search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணிப்பேட்டை கலெக்டர் ஆபீசில் குறைதீர்வு கூட்டம்
    X

    ராணிப்பேட்டை கலெக்டர் ஆபீசில் குறைதீர்வு கூட்டம்

    • பொதுமக்களிடம் இருந்து 222 மனுக்கள் பெறப்பட்டன
    • மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு


    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 222 மனுக்கள் பெறப்பட்டது.

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, பொதுமக் கள் மற்றும் மாற்றுத்திறனா ளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, குறை களை கேட்டறிந்தார்.

    கூட்டத்தில் நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, கூட்டுறவு கடனு தவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக

    வீடுகள் வேண்டி, மின்சாரத் துறை சார்பான குறைகள், கிராம பொதுப்பிரச்சனை கள், குடிநீர்வசதி, வேலை வாய்ப்பு வேண்டிஉள்ளிட்ட குறைகள் மற்றும் கோரிக்கை கள் அடங்கிய 222 மனுக்கள் பெறப்பட்டன.

    இந்த மனுக்களை சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களி டம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற் கொண்டு தகுதியானதாக இருப்பின் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட் டார்.

    தொடர்ந்து, பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான் மையினர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு தையல் எந்திரங்களை கலெக்டர் வழங்கினார். மேலும், ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சித்

    திட்டம் மூலம் ராணிப் பேட்டை மாவட்ட திட்ட அலுவலகத்தின் கீழ் ஜி.ஆர். பேட்டை குழந்தை மைய பணியாளர் ராணி என்பவர் பணியில் இருக்கும்போது இறந்ததால், அவரது வாரிசு தாரர் தமிழரசி என்பவருக்கு கருணை அடிப்படையில் அரக்கோணம் வட்டாரம், விஸ்வநாதபுரம் குழந்தைகள் நல மையத்தில் குழந்தை மையப்பணியாளராக பணி நியமன ஆணையினை கலெக் டர் வழங்கினார்.

    கூட்டத்தில் துணை கலெக்டர் தாரகேஸ்வரி, பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சிறுபா னைமையினர் நல அலுவலர் முரளி, கலால் உதவி ஆணையாளர் சத்தியபிரசாத், மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×