search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fry Recipes"

    • டீ, காபியுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த ஸ்நாக்ஸ்.
    • இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    பிரெட் - 5 துண்டு,

    பெரிய வெங்காயம் - 2,

    பச்சை மிளகாய் - 4,

    உப்பு - தேவையான அளவு,

    மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,

    சீரகம் - அரை டீஸ்பூன்,

    கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன்,

    பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை,

    காய்கறி - கால் கப்.

    செய்முறை :

    ஒரு வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

    சீரகத்தை கொரகொரப்பாக பொடித்துகொள்ளவும்.

    காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்ஸியில் பிரெட் துண்டுகளை பிய்த்து பிய்த்து போட்டு அதனுடன் பெரிய வெங்காயம், 4 பச்சை மிளகாயை நறுக்கி சேர்த்து கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

    அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், உப்பு, மஞ்சள் தூள், சீரகம், கடலை மாவு, பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

    அடுத்துஅதில் பொடியாக நறுக்கிய காய்கறிகளை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து நன்கு கெட்டியாக உருண்டை பிடிக்கும் அளவிற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

    பக்கோடா மாவு பதம் வந்த பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மீடியம் பிளேமில் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக பக்கோடா மாவை எடுத்து போட்டு எல்லா பக்கமும் பொன்னிறமாக சிவக்க வறுத்து எடுக்க வேண்டும்.

    ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய இந்த பிரெட் பக்கோடா எண்ணெய் குடிக்காது.

    சாதாரண வெங்காய பக்கோடாவை விட கூடுதல் சுவையுடன் நிச்சயம் இருக்கும்.

    சட்டென ஐந்தே நிமிடத்தில் செய்யக்கூடிய இந்த பிரட் பக்கோடா டொமேட்டோ சாஸ் உடன் தொட்டு கொண்டால் அவ்வளவு அருமையாக இருக்கும்.

    மாலையில் டீயுடன் சாப்பிடலாம் வயிறு நிறைவாக இருக்கும்.

    • இப்பொழுதே கொளுத்தும் வெயில் ஆரம்பம் ஆகி விட்டது.
    • வெங்காய வடகம் செய்வதற்கு ஏற்ற காலம்.

    தேவையான பொருட்கள்

    சின்ன வெங்காயம் - 2 கிலோ

    வெள்ளை முழு உளுந்து - 200 கிராம்

    பெருங்காயப்பொடி - 1 தேக்கரண்டி

    கடுகு - 1 மேஜைக்கரண்டி

    மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி

    வெந்தயப்பொடி - 2 தேக்கரண்டி

    உப்பு - தேவையான அளவு

    கொத்தமல்லித்தழை - 1 கட்டு

    கறிவேப்பிலை - ஒரு சிறிய கப் அளவு

    கரகரப்பாக அரைக்க

    மிளகாய் வத்தல் - 10

    சீரகம் - 2 மேஜைக்கரண்டி

    பூண்டு - 1 பெரியது

    செய்முறை

    2 கிலோ வெங்காயத்தை தோலுரித்து பொடிதாக நறுக்கி ஒரு பேப்பரில் பரப்பி நான்கு மணி நேரம் உலர விடவும்.

    உளுந்தம் பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

    கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.

    பூண்டை தோலுரித்து வைக்கவும்.

    மிளகாய் வத்தல், சீரகம், பூண்டு மூன்றையும் மிக்ஸ்சியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    பருப்பை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து விட்டு அதனுடன் உப்பு சேர்த்து கிரைண்டரில் தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

    இட்லி பதத்திற்கு அரைக்க தேவை இல்லை. 10 நிமிடம் அரைத்தால் போதும்.

    அரைத்த மாவுடன் நறுக்கிய வெங்காயம், கடுகு, பெருங்காயப்பொடி, மஞ்சள்பொடி, வெந்தயப்பொடி, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்.

    பிறகு கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு வெங்காய கலவையை உருட்டாமல் சிறிது சிறிதாக எடுத்து தட்டுகளில் வைத்து வெயிலில் காய வைக்கவும். உருட்டி வைத்தால் வறுக்கும் போது சரியாக வேகாது.

    அடுத்த நாள் வடகம் தட்டோடு ஒட்டி இருக்கும். எனவே ஒரு சிறிய மேஜைக்கரண்டி கொண்டு எடுத்து ஒரு பேப்பரில் பரப்பி வெயிலில் காய வைக்கவும்.

    இரண்டு நாட்களில் வடகம் நன்கு காய்ந்து விடும்.

    பிறகு ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும். தேவையான போது வறுத்து கொள்ளலாம்.

    • பஜ்ஜியில் பல்வேறு வெரைட்டிகள் உள்ளது.
    • இன்று தக்காளியில் பஜ்ஜி செய்து எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    அதிகம் பழுக்காத நாட்டுத் தக்காளி - 5

    பொட்டுக்கடலைமாவு - 50 கிராம்,

    சோள மாவு - 25 கிராம்,

    மைதா மாவு - ஒரு டீஸ்பூன்,

    காய்ந்த மிளகாய் விழுது - அரை டீஸ்பூன்,

    பெருங்காயத் தூள் - சிறிதளவு,

    சமையல் சோடா - ஒரு சிட்டிகை,

    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு,

    உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை:

    தக்காளியை கனத்த வில்லைகளாக நறுக்கி கொள்ளவும்.

    பொட்டுக்கடலை மாவு, சோள மாவு, மைதா மாவு, உப்பு, சமையல் சோடா, மிளகாய் விழுது, பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்று சேர்த்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தக்காளி வில்லைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான தக்காளி பஜ்ஜி ரெடி.

    குறிப்பு: தக்காளியில் இருக்கும் நீர் எண்ணெயில் சலசலப்பு உண்டாக்கும் என்பதால், மிதமான தீயில் மெதுவாக பொரித்தெடுக்கவும்.

    • பன்னீரில் புரதச்சத்து அதிகம் உள்ளது.
    • நீரிழிவு உள்ளவர்களும்கூட பன்னீரை தைரியமாக சாப்பிடலாம்.

    தேவையான பொருட்கள்:

    ஊற வைப்பதற்கு...

    பன்னீர் - 200 கிராம்

    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

    கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

    மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்

    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்

    தயிர் - 1 டேபிள் ஸ்பூன்

    உப்பு - சுவைக்கேற்ப

    மாவிற்கு...

    மைதா - 3 டேபிள் ஸ்பூன்

    சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்

    காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    சமையல் சோடா - 1 சிட்டிகை

    உப்பு - சுவைக்கேற்ப

    தண்ணீர் - தேவையான அளவு

    செய்முறை:

    * ஒரு பௌலில் பன்னீர் துண்டுகளை எடுத்துக் கொண்டு, அத்துடன் 'ஊற வைப்பதற்கு' கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

    * மற்றொரு பௌலில் 'மாவிற்கு' கொடுத்துள்ள பொருட்களை எடுத்து நன்கு கலந்து, பின் சிறிது நீர் ஊற்றி ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும். மாவானது மிகவும் நீராகவோ அல்லது கெட்டியாகவோ இருக்கக்கூடாது. இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

    * எண்ணெய் சூடானதும், ஊற வைத்துள்ள பன்னீர் துண்டுகளை தயாரித்து வைத்துள்ள மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

    * இதேப் போல் அனைத்து பன்னீர் துண்டுகளையும் பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான பன்னீர் 65 தயார்.

    குறிப்பு:

    * அனைத்து பன்னீர் துண்டுகளையும் ஒரே நேரத்தில் மாவில் போட்டு விட வேண்டாம். இல்லாவிட்டால், பன்னீர் எளிதில் உடைத்துவிடும்.

    * உங்களுக்கு மைதா சேர்க்க பிடிக்காவிட்டால், அதற்கு பதிலாக சோள மாவு மற்றும் அரிசி மாவு பயன்படுத்திக் கொள்ளலாம்.

    • இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
    • கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள்

    ராகி சேமியா - 100 கிராம்,

    உருளைக்கிழங்கு - 3,

    கேரட் - 1,

    வெங்காயம் - 1,

    கரம்மசாலாத்தூள், மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள் - தேவைக்கு,

    வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்த வேர்க்கடலை - 4 டீஸ்பூன்,

    சோம்பு - 1/4 டீஸ்பூன்,

    எண்ணெய் - 50 கிராம்,

    மைதா - 4 டேபிள்ஸ்பூன்,

    கொத்தமல்லி - சிறிது.

    செய்முறை

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாத்திரத்தில் மைதா மாவு, தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து தண்ணீராகக் கரைத்துக் கொள்ளவும்.

    ராகி சேமியாவை மிக்சியில் ரவை பதத்திற்குப் பொடித்துக் கொள்ளவும்.

    மசித்த உருளைக்கிழங்குடன் துருவிய கேரட், வெங்காயம், உப்பு, மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள், சோம்பு, பொடித்த வேர்க்கடலை, கொத்தமல்லி சேர்த்து நன்கு பிசைந்து சிறு உருண்டை அளவு எடுத்து விரும்பிய வடிவில் தட்டி வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்த கட்லெட்டுகளை மைதா கரைசலில் முக்கி, பொடித்த ராகி சேமியாயில் போட்டு பிரட்டி, சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான ராகி சேமியா வெஜிடபிள் கட்லெட் ரெடி.

    • இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
    • 15 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து விடலாம்.

    தேவையான பொருட்கள் :

    கடலை மாவு - 150 கிராம்,

    அரிசி மாவு - 25 கிராம்,

    மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு,

    எண்ணெய் - தேவையான அளவு.

    ஸ்டஃப்பிங் செய்ய:

    உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து மசிக்கவும்),

    பன்னீர் துண்டுகள் - 50 கிராம்,

    தனியா தூள் - ஒரு டீஸ்பூன்,

    கரம்மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்,

    நறுக்கிய கொத்த மல்லித்தழை, பச்சை மிளகாய் - சிறிதளவு,

    எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்,

    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - சிறிதளவு.

    செய்முறை:

    ஸ்டஃப்பிங் செய்யக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு கலந்து சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து நீர்விட்டு தோசை மாவைவிட சற்று தளர்வாக கரைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் தயார் செய்து வைத்த உருண்டைகளை மாவில் நன்கு தோய்த்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

    இப்போது சூப்பரான பன்னீர் - ஆலு ஸ்டஃப்டு போண்டா ரெடி.

    • அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது.
    •  உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும்.

    தேவையான பொருட்கள்

    முளைகட்டிய கொள்ளு - 1 கப்,

    வெங்காயம் - 4,

    பச்சைமிளகாய் - 2,

    உப்பு, எண்ணெய்-தேவைக்கு,

    பெருங்காயத்தூள், சமையல் சோடா - தலா 1 சிட்டிகை,

    கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிது.

    செய்முறை

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொள்ளு பருப்பை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து 8 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து கரகரவென அரைத்துக் கொள்ளவும்.

    இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், சமையல் சோடா, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து வடை மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான கொள்ளு வடை தயார்.

    • பூசணியில், கண்களின் ஆரோக்கியத்துக்கு அவசியமான வைட்டமின் 'ஏ' அதிக அளவில் இருக்கிறது.
    • பூசணிக்காயைக் கொண்டு காரம் மற்றும் இனிப்பு என பலவகையான உணவுகளை தயாரிக்க முடியும்.

    தேவையான பொருட்கள்:

    பூசணிக்காய் (துருவியது) - 300 கிராம்

    உருளைக்கிழங்கு - 1

    சோளமாவு - 2 தேக்கரண்டி

    அரிசி மாவு - 2 தேக்கரண்டி

    மிளகு தூள் - 1 தேக்கரண்டி

    கறி மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 2

    எலுமிச்சம்பழச்சாறு - 1 தேக்கரண்டி

    ரொட்டித்தூள் - தேவையான அளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    துருவிய பூசணிக்காயின் மேல் சிறிது தண்ணீர் தெளித்து, 10 நிமிடங்கள் இட்லி வேகவைப்பது போல ஆவியில் வேகவைத்து குளிர்விக்கவும்.

    வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடிதாக நறுக்கிக்கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேகவைத்து மேல் தோலை உரித்து மசித்துக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் குளிரவைத்தப் பூசணிக்காய் துருவல், மசித்த உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறி மசாலா தூள், மிளகு தூள், எலுமிச்சம்பழச்சாறு, அரிசி மாவு, சோளமாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்துகொள்ளவும்.

    இந்தக் கலவையை கட்லெட் வடிவத்தில் தட்டிக்கொள்ளவும்.

    பின்பு ரொட்டித் தூளில் புரட்டி எடுத்து 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.

    அடிகனமான வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் கட்லெட்டை அதில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    இப்பொழுது சுவையான பூசணிக்காய் கட்லெட் தயார்.

    இதை தக்காளி சாசுடன் சேர்த்து சாப்பிடலாம்.

    • நாடு முழுவதும் இன்று மகா சிவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது.
    • இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    மெல்லிய அவல் - 2 கப்,

    அரிசி மாவு - 1/4 கப்,

    ரவை (வெள்ளை) - 3 டேபிள் ஸ்பூன்,

    பெரிய வெங்காயம் - 1.

    கேரட் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்,

    பச்சை மிளகாய் - 2,

    கொரகொரப்பாகப் பொடித்த மிளகு, சீரகம் - 1 டீஸ்பூன்,

    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

    தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,

    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,

    பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்,

    உப்பு - தேவைக்கு,

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு,

    செய்முறை

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மெல்லிய அவலை நன்றாகக் கழுவி (ஊற விட வேண்டாம்), நீரினை வடிகட்டி கொள்ளவும்.

    வடிகட்டிய அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, அரிசி மாவு, உப்பு, மஞ்சள் தூள், கொரகொரப்பாகப் பொடித்த மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கேரட் துருவல், தேங்காய்த்துருவல், பெருங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கடைசியாக ரவை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டி போட்டு பொரித்து எடுக்கவும்.

    சிவபெருமானுக்கு நைவேத்தியமாக படைக்க அவல் வடை ரெடி.

    • பன்னீர் என்றாலே கால்சியமும், புரதச்சத்துக்களும் தான் நினைவுக்கு வரும்.
    • இது பற்கள், எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

    தேவையான பொருட்கள்

    பன்னீர் - 200 கிராம்

    வெங்காயம் - 1

    பச்சை மிளகாய் - 3

    பூண்டு - 2 பல்

    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

    இஞ்சி - சிறிய துண்டு

    சீரகம் - 1 டீஸ்பூன்

    கடுகு - ½ டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு - ½ டீஸ்பூன்

    எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை

    * இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    * பூண்டை தோல் நீக்கி நசுக்கிகொள்ளவும்.

    * ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    * பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    * ஒரு ஒரு கடாய்யை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, சீரகம், சேர்த்து தாளிக்கவும்.

    * பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    * வெங்காயம் பொன்னிறமாக வந்ததும் நசுக்கிய பூண்டு, இஞ்சி துருவல், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

    * அடுத்து மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

    * பிறகு துருவி வைத்துள்ள பன்னீர் சேர்த்து அதனுடன் மிளகுத் தூள், சேர்த்து கிளறி கொத்தமல்லி தலை தூவி இறக்கவும்.

    * இப்பொழுது சுவையான பன்னீர் பொடிமாஸ் தயார்.

    • மீனில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
    • மீனில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள் :

    துண்டு மீன் - அரை கிலோ

    இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

    வெங்காயம் - 1

    வினிகர் - 2 டீஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன்

    சோள மாவு - 2 டீஸ்பூன்

    எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

    செய்முறை :

    வெங்காயத்தை தோல் நீக்கி பேஸ்ட் போல் அரைத்து கொள்ளவும்.

    மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வண்டும்.

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் கழுவிய மீனை போட்டு, அடுப்பில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கி ஆற விடவும்.

    மீனில் உள்ள தோல், முள்ளை எடுத்து விட்டு சதை பகுதியை மட்டும் எடுத்து மசித்து ஒரு பௌலில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு, வெங்காய விழுது, உப்பு, வினிகர் சேர்த்து நன்றாக பிசைந்து, அதனை உருண்டைகளாக பிடித்து, ஒவ்வொரு உருண்டையையும் நீளவாக்கில் தட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள மீன் கபாப்பை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

    அருமையான பிஷ் கபாப் ரெடி.

    • முருங்கைக் கீரையில் பொரியல், கூட்டு செய்து இருப்பீங்க.
    • இன்று முருங்கைக் கீரையில் பக்கோடா செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    கடலை மாவு - 200 கிராம்

    வெங்காயம் - 50 கிராம்

    முருங்கைக் கீரை - 2 கைப்பிடி அளவு

    நறுக்கிய பச்சை மிளகாய் - 2

    நெய் - ஒரு டீஸ்பூன்

    சோம்பு - ஒரு டீஸ்பூன்

    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    முருங்கைக் கீரையை காம்பு இல்லாமல் இலையை மட்டும் ஆய்ந்து நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் உருக்கிய நெய்யுடன், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக் கீரை, சோம்பு, உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

    பின்பு சிறிது நீர் தெளித்து கையால் நன்றாக கலக்கிக் கொள்ளவும். மாவு உதிரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    பின்பு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயக் கலவையை உதிரி உதிரியாகப் போட்டு, பொன்னிறமாக சிவந்து வரும்வரை பொரித்து எடுக்கவும்.

    இப்போது சூப்பரான முருங்கைக் கீரை பக்கோடா ரெடி.

    ×