search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "firecrackers"

    விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக தர்மபுரி மாவட்டம் முழுவதும் மொத்தம் 66 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    தர்மபுரி:

    தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்.

    அதிக ஒலி மாசு ஏற்படுத்தும் வகையைச் சேர்ந்த பட்டாசுகளான சரவெடிகள் உள்ளிட்ட பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் ஆகிய இடங்களின் அருகேயும் பட்டாசுகள் வெடிக்க கூடாது. குடிசைகள் அதிகம் உள்ள பகுதி, எளிதில் தீப்பற்றக்கூடிய பகுதி போன்ற இடங்களிலும் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை தர்மபுரி மாவட்டம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் பொதுமக்கள் நேற்று சிறப்பாக கொண்டாடினர். இதனிடையே அரசு வைத்துள்ள விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக மாவட்டம் முழுவதும் மொத்தம் 66 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி உட்கோட்ட போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 27 பேர் மீதும், அரூர் உட்பட்ட பகுதியில் 18 பேர் மீதும், பென்னாகரம் உட்பட்ட பகுதியில் 13 பேர் மீதும், பாலக்கோடு உட்பட்ட பகுதியில் 8 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த வருடம் பட்டாசு விபத்து குறைந்துள்ளது. 3 பேருக்கு முகத்தில் லேசான காயமும், ஒரு சிலருக்கு கைகளில் காயமும் ஏற்பட்டுள்ளது.
    சென்னை:

    தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின்போது பட்டாசு முக்கிய அங்கமாக இருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்வது உண்டு.

    ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியன்று பட்டாசுகளை வெடிக்கும்போது தீக்காயங்கள் ஏற்படுவது வழக்கம்.

    தீக்காயத்தினால் பாதிக்கப்படுபவர்களுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் அமைக்கப்பட்டு இருந்தன.

    இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தின்போது சென்னையில் 15 பேர் தீக்காயம் அடைந்தனர். இதில் 5 பேர் சிறுவர்கள் ஆவார்கள். கை, கால், முகம் போன்றவற்றில் லேசான காயங்களுடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர்.

    இதுகுறித்து மருத்துவமனை டீன் சாந்திமலர் கூறியதாவது:-

    நேற்று இரவு வரை 15 பேர் தீக்காயம் அடைந்து அனுமதிக்கப்பட்டனர். இதில் புறநோயாளிகளாக 11 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். 4 பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த வருடம் பட்டாசு விபத்து குறைந்துள்ளது. 3 பேருக்கு முகத்தில் லேசான காயமும், ஒரு சிலருக்கு கைகளில் காயமும் ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    நாமக்கல் மாவட்டத்தில் அரசு உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 30-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
    சேலம்:

    தீபாவளி பண்டிகையையொட்டி காற்று மாசு ஏற்படுவதை தடுக்க காலை மற்றும் மாலை நேரங்களில் தலா 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. மற்ற நேரங்களில் பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    சேலம் மாவட்டத்தில் அனுமதியில்லாத நேரங்களில் பட்டாசு வெடிப்பவர்களை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் மேற்பார்வையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதையடுத்து சேலம் புறநகர் மாவட்டத்தில் நேற்று அனுமதியில்லாத நேரத்தில் பட்டாசு வெடித்த 32 பேர் போலீசாரிடம் சிக்கினர். அவர்கள் மீது தடையை மீறி பட்டாசு வெடித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதேபோல் சேலம் மாநகரில் போலீஸ் கமி‌ஷனர் நஜ்மல்கோடா உத்தரவின் பேரில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது மாநகரில் அனுமதி அளித்த நேரம் தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்த 35 மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் அரசு உத்தரவை மீறி பட்டாசு வெடித்த 30-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    புதுவையில் அதிக திறன் கொண்ட பட்டாசு வெடித்த 32 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    புதுவை:

    புதுவை சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உச்சநீதிமன்ற உத்தரவின்படி அதிக திறன் கொண்ட பட்டாசுகளை வெடிக்கக் கூடாது மற்றும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் இந்த தடையை மீறி புதுவையில் அதிக திறன் கொண்ட பட்டாசு வெடித்த 32 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.
    முசாபர்பூர்:

    தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் பட்டாசு வெடிப்பதில் இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மோதலாக மாறியது. சிவ காலனியில் நேற்று மாலை ஏற்பட்ட இந்த மோதலின்போது கற்களை வீசி கடுமையாக தாக்கிக்கொண்டனர். 

    இதில் 2 நபர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

    இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 
    யாரெல்லாம் காற்று மாசுபாடு குறித்து கவலை கொள்கிறீர்களோ, நீங்கள் பட்டாசு வெடிக்கும் ஆனந்தத்தை தியாகம் செய்துவிடுங்கள் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறியுள்ளார்.
    கோவை:

    “தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்க தடை விதிக்க கூடாது” என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "குழந்தைகளுக்கு பட்டாசுகள் அளித்திடும் சந்தோஷத்தை மறுக்க காற்றுமாசு ஒரு காரணமல்ல. நீங்கள் அவர்களுக்காக செய்யும் தியாகமாக, 3 நாட்களுக்கு அலுவலகத்திற்கு நடந்து செல்லுங்கள். குழந்தைகள் பட்டாசு வெடித்து மகிழட்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், அந்த ட்வீட்டுடன் சேர்த்து வெளியிட்டுள்ள வீடியோவில், "நான் பட்டாசுகள் வெடிப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், நான் சிறுவனாக இருந்த போது பட்டாசு வெடிப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான ஒரு செயலாக இருந்தது. நாங்கள் செப்டம்பர் மாதத்தில் இருந்தே பட்டாசுகள் பற்றி கனவு காண தொடங்கிவிடுவோம். தீபாவளி பண்டிகை முடிந்த பிறகும் ஓரிரு மாதங்களுக்கு அந்த பட்டாசுகளை பத்திரப்படுத்தி தினமும் வெடித்து மகிழ்வோம்.

    ஆனால், இப்போது என்னவென்றால், சுற்றுச்சூழல் மீது திடீர் அக்கறை காட்டும் சிலர் குழந்தைகள் பட்டாசு வெடிக்க கூடாது என கூறுகிறார்கள். இது சரியல்ல. 

    யாரெல்லாம் காற்று மாசுபாடு குறித்து கவலை கொள்கிறீர்களோ, நீங்கள் பட்டாசு வெடிக்கும் ஆனந்தத்தை தியாகம் செய்துவிடுங்கள். வேண்டுமென்றால், பெரியவர்கள் பட்டாசுகள் வெடிப்பதை நிறுத்திவிடுங்கள். ஆனால், குழந்தைகள் பட்டாசுகள் வெடித்து ஆனந்தமாக இருக்கட்டும். அவர்களுக்காக, நீங்கள் உங்கள் அலுவலகங்களுக்கு 3 நாட்கள் வாகனங்களில் செல்வதற்கு பதிலாக நடந்து செல்லுங்கள்" என்று கூறியுள்ளார்.

    அவரது தீபாவளி வாழ்த்து செய்தியில், "அன்பிலும், ஆனந்தத்திலும், விழிப்புணர்விலும் நீங்கள் ஒளிர்வது, உங்களை இருளில் தள்ளக்கூடிய இக்கட்டான் காலங்கட்டங்களில் மிக அவசியம். இந்த தீபாவளி திருநாளில், உங்கள் மனிதத் தன்மையை அதன் முழு சிறப்புடன் ஒளிரச் செய்திடுங்கள்” என தெரிவித்துள்ளார்.
    எஸ்.வாழவந்தியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள், நாட்டு வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள எஸ்.வாழவந்தி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அனுமதி இன்றி பட்டாசுகள் மற்றும் நாட்டு வெடிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருள்அரசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அவர் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமிக்கு உத்தரவிட்டார்.

    அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி தலைமையில் பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் எஸ்.வாழவந்தி கிராமத்திற்கு சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி (வயது42) என்பவர் வீட்டில் பட்டாசுகள் மற்றும் நாட்டு வெடிகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் பொன்னுசாமியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் நாமக்கல் மாவட்டம் வேட்டாம்பாடி கிராமத்தில் இருந்து பட்டாசுகள் மற்றும் நாட்டு வெடிகளை உரிய அனுமதியின்றியும், பாதுகாப்பு இன்றியும் பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் பதுக்கி வைத்து இருந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசு, தோரண வெடிகள் மற்றும் நாட்டு வெடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன்னுசாமியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர் மாவட்டங்களில் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    பெரம்பலூர்:

    தீபாவளி பண்டிகையின் போது 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி தமிழ்நாட்டில் தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு நேரம் நிர்ணயித்தது. இந்த உத்தரவை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோளும் விடுத்திருந்தது.

    தீபாவளி அன்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ. ஆயிரம் அபராதம் அல்லது இரண்டு சேர்த்து விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் போலீசார் சார்பில் இதுதொடர்பாக கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தீபாவளி அன்று பெரம்பலூர் கணபதி நகரில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறி மதியம் பட்டாசு வெடித்ததாக, அதே பகுதியை சேர்ந்த முருகேசன் (வயது 35), சங்கர்(22) ஆகிய 2 பேர் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதே போல் பெரம்பலூர் மாவட்டத்தில் தீபாவளி அன்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை மீறியும், தமிழக அரசு பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவும், பின்பாகவும் பட்டாசு வெடித்ததாகவும் பாடாலூர், அரும்பாவூர், கை.களத்தூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் தலா 2 பேர் மீதும், மங்களமேடு, வி.கைகாட்டி, குன்னம் ஆகிய போலீஸ் நிலையங்களில் தலா ஒருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கோர்ட்டு உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக மொத்தம் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக நெல்லை மாவட்டத்தச் சேர்ந்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். #Tirunelveli #Diwali
    நெல்லை:

    காற்று மாசுபாட்டை தடுப்பதற்கான நடவடிக்கையாக தீபாவளி தினத்தன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, காலை 6 முதல் 7 மணி வரையிலும், மாலை 7 முதல் 8 மணி வரையிலும் வெடி வெடிக்கலாம் என தமிழக அரசு நேரத்தை நிர்ணயித்து இருந்தது.

    இந்த நேரத்தில் அல்லாமல் மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தால் 6 மாதம் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.



    இந்நிலையில், நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி பகுதியைச் சேர்ந்த 6 பேர் அனுமதிக்கப்படாத நேரத்தில் வெடி வெடித்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதேபோல், சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் அனுமதிக்கப்படாத நேரத்தில் வெடிவெடித்ததாக 78 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Tirunelveli #Diwali
    மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. சிந்தாமணி மாளவியா, ‘நான் தீபாவளி அன்று இரவு 10 மணிக்கு மேல் தான் பட்டாசு வெடிப்பேன்’ என தெரிவித்துள்ளார். #BJP #ChintamaniMalviya #FireCrackers
    போபால்:

    தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது.

    இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. சிந்தாமணி மாளவியா, ‘நான் தீபாவளி அன்று இரவு 10 மணிக்கு மேல் தான் பட்டாசு வெடிப்பேன்’ என தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் தீபாவளி பண்டிகையை பாரம்பரிய முறைப்படி கொண்டாடுவேன். இரவு 10 மணிக்கு லட்சுமி பூஜை முடிந்த பிறகே பட்டாசுகள் வெடிப்பேன். இந்து பாரம்பரியங்களில் பிறரின் தலையீட்டை நான் சகித்துக்கொள்ள மாட்டேன். என் மத பாரம்பரியத்தை கடைப்பிடிப்பதற்காக சிறை செல்வதாக இருந்தாலும், அதற்காக சந்தோஷப்படுவேன். இந்து விழாக்களை எப்போது கொண்டாட வேண்டும் என்பதற்கு ஏற்கனவே இந்து நாட்காட்டி உள்ளது. விழாக்களை நடத்த கால நேரம் நிர்ணயம் விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. முகலாயர்கள் ஆட்சியின் போது கூட, இந்து விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டது இல்லை.

    இவ்வாறு சிந்தாமணி மாளவியா கூறி உள்ளார். 
    தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை அனைவரும் ஒரே சமயத்தில் பட்டாசு வெடிப்பதால் காற்றில் மாசு அதிகமாகும். புகை மண்டலம் வழக்கத்தை விட அதிகரிக்கும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #Deepavali
    சிவகாசி:

    தீபாவளியன்று இரவில் 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து பட்டாசு தொழிலாளர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    சிவகாசியை சேர்ந்த தொழிலாளி சுந்தரமூர்த்தி கூறியதாவது:-

    தற்போது பருவமழை சீசன் உள்ளது. தீபாவளியன்று இரவு நேரத்தில் மழை பெய்தால் பட்டாசுகளை வெடிக்க முடியாமல் போய்விடும். தீபாவளி பண்டிகை என்பது தீமையை அழித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் தினமாகும். தீபாவளி அன்று பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்த இரவு வரை காத்திருக்க வேண்டும் என்பது நடைமுறைக்கு சாத்தியமல்ல.

    மேலும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை அனைவரும் ஒரே சமயத்தில் பட்டாசு வெடிப்பதால் காற்றில் மாசு அதிகமாகும். புகை மண்டலம் வழக்கத்தை விட அதிகரிக்கும் என்றார்.



    பிரபு என்பவர் கூறுகையில், பட்டாசு தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 5 லட்சம் தொழிலாளர்கள் பயன் அடைந்து வருகிறார்கள். விருதுநகர் மாவட்டம் பட்டாசு தொழிலை நம்பித்தான் உள்ளது. இதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கிறது.

    இதனால் அரசு வேலையை எதிர்பார்க்காமல் இளைஞர்கள் பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். உழைப்பாளிகளை உருவாக்கும் தொழிலாக பட்டாசு தொழில் உள்ளது. எனவே தீபாவளியன்று பட்டாசு வெடிக்க அதிக நேரம் கொடுக்க வேண்டும். இந்த தொழிலை பாதுகாப்பதுடன் அதன் வளர்ச்சிக்கு தமிழக அரசு உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Deepavali

    தீபாவளி மற்றும் பிற பண்டிகை நாட்களில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. #FirecrackersSale #SupremeCourt
    புதுடெல்லி:

    காற்று மாசு அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த, பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு நாடு முழுவதும் தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் பட்டாசு விற்பனை மற்றும் உற்பத்திக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

    அதேசமயம், பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளை விதித்துள்ளனர். அந்த நிபந்தனைகள் வருமாறு:-

    ஆன்லைன் மூலம் பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. மாசு குறைவாக இருக்கும் பட்டாசுகளை மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய வேண்டும்.


    தீபாவளி மற்றும் பிற பண்டிகை நாட்களில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

    அதிகளவிலான சத்தம் மற்றும் மாசு ஏற்படுத்தும் பட்டாசுகள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அங்கீகாரம் இல்லாத கடைகளில் பட்டாசுகள் விற்பனை செய்யக்கூடாது.

    தடை செய்யப்பட்ட பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டால், அந்தந்த பகுதியில் உள்ள காவல்நிலைய அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். #FirecrackersSale #SupremeCourt
    ×