என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வீட்டில் தூங்கிய பெண்களிடம் 12 பவுன் சங்கிலிகள் பறிப்பு
Byமாலை மலர்25 Feb 2023 7:40 AM GMT
- வீட்டில் தூங்கிய பெண்களிடம் 12 பவுன் சங்கிலிகளை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
- இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் உள்ள கைப்பெரம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் பூமாலை. இவரது மனைவி சரோஜா மற்றும் அவரது உறவினரான அங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த தனலட்சுமி, காரைப்பாடியை சேர்ந்த புவனா ஆகியோர் பூமாலை வீட்டின் முன்பக்கத்தில் இரவில் படுத்து தூங்கினர். நள்ளிரவில் மர்ம நபர்கள் கேட்டை திறந்து வரண்டா உள்ளே சென்று சரோஜா, தனலட்சுமி, புவனா ஆகியோர் கழுத்தில் அணிந்திருந்த மொத்தம் 12 பவுன் சங்கிலிகளை பறித்தனர்.
இதனால் திடுக்கிட்டு விழித்த 3 பேரும், சங்கிலியை மீட்பதற்காக போராடினர். அப்போது அவர்களை கீழே தள்ளிவிட்டு மர்மநபர்கள் தப்பிச்சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X