search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    சிவராத்திரி நைவேத்தியம்: அவல் வடை
    X

    சிவராத்திரி நைவேத்தியம்: அவல் வடை

    • நாடு முழுவதும் இன்று மகா சிவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது.
    • இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    மெல்லிய அவல் - 2 கப்,

    அரிசி மாவு - 1/4 கப்,

    ரவை (வெள்ளை) - 3 டேபிள் ஸ்பூன்,

    பெரிய வெங்காயம் - 1.

    கேரட் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்,

    பச்சை மிளகாய் - 2,

    கொரகொரப்பாகப் பொடித்த மிளகு, சீரகம் - 1 டீஸ்பூன்,

    கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

    தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன்,

    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,

    பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்,

    உப்பு - தேவைக்கு,

    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு,

    செய்முறை

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மெல்லிய அவலை நன்றாகக் கழுவி (ஊற விட வேண்டாம்), நீரினை வடிகட்டி கொள்ளவும்.

    வடிகட்டிய அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, அரிசி மாவு, உப்பு, மஞ்சள் தூள், கொரகொரப்பாகப் பொடித்த மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கேரட் துருவல், தேங்காய்த்துருவல், பெருங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    கடைசியாக ரவை சேர்த்து கலந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை வடைகளாக தட்டி போட்டு பொரித்து எடுக்கவும்.

    சிவபெருமானுக்கு நைவேத்தியமாக படைக்க அவல் வடை ரெடி.

    Next Story
    ×