search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govt bus accident"

    • புத்தேரி மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 25 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது.
    • இதில் பஸ்ஸில் இருந்த 35 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து டிரைவர் கிரீசன் தம்பி தலைமறைவானார்.

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி அருகே தாழக்குடியில் இருந்து நாகர்கோவில் வழியாக தேரூருக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 26-ந்தேதி மாலை 3 மணிக்கு தாழக்குடியிலிருந்து தேரூருக்கு பஸ் புறப்பட்டது. பஸ்ஸில் 35-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ்சை மார்த்தாண்டத்தைச் சேர்ந்த கிரீசன் தம்பி என்பவர் ஓட்டினார். கண்டக்டராக தாழக்குடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் இருந்தார்.

    புத்தேரி மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 25 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இதில் பஸ்ஸில் இருந்த 35 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து டிரைவர் கிரீசன் தம்பி தலைமறைவானார்.

    விபத்து குறித்து நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பஸ் டிரைவர் கிரீசன் தம்பி மீது அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் பஸ்சை ஓட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பஸ் விபத்தில் சிக்கியதையடுத்து டிரைவர் கிரீசன் தம்பி மீது துறைவாரியாக நடவடிக்கை எடுக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    இதையடுத்து போக்குவரத்து கழக அதிகாரிகள் டிரைவர் கிரீசன் தம்பியை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே இன்று அதிகாலை அரசு பஸ்- வேன் மோதிய விபத்தில் 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    மயிலம்:

    சிவகங்கை மாவட்டம் எஸ்.காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் அங்குசாமி (வயது 50). இவர் தனது குடும்பத்தினருடன் சிவகங்கையில் இருந்து தனக்கு சொந்தமான வேனில் சென்னை நோக்கி புறப்பட்டார். அந்த வேனை அங்குசாமி ஓட்டினார்.

    இந்த வேனில் அங்குசாமியின் மனைவி லட்சுமி (48), அவரது உறவினர் சிவகங்கை அருகே உள்ள கட்டான்குளத்தை சேர்ந்த உமாபதி (35), உமாபதியின் மனைவி விஜி (28) மற்றும் பலர் இருந்தனர்.

    இவர்கள் வந்த வேன் விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள விலங்கம்பாடி திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 3.45 மணிக்கு வந்து கொண்டிருந்தது.

    அதேபோல் சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு அரசு விரைவு பஸ் ஒன்று திருச்சி நோக்கி சென்றது. அந்த பஸ்சை திண்டுக்கல் மாவட்டம் வக்கிரபட்டியை சேர்ந்த அருணானந்தன் என்பவர் ஓட்டி வந்தார். மற்றொரு டிரைவராக குப்பத்துபட்டியை சேர்ந்த பிரபு (37) என்பவரும் இருந்தார்.

    அந்த பஸ் மயிலம் அருகே உள்ள விலங்கம்பாடி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது விலங்கம்பாடி என்ற இடத்தில் பஸ் வந்து கொண்டிருந்தபோது அரசு பஸ் டிரைவர் எதிர்பாராதவிதமாக மறுபுறம் உள்ள சாலைக்கு பஸ்சை திருப்பினார்.

    சிறிது தூரம் பஸ் சென்றது. அப்போது அந்த பஸ் மாற்றுச்சாலையில் செல்வதை உணர்ந்த அரசு பஸ் டிரைவர் என்ன செய்வது என்று தெரியாமல் பஸ்சை அங்கேயே நிறுத்தினார்.

    அப்போது அந்த சாலையில் அங்குசாமி குடும்பத்தினர் வேன் வந்து கொண்டிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது வேன் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

    இதில் வேனின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. விபத்தில் வேனில் பயணம் செய்த அங்குசாமி, அவரது மனைவி லட்சுமி, உறவினர் உமாபதி, உமாபதியின் மனைவி விஜி ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    மேலும் வேனில் பயணம் செய்த விக்னேஷ்வரன் (31), ரேகா (28), 1½ வயது குழந்தை நித்திஷ், பவித்ரன் (4), அரசு பஸ்சில் பயணம் செய்த டிரைவர்கள் அருணானந்தன், பிரபு, சென்னை சோளிங்கநல்லூரை சேர்ந்த குமரவேல், கரூரை சேர்ந்த நவீன் (25) உள்பட 24 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மயிலம் இன்ஸ்பெக்டர் பால்சுதர், சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் காயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த 24 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்தினால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் விபத்துக்குள்ளான வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

    விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உச்சிப்புளி அருகே நடந்து சென்ற தொழிலாளி மீது அரசு பஸ் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள சாத்தக்கோன்வலசையைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது44). கூலி தொழிலாளியான இவர் சம்பவத்தன்று பிரப்பன்வலசைக்கு நடந்து சென்றார்.

    தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது ராமேசுவரத்தில் இருந்து பெங்களூர் நோக்கி சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமக குமரேசன் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த குமரேசனை அங்கிருந்தவர்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமா வழக்குப்பதிவு செய்து கமுதி கோவிலாங்குளத்தைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் வழிவிட்டான் என்பவரை கைது செய்தார்.

    கடலூர் அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி 1 வயது குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர்:

    கடலூரை அடுத்த உள்ளேரிபட்டு பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். (வயது 35). தொழிலாளி. இவருடைய மனைவி இலக்கியா (28). இவர்களுக்கு கார்த்திக் (3), நகுல்(1) ஆகிய 2 ஆண் குழந்தைகள் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் கார்த்திக்கும், நகுலுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இன்று காலை மோட்டார் சைக்கிளில் அவர்களை கருணாகரனும், அவரது மனைவியும் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அவர்கள் தனது மகன்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு நெல்லிக்குப்பம் நோக்கி புறப்பட்டனர். கடலூர் அடுத்த கோண்டூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் ஓரத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது.

    சாலையின் ஓரத்தில் சென்றுகொண்டிருந்த கருணாகரன் அந்த பள்ளத்தில் விழுந்து விடக்கூடாது என்பதற்காக திடீரென்று மோட்டார் சைக்கிளை பிரேக் அடித்து நிறுத்தினார்.

    இதில் தாய் இலக்கியா மடியில் வைத்திருந்த குழந்தை நகுல் எதிர்பாராமல் சாலையில் தவறி கீழே விழுந்தது. அப்போது பின்னால் வந்த அரசு பஸ் சக்கரம் நகுல் தலையில் எதிர்பாராமல் ஏறியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்தது. இதனைப் பார்த்த தாய்-தந்தை இருவரும் தங்கள் கண் முன்னே பலியான குழந்தையை கையில் எடுத்து கொண்டு கதறி அழுதனர். இதைபார்த்த அங்கு திரண்டு இருந்த பொதுமக்களும் கண் கலங்கினார்கள்.

    இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர்.

    கடலூர் அடுத்த கோண்டூர் சாலையோரம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இதை அறிவிக்க எந்தவித பேரிகார்டோ அல்லது எச்சரிக்கை பலகையோ அங்கு அதிகாரிகள் வைக்கவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அந்த இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டிருப்பது சரியாக தெரிவதில்லை. அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

    இன்று குழந்தை நகுல் பஸ் சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்ற விபத்துகள் நடப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தமிழ்நாட்டில் 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை அரசு பஸ்களால் 6,132 விபத்துகள் நடைபெற்றுள்ளன. அதில் 6,729 பேர் உயிரிழந்துள்ளனர்.
    சென்னை:

    தமிழக சட்டசபையில் நேற்று பஸ் போக்குவரத்து துறை மீதான மானிய கோரிக்கை நடந்தது. அதில் விபத்தில் சிக்கிய அரசு பஸ்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டன.

    கடந்த 5 ஆண்டுகளில் அதாவது 2013 முதல் 2018-ம் ஆண்டு வரை விபத்தில் சிக்கிய அரசு பஸ்களால் 6,132 விபத்துகள் நடைபெற்றுள்ளன. அதில் 6,729 பேர் உயிரிழந்துள்ளனர். இது தமிழ்நாட்டில் நடைபெறும் மொத்த சாலை விபத்துக்களில் 8 சதவீதமாகும்.

    2013-14-ம் ஆண்டில் 1,318 பேரும், 2014-15-ம் ஆண்டில் 1,331 பேரும், 2015-16-ம் ஆண்டில் 1,460 பேரும், 2016-17-ம் ஆண்டில் 1,373 பேரும், 2017-18-ம் ஆண்டில் 1,085 பேரும் பலியாகியுள்ளனர்.

    எனவே, விபத்துக்களை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பஸ் ஓட்டும் போது டிரைவர்கள் செல்போனில் பேசுவது, மது அருந்திவிட்டு ஓட்டுவது போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது.

    போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மூச்சு பரிசோதனை நடத்தி வருகின்றனர். நீண்டநேரம் இயக்கப்படும் பஸ்களை ஓட்டும் டிரைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. விபத்து நடைபெறும் அபாய பகுதிகளில் போக்குவரத்து விதிமுறைகளை அமல்படுத்துதல், சாலை வசதி மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.


    இந்த தகவலை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டசபையில் தெரிவித்தார். கடுமையான நடவடிக்கைகள் மூலம் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விபத்துக்களில் பலியானோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2016-2017-ம் ஆண்டில் அரசு பஸ் விபத்துக்களால் 1,373 பேர் பலியாகி உள்ளனர். ஆனால் 2017-2018-ம் ஆண்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,086 ஆக குறைந்துள்ளது.

    விபத்தில் பலியானோருக்கு ரூ.80 கோடி வரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இது மிகவும் அதிக தொகை. இவை முழுவதையும் அரசால் வழங்க இயலாது. எனவே பயணிகளிடம் இருந்து ஒரு சிறிய தொகை வசூலிக்கப்படுகிறது.

    அதாவது பயணிகளிடம் இருந்து டிக்கெட்டில் ரூ.1 முதல் ரூ.10 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன்மூலம் விபத்து காப்பீடு வழங்கப்படும். கடந்த ஜனவரி முதல் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் இழப்பீடு தொகை பெற ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு உடனடியாக இழப்பீடு தொகை வழங்கப்படுகிறது என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். #TNAssembly #TNMinister #MRVijayabaskar
    ஊட்டி அருகே 500 அடி பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். #OotyAccident
    ஊட்டி:

    ஊட்டியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு அரசு பஸ் இன்று காலை குன்னூருக்கு புறப்பட்டது. பஸ் மதியம் 12 மணியளவில் ஊட்டி அருகே உள்ள மந்தாடா என்ற பகுதியில் வந்தது.



    அப்போது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த 500 அடி பள்ளத்தில் பஸ் உருண்டு கவிழ்ந்தது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் காயம் அடைந்து அலறிதுடித்தனர்.

    இதுபற்றி தெரியவந்ததும் நீலகிரி மாவட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் கிடுகிடு பள்ளத்தில் கீழே இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 ஆண்கள், 1 பெண் உள்பட 4 பேர் இறந்து கிடந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துடன் அலறினர். அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.

    இதனால் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. அவர்கள் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. காயம் அடைந்த 15-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. விபத்தில் பஸ் உருக்குலைந்ததாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் காயம் அடைந்த சிலரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    மேலும் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மலைபாதையில் மண் உறுதிதன்மை இழந்து காணப்படுகிறது. எனவே வளைவு பாதையில் பஸ்சை திருப்பியபோது உறுதிதன்மை இல்லாத மண் சறுக்கி பஸ் பள்ளத்தில் விழுந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனங்களை மெதுவாக இயக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. #OotyAccident
    நாட்டறம்பள்ளி அருகே அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 27 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாட்டறம்பள்ளி:

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கிருஷ்ணகிரிக்கு இன்று காலை அரசு பஸ் புறப்பட்டது. கிருஷ்ணகிரியை சேர்ந்த டிரைவர் செல்வம் (வயது 37) பஸ்சை ஓட்டிச் சென்றார்.

    வாணியம்பாடி தாண்டி நாட்டறம்பள்ளி அருகே அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தறிகெட்டு ஓடியது.

    சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பு கம்பியை உடைத்து 25 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்தது. அதிகாலை நேரம் என்பதால் பஸ்சில் பயணிகள் தூக்க கலக்கத்தில் இருந்தனர். அவர்கள் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததை பார்த்து அலறி கூச்சலிட்டனர். 27 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த நாட்டறம்பள்ளி போலீசார் பொதுமக்கள் உதவியுடன் பஸ்சின் ஈடுபாடுகளில் சிக்கிய பயணிகளை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    ×