search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Natrampalli"

    நாட்டறம்பள்ளி அருகே போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நாட்டறம்பள்ளி:

    நாட்டறம்பள்ளி அருகே போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக வேலூர் கலால் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தலிங்கம் தலைமையிலான போலீசார் இன்று காலை எரியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மினி வேனில் 3 பேர் வந்தனர். வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் போலி மதுபானங்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மனோகரன், (வயது 36). கோவிந்தராஜ், சரவணன் என தெரிய வந்தது

    மேலும் அவர்கள் போலி மதுபானங்கள் தயார் செய்து சுற்றுவட்டார பகுதியில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி வேன் மற்றும் 270 போலி மதுபானங்களை பறிமுதல் செய்தனர்.
    நாட்டறம்பள்ளி அருகே போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நாட்டறம்பள்ளி:

    நாட்டறம்பள்ளி அருகே போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்யபடுவதாக வேலூர் கலால் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தலிங்கம் தலைமையிலான போலீசார் இன்று காலை எரியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மினி வேனில் 3 பேர் வந்தனர். வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் போலி மதுபானங்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மனோகரன், (வயது 36). கோவிந்தராஜ், சரவணன் என தெரிய வந்தது

    மேலும் அவர்கள் போலி மதுபானங்கள் தயார் செய்து சுற்றுவட்டார பகுதியில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி வேன் மற்றும் 270 போலி மதுபானங்களை பறிமுதல் செய்தனர்.

    நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது கார் மோதி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாட்டறம்பள்ளி:

    திருப்பத்தூர் ஆரிப் நகரை சேர்ந்தவர் இக்பால் (வயது 68). நூல்வியாபாரி. இவர் இன்று காலை நாட்டறம்பள்ளிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    தண்ணீர்பந்தல் என்ற இடத்தில் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை இக்பால் கடக்க முயன்றார். அப்போது கடப்பாவில் இருந்து கேராளா நோக்கி சென்ற கார் பைக் மீது மோதியது. இதில் இக்பால் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் எனவே இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கூறி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதனால் அங்கு ½ மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கபட்டது.

    நாட்டறம்பள்ளியில் லாரி மீது சொகுசு பஸ் மோதியதில் டிரைவர், உதவியாளர் பரிதாபமாக இறந்தனர்.

    நாட்டறம்பள்ளி:

    சென்னையில் இருந்து பெங்களூருக்கு நேற்று இரவு சொகுசு பஸ் புறப்பட்டு வந்தது. டிரைவர் அஜித் (வயது 35) என்பவர் ஓட்டிவந்தார். பஸ் உதவியாளர் கொடைக்கானலை சேர்ந்த சரவணகுமார் (27) என்பவர் உள்பட 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் வந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பஸ் திடீரென மோதியது.

    இதில் பஸ்சின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. டிரைவர் அஜித், உதவியாளர் சரவணகுமார் ஆகிய 2 பேரும் பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    பயணிகள் மணிகண்டன், தமிழரசன் என்பவர்கள் படுகாயமடைந்தனர். இந்த விபத்தால் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது நட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரில் சேர்த்தனர்.

    பலியானவர்கள் உடல்களை கைப்பற்றி பிரேதபரி சோதனைக்கு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாட்டறம்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிளில் பள்ளிக்கு சென்ற 10-ம் வகுப்பு மாணவர் கார் மோதி இறந்தார்.

    நாட்டறம்பள்ளி:

    நாட்டறம்பள்ளி அருகே உள்ள முத்தனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தனசேகரன் மகன் அபிநாத் (வயது 15). நாட்டறம்பள்ளி அரசு மேல்நிலை பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    தினமும் சைக்கிளில் பள்ளிக்கு சென்று வந்தார். இன்று காலை வழக்கம்போல் சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். தேசிய நெடுஞ்சாலையில் தனியார் என்ஜினியரிங் கல்லூரி அருகே வந்தபோது பின்னால் வந்த கார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அபிநாத் சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தார். நாட்டறம்பள்ளி போலீசார் மாணவர் உடலை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குபதிவு செய்து காரை ஓட்டிவந்த ஈரோட்டை சேர்ந்த செல்வராஜ் (31) என்பவரை கைது செய்தனர்.

    கார் மோதி பள்ளி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    நாட்டறம்பள்ளி அருகே அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 27 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாட்டறம்பள்ளி:

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கிருஷ்ணகிரிக்கு இன்று காலை அரசு பஸ் புறப்பட்டது. கிருஷ்ணகிரியை சேர்ந்த டிரைவர் செல்வம் (வயது 37) பஸ்சை ஓட்டிச் சென்றார்.

    வாணியம்பாடி தாண்டி நாட்டறம்பள்ளி அருகே அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தறிகெட்டு ஓடியது.

    சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பு கம்பியை உடைத்து 25 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்தது. அதிகாலை நேரம் என்பதால் பஸ்சில் பயணிகள் தூக்க கலக்கத்தில் இருந்தனர். அவர்கள் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததை பார்த்து அலறி கூச்சலிட்டனர். 27 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த நாட்டறம்பள்ளி போலீசார் பொதுமக்கள் உதவியுடன் பஸ்சின் ஈடுபாடுகளில் சிக்கிய பயணிகளை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
    ×