என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தச்சநல்லூரில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
- கைதான வாலிபர் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
- நெல்லை மாநகர கமிஷனர் அவிநாஷ் குமார் சுரேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
நெல்லை:
நெல்லை தச்சநல்லூர் தேனீர் குளம் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் சுரேஷ். (வயது 27).
குண்டர் சட்டம்
இவர் மீது மீது கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்து தல் போன்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இவர் தொடர்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனையடுத்து இவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, நெல்லை மாநகர மேற்கு துணை கமிஷனர் சரவணகுமார், சந்திப்பு சரக உதவி கமிஷனர் அண்ணாதுரை மற்றும் தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் ஆகியோர் பரிந்துரை செய்தனர்.
சிறையில் அடைப்பு
அதன் பேரில், நெல்லை மாநகர கமிஷனர் அவிநாஷ் குமார் சுரேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து சுரேசை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவரை இன்று பாளை சிறையில் அடைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்