search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைதீர்வு கூட்டம்"

    • கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அணைக்கட்டு:

    அணைக்கட்டில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தாசில்தார் வேண்டா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மீராபென்காந்தி ஆகியோர் தலைமை தாங்கினர். பி.டி.ஓ.க்கள் சுதாகரன் சாந்தி முன்னிலை வகித்தனர்.

    இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    தாசில்தார் வேண்டா கூறுகையில்:-

    உங்களது கோரிக்கைகள் மீது உடனடியாக தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.

    இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் உட்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
    • உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொது மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனை த்து த்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலை மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்ட ரிடம் நேரில் அளித்தனர்.

    நேற்று நடைபெற்ற குறைதீர்வு கூட்டத்தில்; பட்டா தொடர்பான 93 மனுக்களும், ஆக்கிரமிப்பு தொடர்பாக 46 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொட ர்பாக 39 மனுக்களும், வேலை வாய்ப்பு தொட ர்பாக 26 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 52 மனு க்களும், மாற்றுத்தி றனாளி நல அலுவலகம் தொடர்பாக 25 மனுக்க ளும், ஊரக வளர்ச்சி துறை தொடர்பான 64 மனுக்களும், இதர மனுக்கள் 285 ஆக மொத்தம் 630 மனுக்கள் வரப்பெற்றன.

    பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளு க்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும். மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காண வேண்டும். அவ்வாறு அவர்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்ப ட்டு விரைந்து நட வடிக்கை மேற்கொள்ள ப்பட வேண்டும் என கலெக்டர் அலுவல ர்களுக்கு உத்தர விட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) ரமா மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • வேலூரில் நாளை நடக்கிறது
    • கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்க அழைப்பு

    வேலுார்:

    வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கான குறைதீர்வு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நாளை (25-ந் தேதி) காலை 10 மணிக்கு நடக்கிறது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை வகிக்கிறார்.

    வேளாண், பொறியியல், மின்வாரியம், ஆவின், கூட்டுறவு சங்கங்கள், போக்குவரத்து உட்பட எல்லாதுறை அலுவலர்களும் இதில் பங்கேற்கின்றனர்.

    எனவே, விவசாயிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகள், கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மருந்துகள், வாங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்
    • பாம்பு கடிக்கு காப்பீடு திட்டத்தை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க வலியுறுத்தல்

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு, தாலுகாவில் நரசிங்கபுரம், கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரமேஎஷ், இவரது மகன் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது. இவரை விஷ பாம்பு கடித்தது.

    உடனே ரமேஷ் அவரது மகனை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள். மருத்துவர் இல்லாததால். சேத்துப்பட்டு, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    அங்கு சிகிச்சைக்காக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டையை காண்பித்துள்ளார்.

    அப்போது மருத்துவமனை தரப்பினர் முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீடு அட்டையில் பாம்பு கடிக்கு, மருந்து மற்றும் சிகிச்சை, அளிக்க முடியாது என்று கூறியுள்ளனர்.

    இதனால் மனவேதனை அடைந்த ரமேஷ் சேத்துப்பட்டில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் பாம்பு கடி, மற்றும் சிகிச்சைக்கு, மருந்துகள், வாங்குவதற்கு ஏற்பாடு செய்யுங்கள். விவசாய நிலத்தில் விஷ ஜந்துக்கள் அதிகமாக உள்ளது.

    விவசாயிகள் இதன் மூலம் பாதிக்கப்படுகின்றனர். தனியார் மருத்துவமனையில் எங்களால் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆகையால் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் பாம்பு கடிக்கு, சிகிச்சைக்கு, ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 2 ரப்பர் பாம்புகளுடன் வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    • காணொலி காட்சி மூலம் நடத்த ஏற்பாடு
    • திருப்பத்தூர் அஞ்சல் துறை அதிகாரி தகவல்

    திருப்பத்தூர்:

    அஞ்சல் துறையின் மண்டல பெறும் அளவிலான ஓய்வூதியர் குறை தீர்வுக்கூட்டம் ஜுலை மாதம் 11-ம் தேதி நடைபெறவுள்ளது என திருப்பத்தூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் மாதேஸ்வரன் தெரிவித்து ள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில்:-

    அஞ்சல் துறையில் ஓய்வூதியம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்ய ஜூலை மாதம் 11-ம் தேதி காலை 11 மணியளவில் மேற்கு மண்டலத்தின் குறைதீர்வு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியம் பெறும் அஞ்சல் ெரயில்வே தொலைபேசி துறை ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் தொடர்பாக திருப்பத்தூர் அஞ்சல் கோட்ட அளவில் நிவர்த்தி செய்ய முடியாத குறைகளை அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 19 புதிய மனுதாரர்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்
    • போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கினார்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடந்தது.

    கருத்து கேட்பு குழு பிரிவிலிருந்து பெறப்பட்ட திருப்தி அடையாத 15 மனுதாரர் களை நேரில் அழைத்தும், 19 புதிய மனுதாரர்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு, அவர்க ளின் குறைகளை கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கி னார்.

    கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ் பெக்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 16-ந் தேதி நடக்கிறது
    • மாற்றுத் திறனாளிகள் தங்கள் கோரிக் கைகள் குறித்து மனு அளித்து பயன்பெறலாம்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர்வு கூட்டம் வருகிற 16-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில் திருவண்ணா மலை உதவி கலெக்டர் தலைமையில் திருவண்ணாமலை தாலுகா அலுவலக பின்புறம் உள்ள கூட்ட அரங்கில் நடை பெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் தங்கள் கோரிக் கைகள் குறித்து மனு அளித்து பயன்பெறலாம்.

    இந்த தகவலை திருவண்ணாமலை உதவி கலெக்டர் மந்தாகினி தெரிவித்துள்ளார்.

    • உதவி இயக்குனர் தலைமையில் நடந்தது
    • அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

    போளூர்,

    போளூர் வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் வேளாண்மை உதவி இயக்குனர் சவிதா தலைமையில் நடைபெற்றது.

    போளூர் தாசில்தார் சஜேஷ்பாபு, சமூக நலத்துறை தாசில்தார் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மண்டல துணை தாசில்தார் சுசிலா வரவற்றார். மாவட்ட விநியோக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு மனுக்களை பெற்றுக்கொண்டு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.

    இதில் விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்

    • உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஐ.ஜி கூறினார்
    • அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. வேலூர் சரகடி.ஐ.ஜி.முத்துசாமி, ராணிப்பேட்டைமாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக் கள் மற்றும் திருப்தியின்மை காரணமாக மறு விசாரணைக்கு அழைக்கப்பட்ட 8 மனுக்கள் என மொத்தமாக 16 மனுக்கள் பெறப்பட்டன.

    மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஐ.ஜி. தெரிவித்தார். கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ராணிப்பேட்டையில் நாளை நடக்கிறது
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் நடப்பு ஏப்ரல் மாதத்திற்கான, மாதாந்திர விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நாளை 21-ந்தேதி காலை 11 மணிக்கு (வெள்ளிக்கிழமை) ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.

    கூட்டத்தில் வேளாண்மைதுறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, பட்டு வளர்ச்சி, மீன்வளம், கால்நடைத்துறை உள்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

    எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் களப்பிரச்சனைகளை கலைந்திட இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பொது மக்கள் பிரச்சனைகளை கோரிக்கை வாயிலாகவும், தனிநபர் பிரச்சனைகளை மனுக்கள் வாயிலாகவும் தெரிவித்திடுமாறு ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

    • 25 மனுக்கள் பெறப்பட்டன
    • விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி

    போளூர்:

    போளூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று ஆரணி, போளூர், கலசப்பாக்கம், ஜமுனாமுத்தூர் ஆகிய 4 தாலுகாவிற்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு போளூர் தாசில்தார் சஜேஷ்பாபு தலைமை தாங்கினார். கலசப்பாக்கம் தாசில்தார் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். போளூர் சமூக நலத்துறை தாசில்தார் செந்தில்குமார் அனைவரையும் வரவேற்றார்.

    இதில் ஆரணி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் குமரவேல் கலந்து கொண்டு அனைத்து மாற்றுத்திறனாளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்தக் கூட்டத்தில் 25 மனுக்கள் பெறப்பட்டன. அனைத்து மனுக்கள் மீதும் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    இதில் போளூர் பேரூராட்சியின் செயல் அலுவலர் முகமது ரிஜிவான், துணைதாசில்தார் தட்சிணாமூர்த்தி, தெய்வநாயகி, வருவாய் ஆய்வாளர் பிரேம் நாத் கலைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட வழங்க அலுவலர் தேவி நன்றி கூறினார்.

    • 247 மனுக்கள் பெறப்பட்டன
    • நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் கலெக்டர் வளர்மதி தலைமையில் நடைபெற்றது.

    இதில் கல்வி உதவித்தொகை, வங்கி கடனுதவி, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, சாதிச் சான்று, வேலை வாய்ப்பு, விதவை உதவித் தொகை, மாற்றுத்திற னாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து 247 மனுக்கள் பெறப்பட்டன.

    பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது நடவடிக்கை மேற் கொள்ளவும், மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை மனுதாரர்களுக்கு தெரிவிக்கவும் அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ரூ.10,500 மதிப்பி லான 3 சக்கர சைக்கிள் மற்றும் நெமிலி ஒன்றியம் கணப திபுரத்தை சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்பவருக்கு தையல் எந்திரம் ஆகியவற்றை கலெக்டர் வளர்மதி வழங்கினார்.

    இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், துணை கலெக்டர் தாரகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி, உதவி ஆணையர் (கலால்) சத்திய பிரசாத் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    ×