என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியில் கொலை வழக்கில் தொடர்புடைய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
- பிரபாகரன் மற்றும் மாரிமுத்து ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் எஸ்.பி. பாலாஜி சரவணனுக்கு கோரிக்கைவிடுத்தார்.
- அவரது உத்தரவின் பேரில் 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கிருபை நகரை சேர்ந்த பாண்டி (வயது60) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி செல்சினி காலனியை சேர்ந்த பிரபாகரன் (26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கொலை வழக்கு
புதுக்கோட்டை அய்யனார் காலனியை சேர்ந்த மகாராஜன் (45) என்பவரை கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி ராஜீவ் நகரை சேர்ந்த மாரிமுத்து (46) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
பிரபாகரன் மற்றும் மாரிமுத்து ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி தென்பாகம் இன்ஸ்பெக்டர் ராஜாராம் எஸ்.பி. பாலாஜி சரவணனுக்கு கோரிக்கைவிடுத்தார்.
குண்டர் தடுப்பு சட்டம்
அதன்பேரில் நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு, எஸ்.பி. பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்ற கலெக்டர் செந்தில்ராஜ் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்