search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "goondas act"

    • கடந்த டிசம்பர் 30-ந் தேதி தோட்டத்தில் இருந்த காவலாளிகளை மர்ம நபர்கள் அரிவாளால் தாக்கி விட்டு அங்கிருந்த 37 ஆடுகளை திருடி சென்றனர்.
    • இதனையடுத்து முத்து பாண்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

    செய்துங்கநல்லூர்:

    செய்துங்கநல்லூர் தென்னஞ் சேலை தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு தெற்கு காரசேரி பகுதியில் தோட்டம் உள்ளது. இங்கு அவர் ஆடுகள் வளர்த்து வருகிறார்.

    கடந்த டிசம்பர் 30-ந் தேதி தோட்டத்தில் இருந்த காவலாளிகளை மர்ம நபர்கள் அரிவாளால் தாக்கி விட்டு அங்கிருந்த 37 ஆடு களை திருடி சென்றனர்.

    இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் நாங்குனேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியை சேர்ந்த முத்து என்ற முத்துபாண்டி (வயது28) மற்றும் அவரது கூட்டாளிகள் சிலரை சேரகுளம் சப்-இன்ஸ்பெக்டர் அல்லி அரசன் தலைமையில் கைது செய்தனர்.

    இந்நிலையில் இந்த ஆடு திருட்டு வழக்கில் முக்கிய குற்றவாளியான முத்து என்ற முத்துபாண்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கலெக்டர் செந்தில்ராஜிக்கு பரிந்துரை செய்தார். இதனையடுத்து முத்து பாண்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து முத்து என்ற முத்துபாண்டியை சிறையில் அடைத்தார்.

    இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுத்த சப்-இன்க்ஸ்பெக்டர் அல்லி அரசன் மற்றும் போலீசாருக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    • குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.
    • குற்றம் செய்வதற்கு சூழ்நிலையும், சந்தர்ப்பமும் தான் காரணம்.

    சென்னை

    சென்னை-மதுரை 'வைகை' எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணித்த வடமாநில இளைஞர்களை தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் சரமாரியாக தாக்கினார். ஓடும் ரெயிலில் நடந்த இந்த தாக்குதலை சக பயணி ஒருவர் செல்போனில் 'வீடியோ' எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த 'வீடியோ' வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    வடமாநில இளைஞர்களை தாக்கிய நபரை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று ரெயில்வே போலீஸ் டி.ஜி.பி. வனிதா உத்தரவிட்டார். அதன்பேரில் ரெயில்வே டி.ஐ.ஜி. விஜயகுமார் ஆலோசனையின் பேரில் சென்னை சென்டிரல் ரெயில்வே துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    மேலும் ரெயில்வே 'சைபர் கிரைம்' போலீசாரும் தாக்குதல் வீடியோ பதிவை ஆய்வு செய்தனர். இதில் வடமாநில இளைஞர்களை தாக்கியது விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த மகிமைதாஸ் (வயது 38) என்பது தெரியவந்தது. அவரை ரெயில்வே தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே கூடுதல் டி.ஜி.பி. வனிதா நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ரெயிலில் கூட்ட நெரிசலில் வடமாநில பயணி இடித்து விட்டதால் உணர்ச்சிவசப்பட்டு அவரை அடித்து விட்டதாக மகிமைதாஸ் தெரிவித்தார். ஆனால் இந்த தாக்குதல் 'வீடியோ'வில், 'நீங்கள் எதற்கு இங்கு வருகிறீர்கள், நாங்கள் தான் இருக்கிறோமே, இனிமேல் எல்லா வேலையையும் நாங்களே செய்து கொள்கிறோம். நீங்கள் உங்கள் ஊருக்கே சென்று விடுங்கள் என்று வசைபாடுவது பதிவாகி உள்ளது. எனவே இந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு மொழி ரீதியாக வசைபாடுதல், ஆபாசமாக பேசுதல், சிறுகாயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் மகிமைதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.

    கடந்த 16-ந்தேதி தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரெயில்வே கேட்டில் பணியில் இருந்த பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூரை சேர்ந்த அனீஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இவர் மேல் கொல்லம் மாவட்டம் குன்னாகோட்டை போலீஸ் நிலையத்தில் கற்பழிப்பு வழக்கு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள், குழந்தைகளிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டாலோ அல்லது ரெயில்வே பெண் ஊழியர்களிடம் தவறாக நடக்க முயன்றாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும்.

    தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக 'ஆபரேஷன் 3' வேட்டை ரெயில்வே போலீசாரால் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 3 நாளில் மட்டும் 229 கிலோ கஞ்சா பிடிபட்டுள்ளது. 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வடமாநிலத்தவர்கள் தமிழகத்துக்குள் வருவதால் வேலைவாய்ப்புகள் குறைவதாக சொல்லப்படுவது ஏற்புடையது அல்ல. அதேபோன்று ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயிலில் பெண்கள், பெண் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்களில் வட மாநிலத்தவர்கள்தான் ஈடுபடுகிறார்கள் என்பதும் ஏற்புடையது அல்ல. குற்றம் செய்வதற்கு சூழ்நிலையும், சந்தர்ப்பமும் தான் காரணம். இந்த மொழி பேசுபவர்கள், இந்த ஊரை சேர்ந்தவர்கள் தான் குற்றத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதை ஏற்றுகொள்ள முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ரோகித் குமார் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • பிரபாகரன் மற்றும் மாரிமுத்து ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் எஸ்.பி. பாலாஜி சரவணனுக்கு கோரிக்கைவிடுத்தார்.
    • அவரது உத்தரவின் பேரில் 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கிருபை நகரை சேர்ந்த பாண்டி (வயது60) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி செல்சினி காலனியை சேர்ந்த பிரபாகரன் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    கொலை வழக்கு

    புதுக்கோட்டை அய்யனார் காலனியை சேர்ந்த மகாராஜன் (45) என்பவரை கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி ராஜீவ் நகரை சேர்ந்த மாரிமுத்து (46) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

    பிரபாகரன் மற்றும் மாரிமுத்து ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் எஸ்.பி. பாலாஜி சரவணனுக்கு கோரிக்கைவிடுத்தார்.

    குண்டர் தடுப்பு சட்டம்

    அதன்பேரில் நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு, எஸ்.பி. பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்ற கலெக்டர் செந்தில்ராஜ் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

    • தென்காசி மாவட்டத்தில் குற்றவழக்கில் சம்பந்தப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை செய்தார்.
    • குருவையா உள்பட 5 பேரை சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் பல்வேறு குற்றவழக்கில் சம்பந்தப்பட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் பரிந்துரை செய்தார்.

    அதன் பேரில் புளியங்குடி போலீஸ் நிலைய கொலை வழக்கின் குற்றவாளிகளான குருவையா (வயது 40), சின்ன மாரியப்பன் (36), செங்கோட்டை போலீஸ் நிலைய அடிதடி, கொலைமுயற்சி, கொள்ளை போன்ற வழக்கின் குற்றவாளியான சுபாஷ்கண்ணன் (24), சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போக்சோ வழக்கின் குற்றவாளியான ரகு (37) மற்றும் ஆலங்குளம் போலீஸ் நிலைய கஞ்சா வழக்கின் குற்றவாளியான ராசு என்கிற செல்வராஜ் (34) ஆகிய 5 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீசார் பாளை சிறையில் அடைத்தனர்.

    • அருண்பாண்டியின் மோட்டார் சைக்கிளையும் திருடி சென்றதாகவும் தட்டார்மடம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
    • சரத்குமார் குண்டர் சட்டத்தில் பாளை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    சாத்தான்குளம்:

    உடன்குடி அருகே உள்ள தேரியூர் பகுதியை சேர்ந்த வர் ஜெயபாண்டி மகன் சரத்குமார் (வயது 28).

    கொல்ல முயற்சி

    இவர் முன்விரோதம் காரணமாக தட்டார்மடம் அருகே உள்ள தாமரை மொழியை சேர்ந்த அருண் பாண்டி (22), சீனி (28) ஆகியோரை அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயன்றதாகவும், அருண்பாண்டியின் மோட்டார் சைக்கிளையும் திருடி சென்றதாகவும் தட்டார்மடம் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் சரத்கு மாரை போலீசார் கைது செய்தனர். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய இன்ஸ்பெக்டர் பவுலோஸ் நடவடிக்கை மேற்கொண்டார்.

    குண்டர் சட்டம் பாய்ந்தது

    இதுகுறித்து அவர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டுக்கு பரிந்துரைத்தார். அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாவட்ட கலெக்ட ருக்கு பரிந்துரைத்தார்.

    அதை ஏற்றுக்கொண்ட கலெக்டர் செந்தில்ராஜ், கைதான சரத்குமாரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து சரத்குமார் குண்டர் சட்டத்தில் பாளை ெஜயிலில் அடைக்கப் பட்டார்.

    • நெல்லை டவுன் குற்றாலம் ரோட்டில் நாட்டுவெடிகுண்டு வீசிய வழக்கில் டவுன் புட்டாரத்தி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த இசக்கி மாரி (வயது30), கோவில்பட்டி ஆவுடையம்மாள்புரம் தெற்கு தெருவை சேர்ந்த அஜித்குமார் (27) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டது.
    • இசக்கிமாரி, அஜித்குமார் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

    நெல்லை:

    நெல்லை டவுன் குற்றாலம் ரோட்டில் நாட்டுவெடிகுண்டு வீசிய வழக்கில் டவுன் புட்டாரத்தி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த இசக்கி மாரி (வயது30), கோவில்பட்டி ஆவுடையம்மாள்புரம் தெற்கு தெருவை சேர்ந்த அஜித்குமார் (27) ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டது.

    இந்நிலையில் பொது மக்களிடையே பீதியையும், பாதுகாப்பற உணர்வையும் ஏற்படுத்தி பொது ஒழுங்கு பரா மரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டதாக இசக்கிமாரி, அஜித்குமார் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர மேற்கு மண்டல துணை கமிஷனர் சரவணக்குமார், உதவி கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் சுப்பு லெட்சுமி ஆகியோர் பரிந்துரை செய்தனர்.

    இதனையேற்று இசக்கிமாரி, அஜித்குமார் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் குண்டர் சட்டத்தில் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
    • பாதிக்கப்பட்டவரின் தாய் புகாரளித்த பிறகு தான் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் சாமுவேல்(வயது57). இவர் பள்ளியில் படிக்கும் 5-ம் வகுப்பு மற்றும் 4-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

    இதை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி டெய்சி தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் ஆகியோர் விசாரித்தனர்.

    அப்போது அரசு கூடுதல் வக்கீல் திருவடிகுமார் ஆஜராகி வழக்கின் விசாரணை துரிதமாக நடந்து வருகிறது. மொத்தமுள்ள 30 சாட்சிகளில் 19 சாட்சியங்கள் மீதான விசாரணை முடிந்துள்ளது என்றார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    தலைமை ஆசிரியர் 7.5.2022-ல் குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகி உள்ளார். ஆனால் 5 நாட்களில் புத்தகத்தை சிறையில் வழங்கியுள்ளனர். அதை பெற்றுக் கொண்டதற்காக சம்பந்தப்பட்ட வரும் கையெழுத்திட்டுள்ளார். இந்த வழக்கை பொறுத்தவரை 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பாதிக்கப்பட்டவரின் தாய் புகாரளித்த பிறகு தான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எனவே குண்டர் சட்ட நடவடிக்கையில் எந்த சட்டவிரோதமும் இல்லை. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    • கைதான வாலிபர் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
    • நெல்லை மாநகர கமிஷனர் அவிநாஷ் குமார் சுரேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    நெல்லை:

    நெல்லை தச்சநல்லூர் தேனீர் குளம் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சுரேஷ். (வயது 27).

    குண்டர் சட்டம்

    இவர் மீது மீது கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்து தல் போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இவர் தொடர்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இதனையடுத்து இவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, நெல்லை மாநகர மேற்கு துணை கமிஷனர் சரவணகுமார், சந்திப்பு சரக உதவி கமிஷனர் அண்ணாதுரை மற்றும் தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் ஆகியோர் பரிந்துரை செய்தனர்.

    சிறையில் அடைப்பு

    அதன் பேரில், நெல்லை மாநகர கமிஷனர் அவிநாஷ் குமார் சுரேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து சுரேசை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவரை இன்று பாளை சிறையில் அடைத்தனர்.

    • தேனி அருகே தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டுவந்த 2 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி பரிந்துரைத்தார்.
    • அதன்பேரில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    தேனி:

    தேனி அருகே சின்னமனூர் சொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் அண்ணாத்துரை(37).

    சீலையம்பட்டியை சேர்ந்தவர் அப்துல்லா(62). இவர்கள் மீது தொடர்ந்து குற்றவழக்கு பதிவானதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ்டோங்கரே கலெக்டருக்கு பரிந்துரைத்தார்.

    அதன்பேரில் தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் 2 பேரையும் குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    பெரம்பலூர் பாலியல் விவகாரத்தில் கைதான நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வக்கீலை விடுவிக்க கோரி நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பல இளம்பெண்களை ஆளும் கட்சி பிரமுகர் உள்ளிட்ட சிலர் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் வக்கீல் அருள், போலீசாரிடம் புகார் அளித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் வக்கீல் அருள், பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் தொடர்பாக போலி ஆடியோவை வாட்ஸ்-அப்பில் வெளியிட்டதாக கூறி பெரம்பலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரது உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நிகழ்வுகள் நடந்த சில நாட்களிலேயே குண்டர் சட்டத்தின் கீழ் வக்கீல் அருளை கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள அருளுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து, பெரம்பலூர் அட்வகேட்ஸ் அசோசியேசன் என்ற பெயரில் இயங்கும் அட்வகேட்ஸ் சங்கத்தினரின் அவசர கூட்டம் பெரம்பலூர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் முகமது இலியாஸ் தலைமை தாங்கினார்.

    இதில் வக்கீல் அருள் போலீசாரிடம் கொடுத்த புகார் மனுவின் மீதான அடிப்படையில், நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்வதற்கு பதிலாக புகார் கொடுத்த வக்கீலையே குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்த போலீசாரை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அருள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீசாரை கண்டித்தும், சிறையில் உள்ள அருளை நிபந்தனையின்றி உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே நாளை (புதன்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்யப்பட்டது.
    பெரம்பலூர் பாலியல் விவகாரத்தில் புகார் கொடுத்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வக்கீல் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் இளம்பெண்கள் பலரிடம் அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் சிலர், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், வக்கீலுமான அருள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார். இது தொடர்பாக பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர்.

    இந்நிலையில் பெரம்பலூர் வக்கீல்கள் நல சங்கத்தை சேர்ந்த வக்கீல்கள் கொடுத்த புகாரின்பேரில் கடந்த 30-ந்தேதி பெரம்பலூர் போலீசார் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வக்கீல் அருளை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் வக்கீல் அருளுக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது.

    ஆனால் பாதிக்கப்பட்ட பெண் பேசியதாக, போலியான செல்போன் ஆடியோ வெளியிட்டதாக பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 2-வதாக பதிவான வழக்கு தொடர்பாக, அவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக போலி ஆடியோ தொடர்பான வழக்கில் உடந்தையாக இருந்ததாக வக்கீல் அருளின் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்த கலையரசியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    இந்நிலையில் 2-வது வழக்கு தொடர்பாக வக்கீல் அருளுக்கு ஜாமீன் கேட்டு, அவரது தரப்பினர் பெரம்பலூர் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. மனுவை விசாரித்த கூடுதல் மகிளா கோர்ட்டு நீதிபதி ரவிச்சந்திரன், வக்கீல் அருளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஜாமீன் கிடைத்ததால் வக்கீல் அருள் திருச்சி மத்திய சிறையில் இருந்து வெளியே வருவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார்.

    இதற்கிடையே பெண்களுக்கு பாலியல் கொடுமை நடந்ததற்கு ஆதாரமாக வக்கீல் அருள் தனது அலுவலகத்தில் பணிபுரிந்த கலையரசியை செல்போனில் பேச வைத்து போலி செல்போன் ஆடியோவை வெளியிட்டதால், பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மனதில் பரபரப்பு, பயம் மற்றும் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படுத்தியதாக வக்கீல் அருளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    அதனை ஏற்ற கலெக்டர் சாந்தா, வக்கீல் அருளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து வக்கீல் அருளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

    வேதாரண்யம் அருகே பல வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த கீழ ஆறுமுககட்டளையை சேர்ந்த கிருஷ்ணன் மகன் செந்தில்குமார் (வயது 33). இவர் மீது வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் பல வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், செந்தில்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமாரிடம் பரிந்துரை செய்தார். அதனை பரிசீலனை செய்த கலெக்டர் சுரேஷ்குமார், செந்தில்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் செந்தில்குமார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×