என் மலர்
உள்ளூர் செய்திகள்

குறைதீர்க்கும் கூட்டத்தில் வட்டாட்சியர் சுரேஷ் பிரடரிக் கிளமண்ட் தலைமையில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் குறைதீர் கூட்டம்
- உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.
- விவசாயிகளிடம் புகார் பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் வட்டாட்சியர் கூறினார்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மாதாந்திர குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு வட்டாட்சியர் சுரேஷ் பிரடரிக்கிள மண்ட் தலைமை வைத்தார். உசிலம்பட்டி மற்றும் செல்லம்பட்டி பகுதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயிர்களை தாக்கும் காட்டு விலங்குகள் மற்றும் பன்றிகள் விளை நிலங்களை சேதப்படுத்துவது அதற்கு விவசாயிகளுக்கு வனத்துறை யினர் காட்டுப்பன்றிகள் விளை நிலங்களில் வர விடாமல் தடுத்து உரிய நடவடிக்கை எடுக்க கோரியும். தமிழக அரசு சேதமடைந்த கரும்பு மற்றும் உணவுப் பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்க கோரியும் வேளாண்மைதுறை மற்றும் வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்தனர். வனத்துறையினர் விவசாயிகளிடம் புகார் பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அரசு துறையில் இருந்து அதிகாரிகள் கலந்து கொண்டனர்.






