search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ooty hills"

    கூடலூர்- ஊட்டி மலைப்பாதையில் தடுப்பு சுவர் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    கூடலூர்:

    கூடலூர் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் சேதம் அடைந்தது. இதேபோல் சில இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் சென்றது. இக்காலக்கட்டங்களில் கேரளாவிலும் கனமழை பெய்தது. இதனால் மழையின் தீவிரம் கூடலூர் பகுதியிலும் அதிகமாக இருந்தது.

    இதில் கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் மலைப்பாதையில் பல இடங்களில் பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன. இதனால் 15 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலையிலும் விரிசல்கள் ஏற்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் பல கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு ராட்சத பாறைகள் வெடிகள் வைத்து தகர்க்கப்பட்டு, ஒருபக்கமாக வாகனங்கள் செல்லும் வகையில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.

    தொடர்ந்து மழைக்காலமாக இருந்ததால் பாறைகள் விழுந்த பகுதியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இருப்பினும் மேலும் சாலை சேதம் அடைந்தது. இதனால் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் இருந்தது. எனவே பாறைகள் விழுந்த பகுதியை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

    இதையொட்டி தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு ராட்சத தடுப்பு சுவர் கட்டும் பணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இனி வரும் காலத்தில் வாகன போக்குவரத்து துண்டிக்காத வகையில் தடுப்பு சுவர் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணி இன்னும் ஒருசில வாரங்களில் நிறைவு பெறும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதனிடையே மலைப்பாதையில் கட்டுமான பணி நடைபெறுவதால் இருபுறமும் வாகன போக்குவரத்து அடிக்கடி பாதிக்கப்படுகிறது.
    ஊட்டி அருகே 500 அடி பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். #OotyAccident
    ஊட்டி:

    ஊட்டியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு அரசு பஸ் இன்று காலை குன்னூருக்கு புறப்பட்டது. பஸ் மதியம் 12 மணியளவில் ஊட்டி அருகே உள்ள மந்தாடா என்ற பகுதியில் வந்தது.



    அப்போது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த 500 அடி பள்ளத்தில் பஸ் உருண்டு கவிழ்ந்தது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் காயம் அடைந்து அலறிதுடித்தனர்.

    இதுபற்றி தெரியவந்ததும் நீலகிரி மாவட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் கிடுகிடு பள்ளத்தில் கீழே இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 ஆண்கள், 1 பெண் உள்பட 4 பேர் இறந்து கிடந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துடன் அலறினர். அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.

    இதனால் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. அவர்கள் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. காயம் அடைந்த 15-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. விபத்தில் பஸ் உருக்குலைந்ததாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் காயம் அடைந்த சிலரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    மேலும் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மலைபாதையில் மண் உறுதிதன்மை இழந்து காணப்படுகிறது. எனவே வளைவு பாதையில் பஸ்சை திருப்பியபோது உறுதிதன்மை இல்லாத மண் சறுக்கி பஸ் பள்ளத்தில் விழுந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனங்களை மெதுவாக இயக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. #OotyAccident
    ×