search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flush"

    • சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வீடியோ கடையில் இரவு காவலாளி யாக பணியாற்றி வருகிறார்.
    • சம்பவத்தன்று அவர் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர்.

    சேலம்:

    ஓமலூர் அருகே தேக்கம்பட்டியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 36). இவர் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வீடியோ கடையில் இரவு காவலாளி யாக பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று அவர் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் அவரிடம் இருந்த செல்போனை பறித்து சென்றனர். இதனால் அவர் கூச்சல் போட்டார். அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதுதொடர்பாக ஜெகதீஷ் அழகாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ஜெகதீ சிடம் செல்போன் பறித்தது நாழிக்கல்பட்டியை சேர்ந்த 17 வயதுடைய 3 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து கண்காணிப்பு காமிரா பதிவுகளை வைத்து அவர்களை அடையாளம் கண்டனர். இதை தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • நண்பரின் சகோதரர் என்று ஏமாற்றி வாலிபரிடம் பணம்-செல்போன் பறிக்கப்பட்டது.
    • முத்துக்குமாரிடம் நூதன முறையில் வழிப்பறி செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் முத்துகுமார்(24). சம்பவத்தன்று இவருக்கு அறிமுகம் இல்லாத எண்ணில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் முத்துக்குமாரின் நண்பரா ன ராஜா என்பவரின் தம்பி பேசுவதாக கூறியுள்ளார்.

    அவரும், அவரது நண்பர்களும் அருகில் உள்ள விழா ஒன்றிர்க்கு வந்ததாகவும் அங்கே மது குடித்துவிட்டு கிணற்றில் குளித்தபோது நண்பர் ஒருவர் மயங்கி விழுந்து விட்டதாகவும் கூறி உடன டியாக கோட்டைப்பட்டி செல்லும் ரோட்டில் உள்ள கோவில் அருகே வரும்படி அழைத்துள்ளார்.

    முத்துகுமார் அவர் கூறிய இடத்திற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றார். அங்கு செல்போனில் பேசிய நபர் நின்றுகொண்டிருந்தார். பின்னர் இருவரும் அப்பகுதியில் உள்ள அட்டைமில் அருகில் உள்ள கிணற்று பகுதிக்கு சென்றனர். அங்கு 3 பேர் வந்து முத்துக்குமாரை ஒவ்வொருவருக்கும் ரூ.10 ஆயிரம் தர வேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளனர்.

    அதற்கு முத்துகுமார் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறியுள்ளார். அப்போது அந்த நபர்களில் ஒருவர் கத்தியின் கீழ் பகுதியால் முத்துகுமாரை தாக்கியுள்ளார். இதையடுத்து முத்துகுமார் தனது வங்கி கணக்கு கடவுச்சொல்லை கூறியுள்ளார்.போன்பே மற்றும் ஜி-பே மூலம் மொத்தம் ரூ.5 ஆயிரத்து 200 எடுத்துள்ளனர்.

    பின்னர் அவரது செல்போனையும் பறித்துக்கொண்டு அவர்கள் தப்பி சென்றனர்.அவர்கள் தாக்கியதில் காயமடைந்த முத்துகுமார் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    மேலும் இதுகுறித்து முத்துகுமார் வெம்பக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரிடம் நூதன முறையில் வழிப்பறி செய்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • ராமநாதபுரம் அருகே வாலிபரிடம் பணம்-செல்போன் பறிக்கப்பட்டது.
    • உச்சிப்புளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள சேர்வைக்காரன் ஊரணியை சேர்ந்தவர் முனீசு வரன்(வயது21). இவருக்கும் பெருங்குளத்தை சேர்ந்த காளீசுவரன், முனீஸ்கண்ணன் ஆகியோ ருக்கும் முன்விரோதம் இருந்தது.

    இந்த நிலையில் முனீசுவரன் ராமநாதபுரத்திற்கு சென்று தனது சித்தியிடம் ரூ.58 ஆயிரம் வாங்கினார். பின்னர் உறவினர் சதீசு வரனுடன் அங்கிருந்து சேர்வைக்காரன் ஊரணிக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அவர்கள் பெருங்குளம் சுங்கச்சாவடி அருகே சென்றபோது காளீசுவரன், முனீஸ்கண்ணன் ஆகியோர் அவர்களை வழிமறித்து அரிவாளால் தாக்கினர். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து ரூ.58 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அவர்களை மீண்டும் அரிவாளால் வெட்ட முயன்றனர். அப்போது மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு முனீசு வரனும், சதீசுவரனும் அங்கிருந்து ஓடி ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து உச்சிப்புளி போலீசில் முனீசுவரன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மர்மநபர், சரஸ்வதியை தாக்கி அவர் அணிந்திருந்த தங்க செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
    • சரஸ்வதியின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியின் ஓடி வந்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஆனங்கூர் அருகே உள்ள அ.குன்னத்தூரை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 73). இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 17-ந் தேதி வீட்டின் பின்புறத்தில் தனியாக இருந்தார்.

    அப்போது அங்கு வந்த மர்மநபர், சரஸ்வதியை தாக்கி அவர் அணிந்திருந்த தங்க செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார். சரஸ்வதியின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியின் ஓடி வந்தனர்.

    இதை பார்த்த அந்த அவர், பீர் பாட்டிலை உடைத்து அருகே வந்தால் குத்தி கொலை செய்து விடுவேன் என மிரட்டி அருகில் இருந்த கரும்பு காட்டிற்குள் புகுந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து மூதாட்டி சரஸ்வதி ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது நகையை பறித்து சென்றது அ.குன்னத்தூரைச் சேர்ந்த சுரேஷ் (40) என்று தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு பரமத்தி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று பரமத்தி சார்பு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன், சுரேசுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து சுரேஷ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    • அலங்காநல்லூர் அருகே வாலிபரிடம் கத்தி முனையில் செயின்-செல்போன் பறிக்கப்பட்டது.
    • இதுபற்றிய புகாரின்பேரில் அலங்கா நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை ஆரப்பாளையம் லட்சுமணபுரத்தை சேர்ந்த வர் ராமமூர்த்தி(வயது36). சம்பவத்தன்று இவர் அலங்காநல்லூரை அடுத்த பெரியஊர்சேரி பகுதியில் ஆட்டு பண்ணை வைத்து பராமரித்து வருகி றார். இவர் இரவு நேரத்தில் ஆட்டு பண்ணையில் தங்கி இருந்தார்.

    அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ராமமூர்த்தி அணிந்திருந்த தங்க செயின், மோதிரம், ஒரு செல்போனை யும் பறித்து கொண்டு ஓடி விட்டனர். இதுபற்றிய புகாரின்பேரில் அலங்கா நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • வீட்டில் தூங்கிய பெண்களிடம் 12 பவுன் சங்கிலிகளை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
    • இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் உள்ள கைப்பெரம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் பூமாலை. இவரது மனைவி சரோஜா மற்றும் அவரது உறவினரான அங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி, காரைப்பாடியை சேர்ந்த புவனா ஆகியோர் பூமாலை வீட்டின் முன்பக்கத்தில் இரவில் படுத்து தூங்கினர். நள்ளிரவில் மர்ம நபர்கள் கேட்டை திறந்து வரண்டா உள்ளே சென்று சரோஜா, தனலட்சுமி, புவனா ஆகியோர் கழுத்தில் அணிந்திருந்த மொத்தம் 12 பவுன் சங்கிலிகளை பறித்தனர்.

    இதனால் திடுக்கிட்டு விழித்த 3 பேரும், சங்கிலியை மீட்பதற்காக போராடினர். அப்போது அவர்களை கீழே தள்ளிவிட்டு மர்மநபர்கள் தப்பிச்சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நோயாளியிடம் செல்போன் பறித்து சென்றனர்.
    • நள்ளிரவு அவர் பிரசவ பகுதிகளுக்கு சென்று பெண்க ளிடம் அடாவடியிலும் தகாத வார்த்தைகளும் பேசியதுடன் அங்கிருந்த ஒரு நபரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.

    நாமக்கல்:

    நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நாமக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் அண்டை மாவட்டமான திருச்சி மாவட்டத்தில் இருந்தும் ஏராளமானோர் உள்நோயாளிகளாகவும் வெளி நோயாளிகளாகவும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    திருச்சி மாவட்டம் ஏளூர்பட்டியை அடுத்த கவரப்பட்டியைச் சேர்ந்த வீரம்மாள் கடந்த2-ந்தேதி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்ந்தார். அவரது உறவினர் திருமுருகன் நாமக்கல் பகுதிகளில் பெயிண்டர் வேலை செய்து வருகிறார்.

    வீரம்மாளை பார்ப்ப–தற்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்த திருமுருகன் மருத்துவமனை குள்ளேயே போதை தலைக்கு ஏறும் அளவிற்கு மது குடித்துளார். பின்பு பெண்கள் வார்டு பகுதிகளில் அங்கும் இங்கும் சுற்றி திரிந்துடன் கழிவறைகளையும் எட்டிப் பார்த்து உள்ளார்.

    இதை கண்ட மருத்துவமனை காவலா–ளிகள் கண்டித்த போது அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். நள்ளிரவு அவர் பிரசவ பகுதிகளுக்கு சென்று பெண்க ளிடம் அடாவடியிலும் தகாத வார்த்தைகளும் பேசியதுடன் அங்கிருந்த ஒரு நபரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.

    இதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் திருமுருகனை மருத்துவமனை காவலாளி களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் திருமுருகனை எச்சரித்து வெளியே அனுப்பி வைத்தனர். இதனால் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • சேலம் அருகே உள்ள வேம்படிதாளம் அய்யம்பாளையம் கோவில் காடு பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி 7 ½ பவுன் நகை பறித்து அங்கிருந்து தப்பி சென்றனர்.
    • குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்கு பதிவு செய்து, இந்த வழிப்பறிப்பில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள வேம்படிதாளம் அய்யம்பாளையம் கோவில் காடு பகுதியைச் சேர்ந்தவர் வையாபுரி (வயது 59). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், சம்பவத்தன்று சேனைபாளையம் அருகே உள்ள பூவரசன் கோட்டை சுந்தர பெருமாள் கோவிலுக்கு சென்றுள்ளார்.

    அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல், வையாபுரியை வழிமறித்து கத்தியால் கையில் வெட்டியது. மேலும் வையாபுரி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலி, 1/2 பவுன் மோதிரத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியது.

    இதுகுறித்து வையாபுரி கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்கு பதிவு செய்து, இந்த வழிப்பறிப்பில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • தஞ்சை புதிய பஸ் நிலையத்திலிருந்து பஸ்ஸில் ஏறி பழைய பஸ் நிலையத்திற்கு சென்றார்.
    • கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை காணாதது கண்டு அதிர்ச்சடைந்தார்.

    தஞ்சாவூர்:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பாலையூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமி.

    இவரது மனைவி வசந்தா (வயது 68) . இவர் பாலையூரில் இருந்து தஞ்சை புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அங்கிருந்து பஸ்ஸில் ஏறி பழைய பஸ் நிலையத்திற்கு சென்றார்.

    அப்போது தான் கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை காணாதது கண்டு அதிர்ச்சடைந்தார். பலரிடம் கேட்டு பார்த்தும் பயனில்லை.

    இது குறித்து அவர் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மஞ்சக்கல்பட்டி கிராமம், அம்பாள் நகரை சேர்ந்தவர் சாந்தி இவர், எடப்பாடி அருகே வட்ராம்பாளையம் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
    • நேற்று இரவு வீட்டில் உறங்கினார். வீட்டின் பின் வாசல் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பூஜை அறையில் உண்டியலில் இருந்த ரூ.2000, தூங்கிக் கொண்டிருந்த சாந்தியின் கழுத்தில் இருந்த 12 பவுன் தாலி செயினை பறிக்க முயன்றார்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே தேவண்ணக் கவுண்டனூர் ஊராட்சி, மஞ்சக்கல்பட்டி கிராமம், அம்பாள் நகரை சேர்ந்தவர் சாந்தி (வயது 56). இவர், எடப்பாடி அருகே வட்ராம்பாளையம் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று இரவு, இவரது கணவர் குமரவேல் (63), மகள் சண்முகப்பிரியா (33), பேரன் லவன்அர்ஷத் (11) ஆகியோருடன் வீட்டில் உறங்கினார். இன்று அதிகாலை 2.30 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், வீட்டின் பின் வாசல் கதவை உடைத்து உள்ளே நுழைந்தான். பூஜை அறையில் உண்டியலில் இருந்த ரூ.2000, தூங்கிக் கொண்டிருந்த சாந்தியின் கழுத்தில் இருந்த 12 பவுன் தாலி செயினை பறிக்க முயன்றார்.

    அப்போது விழித்துக் கொண்ட சாந்தி கூச்சலிட்டார். வீட்டில் இருந்தவர்கள் வருவதற்குள், தாலியை பறித்துக் கொண்டு கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். இச்சம்பவம் குறித்து சாந்தி சங்ககிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த சங்ககிரி இன்ஸ்பெக்டர் தேவி, எடப்பாடி இன்ஸ்பெக்டர் சந்திரலேகா, எஸ்.ஐ சுதாகரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது குழந்தையை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் காட்டுமயிலூரிலிருந்து வேப்பூருக்கு சென்றார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே விளாம்பாவூர் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன் இவரது மனைவி காயத்ரி (வயது 24) இவர் இன்று காலை விளாம்பாவூரிலிருந்து காட்டு மயிலூர் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.

    அங்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட தனது குழந்தையை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் காட்டுமயிலூரிலிருந்து வேப்பூருக்கு சென்றார். அப்போது இவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் வந்தார்.

    அவர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற காயத்ரி கழுத்தில் இருந்த 3 பவுன் தாலி செயினை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்து சென்றார். அப்போது காயத்ரி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இது குறித்து காயத்ரி வேப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டிவி. கேமராவை ஆராய்ந்து செயினை பறித்து சென்ற நபரை வலைவீசி தேடி வருகின்றார்.

    கடலூர்:

    கடலூர் உண்ணாமலை செட்டி சாவடி சேர்ந்தவர் மாலதி (வயது 36) .இவர் மாளிகை மேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    கடலூர் பி.என்.பாளையம் சேர்ந்த தணிகாசலம் (வயது 38). பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர் பயிற்சியில் பயிற்சி பெற்றார்.இதை தொடர்ந்து 2 பேரும் மொபைலில் பேசி பழகி வந்தனர். இந்த நிலையில் மாலதியின் கணவர் இறந்துவிட்டார். இதனால் தணிகாசலம் தானாக முன்வந்து பல உதவிகள் மாலதிக்கு செய்து வந்தார். ஆனால் தணிகாசலத்தின் நடவடிக்கை பிடிக்காததால் அவரிடம் பேசுவதை மாலதி நிறுத்தி விட்டார்.

    சம்பவத்தன்று மாலதி தனது இருசக்கர வாகனத்தில் நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று தணிகாசலம் மாலதியை வழிமறித்து அவரது செல்போனை பறித்து யாருடன் பேசிக்கொண்டு இருக்கிறாய்? என கேட்டு திட்டியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாலதி கொடுத்த புகாரின் பேரில் ஆசிரியர் தணிகாசலம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×