search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டாசு வெடிப்பு
    X
    பட்டாசு வெடிப்பு

    தர்மபுரி மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 66 பேர் மீது வழக்குப்பதிவு

    விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக தர்மபுரி மாவட்டம் முழுவதும் மொத்தம் 66 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    தர்மபுரி:

    தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்.

    அதிக ஒலி மாசு ஏற்படுத்தும் வகையைச் சேர்ந்த பட்டாசுகளான சரவெடிகள் உள்ளிட்ட பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள் ஆகிய இடங்களின் அருகேயும் பட்டாசுகள் வெடிக்க கூடாது. குடிசைகள் அதிகம் உள்ள பகுதி, எளிதில் தீப்பற்றக்கூடிய பகுதி போன்ற இடங்களிலும் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

    இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை தர்மபுரி மாவட்டம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் பொதுமக்கள் நேற்று சிறப்பாக கொண்டாடினர். இதனிடையே அரசு வைத்துள்ள விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததாக மாவட்டம் முழுவதும் மொத்தம் 66 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி உட்கோட்ட போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 27 பேர் மீதும், அரூர் உட்பட்ட பகுதியில் 18 பேர் மீதும், பென்னாகரம் உட்பட்ட பகுதியில் 13 பேர் மீதும், பாலக்கோடு உட்பட்ட பகுதியில் 8 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×