search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fake alcohol"

    • புகாரளிக்க புதிய செல்போன் எண் அறிவிப்பு
    • சட்டவிரோத மதுபான விற்பனை குறித்து புகாரளிக்க வேண்டுகோள்

    கோவை,

    கோவை மாநகர மதுவிலக்கு போலீசார் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாநகரில் கள்ளச்சாராயம், வெளிமாநில மதுபானம், போலி மது ஆகியவை விற்பனை செய்வது தெரிய வந்தால் பொதுமக்கள் உடனடியாக மதுவிலக்கு பிரிவு போலீசாரின் செல்போன் எண்ணுக்கு (9514220020) தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    இதன்அடிப்படையில் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க இயலும்.

    எனவே கோவை மாநகரில் சட்டவிரோத மதுபான விற்பனை குறித்து பொதுமக்கள் உடனடியாக மேற்கண்ட செல்போன் எண்ணில் தொடர்புகொண்டு புகாரளிக்க முன்வரவேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    நாட்டறம்பள்ளி அருகே போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    நாட்டறம்பள்ளி:

    நாட்டறம்பள்ளி அருகே போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக வேலூர் கலால் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தலிங்கம் தலைமையிலான போலீசார் இன்று காலை எரியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த மினி வேனில் 3 பேர் வந்தனர். வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் போலி மதுபானங்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த மனோகரன், (வயது 36). கோவிந்தராஜ், சரவணன் என தெரிய வந்தது

    மேலும் அவர்கள் போலி மதுபானங்கள் தயார் செய்து சுற்றுவட்டார பகுதியில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி வேன் மற்றும் 270 போலி மதுபானங்களை பறிமுதல் செய்தனர்.
    நீலகிரி அருகே முன்னாள் அதிமுக கவுன்சிலர் வீட்டில் போலி மது தயாரித்த 2 பேரை கைது செய்த போலீசார் 1500 லிட்டர் மதுவை மீட்டு கொட்டி அழித்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் நெலாக்கோட்டை அருகே உள்ள பிதர்காடு உள்ளது. இங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் அச்சு (வயது 53). இவருக்கு சொந்தமான வீட்டை கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் பெருந்தல்மன்னா பகுதியை சேர்ந்த முகமது பாவா, சலீம், சச்சிதானந்தன் ஆகியோருக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.

    இங்கு போலி மதுபானம் தயாரித்து விற்பனைக்கு அனுப்புவதாக அம்பலமூலா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பந்தலூர் சப்-இன்ஸ்பெக்டர் இளவேந்தன், ஏட்டு தினேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். வீட்டில் யாரும் இல்லாததால் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

    அங்கு சோதனை செய்தபோது 3 பேரல்களில் 1500 லிட்டர் போலி மதுபானம் இருந்தது. இது தவிர மது தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், காலி டாஸ்மாக் மதுபாட்டில்கள் ஆகியவைகள் இருந்தன. அவைகளை போலீசார் பறிமுதல் செய்து மதுவிலக்கு அமலாக்க போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவற்றை மீட்டு கொட்டி அழித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி மது தயாரித்த முகமது பாவா (50) ஓட்டல் உரிமையாளர் செல்வராஜ் (50) ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சச்சிதானந்தம், சலீம் மற்றும் செல்வராஜின் கார் டிரைவர் ரிச்சர்ட் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுபானம் தயாரித்து அவற்றை எங்கெல்லாம் அனுப்பினர்? டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்கள் உடந்தையாக இருந்தனார? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். # tamilnews
    ×