search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girl murder"

    • குடும்பத்தினர் கோட்வாலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
    • சிறுமியிடம் 20 ரூபாய் கொடுத்து பான் மசாலா வாங்கி வரச் சொன்னேன்.

    உத்தரபிரதேச மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி கடந்த 26-ந்தேதி காலையில் திடீரென்று மாயமானார். இதுதொடர்பாக நேற்று மாலை அவளது குடும்பத்தினர் கோட்வாலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா உதவியுடன் விசாரணை நடத்தியபோது சிறுமி அவளது பக்கத்து வீட்டுக்கு சென்றதை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து பக்கத்தை வீட்டைச் சேர்ந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் சிறுமியை கொலை செய்ததாக கூறினார். சிறுமியிடம் 20 ரூபாய் கொடுத்து பான் மசாலா வாங்கி வரச் சொன்னேன். சிறுமி சிப்ஸ் வாங்கி வந்து தின்றாள். இதனால் ஆத்திரத்தில் சிறுமியை அடித்து கொலை செய்தேன் என்றான். இதையடுத்து அவனை போலீசார் கைது செய்தனர். அவனது சகோதரர்கள் இருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • வெள்ளிச்சந்தை போலீசார் எவரெஸ்ட் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302, 449 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    நாகர்கோவில்:

    வெள்ளிச்சந்தை அருகே கீழமுட்டம் அலங்கார மாதா தெருவை சேர்ந்தவர் எவரெஸ்ட் (வயது 23).

    இவர் அழிக்கால் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காதலித்து வந்தார். காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் சிறுமியை எச்சரித்தனர். இதனால் அவர் எவரெஸ்ட் உடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2013 -ம் ஆண்டு மே மாதம் 25-ந்தேதி சிறுமியின் வீட்டுக்கு சென்ற எவரெஸ்ட் அவரது உடலில் டீசலை ஊற்றி தீ வைத்தார். பின்னர் அங்கிருந்து எவரெஸ்ட் தப்பி ஓடிவிட்டார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அதே மாதம் 29-ந் தேதி சிறுமி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் எவரெஸ்ட் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302, 449 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட எவரெஸ்ட் ஜாமினில் விடுதலை ஆனார்.

    இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய் இன்று தீர்ப்பு கூறினார். இதையடுத்து எவரெஸ்ட் கோர்ட்டில் ஆஜரானார்.

    தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட எவரெஸ்ட்டுக்கு கொலை வழக்கிற்காக ஆயுள் தண்டனையும், மரணம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக 10 வருடம் ஜெயில் தண்டனையும் மற்றும்ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். எவரெஸ்ட்டிற்கு தண்டனை அறிவிக்கப்பட்டதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை ஜெயிலுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் லிவிங்ஸ்டன் ஆஜரானார்.

    • அங்கன்வாடியில் விளையாடிக் கொண்டு இருந்த சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற போது அவர் சத்தம் போட்டுள்ளார்.
    • பயந்து போன விஜயகுமார் காகிதத்தில் தீ வைத்து சிறுமியின் ஆடையில் பற்ற வைத்தார்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூரைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 19). இவர் அதே பகுதியில் விளையாடிக் கொண்டு இருந்த 3-ம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    சம்பவத்தன்று அங்கன்வாடியில் விளையாடிக் கொண்டு இருந்த சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற போது அவர் சத்தம் போட்டுள்ளார். இதனால் பயந்து போன விஜயகுமார் காகிதத்தில் தீ வைத்து அவரது ஆடையில் பற்ற வைத்தார்.

    இதில் சிறுமியின் உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமி பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இது குறித்து சின்னமனூர் போலீசார் விஜயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதனிடையே சிகிச்சையில் இருந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டது. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சிறுமியின் இறுதி சடங்கிற்காக அவரது பெற்றோரிடம் தேனி மாவட்ட சிறுவர் பாதுகாப்பு மையம் சார்பில் ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.

    வடமதுரை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த வழக்கில் பிளஸ்2 மாணவனை போலீசார் கைது செய்தனர். #DindigulGirlMolested
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள ஜி.குரும்பபட்டியில் 7ம் வகுப்பு மாணவி, கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தாள். சிறுமி வாயில் மின் வயரை கடித்த நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் கீறல்களும், ரத்த காயமும் இருந்தது. இதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் அவரது வீட்டுக்கு அருகே உள்ள 3 சிறுவர்களே இதில் ஈடுபட்டுள்ளனர் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், சிறுமியைக் கொன்றது அதே பகுதியைச் சேர்ந்த கிருபானந்தன் என தெரியவந்தது. பிளஸ் 2 படித்துள்ள அவன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், உயிருக்குப் போராடிய சிறுமியை மின்சாரம் பாய்ச்சி கொன்றதாக தெரியவந்துள்ளது. அவனை போலீசார் கைது செய்துள்ளனர். #DindigulGirlMolested
    வேலூர் அருகே பாலியல் பலாத்கார முயற்சியில் சிறுமியை கொலை செய்த டிரைவருக்கு ஆயுள்தண்டனை விதித்து வேலூர் கூடுதல் விரைவு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
    வேலூர்:

    குடியாத்தம் அருகே உள்ள மொரசப்பள்ளி ராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா (வயது 38). இவர், வேலூரில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். 2009-ம் ஆண்டு வேலூரை அடுத்த நெல்வாய் கிராமத்தில் ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டுமானப் பணி நடந்தது. இதற்காக சிவா அடிக்கடி அப்பகுதிக்குச் சென்று வந்தார்.

    2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ந் தேதி சிவா கட்டுமானப் பணி நடக்கும் பகுதிக்குச் சென்றார். அப்போது அப்பகுதியில் உள்ள விவசாய நிலம் வழியாக 14 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி நடந்து சென்று கொண்டிருந்தார். சிறுமியை பார்த்த சிவா பின்தொடர்ந்து சென்று திடீரென மடக்கி பிடித்து, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அதிர்ச்சி அடைந்த சிறுமி அவரிடம் இருந்து தப்பி செல்ல முயன்றார். காப்பாற்றுங்கள்... எனச் கூச்சல் போட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சிவா, சிறுமியின் வாயை பொத்தி, அப்பகுதியில் கிடந்த கல்லில் தலையை மோதினார். பலத்த அடியால் மயக்கமடைந்த சிறுமியின் கழுத்தைப் பிளேடால் அறுத்துக் கொலை செய்து விட்டு, உடைகளை களைந்து நிர்வாணமாக்கி அங்குள்ள விவசாயக் கிணற்றில் உடலை வீசினார். களைந்த சிறுமியின் உடைகளை அங்கேயே தீ வைத்து எரித்து விட்டு தப்பி சென்றார்.

    இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமியை கொலை செய்தது சிவா என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு விசாரணை வேலூர் கூடுதல் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி குணசேகரன் விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

    பாலியல் பலாத்கார முயற்சியில் சிறுமியை கொலை செய்த குற்றத்துக்காக சிவாவுக்கு ஆயுள்தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், சிறுமியின் உடைகளை களைந்து தீ வைத்து எரித்து, தடயங்களை அழிக்க முயற்சி செய்ததற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

    தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், அபராதத்தொகையைச் செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறைதண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். சிவா, பலத்த காவலுடன் அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
    திண்டுக்கல் அருகே பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள மோர்பட்டி ஊராட்சி ஜி.குரும்பபட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது 12 வயது மகள் 7-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் நேற்று சிறுமி வீட்டில் விளையாடிக் கொண்டு இருந்தார். அவரது தாய் 100 நாள் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்தார்.

    அப்போது சிறுமி வாயில் மின் வயரை கடித்த நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் கீறல்களும், ரத்த காயமும் இருந்தது.

    இது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சிறுமியின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதனிடையே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் அவரது வீட்டுக்கு அருகே உள்ள 3 சிறுவர்களே இதில் ஈடுபட்டுள்ளனர் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

    அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசு ஆஸ்பத்திரி முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    சம்பவம் குறித்து அறிந்ததும் நகர் வடக்கு போலீசார் அங்கு வந்து உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரேத பரிசோதனை முடிவு வெளிவந்த பிறகு சிறுமி கொலை செய்யப்பட்டாரா? என்றும் அதில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனால் 1 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த மறியல் முடிவுக்கு வந்தது.

    கல்லூரி மாணவியை கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று மாணவியின் அண்ணன் கூறியுள்ளார். #PollachiIssue #StudentMudercase #SpecialForces

    கோவை:

    கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி பிரகதியின் சொந்த அண்ணன் அரவிந்த்குமார் கூறியதாவது:-

    எனது தந்தை விவசாயி. நானும் விவசாயி. எனது தங்கை நன்றாக படிப்பார். அதனால் கஷ்டப்பட்டு படிக்க வைத்தோம்.

    கடந்த வெள்ளிக்கிழமை மதியம் எனது தங்கை 1.45 மணிக்கு கல்லூரியை விட்டு வெளியே வந்துள்ளார். 2.30 மணிக்கு பிரகதி எங்கள் அம்மாவை போனில் தொடர்பு கொண்டு ஊருக்கு வர பஸ் ஏற நிற்கிறேன் என்று கூறியுள்ளார்.

    3.30 மணிக்கு பிரகதிக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை நாட்டுதுரை தங்கைக்கு போன் செய்துள்ளார். அப்போது பல்லடம் வந்து கொண்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.

    அதன்பின்னர் பிரகதியை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதிர்ச்சியடைந்த நாங்கள் பல்லடம் போலீசில் புகார் செய்ய சென்றோம். பல்லடம் போலீசார் நீங்கள் கோவை போலீசில் தான் புகார் செய்ய வேண்டும் என்று திருப்பி அனுப்பி விட்டனர்.

    உடனே கோவைக்கு புறப்பட்டோம். கோவை காட்டூர் போலீசில் புகார் செய்தோம். இந்நிலையில் எனது தங்கை மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம். கோவை, பொள்ளாச்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரமாக மாறி வருவது அதிக கவலை அளிக்கிறது.

    கொலையில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார். #PollachiIssue #StudentMudercase #SpecialForces

    பெருந்துறை அருகே கணவரின் கள்ளக்காதலி மகளை பெண் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள கருமாண்டி செல்லிபாளையம், அங்கப்பா வீதி பகுதியில் வசித்துவரும் சண்முகநாதன், கனகா தம்பதியினரின் இரண்டாவது மகள் கனிஷ்கா ( வயது 7) நேற்று முன்தினம் இவரது வீட்டின் அருகில் உள்ள ஒரு மரத்தடியில் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் சிறுமி கனிஷ்கா இறந்து கிடந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் உடலை கைப்பற்றிய பெருந்துறை போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக பெருந்துறை இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் கோவையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் சிறுமி கனிஷ்கா குரல் வளை நசுக்கி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    இதனடிப்படையில் சிறுமியின் வீட்டின் அருகில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு மூதாட்டி சிறுமியின் பக்கத்து வீட்டில் குடியிருந்து வரும் வனிதா என்பவர் அந்த குழந்தையை தோளில் போட்டு கொண்டு சென்றதை பார்த்ததாக கூறினார்.

    இதனால் பக்கத்து வீட்டு வனிதாவிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்தான் கனிஷ்காவை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    சிறுமியை கொன்ற வனிதா

    குன்னூர், தூளூர் மட்டம் பகுதியை சேர்ந்தவர் வனிதா (33). இவருக்கும் சேலம் மாவட்டம் குறிச்சி பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன்(35) என்பவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.

    இவர்களுக்கு எட்டு வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் கருமாண்டி செல்லிபாளையம் பகுதிக்கு குடிவந்துள்ளனர்.

    பக்கத்து வீட்டில் வசித்து வந்த சண்முகநாகன், கனகா குடும்பத்தினருடன் இவர்கள் நட்பாக இருந்துள்ளனர்.

    இந்த நிலையில் வனிதாவின் கணவரான கமலக்கண்ணனுக்கும் கனகாவிற்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கனகாவின் இளைய மகள் கனிஷ்காவை தன் மகள் போல் பாவித்து அந்த சிறுமிக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்துள்ளார்.

    இதனால் கமலக்கண்ணனுக்கும் வனிதாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த கனிஷ்கா உயிருடன் இருந்தால் தனக்கும் தனது மகனுக்கும் பிரச்சனை ஏற்படக்கூடும் என கருதிய வனிதா கனிஷ்காவை கொலை செய்ய முடிவு செய்தார்.

    இதனால் நேற்று முன் தினம் வீட்டின் அருகில் மற்ற குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த கனிஷ்காவை தின்பண்டங்கள் தருவதாக கூறி கடத்தி சென்று அங்கு அந்த சிறுமியின் வாயை பொத்தி கழுத்தின் குரல்வளையை நெரித்து கொலை செய்துள்ளார்.

    பின்னர் சிறுமியின் உடலை தனது தோளில் போட்டு கொண்டுசென்று அருகில் உள்ள ஒருமரத்தடியில் போட்டு விட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். இதனதைத்தையும் ஒப்புக்கொண்டு வனிதா போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார்.

    கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட வனிதாவை நீதிபதி 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் பேரில் வனிதா கோவை மத்திய சிறையில் அடைக் கப்பட்டார்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    ×