search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "grievance meeting"

    • மருந்துகள், வாங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்
    • பாம்பு கடிக்கு காப்பீடு திட்டத்தை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க வலியுறுத்தல்

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு, தாலுகாவில் நரசிங்கபுரம், கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரமேஎஷ், இவரது மகன் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது. இவரை விஷ பாம்பு கடித்தது.

    உடனே ரமேஷ் அவரது மகனை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். மருத்துவர் இல்லாததால். சேத்துப்பட்டு, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு சிகிச்சைக்காக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டையை காண்பித்துள்ளார்.

    அப்போது மருத்துவமனை தரப்பினர் முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீடு அட்டையில் பாம்பு கடிக்கு, மருந்து மற்றும் சிகிச்சை, அளிக்க முடியாது என்று கூறியுள்ளனர்.

    இதனால் மனவேதனை அடைந்த ரமேஷ் சேத்துப்பட்டில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் பாம்பு கடி, மற்றும் சிகிச்சைக்கு, மருந்துகள், வாங்குவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். விவசாய நிலத்தில் விஷ ஜந்துக்கள் அதிகமாக உள்ளது.

    விவசாயிகள் இதன் மூலம் பாதிக்கப்படுகின்றனர். தனியார் மருத்துவமனையில் எங்களால் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆகையால் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் பாம்பு கடிக்கு, சிகிச்சைக்கு, ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 2 ரப்பர் பாம்புகளுடன் வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • பல்லடம் தாலுகா அலுவலகத்தில், நாளை காலை, 11 மணிக்கு விவசாயிகள் குறை கேட்கும் கூட்டம் நடைபெறுகிறது.
    • வட்டார அளவிலான கூட்டம் என்பதால், விவசாயிகள் அதற்கேற்ப திட்டமிட்டு பங்கேற்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    பல்லடத்தில், நாளை நடக்கவுள்ள விவசாயி கள் குறைகேட்கும் கூட்டத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு வருவாய் துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் வருவாய் கோட்டத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்கும் நாள் கூட்டம், பல்லடம் தாலுகா அலுவலகத்தில், நாளை (21ம் தேதி) காலை, 11 மணிக்கு நடைபெறுகிறது.

    சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமையில் நடக்கவுள்ள இக்கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு வருவாய் துறை அறிவித்துள்ளது. மேலும், இது வட்டார அளவிலான கூட்டம் என்பதால், விவசாயிகள் அதற்கேற்ப திட்டமிட்டு பங்கேற்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • திருவாரூர்விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 21-ந் தேதி நடக்கிறது.
    • விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

    திருவாரூர்;

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. கூட்டத்தில் வேளாண்மை, உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த தோட்டக்கலை துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை,

    கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 21-ந் தேதி நடக்கிறது.
    • விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடை பெற உள்ளது.

    கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

    கூட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகள் அரசின் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.
    • விவசாயிகளிடம் புகார் பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் வட்டாட்சியர் கூறினார்.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வட்டாட்சியர் சுரேஷ் பிரடரிக்கிள மண்ட் தலைமை வைத்தார். உசிலம்பட்டி மற்றும் செல்லம்பட்டி பகுதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயிர்களை தாக்கும் காட்டு விலங்குகள் மற்றும் பன்றிகள் விளை நிலங்களை சேதப்படுத்துவது அதற்கு விவசாயிகளுக்கு வனத்துறை யினர் காட்டுப்பன்றிகள் விளை நிலங்களில் வர விடாமல் தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க கோரியும். தமிழக அரசு சேதமடைந்த கரும்பு மற்றும் உணவுப் பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்க கோரியும் வேளாண்மைதுறை மற்றும் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர். வனத்துறையினர் விவசாயிகளிடம் புகார் பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அரசு துறையில் இருந்து அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • மன்னார்குடியில் 13-ந் தேதி மாற்றுத்திறனாளிகள் கூட்டம் நடக்கிறது.
    • யு.டி.ஐ.டி. அட்டை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம்

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியப்பதாவது:-

    மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற 13-ந்தேதி காலை 11 மணிக்கு மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

    கூட்டத்தில் மன்னார்குடி கோட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கை மனுக்களை எழுத்து பூர்வமாக கொடுக்கலாம். மாற்றுத்திறனாளிகள் கொடுக்கப்படும் மனுக்கள் மீது உள்ள கோரிக்கைகளுக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில், சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் மனுக்கள் வழங்கப்படும்.

    மனுதாரர்களின் கோரிக்கைகள் அனைத்தும் அரசின் விதிகளுக்குட்பட்டு பரிசீலிக்கப்படுவதோடு, குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் உள்ள மனுக்களுக்கு உரிய உதவிகள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    உதவி உபகரணங்கள், கடனுதவி, பராமரிப்பு உதவிதொகை, வீட்டுமனைபட்டா, பட்டா இருந்தால் தொகுப்பு வீடு, நூறுநாள் வேலை அட்டை, தனியார் துறையில் வேலைவாய்ப்பு உள்ளிட்ட விண்ணப்பங்கள் அளிக்கலாம். யு.டி.ஐ.டி. அட்டை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிக்க விரும்புபவர்கள் குடும்ப அட்டை, மாற்றுதிறனாளிகள் தேசிய அடையாள அட்டை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல், தற்போதைய புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.

    ஏற்கனவே விண்ணப்பித்து இருந்தால் அதற்கான ஆதாரங்கள், தொடர்புடைய கடிதங்கள் ஆகியவற்றை கொண்டு வரலாம். கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    இதற்கு முன்னர் விண்ணப்பம் அளித்திருந்து அதற்கான ஆதாரம், தொடர்புடைய கடிதங்கள் ஏதுமிருப்பின் அதனையும் தவறாது கொண்டு வர வேண்டும்.

    மேலும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாத உதவித்தொகை ரூ.2 ஆயிரம் பெறுபவர்கள் மட்டும் 2023-24ம் ஆண்டிற்கு மாற்றுத்திறனாளி நல்ல நிலையில் உள்ளார் என கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்ற சான்றிதழையும், மாற்றுத்திறனாளியின் பாதுகாவலர் மட்டும் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வந்து கொடுக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறபட்டுள்ளது.

    • முன்னாள் படைவீரர்கள், தியாகிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது/
    • அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து விண்ணப்பம் வழங்கி பயனடையலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த வீரவிருது பெற்றோர், போரில் உயிர் தியாகம் செய்தோரை சார்ந்தோர், முன்னாள் படை வீரர்கள் மற்றும் படையில் பணிபுரிவோர் களை சார்ந்தோருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நாளை (28ந்தேதி) காலை 11 மணிக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த வீரவிருது பெற்றோர், போரில் உயிர் தியாகம் செய்தோரை சார்ந்தோர், முன்னாள் படை வீரர்கள், படைவீரர் கள் மற்றும் சார்ந்தோர் குறைகள் ஏதும் இருப்பின் தங்களது அடையாள அட்டை நகலுடன் தங்கள் குறைகள் குறித்த மனுவுடன் (இரட்டை பிரதிகளில்) மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்திற்கு நேரில் வருகை தந்து விண்ணப்பம் வழங்கி பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • காணொலி காட்சி மூலம் நடத்த ஏற்பாடு
    • திருப்பத்தூர் அஞ்சல் துறை அதிகாரி தகவல்

    திருப்பத்தூர்:

    அஞ்சல் துறையின் மண்டல பெறும் அளவிலான ஓய்வூதியர் குறை தீர்வுக்கூட்டம் ஜுலை மாதம் 11-ம் தேதி நடைபெறவுள்ளது என திருப்பத்தூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மாதேஸ்வரன் தெரிவித்து ள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-

    அஞ்சல் துறையில் ஓய்வூதியம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்ய ஜூலை மாதம் 11-ம் தேதி காலை 11 மணியளவில் மேற்கு மண்டலத்தின் குறைதீர்வு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியம் பெறும் அஞ்சல் ெரயில்வே தொலைபேசி துறை ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் தொடர்பாக திருப்பத்தூர் அஞ்சல் கோட்ட அளவில் நிவர்த்தி செய்ய முடியாத குறைகளை அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • செயற்பொறியாளா் அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு மேற்பாா்வை பொறியாளா் தலைமையில் நடைபெறுகிறது.
    • மின் நுகா்வோா்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை மின்பகிா்மான வட்டத்திற்குள்பட்ட மின் நுகா்வோா்களுக்கான குறைகேட்பு கூட்டம்நாளை 7 ந்தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது என்று செயற்பொறியாளா் டி.மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

    இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், உடுமலை மின்பகிா்மான வட்டத்திற்குள்பட்ட மின் நுகா்வோா்களுக்கான குறைகேட்பு கூட்டம் செயற்பொறியாளா் அலுவலகத்தில் நாளை 7 -ந்தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மேற்பாா்வை பொறியாளா் மு.ராஜாத்தி தலைமையில் நடைபெறுகிறது. இதில், உடுமலை மின்பகிா்மான வட்டத்திற்குட்பட்ட மின் நுகா்வோா்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குறை கேட்பு கூட்டம் வருகிற 7-ந் தேதி முதல்15-ந் தேதி வரை திண்டிவனம் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற உள்ளது
    • மக்கள் தங்கள் குறைகளை மனு வாக அளித்து பயன் பெற லாம்

    விழுப்புரம்:

    திண்டிவனம் வட்டத்தில் 1432-ம் பசலிக்கான வரு வாய்த் தீர்வாயம், வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் விழுப்புரம், உதவி ஆணையர் (கலால்) தலை மையில், குறை கேட்பு கூட்டம் வருகிற 7-ந் தேதி முதல்15-ந் தேதி வரை (சனி, ஞாயிறு விடு முறை நாட்கள் நீங்களாக) திண்டிவனம் தாசில்தார் அலுவலகத்தில் தினசரி காலை 10மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. திண்டிவனம் வட்டத்திற் குட்பட்ட கிராம பொது மக்கள் இந்த நாட்களில் தங்கள் குறைகளை மனு வாக அளித்து பயன் பெற லாம் என திண்டிவனம் தாசில்தார் அலெக் சாண்டர் தெரிவித்துள்ளார்.

    • தொண்டியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
    • இந்த மனுக்களை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி முதல் நிலை பேரூராட்சியில் ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் செவ்வாய்க்கிழமையும், இறுதி வார செவ்வாய்க்கிழமையும் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை மக்கள் குறை தீர்க்கும் நாளாக முன்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி நடந்த குறை தீர்க்கும் முகாமிற்கு பேரூராட்சி மன்ற தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். பொதுமக்கள் தங்களது பகுதி குறைபாடுகளை நிவர்த்தி செய்யக்கோரி பேரூராட்சி மன்ற தலைவரிடம் மனுக்களாக அளித்தனர்.

    இந்த மனுக்களை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது. இளநிலை உதவியாளர் ரவிச்சந்திரன் உடனிருந்தார்.

    • பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 102 மனுக்களை பெற்று கொண்டார்.
    • மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களை உரிய காரணம் இல்லாமல் நிராகரிக்க கூடாது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அம்ரித் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 102 மனுக்களை பெற்று கொண்டார்.

    தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.4 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.

    மேலும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது துறை அலுவலர்கள் தனிகவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும், உரிய காரணம் இல்லாமல் மனுக்களை நிராகரிக்க கூடாது. பொதுமக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷ்னி, குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×