராம் வெள்ளி டாலர் பிரசாதமாக வழங்கப்படுகிறது. குரு பகவானின் அனுகிரகம் பெற விரும்புவோர், வியாழக் கிழமைகளில் தங்கள் சக்திக்கு ஏற்றவாறு அபிஷேகம் செய்து, மஞ்சள் வஸ்திரம் சார்த்தி, வெண் முல்லைப் பூக்களால் அலங்காரம் செய்து, கொண்டைக் கடலை சுண்டல் நைவேத்தியம் செய்வது நல்லது.

    கொட்டிக் கொடுப்பவர் குரு, குருவை வணங்கினால் கோடி நன்மை என்றெல்லாம் சொல்வர். இத்தகைய சிறப்புகள் பெற்ற ஆலங்குடி குரு பகவானை, குடும்பத்துடன் சென்று வழிபட்டு பயன்பெறலாம்.

    • நவக்கிரகங்களில் ஞானம் அருளும் மூர்த்தி-குரு பகவான்.
    • எல்லா சிவாலயங்களிலும் கோஷ்ட தட்சிணாமூர்த்தி உண்டு.

    நவக்கிரகங்களில் ஞானம் அருளும் மூர்த்தி-குரு பகவான். பொதுவாக, குரு யாரையும் கெடுக்க மாட்டார். சிவபெருமானே குரு வடிவாகி, அருள் பாலிப்பதாகச் சொல்வார்கள். ஆலங்குடி திருத்தலத்தில், கோஷ்ட தட்சிணாமூர்த்தியாக - குரு பகவானாக விளங்கி அருள்புரிந்து வருகிறார் ஈசன்.

    சாதாரணமாக, எல்லா சிவாலயங்களிலும் கோஷ்ட தட்சிணாமூர்த்தி உண்டு. ஞான உபதேசம் அருளும் இவரே குரு மூர்த்தி ஆவார். இத்தகைய இவரின் உத்சவ விக்கிரகம் பெரும்பாலும் எந்தக் கோவிலிலும் இருக்காது. ஆனால், குருவுக்கு உண்டான சிறப்புத் தலம் என்பதால், மூலவர் தட்சிணாமூர்த்தியின், அதாவது குரு மூர்த்தியின் வடிவத்தைப் போலவே ஓர் உத்சவர் விக்கிரகமும் இங்கு உண்டு.

    இத்தனை பெரிய உத்சவ விக்கிரகத்தைப் பெரும்பாலும் வேறு ஆலயங்களில் தரிசிப்பது அரிது. கல்லால மரத்தடியில் அமர்ந்து, நான்கு ரிஷிகளுக்கு ஞானோபதேசம் அருளும் கோலத்தில் இந்த உத்சவ குருமூர்த்தி விக்கிரகம் காணப்படுகிறது.

    பிரஹஸ்பதியான வியாழ பகவானுக்கு நவக்கிரக மூர்த்திகளில் குரு ஸ்தானத்தை ஈசன் கொடுத்திருந்த போதிலும், தன் பக்தர்களுக்குத் தானே குரு மூர்த்தியாக- குரு ஸ்தானத்தில் இருந்து அருள வேண்டும் என்பதற்காக ஸ்ரீதட்சிணாமூர்த்தி வடிவத்தில் பல ஆலயங்க ளில் எழுந்தருளி, ஞானம் போன்ற செல்வங்களை வழங்குகிறார்.

    ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வழிபட்டாலும், வியாழ பகவானின் அருள் கிடைக்கும். வியாழ பகவானை வணங்கினாலும், ஸ்ரீதட் சிணாமூர்த்தியின் அருள் கிடைக்கும்.

    சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, பத்து நாட்கள் பெரும் திருவிழா ஆலங்குடியில் நடைபெறும். அதில் பத்தாம் நாளன்று குரு பகவானின் தேர்த் திருவிழா விமரிசையாக நடைபெறும். காணக்கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். மாசி மாதத்தில் மகா குரு வார தரிசனமும் கொண்டாடப்படுகிறது.

    ஆலங்குடியில் மூலவர் குரு பகவா னுக்குத் தினமும் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் அபிஷேகம் நடைபெறும். அதன் பிறகு மூலவர் குரு பகவானுக்கு அபிஷேகம் கிடையாது. உத்சவருக்குத்தான் செய்வார்கள்.

    உத்சவருக்கான அபிஷேகம் தினமும் காலை 8 மணி முதல் 8.30 வரையிலும், நண்பகல் 12 மணி முதல் 12.30 வரையிலும், மாலை 5 மணி முதல் 5.30 வரையிலும் நடைபெறும்.

    குருவின் அருள் வேண்டி தினந்தோறும் இந்த ஆலயத்துக்கு நூற்றுக்கணக்கானோர் படை எடுத்து வருகின்றனர்.

    முனைப்பான பக்தி இருந்தால் குருவின் அருளை எளிதில் பெற்று விடலாம். நவக்கிரகங்களில் தலை சிறந்தவர் எனவும், அதிக அளவில் நன்மைகளை அருளும் சுபக் கிரகமாக வும் குருபகவான் கொண்டாடப் படுகிறார். புகழ், ஞானம், சந்தோஷம், பொருட்செல்வம், வேலை வாய்ப்பு, திருமண பாக்கியம், குழந்தைப் பேறு போன்றவற்றை அருளு வதில் தாராள மனம் கொண்டவர் குரு பகவான்.

    'குருவை வணங்கி வருகிறவர்கள் வேறு எந்த மூர்த்தியையும் வணங்க வேண்டியதில்லை' என்று சொல்லப்படுவதுண்டு. இதன் பொருள், குருவைத் தவிர, வேறு எவரையும் வணங்கக் கூடாது என்பதல்ல. குருவை வணங்கினால், அவர் நமக்குத் தேவையான அனைத்தையும் அருள்வார் என்கிற பொருளில் பார்க்க வேண்டும். உயர்ந்த பதவியில் அமர வைத்து அழகு பார்ப்பதாகட்டும், பதவியில் அமர்ந்தவர்க்குப் பெரும் புகழ் சேர்ப்பதாகட்டும், எல்லாவற்றையும் குருவே பார்த்துக் கொள்வார். குரு பார்க்கக் கோடி நன்மை! மனமுருகி இவரைக் கும்பிட்டால், அருள வேண்டியதை அவரே பார்த்துக் கொள்வார்!

    'குரு' என்ற சொல்லில், 'கு' என்பதற்கு இருள் என்றும், 'ரு' என்பதற்கு 'அறவே நீக்குதல்' என்றும் அர்த்தம் உண்டு. அதாவது, 'குரு' என்ற சொல்லுக்கு 'நம்மிடம் உள்ள இருளை அறவே நீக்குபவர்' என்பது பொருளாகும்.

    • இத்திருக்கோவிலுக்கு 14 தலைமுறைகள் புண்ணிய பேறு பெற்றவர்களே வருகை தர இயலும்.
    • இத்தலத்து இறைவன் (சிவன்) சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார்.

    1. தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் காவிரிக்கு தென் கரையில் உள்ள 127 தலங்களில் 98-வது தலமாக ஆலங்குடி விளங்குகிறது.

    2. ஆலங்குடி மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முப்பெருமைகளையும் கொண்டது.

    3. இத்திருத்தலம் காவிரி நதியின் கிளை நதியான வெட்டாறு கரையில் இருந்து ஒரு காத தூரத்தில் அமைந்துள்ளது.

    4. கீழக்கோபுர வாயில் தென்புறம் சப்தமாதாவின் ஆலயமும், ஈசானிய திக்கில் பாதாள பைரவி காளியம்மன் ஆலயமும், தெற்கு கோபுர வாயில் கீழ்புறம் மேற்கு நோக்கி கல்யாண சாஸ்தா ஆலயமும், தேர் முட்டிக்கருகில் கிழக்கு நோக்கி உள்ள ஆலயத்தில் கல்யாண வீரபத்ரரும் தஷன் விநாயகர் சன்னதியும் உள்ளன.

    5. ஆலங்குடிக்கு அருகில் உள்ள நகரமான கும்ப கோணத்தில் தங்கும் வசதி உள்ளது-. கும்பகோணம் ஆலங்குடியில் இருந்து வடக்கே 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

    6. இத்தலத்து இறைவன் (சிவன்) சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். எனவே இத்திருக்கோவிலின் காலத்தை நிர்ணயிக்க இயலவில்லை. ஞானசம்பந்தரின் காலம் கி.பி.ஆறு, ஏழு நூற்றாண்டாகும். எனவே அதற்கு முன்னரே இவ்வாலயம் இருந்ததாக கருத்தில் கொள்ளலாம்.

    7. விஸ்வாமித்திரர், அஷ்டதிகடபாலகர்கள், அகஸ்தியர், புலஸ்தியர், காகபுஜண்டர், சுகர்பிரம்ம மகரிஷி மற்றும் ஆதிசங்கரர் ஆகியோர் பூஜித்த திருத்தலம் ஆகும்.

    8. அம்மையின் திருமணத்திற்கு வந்த திருமால், பிரம்மா, லட்சுமி, கருடன், ஐயனார், வீரபத்திரர் முதலானோர் தம் தம் பெயரால் லிங்கங்கள் நிறுவி பூஜித்து வழிபட்டத் தலம்.

    9. இத்திருத்தலத்தை சுற்றி பிரம்ம தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், யம தீர்த்தம், நிருதி தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம், குபேர தீர்த்தம், ஈசான தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அமிழ்த புஷ்கரணி, ஞான கூடம் கிணறு, பூளை வள ஆறு ஆகிய 15 தீர்த்தங்கள் உள்ளன.

    10. இத்திருக்கோவிலுக்கு 14 தலைமுறைகள் புண்ணிய பேறு பெற்றவர்களே வருகை தர இயலும்.

    11. விஸ்வாமித்திரர், அஷ்டதிக்பாலகர்கள், சனகாதி முனிவர்கள், அகத்தியர், புலஸ்தியர், காகபுஜண்டர், சுகபிரம்ம மகரிஷி போன்றோரால் பூஜிக்கப்பட்ட தலம்.

    12. அம்மை இங்கு ஈசனைத் திருமணம் புரிந்து கொண்டதாகத் தல புராணம் சொல்கிறது. இந்தத் திருமணத்தைக் காண வந்த திருமால், பிரம்மா, லட்சுமி தேவி, கருட பகவான், ஐயனார், வீரபத்திரர் ஆகியோர் தங்களது பெயரால் தனித்தனி லிங்கங்களை ஆலங்குடி திருத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

    13. திருஞானசம்பந்த ரால் பாடல் பெற்ற திருத் தலம். அப்பர் அடிகளால் திருவீதிமிழலைத் திருத்தாண்டகத்தில் சேர்த்துப் பாடல் பெற்றது.

    14. ஆலங்குடி ஸ்ரீதட்சிணாமூர்த்தியை சுந்தரமூர்த்தி சுவாமிகள் வழிபட்டு, பஞ்சாட்சர உபதேசம் பெற்று, ஞான முக்தி அடைந்தார்.

    15. காசி ஆரண்யம், திருஇரும்பூளை என்கிற பெயர்களும் ஆலங்குடிக்கு உண்டு. இரும்பூளை என்பது இந்த ஆலயத்தின் தல விருட்சம். ஒருவித மூலிகை மருந்துத் தாவரம். துர்தேவதைகள் நம்மை அண்ட விடாமல் தடுக்கும் சக்தியும், விஷ முறிவு சக்தியும் இரும்பூளைக்கு உண்டு.

    16. பஞ்ச ஆரண்ய (ஆரண்யம்-காடு) தலங்களுள் ஆலங்குடியும் ஒன்று. மற்ற நான்கு தலங்கள்& திருக்கருகாவூர், திருஅவளிவநல்லூர், திருஅரதைப் பெரும்பாழி, திருக்கொள்ளம்பூதூர் ஆகியவை. இந்த பஞ்ச ஆரண்ய தலங்களில் நான்காவது காலமான சாயரட்சை வழிபாட்டுக்கு உகந்த தலம்இது.

    17. முக்தி தரும் ஷேத்திரம் காசி என்பர். அதற்கு இணையான தலம் ஆலங்குடி. புனித நகரமாம் காசியில் இறக்கும் தருவாயில் இருப்பவர்களுக்கு ராம நாமத்தை அவர்களது செவியில் உபதேசம் செய்து மோட்சம் அளிக்கிறார் ஈசன். அதுபோல் காசி ஆரண்யம் எனப்படும் ஆலங்குடி தலத்தில் இறக்கும் தருவாயில் இருப்பவர்களுக்குப் பஞ்சாட்சர உபதேசம் செய்து முக்தி அளிக்கிறார் எம்பெருமான். இந்தத் திருத்தலத்தில் இறக்கும் பேறு பெற்ற பசு, பறவை, மிருகம், மனிதன் முதலான சகல ஜீவ ராசிகளும் மோட்சத்தையே அடைகின்றன.

    18. ஆதி சங்கரர் இந்த திருத்தலத்துக்கு யாத்திரையாக வந்துள்ளார். ஞான மகானான ஆதி சங்கரர், ஞான குருவான ஸ்ரீதட்சிணாமூர்த்தியிடம் மகா வாக்கிய உபதேசமும், ஆய கலைகள் அறுபத்து நான்கைப் பற்றிய ஞானத்தையும் பெற்றிருக்கிறார். இந்த ஞானம் பெற்றதால் மகிழ்ந்த ஆதி சங்கரர், கரு பகவானைப் போற்றி தோத்திரம் செய்திருக்கிறார்.

    19. சகல வளங்களையும் அருளும் தேவியான ஸ்ரீ மகாலட்சுமி, இந்த குரு பகவானை வழிபட்டு, சந்தான பாக்கியம் பெற்றாள் என்கிறது தல புராணம். ஈசனின் அருளால் கீர்த்தி, மணி, நிசரன், சாதவேதசன், காமன், மனோகரன் என்கிற ஆறு மக்கட் செல்வங்களைப் பெற்றாள். இந்த மகிழ்ச்சியின் அடையாளமாக யானையின் மீது புனித நீர் நிரப்பப்பட்ட தங்கக் குடங்களை வைத்து உலா வந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்து நன்றி தெரிவித்தாள்.

    20. குரு பகவானுக்கு உண்டான தலம் மட்டுமல்ல ஆலங்குடி. இங்கே தனிச் சந்நிதியில் தரிசனம் தரும் சனி பகவான் சிறந்த வரப்ரசாதி. சனியால் ஏற்படும் தொல்லைகளுக்கு, ஆலங்குடிக்கு வந்து இவரைப் பிரார்த்தித்தால், நம்மைக் காப்பார் அவர். சனி பகவானுக்கு இங்கே வாகனம் காகம் அல்ல. கருடன்!

    • 24 நிமிடங்களுக்குஒரு முறை இறைவன் மீது ஒரு சொட்டு நீர் விழுவதை இன்றும் காணலாம்.
    • உலகில் வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாத அற்புதம் இது.

    நமசிவாய என்பது ஐந்தெழுத்து மந்திரம். அந்த ஐந்து எழுத்தை மனதில் நிறுத்தும் அற்புத வடிவம் லிங்க உருவம். திட்டையில் லிங்க வடிவமாக எழுந்தருளியிருக்கும் மூலவர் வசிஷ்டேஸ்வரர் விமானத்தில், சந்திர காந்தக்கல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது. அதற்கும் ஒரு வரலாறு உண்டு.

    தன் மாமனார் தட்சனால் தினம் ஒரு கலையாக தேய்ந்து அழியும் சாபம் பெற்றார் சந்திர பகவான். தினமும் தேய்ந்து கொண்டே வந்த அவர் திங்களூர் வந்து கயிலாயநாதரை, வணங்கி தவம் இருந்தார். கயிலாயநாதரும் சந்திர னின் சாபத்தை நீக்கி, மூன்றாம் பிறையாக தனது தலையில் சந்திரனை அணிந்து கொண்டார்.

    திங்களூரில் தன் சாபத்தை போக்கிய சிவ பெருமானுக்கு திட்டையிலே தன் நன்றிக் கடன் செலுத்துகிறார் சந்திரன். இறைவனுக்கு மேலே சந்திரக்காந்தக் கல்லாக அமர்ந்து காற்றிலிருந்து ஈரப் பதத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு ஒரு சொட் டாக இறைவனுக்கு நித்யாபிஷேகம் செய்கிறார். 24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒரு முறை இறைவன் மீது ஒரு சொட்டு நீர் விழுவதை இன்றும் காணலாம். உலகில் வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாத அற்புதம் இது.

    • ‘குரு’ என்ற சொல்லுக்கு ‘நம்மிடம் உள்ள இருளை அறவே நீக்குபவர்’ என்பது பொருளாகும்.
    • குரு பகவானுக்கு உரிய திருநாமங்கள் எண்ணற்றவை.

    'குரு' என்ற சொல்லில், 'கு' என்பதற்கு இருள் என்றும், 'ரு' என்பதற்கு 'அறவே நீக்குதல்' என்றும் அர்த்தம் உண்டு. அதாவது, 'குரு' என்ற சொல்லுக்கு 'நம்மிடம் உள்ள இருளை அறவே நீக்குபவர்' என்பது பொருளாகும். ப்ருஹஸ்பதி, வியாழ பகவான் என்கிற பெயரிலேயே பபரும்பாலானவர்கள் அறிந்திருந்தாலும், குரு பகவானுக்கு உரிய திருநாமங்கள் எண்ணற்றவை.

    'தேவர்களின் தலைவனான இந்திரனுக்கே குருவாக விளங்குவாய்' என்று ஈசனால் அனுக்ரஹம் செய்யப்பட்டவர் குரு பகவான். இதனால் தேவ குரு, ஸுக்ராச்சார்யர் என்கிற திருநாமங்கள். குருவின் உபதேசத்தால் இந்திரன் உள்பட அனைத்து தேவர்களும் நன்மை அடைந்ததைக் குறிக்கின்றன இந்தத் திருநாமங்கள்.

    தவிர வாகீசர், பொன் ஆடைகளாலும் இளமைத் தோற்றத்தாலும் காணப்படுவதால் பீதாம்பரர், யுவர் என்றும், சிறந்த தலைமைக்கு உதாரணமாக விளங்குவதால் த்ரிலோகேசர், லோகபூஜ்யர், கிரகாதீசர் என்றும், கருணை நிரம்பியவர் என்பதால் தயாகரர் என்றும் அழைக்கப்படுகிறார் குரு பகவான். மேலும் தனகாரகன், புத்திரகாரகன், மஞ்சள் வண்ணன், நீதிகாரகன், தாராபதி, கிரஹபீடா பரிஹாரகர், ஸௌம்யமூர்த்தி போன்ற திருநாமங்களும் இவருக்கு உண்டு.

    • உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பதவி உயர்வு கிடைக்கும்.
    • வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு லாபம் பன்மடங்கு பெருகும்.

    வியாழக்கிழமை என்றதுமே நினைவுக்கு வரும் தெய்வம் குரு தட்சிணாமூர்த்தி. குருவின் அம்சமாகத் திகழும் அற்புதத் தெய்வம்... ஸ்ரீதட்சிணாமூர்த்தி. சிவனாரின் வடிவங்களில் ஒன்று என்கிறது சிவஞான போதகம். சிவனாரின் வடிவமான தட்சிணாமூர்த்தி, தென் முகக் கடவுள். தெற்குப் பார்த்த நிலையில் இருப்பதால்தான், அவரின் திருநாமம் தட்சிணாமூர்த்தி என்று அமைந்ததாகச் சொல்கிறது சிவபுராணம். தட்சிணம் என்றால் தெற்கு.

    சனகாதி முனிவர்களுக்கு கல்லால மரத்தடியில் அமர்ந்தபடி, சிவபெருமானே தட்சிணாமூர்த்தி அம்சத்துடன் வந்து, உபதேசித்து அருளினார். அதனால்தான், ஞானமும் யோகமும் வேண்டுவோர், தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள் என அறிவுறுத்துகிறார்கள் ஆச்சார்யர்கள்.

    வியாழன் என்பவரே குரு பகவானைக் குறிக்கும். குரு பிரகஸ்பதிதான், நவக்கிரகங்களில் குரு பகவானாகத் திகழ்கிறார். அதேபோல், குரு ஸ்தானத்தில் குரு தட்சிணாமூர்த்தியே காட்சி தருவதால், சிவ சொரூபமாகத் திகழும் தென்முகக் கடவுளாம் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வணங்கினால், புத்தியில் தெளிவும் செயலில் திண்மையும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

    ஓம் நமோ பகவதே தட்சிணாமூர்த்தயே

    மஹ்யம் மேதாம் பிரக்ஞாம் ப்ரயச்ச நமஹ;

    என்பது ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு உரிய மூலமந்திரம். சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை தினமும் காலையில் பாராயணம் செய்வது ரொம்பவே விசேஷம். நற்பலன்களையெல்லாம் வழங்கும்.

    அதேபோல், வியாழக்கிழமைகளிலும் பௌர்ணமி தினங்களிலும் சிவன் கோயிலில், கோஷ்டத்தில் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்திக்கு எதிரே அமர்ந்துகொண்டு இந்த மந்திரத்தைச் சொல்லி ஜபிக்கலாம். தம்பதி சமேதராக இருந்து இந்த மந்திரத்தை பாராயணம் செய்து வழிபட்டால், தம்பதி இடையே ஒற்றுமை அதிகரிக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    குடும்பத்தில் வீண் சண்டையோ சச்சரவுகளோ ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நிலையெல்லாம் அறவே மாறிவிடும். முகத்தில் தேஜஸ் குடிகொள்ளும். எடுக்கும் காரியங்களில் உங்களுக்கு வெற்றி உண்டாகும். வாக்குவன்மை பலமாகும்.

    உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு லாபம் பன்மடங்கு பெருகும்.

    அடுத்து... தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரம்

    ஓம் தட்சிணாமூர்த்தியே வித்மஹே

    த்யாநஸ்தாய தீமஹி

    தந்நோ தீஸஹ் ப்ரசோதயாத்

    வீட்டில் பூஜையறையில் அமர்ந்துகொண்டு, தட்சிணாமூர்த்தி காயத்ரி மந்திரத்தையும் மூல மந்திரத்தையும் ஜபித்து வாருங்கள். வீட்டில் உள்ள தரித்திர நிலை மாறிவிடும். சுபிட்சமும் ஐஸ்வரியமும் குடிகொள்ளும். மாணவர்கள், கல்வி கேள்விகளில் சிறந்துவிளங்குவார்கள் என்பது ஐதீகம்.

    • குருவின் அம்சமாகத் திகழும் அற்புதத் தெய்வம் ஸ்ரீதட்சிணாமூர்த்தி.
    • வியாழன் என்பவரே குரு பகவானைக் குறிக்கும்.

    தேவர்களுக்கெல்லாம் அதிபதியாக விளங்கக்கூடிய குரு பகவானை வணங்க கூடிய கிழமை வியாழக்கிழமை. வியாழன் என்பவரே குரு பகவானைக் குறிக்கும். குரு பிரகஸ்பதிதான், நவக்கிரகங்களில் குரு பகவானாகத் திகழ்கிறார். அதேபோல், குரு ஸ்தானத்தில் குரு தட்சிணாமூர்த்தியே காட்சி தருவதால், சிவ சொரூபமாகத் திகழும் தென்முகக் கடவுளாம் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வணங்கினால், புத்தியில் தெளிவும் செயலில் திண்மையும் கிடைக்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

    வியாழக்கிழமையின் பிரகஸ்பதி என்று கூறப்படும் குரு பகவானை எவ்வாறு விரதமிருந்து வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

    * அதாவது அமாவாசை முடிந்து வளர்பிறையில் வரக்கூடிய வியாழக்கிழமையில் தொடங்கி தொடர்ந்து 16 வியாழக்கிழமை விரதம் இருந்து பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றி குருபகவானின் காயத்ரி மந்திரங்கள் சொல்லி இனிப்பு பதார்த்தங்களை வைத்து விரதங்களை கடைப்பிடிக்க வேண்டும். பின்பு சிவன் கோவிலுக்குச் சென்று நவகிரகதோடு இருக்கும் குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை சாத்தி வழிபாடு செய்வது நன்மையை பயக்கும்.

    * ஏதோ ஒரு காரணத்தால் நமக்கு அவப்பெயரை ஏற்படுதல், ஆன்மிகத்தில் நாட்டமின்மை, ஆரோக்கியத்தின் குறைபாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியின்மை போன்ற குறைபாடு உள்ளவர்கள் 16 வியாழக்கிழமை விரதமிருந்து குரு பகவானை வழிபட்டு வந்தால் குறைபாடுகள் கலைந்து நல்லதொரு முன்னேற்றப் பாதையை அடையலாம்.

    * வியாழன் தோறும் மாலை வேளையில் நம் வீட்டிலேயே லட்சுமி குபேர பூஜை செய்து வந்தால் செல்வம் கொழிக்கும்.

    * அதேபோன்று ஞானத்தை போதிக்கும் மகான்களை (ஸ்ரீ சாய் பாபா, ஸ்ரீ ராகவேந்திரா) வணங்குவதற்கு ஏற்ற நாளாக வியாழக்கிழமை உள்ளது.

    • குருவின் சந்நிதியில் மனமுருகி பாடுங்கள். பண மழையில் நனையலாம்.
    • குருவின் சந்நிதியில் நேரில் நின்று வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் வந்து சேரும்.

    குருவின் சந்நிதியில் நேரில் நின்று வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் நமக்கு வந்து சேரும். குருவின் சந்நிதியில் நாம் பாட வேண்டிய பாடல்:

    "வானவர்க் கரசே! வளம் தரும் குருவே!

    காணா இன்பம் காண வைப்பவனே!

    பொன்னிற முல்லையும் புஷ்ப ராகமும்!

    உந்தனுக்களித்தால் உள்ளம் மகிழ்வாய்!

    சுண்டல் தானியமும் சொர்ண அபிஷேகமும்!

    கொண்டுனை வழிபடக் குறைகளைத் தீர்ப்பாய்!

    தலைமைப் பதவியும் தனித்தோர் புகழும்!

    நிலையாய் தந்திட நேரினில் வருக!''

    "நாளைய பொழுதை நற்பொழுதாக்குவாய்!

    இல்லற சுகத்தினை எந்தனுக் களிப்பாய்!

    உள்ளத்தில் அமைதி உறைத்திடச் செய்வாய்!

    செல்வ செழிப்பும் சேர்ந்திட வைப்பாய்!

    வல்லவன் குருவே! வணங்கினோம் அருள்வாய்!

    என்று மனமுருகி பாடுங்கள். பண மழையில் நனையலாம். "பார் போற்ற வாழலாம்''.

    • தட்சிணாமூர்த்தி 64 சிவவடிவங்களில் ஒருவர்.
    • தட்சிணாமூர்த்தி என்பவர் குருவுக்கும் குருவான பெரிய குருவாம்.

    * தஞ்சாவூருக்கு அருகில் உள்ளது தென்குடித் திட்டை பெரும்பாலும் அமர்ந்த கோலத்திலேயே காட்சி தரும் தட்சிணாமூர்த்தி இத்தலத்தில் நின்ற நிலையில் ராஜகுருவாக அருள் பாலிக்கிறார். இத்தலத்தில் மேலும் ஒரு சிறப்பு உண்டு. வேறு எந்த சிவத்தலத்திலும் காணப்படாத வகையில் இங்கே சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் 'குரு' தனிச்சந்நிதி கொண்டு காட்சி தருகிறார்.

    * திருப்பூந்துருத்தி புஷ்பனேஸ்வரர் கோவிலில் வீணை ஏந்திய நிலையில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார்.

    * எல்லா கோவில்களிலும், பொதுவாக இடது கால் மடித்த நிலையிலேயே தட்சிணாமூர்த்தி காட்சியளிப்பார். திருநெல்வேலி மாவட்டம் அம்பசாமுத்திரத்தில் வலது கால் மடித்து வித்தியாசமாகக் காட்சி தருகிறார்

    * கம்பம் கம்பராயப் பெருமாள் கோவிலில் இடது கையில் கமண்டலத்துடன் யோக நிலையில் எழுந்தருளியுள்ளார். இது அபூர்வ காட்சியாகும்.

    * தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் நடனத்திற்கு ஏற்றபடி மிருதங்கம் வாசிக்கும் நிலையில் தட்சிணாமூர்த்தி காட்சியளிக்கிறார்

    * ராமநாதபுரம் திருவாடானை ஆதிரத்தினபுரீஸ்வரர் கோவில் ராஜ கோபுரத்தில் ஒன்பது நிலைகளிலும் குரு பகவான் ஒயிலாக காட்சியளிக்கிறார்.

    ×