என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நாட்டறம்பள்ளியில் லாரி மீது சென்னை சொகுசு பஸ் மோதி 2 பேர் பலி
நாட்டறம்பள்ளி:
சென்னையில் இருந்து பெங்களூருக்கு நேற்று இரவு சொகுசு பஸ் புறப்பட்டு வந்தது. டிரைவர் அஜித் (வயது 35) என்பவர் ஓட்டிவந்தார். பஸ் உதவியாளர் கொடைக்கானலை சேர்ந்த சரவணகுமார் (27) என்பவர் உள்பட 20க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் வந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பஸ் திடீரென மோதியது.
இதில் பஸ்சின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. டிரைவர் அஜித், உதவியாளர் சரவணகுமார் ஆகிய 2 பேரும் பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
பயணிகள் மணிகண்டன், தமிழரசன் என்பவர்கள் படுகாயமடைந்தனர். இந்த விபத்தால் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது நட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரில் சேர்த்தனர்.
பலியானவர்கள் உடல்களை கைப்பற்றி பிரேதபரி சோதனைக்கு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்