search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "First aid"

    • இதயம் செயலிழக்கும் போது மார்பை அழுத்தி செயல் பட வைக்கும் சிகிச்சை பற்றிய செயல் விளக்கம்.
    • 500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் 10-வது ஆண்டு விழாவை முன்னிட்டு 10 ஆயிரம் பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு உயிர் காக்கும் முதலுதவி மற்றும் இதயம் செயலிழக்கும் போது மார்பை அழுத்தி செயல் பட வைக்கும் சிகிச்சை பற்றிய செயல் விளக்கம் மற்றும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இதன் முதல் கட்டமாக புதுக்கோட்டை மாவட்டம், புனல் குளத்தில் உள்ள கிங்ஸ் மற்றும் குயின்ஸ் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு முதலுதவி பயிற்சியை மீனாட்சி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு துறை தலைவரும்,

    இந்திய அவசர சிகிச்சை மருத்துவ சங்க தலைவருமான மருத்துவர் சரவணவேல் அளித்தார்.

    பயிற்சியை கல்லூரி செயலாளர் ராஜேந்திரன், கல்லூரி முதல்வர் அற்புத விஜயசெல்வி, குயின்ஸ் கல்லூரி முதல்வர் சித்ராதேவி தொடங்கி வைத்து முன்னிலை வகித்தனர்.

    500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இதில் கிங்ஸ் கல்லூரியின் நாட்டுநல பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அம்பலத்தரசு, தினேஷ், சுரேஷ்பாபு, மருத்துவமனை நிறுவனத்துறை தலைவர் ஞானசவுந்தரி கலந்து கொண்டனர்.

    இந்த பயிற்சியானது மேலும் பல கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது.

    • ஆள் கடத்தல் கும்பல் பற்றி தகவல் தெரிந்தால் 044-28447701 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.
    • நல்ல தகவல் தருபவர்களுக்கு பண வெகுமதி அளிக்கப்படும்.

    சென்னை :

    தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற சாலை சந்திப்புகளிலும், புறவழிச்சாலை சுங்கச்சாவடிகளிலும் பெண்களையும், குழந்தைகளையும் வைத்து பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களை சில கும்பல்கள் இந்த தொழிலில் ஈடுபட வைக்கின்றனர். இதை தடுத்து நிறுத்தும் வகையில் 'ஆபரேஷன் மறுவாழ்வு' என்ற அதிரடி நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 9 போலீஸ் கமிஷனரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 726 பிச்சைக்காரர்கள், 16 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.

    இவர்களை இந்த தொழிலில் ஈடுபடுத்திய நபர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மீட்கப்பட்ட பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு இல்லத்துக்கும், குழந்தைகள் காப்பகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். 150 பேர் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    ஏழை பெண்களையும், குழந்தைகளையும் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடுத்தும் நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்கள் மற்றும் வெகு தூரங்களில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து வந்து பிச்சை எடுக்க வைக்கும் ஆள் கடத்தல் கும்பல் பற்றி தகவல் தெரிந்தால் 044-28447701 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். நல்ல தகவல் தருபவர்களுக்கு பண வெகுமதி அளிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சிலர் குழந்தைகளை தலைகீழாக வைத்து உலுக்குவார்கள்.
    • தண்ணீர் தருவதோ, சாப்பிடக் கொடுப்பதோ வேண்டாம்.

    தவழும் வயதில், குழந்தைகளின் உலகம் தனித்துவமானது; பார்க்கும் ஒவ்வொரு பொருளும் அவர்களுக்குப் புதுமையாகத் தெரியும். எந்தப் பொருள் அருகில் இருந்தாலும், கையில் கிடைத்தாலும் முதலில் தொட்டுப் பார்ப்பார்கள். பிறகு, கையிலெடுத்து வாயில் போட்டுக் கடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். அது என்னவென்று அறிந்துகொள்ளத் துடிக்கும் ஆர்வம்தான் காரணம்.

    ஊட்டச்சத்து குறைபாடும் குழந்தைகள் கண்டதையும் வாயில் போட்டுக்கொள்ள ஒரு காரணம். உதாரணமாக, கால்சியம் சத்து குறைபாடுள்ள குழந்தைகள் சுண்ணாம்பு, சாக்பீஸ் போன்றவற்றைத் தின்பார்கள். இரும்புச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் பல்பம், சுவரிலிருக்கும் பெயின்ட் போன்றவற்றைத் தின்னத் துடிப்பார்கள். உடலில் மைக்ரோமினரல்ஸ் குறைபாடு உள்ள குழந்தைகள் சாம்பலையும், சால்ட் குறைபாடு உள்ள குழந்தைகள் ஊறுகாயையும் வாயில் போட்டுக்கொள்ளத் துடிப்பார்கள்.

    குழந்தைகளால் விழுங்கப்படும் பொருள்கள் மூச்சுக்குழாய் அல்லது உணவுக்குழாய்க்குள்தான் செல்லும். சில நேரங்களில் இது இரண்டும் பிரியும் இடமான தொண்டைக்குழிக்குள்ளும் சிக்கிக்கொள்ளலாம். மூச்சுக்குழாய்க்குள் சென்று அடைத்துக்கொண்டால், சுவாசப்பாதை தடைபடும். மூச்சுவிட முடியாது. உணவுக்குழாய்க்குள் என்றால், இரைப்பை வழியாக வயிற்றுக்குள் செல்லும். வயிற்றுக்குள் செல்லும் பொருளின் தன்மையைப் பொறுத்து அதன் பாதிப்பு இருக்கும். சில பொருள்கள் எந்தத பாதிப்புகளையும் ஏற்படுத்தாமல் வெளியேறிவிடுவதும் உண்டு.

    குழந்தைகள், ஏதாவது ஒன்றை விழுங்கும்போது நாம் பார்த்துவிட்டால் பிரச்னையில்லை . ஒருவேளை நாம் பார்க்காவிட்டால்தான் பிரச்னை. இதை எப்படி அறிந்துகொள்வது? அதுவரை ஓடி, ஆடி, பேசித் திரிந்த குழந்தை திடீரென அமைதியாக இருக்கும்; அழக்கூடச் செய்யலாம்; அவர்களின் நடவடிக்கைகளில் ஏதாவது மாற்றம் தெரியலாம். இதையெல்லாம் வைத்துத்தான் அவர்கள் எதையோ விழுங்கியிருக்கிறார்கள் என்று அறிந்துகொள்ள முடியும்.

    பேசக்கூடிய பெரிய குழந்தைகளாக இருந்தால் அவர்களிடமே கேட்டுவிடலாம். எதையோ அவர்கள் விழுங்கிவிட்டது உறுதியாகிவிட்டால், முதலில் அவர்களை இருமச் சொல்ல வேண்டும். பின்னர், அவர்களைக் குனியவைத்து, முதுகுப் பகுதியில் ஐந்து முறை பலமாகத் தட்ட வேண்டும். அப்படியும் விழுங்கிய பொருள் வெளியே வராவிட்டால், குழந்தையை பின்புறத்திலிருந்து கட்டியணைத்து அவர்களின் நெஞ்சுக்குக் கீழே, தொப்புளுக்கு மேலே நம் ஒருகை முஷ்டி மேல் இன்னுமொரு கை வைத்து ஐந்து முறை மேல் நோக்கித் தள்ள வேண்டும். அப்படியும் பொருள் வரவில்லையென்றால், மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிட வேண்டும்.

    பேச்சு மூச்சு இல்லாத நிலையில் குழந்தைகள் இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதுதான் சிறந்தது. அதற்கு இடைப்பட்ட நேரத்தில் இதய மூச்சு மறுஉயிர்ப்பு முதலுதவிகளைச் செய்யலாம். முதலில், குழந்தையை மல்லாக்கப் படுக்கவைத்து நெஞ்சுப்பகுதிக்கு நடுவில் நம் கையைவைத்து நிமிடத்துக்கு நூறுமுறை அழுத்தம் கொடுக்க வேண்டும். இப்படியே முப்பது தடவை செய்த பின்னர், குழந்தையின் மூக்குக்கு அருகே காதை வைத்து, மூச்சு வருகிறதா என்று கவனிக்க வேண்டும். வராவிட்டால், குழந்தையின் வாயில் வாய்வைத்து இரண்டு முறை ஊத வேண்டும். அப்படியும் குழந்தைக்கு மூச்சு வரவில்லை என்றால், மீண்டும் முதலில் செய்ததுபோல நெஞ்சுப்பகுதியில் ஐந்து முறை கைவைத்து அழுத்த வேண்டும். மீண்டும் வாயில் வாய்வைத்து இரண்டு முறை ஊத வேண்டும். இப்படியே தொடர்ச்சியாக மருத்துவ உதவி கிடைக்கும்வரை செய்ய வேண்டும். ஒன்று முதல் பன்னிரண்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இந்த முதலுதவிகளைச் செய்யலாம்.

    ஒரு வயதுக்கும் குறைவாக உள்ள குழந்தைகள் என்றால், முதலில் வாய்க்குள் விரலைவிட்டு ஏதாவது இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்க வேண்டும். இல்லையென்றால் நம் கைகளிலோ, தொடைகளிலோ குழந்தையைக் குப்புறப் படுக்கவைத்து, தலையை தாழ்வாக வைத்துக்கொண்டு குழந்தையின் முதுகில் ஐந்து முறை தட்ட வேண்டும். அப்படியும் விழுங்கிய பொருள் வரவில்லையென்றால், குழந்தையை அதே நிலையில் மல்லாக்கப் படுக்கவைத்து, நெஞ்சுக்குக் கீழே நம் இரண்டு விரல்களை வைத்து மேல் நோக்கிவாறு அழுத்தம் கொடுக்க வேண்டும். மேற்கண்ட அனைத்துமே முதலுதவிகள் மட்டும்தான். குழந்தைகள் எதை விழுங்கியிருந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிடுவதுதான் நல்லது. பேச்சு மூச்சு இல்லாத நிலையில் குழந்தைகள் இருந்தால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்னர் இதய மூச்சு மறுஉயிர்ப்பு முதலுதவி செய்யலாம்.

    சிலர் குழந்தைகளை தலைகீழாக வைத்து உலுக்குவார்கள். அது தவறு; அப்படிச் செய்யக் கூடாது. தண்ணீர் தருவதோ, சாப்பிடக் கொடுப்பதோ வேண்டாம்.

    வாய்வழியாக மட்டுமல்லாமல், மூக்குவழியாகவும் சில பொருள்கள் சென்றுவிடுவதுண்டு. உதாரணமாக பொரி, கடலை, பாசி போன்றவை. இவற்றால் உயிருக்கு ஆபத்தில்லை. ஆனால், குழந்தையின் மூக்கில் சளி வடிந்துகொண்டே இருக்கும். சில நேரங்களில் ரத்தமும் வழியலாம். சமயத்தில், நோய்த்தொற்று ஏற்பட்டு புண்ணாகிவிடும். அதனால் குழந்தையின் மூக்கில் புண் ஏதாவது இருந்தாலும் மருத்துவரிடம் கூட்டிச் சென்றுவிடுவது நல்லது.

    • முதலுதவி பற்றிய செயல்முறை விளக்கம் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.
    • ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

    தஞ்சாவூர்:

    உலக விபத்து தடுப்பு தினத்தை முன்னிட்டு தஞ்சை மீனாட்சி மருத்துவமனை சார்பில் தஞ்சையில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விபத்து தடுப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி பற்றிய செயல்முறை விளக்கம் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு துறை தலைவர் டாக்டர். சரவணவேல் மற்றும் குழுவினர்கள் ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர்.

    இதில் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

    • பாதிக்கப்பட்ட நபர் நல்ல காற்றை சுவாசிக்க ஏதுவாக காற்றோட்டமாக விடுங்கள்.
    • மார்பில் வலி ஏற்பட்டவுடன் அது மாரடைப்பு என முடிவு செய்து விடுகின்றனர்.

    இன்றைய காலத்தில் மாரடைப்பு என்பது இளம்வயதினர் முதல் முதியவர்கள் வரை பலருக்கும் ஏற்படுகிறது. இதற்கு காரணம் வேலை மற்றும் குடும்ப சுழல் மற்றும் மாறி வரும் உணவு பழக்க முறையே ஆகும். ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டவுடன் அருகில் இருப்பவருக்கு பதட்டத்தில் என்ன செய்வது என்று புரிவதில்லை.

    ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் அவருக்கு எந்த மாதிரியான முதலுதவிகளை செய்ய வேண்டும் என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை. பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள், உயிருக்கு ஆபத்தாகி விடுகிறது. எனவே மாரடைப்புக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியம்.

    இது இரண்டு வகைப்படும். ஒன்று மாரடைப்பு மற்றொன்று மார்பு வலி இந்த இரண்டுக்கும் இடையே சில வித்தியாசங்கள் உள்ளது. ஒரு சிலருக்கு இதன் வித்தியாசம் புரிவதில்லை. மார்பில் வலி ஏற்பட்டவுடன் அது மாரடைப்பு என முடிவு செய்து விடுகின்றனர்.

    மார்பு வலி ஒருவருக்கு ஏற்பட்டால் அது 15 நிமிடங்களுக்கும் குறைவாகவே இருக்கும். இந்த வலியால் இதய தசைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அதுவே மாரடைப்பு ஏற்பட்டால் 20-30 நிமிடங்கள் வரை வலி நீடிக்கும். இதய தசைகளுக்கும் பெரிய சேதத்தை உண்டாக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

    மார்பு பகுதியில் யாரோ சம்மட்டியால் அடிப்பது போன்று திடீரென்று தாங்கமுடியாத வலி நெஞ்சின் நடுவே ஏற்படுவது அல்லது கத்தியால் குத்துவது போன்று மார்பில் வலி ஏற்படுவது அல்லது இரண்டு தோள்பட்டை, புஜம் மற்றும் கழுத்து, முதுகைச் சுற்றிலும் கடுமையான வலி ஏற்படுவது, உடனே குமட்டிக்கொண்டு வாந்தி வருதல், அதனால் ஏற்படும் படபடப்பு, காரணம் இல்லாமல் வியர்த்துக் கொட்டுவது, தலைசுற்றல் மற்றும் உடல் தளர்ச்சியுடன் கூடிய சோர்வு ஆகியவை மாரடைப்பின் முக்கிய அறிகுறிகள் ஆகும்.

    பாதிக்கப்பட்ட நபர் நல்ல காற்றை சுவாசிக்க ஏதுவாக காற்றோட்டமாக விடுங்கள். அவரை சுற்றி மற்றவர்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க வேண்டும். அவருக்கு தேவையான காற்று தடையின்றி கிடைக்க வழி செய்ய வேண்டும்.

    பாதிப்பு ஏற்பட்ட நபரை படுக்க வைக்கவும், அவர் இறுக்கமான உடை அணிந்திருந்தால் உடைகளைத் சற்று தளர்த்த வேண்டும். பாதிக்கப்பட்டவருக்கு சுவாசம் இருக்கிறதா என நெஞ்சில் கை வைத்தோ, மூக்கின் துவாரத்தில் காது வைத்தோ அல்லது உள்ளங்கையில் பின்புறத்தை வைத்தோ உறுதி செய்ய வேண்டும்.

    சுவாசம் இருப்பது உறுதி செய்தவுடன் நாக்கின் அடியில் ஆஸ்பிரின் (Aspirin) மாத்திரையை, சோர்பிட்ரேட் (sorbitrate) மாத்திரயுடன் சேர்த்து வைத்து விடவும். இது உறைந்த இரத்தத்தை சரி செய்து இதயத்திற்கு சீராக இரத்த ஓட்டத்தை பாய்ச்சும். மேலும் உடனே தாமதிக்காமல் இதய சிறப்பு மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும்.

    ஒருவேளை பாதிக்கப்பட்டவர் சுவாசிக்க முடியாத நிலையில் இருந்தால் அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் தலையைப் பின்பக்கம் கை கொண்டு உயர்த்தி, நாடியையும் மேல்நோக்கி உயர்த்தி மூச்சுக்குழலை நேராக இருக்குமாறு செய்து பாதிக்கப்பட்டவரின் மூக்கின் இரு துவாரங்களையும் அழுத்தி மூடிக்கொண்டு, பாதிக்கப்பட்டவரின் வாயோடு உங்கள் வாயைப் பொருத்திக் மெதுவாக காற்றை உட்செலுத்து வேண்டும். இப்படியாக செயற்கை சுவாசம் தர வேண்டும்.

    அதே போல, மருத்துவ மனையில் நோயாளியின் வயது, மாரடைப்பு ஏற்பட்ட தாக்கத்தின் அளவு, இதயம் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது, மற்றும் இரத்தக் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சை மாறுபடும். பல நேரங்களில் இரத்தக்குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க தெளிவான மற்றும் முறையான வழிமுறைகள் அவசியமாகின்றன. அவை கரோனரி ஆஞ்சியோப்ளாட், பலூன்களைக் கொண்டு இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்தல் அல்லது கரோனரி பைபாஸ் அறுவை சிகிச்சை போன்ற முறைகள் தேவைப்படலாம்.

    மேற்கண்ட முதலுதவி விஷயங்களை நீங்கள் சரியான முறையில் பின்பற்றினால் உயிருக்கு போராடும் ஒருவரின் உயிரை உங்களாலும் காப்பாற்ற முடியும்.

    • மழை, வெள்ளம் ஏற்படும்போது மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும்.
    • நீரில் மூழ்கியவருக்கு முதலுதவி அளிப்பது குறித்து விளக்கம் பொதுமக்களிடையே செய்து காண்பிக்கப்பட்டது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே ஆலங்குடியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவின் அவசரகால மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் மழை, வெள்ளம் ஏற்படும்போது மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமக்களிடையே செய்து காண்பிக்கப்பட்டது. நீரில் மூழ்கியவருக்கு முதலுதவி அளிப்பது குறித்து விளக்கம் பொதுமக்களிடையே செய்து காண்பிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் தேசிய பேரிடர் மீட்பு படையின் தமிழ்நாடு பார்வையாளர் உமா மகேஸ்வரராவ், திருவாரூர் மாவட்ட டி.ஆர்.ஓ. சங்கீதா, வலங்கைமான் பேரிடர் மீட்பு பார்வையாளர் விஜயன், வலங்கைமான் தாசில்தார் சந்தான கோபாலகிருஷ்ணன், மண்டல துணை தாசில்தார் ஆனந்தன், ரெட் கிராஸ் அமைப்பின் தேசிய பேரிடர் மீட்பு குழு பயிற்றுனர் பெஞ்சமின், ரெட் கிராஸ் திருவாரூர் மாவட்ட அலுவலர் ஏழுமலை, வலங்கைமான் இன்ஸ்பெக்டர் ராஜா, மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் வடிவேல், வலங்கைமான் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன், எழுத்தர் வெக்காளிஸ்வரன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • டி.ஜி.பி. சைலேந்திரபாபு சீருடையில் இல்லாமல் கடற்கரையில் வலம் வந்துகொண்டிருந்தார்.
    • பொதுமக்கள் போலீஸ் டி.ஜி.பி.க்கு பாராட்டு தெரிவித்தனர்.

    சென்னை :

    சென்னை மெரினா கடற்கரைக்கு தினமும் மாலை நேரங்களில் காற்று வாங்க பொதுமக்கள் அதிகம் பேர் வருவார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.

    போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு மாலை 6 மணி அளவில் சீருடையில் இல்லாமல் மக்களுடன் மக்களாக கடற்கரையில் வலம் வந்துகொண்டிருந்தார். அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் முகேஷ் (வயது 10) என்ற சிறுவன் கடலில் மூழ்கிவிட்டான். உடனே அவனது உறவினர்களும், அங்கு நின்றவர்களும் கூச்சல் போட்டனர்.

    ஒரு சிலர் கடலுக்குள் குதித்து சிறுவன் முகேஷை மீட்டு வெளியே கொண்டுவந்தனர். ஆனால் அந்த சிறுவன் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்தான். கூட்டம் கூடி நிற்பதை பார்த்து வேகமாக அங்கு வந்த போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சிறுவனின் நெஞ்சில் கையை வைத்து அழுத்தி முதலுதவி சிகிச்சை அளித்தார். சிறுவன் லேசாக கண்ணைத் திறந்தான்.

    அப்போது அங்கு நின்ற சிலர், சிறுவனுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்க முயன்றனர். உடனே டி.ஜி.பி. சைலேந்திரபாபு, இந்த நேரத்தில் தண்ணீர் கொடுக்கக்கூடாது என்று கூறியதுடன், அந்த தண்ணீரை வாங்கி சிறுவனின் தலையில் ஊற்றினார்.

    உடனே ஆம்புலன்சுக்கு ஏற்பாடு செய்யுமாறும் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். சற்று நேரத்தில், கடற்கரை மணலிலும் பயணிக்கும் சிறியரக வாகனம் அங்கு வந்தது. உடனே அந்த சிறுவனை தானே கையில் தூக்கி, வாகனத்தில் சைலேந்திரபாபு ஏற்றி, ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோக கூறினார்.

    அப்போதுதான் பலருக்கு அவர் போலீஸ் டி.ஜி.பி. என்பதே தெரிந்தது. சிறுவனின் உறவினர்களும், பொதுமக்களும் போலீஸ் டி.ஜி.பி.க்கு பாராட்டு தெரிவித்தனர்.

    என்னதான் சட்டமிருந்தாலும் பொறுப்பான பயணமே பாதுகாப்பான பயணம் என்பதை நாம் உணர்ந்து நடக்காதவரையிலும் விபத்துகளையும் உயிரிழப்புக்களையும் தடுக்க முடியாது.
    சாலை விபத்துகள் அதிகமாக ஏற்படும் மாநிலங்களில் தமிழகம் நாட்டிலேயே மூன்றாவது இடத்தில் உள்ளது. தேசியக் குற்றப் பதிவு ஆணையத்தின் ஆண்டறிக்கை பெரும்பாலான விபத்துகள் மனிதக் கவனக்குறைவினால் ஏற்படுவதாகக் கூறுகிறது. தற்போது இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போக்குவரத்து விதி உள்ளது .ஆனால் அதை யாரும் சரி வர கடைப்பிடிப்பதில்லை. அதேபோல் காரோட்டிகள் சீட் பெல்ட அணிய வேண்டும் என்பது முக்கிய அம்சம்.

    அனைத்துக் கார்களுமே பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்தே தயார் செய்யப்படுகின்றன. எனினும் பெரும்பாலான நேரங்களில் காரோட்டிகளும் பயணிகளும் கார்களில் உள்ளப் பாதுகாப்பு சாதனங்களைப் பயன்படுத்துவதில்லை, அலட்சியம் காட்டுகிறார்கள். இதுவே பெரும்பாலான விபத்துகளில் மரணம் ஏற்படக் காரணமாகி விடுகிறது. நவீனரக கார்களில் பல பாதுகாப்புச் சாதனங்களிருந்தாலும் அவற்றுள் மூன்று முக்கியமான சாதனங்கள் சீட்பெல்ட், கூடுதல் பாதுகாப்புக் காற்றுப்பை மற்றும் ஹெட்ரெஸ்ட் எனப்படும் தலைத்தாங்கி அணை ஆகியவை. அவை எப்படி உயிர்சேதத்தைத் தடுக்க உதவும் என்பதையும் பார்ப்போம்.

    முதலாவதாக சீட்பெல்ட். அணிந்து கொண்டு பயணம் செய்யும்போது விபத்து ஏற்பட்டால் சீட்பெல்ட் பயணியை இருக்கையோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொள்ளும். அதனால் விபத்து ஏற்படும் போது பயணி முன்பக்கமாகச் சாய்வது தடுக்கப்படுகிறது. பயணியின் தலை முன் இருக்கையின் மீதோ அல்லது வண்டியின் முன்பக்கத் தட்டிலோ மோதுவது தடுக்கப்படுகிறது.

    ஓட்டுநர் சீட்பெல்ட் அணிந்து கொள்ளும்போது விபத்து நடக்கும்போது முன்பக்கமாக சாய்வதால் அவரது தலையும் நெஞ்சும் வண்டியின் ஸ்டியரிங்கில் இடித்துக்கொள்வது தடுக்கப்படும். ஸ்டியரிங்கில் இடித்துக்கொள்ளும்போது தலைக்காயமும் நெஞ்செலும்புகளில் முறிவும் ஏற்படுவதால்தான் மரணம் ஏற்படுகிறது. அதனால்தான் சீட்பெல்ட் அணிவது கட்டாயமெனச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. எனினும் சீட்பெல்ட் அணியாமல் பயணம் செய்வது வாடிக்கையாகிவிட்டது.



    சீட்பெல்ட் அணிவது அசவுகரியமாக இருக்கிறதென்றும் வசதியாக இல்லையென்றும் நினைக்கிறோம். முதலில் சிறிது அசவுகரியமாக இருந்தாலும் உயிர்பாதுகாப்பிற்கு முக்கியம் என்பதால் பழகிக்கொள்ள வேண்டும். அதுபோலவே முன் இருக்கையில் அமர்பவர்தான் கட்டாயமாக சீட்பெல்ட் அணிய வேண்டும் பின் இருக்கைகளில் பயணம் செய்வோருக்கு அது தேவையில்லை என்று பலர் கருதுகின்றனர். இதுவும் தவறு. பின் இருக்கையில் பயணம் செய்வோர் விபத்து ஏற்படும்போது முன் இருக்கையில் மோதிக்கொள்ள நேரிடும், அதனால் பெரும் காயமோ, உயிர்ச்சேதமோ ஆகலாம்.

    அது போலவே பயணியர் பலர் பின் இருக்கையில் நன்றாகச் சாய்ந்து படுத்துத் தூங்கிக்கொண்டு செல்வதும் வாடிக்கையாகும். இது சரியான செயல் அல்ல. பின் இருக்கையில் பயணம் செய்வோரும் சீட்பெல்ட் அணிந்துகொண்டு அமர்ந்தவாறே பயணம் செய்வதுதான் சரியானதாகும். தூக்கம் வந்தாலும் சீட்பெல்ட் அணிந்து கொண்டு அமர்ந்தவாறே தூங்குவதுதான் நல்லது. ஏனெனில் படுத்துக்கொண்டு பயணிக்கும்போது விபத்து ஏற்பட்டால் வண்டி பக்கவாட்டில் இடிபடும்போது பயணியிக்குத் தலைக்காயம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். பெரும்பாலும் தலைக்காயங்களால் மரணம் ஏற்படும் வாய்ப்பும் அதிகம்.

    இரண்டாவதாக பாதுகாப்பு காற்றுப்பை. இது ஒரு கூடுதல் பாதுகாப்புச் சாதனம். கார் வாங்கும்போது ஓட்டுநர் மற்றும் பயணியருக்கான கூடுதல் பாதுகாப்பாக காற்றுப்பை இருக்கும் வண்டியை வாங்குவது நல்லது. விபத்து நடக்கும்போது காற்றுப் பைகள் தாமாகவே விரிந்துகொள்ளும். அதனால் பயணி வண்டியின் முன்பக்கத்திலோ அல்லது பக்கவாட்டிலோ இடித்துக்கொள்ள நேரிட்டாலும் காற்றுப்பையிலேயே மோதுவார். அது ஒரு தலையணையைப் போல மிருதுவாக இருப்பதால் பெரும் காயமோ உயிர்ச்சேதமோ ஏற்படுவதில்லை.



    என்னுடைய காரில் கூடுதல் பாதுகாப்புக் காற்றுப் பை உள்ளதால் சீட்பெல்ட் அணியாவிட்டால் ஒன்றும் ஆகாது என்றும் பலர் எண்ணுகின்றனர். அது தவறு. சீட்பெல்ட் அணிந்துகொண்டு அமரும் போதுதான் இந்தப் பாதுகாப்பு முழுமையாகக் கிட்டும். சீட்பெல்ட் அணியாமல் அமரும் போது காற்றுப்பை வெளிவந்து விரியும் வேகத்தோடு அதன்மீது மோதினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிர்ச்சேதமாகும் வாய்ப்பு அதிகம். காரிலுள்ள காற்றுப்பைக் கூடுதல் பாதுகாப்புச் சாதனம்தான்.

    மூன்றாவதாக ஹெட்ரெஸ்ட் எனப்படும் தலை தாங்கி அணை. பெரும்பாலும் இதன் முக்கியத்துவம் சரியாக உணரப்படுவதில்லை. ஹெட்ரெஸ்ட் கழுத்துக்கும், தண்டுவடத்துக்கும் பெரும் பாதுகாப்பை அளிக்கிறது. வண்டியில் ஓட்டுநர் மற்றும் பயணியின் உயரத்துக்கேற்ப ஹெட்ரெஸ்டைச் சரியான அளவில் பொருத்திக்கொள்ளுதல் அவசியம்.

    விபத்து நேரத்தில் பயணியின் தலைப் பின்பக்கமாகச் சாயநேரிடும். வண்டியின் வேகத்தையும் மோதலின் தீவிரத்தையும் பொருத்து தலை பின்பக்கமாக சாயும் வேகம் அதிகரிக்கலாம். அதனால் கழுத்துப்பகுதியில் பெரும் காயமோ அல்லது கழுத்துமுறிவோ ஏற்படலாம். கழுத்துமுறிவினால் நிச்சயம் மரணம் ஏற்படும். ஹெட்ரெஸ்ட் சரியாகப் பொருந்தியிருந்தால் இதனைத் தடுக்கலாம். ஆனால் 90 சதவீத ஓட்டுனர்கள் இந்த விஷயத்தில் அலட்சியமாக இருக்கிறார்கள். பயணிகளுக்கோ இதுகுறித்த புரிதல் இல்லவேயில்லை என்பது வருத்தமளிக்கும் விஷயமாகும்.

    வண்டியிலுள்ளப் பாதுகாப்பு சாதனங்களைப்பற்றி நன்றாக அறிந்துகொள்வதும், அவற்றைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வதும் அவசியமாகும். சீட்பெல்ட் அணியாமல் பயணிப்பது குற்றம் என்றும் அதற்கு அபராதம் விதிக்கப்படுகிறது என்றாலும் சட்டத்தால் மட்டுமே விபத்துகளைத் தடுத்துவிடமுடியாது. என்னதான் சட்டமிருந்தாலும் பொறுப்பான பயணமே பாதுகாப்பான பயணம் என்பதை நாம் உணர்ந்து நடக்காதவரையிலும் விபத்துகளையும் உயிரிழப்புக்களையும் தடுக்க முடியாது.

    சோ. கணேச சுப்ரமணியன், கல்வியாளர்
    தீக்காயத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு முதலுதவி என்பது முக்கியமானது. தீக்காயம் அடைந்தவர்களுக்கு எப்படி? முதலுதவி அளிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
    தீக்காயத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு முதலுதவி என்பது முக்கியமானது. அதுவே காயத்தின் வீரியத்தை கட்டுக்குள் வைப்பதற்கு உதவும் முதல் கட்ட சிகிச்சையாகும். தீக்காயம் அடைந்தவர்களுக்கு எப்படி? முதலுதவி அளிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

    விபத்துகளின் மூலமாக ஏற்படும் காயத்திற்கும், தீக்காயத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதால் இரண்டுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சையை நாமாகவே எடுத்துக்கொள்ளக் கூடாது.

    தீப்புண்ணில் கிருமிகள் தொற்று ஏற்படும் ஆபத்து அதிகம். எனவே அசுத்தம் மற்றும் கிருமிகள் புண்ணில் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கடுமையான தீக்காயங்களுக்கு அதன்மீது காற்றுப்படாமல் மூடி பாதுகாக்க வேண்டும். இது வலியை குறைக்கும்.

    தீ விபத்தில் உடலின் மீது துணி ஒட்டிக் கொண்டிருந்தால் அவசரப்பட்டு அந்த துணியை அகற்றக் கூடாது. தீக்காயங்கள் அதிகம் ஏற்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். மண்எண்ணெய், பெட்ரோல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களால் தீ விபத்து நிகழ்ந்தால் அங்கே தண்ணீர் ஊற்றக் கூடாது. மீறி ஊற்றினால் அது எரிகின்ற எண்ணெயை மேலும் பரவச் செய்துவிடும்.



    ஒருவரின் ஆடையில் தீப்பற்றி விட்டால் உடனே தண்ணீரை அவர் மேல் ஊற்றி தீயைப் பரவவிடாமல் அணைக்கலாம். அல்லது கம்பளி, ஜமுக்காளம் போன்ற தடிமனான துணியைக் பாதிக்கப்பட்டவர் மீது போர்த்தி அவர்களை தரையில் உருளச் செய்தாலும் தீ அணைந்து விடும். வீடுகளில் சமைக்கும்போது கொதிக்கும் வெந்நீர் அல்லது எண்ணெய் கைதவறி உடம்பில்பட வாய்ப்பு உண்டு. இதனால் தோல் வெந்து கடும் எரிச்சல் ஏற்படும். இம்மாதிரியான சமயங்களில் பாதிக்கப்பட்ட இடத்தில் ரசாயன கலவையான பேனா மை, காபித்தூள் போன்றவைகளை பூசக் கூடாது. இது மேலும் புண்களில் நோய்த் தொற்றுக்கு வழிவகுக்கும். தீக்காயத்தால் ஏற்பட்ட கொப்பளங்களை கூரிய பொருட்களால் குத்தி உடைப்பது தவறானது. இதுவும் நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும்.

    தீக்காயத்தை மூன்று வகையாக பிரிக்கலாம். மேல்தோல் மட்டும் சிவந்துவிடுதல் முதல் நிலை பாதிப்பு, தோலின்மேல் கொப்புளங்கள் உண்டாவது இரண்டாம் நிலை, மேல்தோல், கீழ்தோல், அதற்கு அடியில் உள்ள திசுக்கள் வரையிலும் ஆழமாகத் தீயால் கருகிவிடுவதை மூன்றாம் நிலை என்கிறார்கள். தீப்பிடித்தவர் பதற்றத்தில் அங்கும் இங்குமாக ஓடினால் தீயின் வேகம் கூடி பாதிப்பு அதிகரிக்கும். ஆகவே பதற்றப்படாமல் கவனமாக அவரை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்.

    பாதிக்கப்பட்டவரின் உடம்பில் சுத்தமான காற்றுபடுமாறு பார்த்துக் கொள்வது நல்லது. ஒரு போதும் தீக்காயத்தின் மீது சோப்பு உபயோகித்து கழுவக்கூடாது. எண்ணெய் மற்றும் அமிலத்தால் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலை உபயோகித்து நெருப்பை அணைக்க முயலுங்கள். மற்ற தீவிபத்துகளை நீரூற்றி அணைக்க முயற்சி செய்யுங்கள். தீ விபத்துகளின்போது அதில் சிக்கியவர்களை மீட்பது குறித்தும், காயம் அடைந்தவர்களுக்கு முதலுதவி அளிப்பது குறித்தும்  விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 
    தீக்காயத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு முதலுதவி என்பது முக்கியமானது. தீக்காயம் அடைந்தவர்களுக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.

    தீக்காயத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு முதலுதவி என்பது முக்கியமானது. அதுவே காயத்தின் வீரியத்தை கட்டுக்குள் வைப்பதற்கு உதவும் முதல்கட்ட சிகிச்சையாகும். தீக்காயம் அடைந்தவர்களுக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.

    * விபத்துகளின் மூலமாக ஏற்படும் காயத்திற்கும், தீக்காயத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதால், இரண்டுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சையை நாமாகவே எடுத்துக்கொள்ளக்கூடாது.

    * தீப்புண்ணில் கிருமிகள் தொற்று ஏற்படும் ஆபத்து அதிகம். எனவே பிறர் கைகளில் உள்ள அசுத்தம் மற்றும் கிருமிகள் தாக்குதல் புண்ணில் படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

    * கடுமையான தீக்காயங்களுக்கு அதன் மீது காற்றுப்படாமல் மூடி பாதுகாக்க வேண்டும். இது வலியை குறைக்கும்.

    * தீ விபத்தில் உடலின் மீது துணி ஒட்டிக்கொண்டிருந்தால் அவசரப்பட்டு அந்தத் துணியை அகற்றக்கூடாது.

    * தீக்காயங்கள் அதிகம் ஏற்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    * மண்எண்ணெய், பெட்ரோல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களால் தீ விபத்து நிகழ்ந்தால் அங்கே தண்ணீர் ஊற்றக்கூடாது. மீறி ஊற்றினால் அது எரிகின்ற எண்ணெய்யை மேலும் பரவச் செய்து விடும்.


    * ஒருவரின் ஆடையில் தீப்பற்றிவிட்டால், உடனே தண்ணீரை அவர் மேல் ஊற்றி தீயைப் பரவவிடாமல் அணைக்கலாம். அல்லது கம்பளி, ஜமுக்காளம் போன்ற தடிமனானத் துணியைக்கொண்டு பாதிக்கப்பட்டவர் மீது போர்தி தரையில் உருளச்செய்தாலும் தீ அணைந்துவிடும்.

    * வீடுகளில் சமைக்கும்போது கொதிக்கும் வெந்நீர் அல்லது எண்ணெய் கைத்தவறி உடம்பில் பட வாய்ப்பு உண்டு. இதனால் தோல் பாகம் வெந்து கடும் எரிச்சல் ஏற்படும். இம்மாதிரியான சமயங்களில், பாதிக்கப்பட்ட இடத்தில் ரசாயனக் கலவையான பேனா மை, காபி பொடி போன்றவைகளை பூசக்கூடாது. இது மேலும் புண்களில் நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும்.

    * தீக்காயத்தை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். மேல் தோல் மட்டும் சிவந்துவிடுதல் முதல்நிலைப் பாதிப்பு, தோலின் மேல் கொப்புளங்கள் உண்டாவது இரண்டாம் நிலை, மேல் தோல், கீழ் தோல், அதற்கு அடியில் உள்ள திசுக்கள் வரையிலும் ஆழமாகத் தீயால் கருகிவிடுவதை மூன்றாம்நிலை என்கிறார்கள்.

    * தீப்பிடித்தவர் பதற்றத்தில் அங்கும் இங்குமாக ஓடினால் தீயின் வேகம் கூடி பாதிப்பு அதிகரிக்கும். ஆகவே, பதற்றப்படாமல் கவனமாக அவரை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்.

    * பாதிக்கப்பட்டவரின் உடம்பில் சுத்தமான காற்றுபடுமாறு பார்த்துக்கொள்வது நல்லது. ஒருபோதும் தீக்காயத்தின் மீது சோப் உபயோகித்து கழுவது கூடாது.

    * அமிலத்தால் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலை உபயோகித்து நெருப்பை அணைக்க முயலுங்கள். மற்ற தீ விபத்துகளை நீருற்றி அணைக்க முயற்சி செய்யுங்கள். 
    தீக்காயத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு முதலுதவி என்பது முக்கியமானது. தீக்காயம் அடைந்தவர்களுக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.
    தீக்காயத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு முதலுதவி என்பது முக்கியமானது. அதுவே காயத்தின் வீரியத்தை கட்டுக்குள் வைப்பதற்கு உதவும் முதல்கட்ட சிகிச்சையாகும். தீக்காயம் அடைந்தவர்களுக்கு எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.

    விபத்துகளின் மூலமாக ஏற்படும் காயத்திற்கும், தீக்காயத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதால், இரண்டுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சையை நாமாகவே எடுத்துக் கொள்ளக்கூடாது.

    தீப்புண்ணில் கிருமிகள் தொற்று ஏற்படும் ஆபத்து அதிகம். எனவே பிறர் கைகளில் உள்ள அசுத்தம் மற்றும் கிருமிகள் தாக்குதல் புண்ணில் படாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.

    கடுமையான தீக்காயங்களுக்கு அதன் மீது காற்றுப்படாமல் மூடி பாதுகாக்க வேண்டும். இது வலியை குறைக்கும்.

    தீ விபத்தில் உடலின் மீது துணி ஒட்டிக் கொண்டிருந்தால் அவசரப்பட்டு அந்தத் துணியை அகற்றக் கூடாது.

    தீக்காயங்கள் அதிகம் ஏற்பட்டிருந்தால் பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

    மண்எண்ணெய், பெட்ரோல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களால் தீ விபத்து நிகழ்ந்தால் அங்கே தண்ணீர் ஊற்றக்கூடாது. மீறி ஊற்றினால் அது எரிகின்ற எண்ணெய்யை மேலும் பரவச் செய்துவிடும்.

    ஒருவரின் ஆடையில் தீப்பற்றிவிட்டால், உடனே தண்ணீரை அவர் மேல் ஊற்றி தீயைப் பரவவிடாமல் அணைக்கலாம். அல்லது கம்பளி, ஜமுக்காளம் போன்ற தடிமனானத் துணியைக்கொண்டு பாதிக்கப்பட்டவர் மீது போர்த்தி தரையில் உருளச் செய்தாலும் தீ அணைந்துவிடும்.

    வீடுகளில் சமைக்கும்போது கொதிக்கும் வெந்நீர் அல்லது எண்ணெய் கைத்தவறி உடம்பில் பட வாய்ப்பு உண்டு. இதனால் தோல் பாகம் வெந்து கடும் எரிச்சல் ஏற்படும். இம்மாதிரியான சமயங்களில், பாதிக்கப்பட்ட இடத்தில் ரசாயனக் கலவையான பேனா மை, காபி பொடி போன்றவைகளை பூசக்கூடாது. இது மேலும் புண்களில் நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும்.

    தீக்காயத்தால் ஏற்பட்ட கொப்புளங்களைக் கூரிய பொருட் களால் குத்தி உடைப்பதும் தவறானது. இதுவும் நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும்.

    தீக்காயத்தை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். மேல் தோல் மட்டும் சிவந்துவிடுதல் முதல் நிலைப் பாதிப்பு. தோலின் மேல் கொப்புளங்கள் உண்டாவது இரண்டாம் நிலை. மேல் தோல், கீழ் தோல், அதற்கு அடியில் உள்ள திசுக்கள் வரையிலும் ஆழமாகத் தீயால் கருகிவிடுவதை மூன்றாம் நிலை என்கிறார்கள்.

    தீப்பிடித்தவர் பதற்றத்தில் அங்கும் இங்குமாக ஓடினால், தீயின் வேகம் கூடி பாதிப்பு அதிகரிக்கும். ஆகவே, பதற்றப் படாமல் கவனமாக அவரை காப்பாற்ற முயற்சிக்க வேண்டும்.

    பாதிக்கப்பட்டவரின் உடம்பில் சுத்தமான காற்று படுமாறு பார்த்துக்கொள்வது நல்லது. ஒருபோதும் தீக்காயத்தின் மீது சோப் உபயோகித்து கழுவது கூடாது.

    எண்ணெய் மற்றும் அமிலத்தால் ஏற்பட்ட தீ விபத்துகளுக்கு மணலை உபயோகித்து நெருப்பை அணைக்க முயலுங்கள். மற்ற தீவிபத்துகளை நீரூற்றி அணைக்க முயற்சி செய்யுங்கள். 
    ×