search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "feat"

    • கடலூர் மாநகரம் திருப்பாதிரிப்புலியூர் பகுதி தி.மு.க. சார்பில் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வண்டிப்பாளையம் சூரசம்ஹார வீதியில் நடந்தது.
    • கூட்டத்துக்கு பகுதி செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்முருகன், மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகரம் திருப்பாதிரிப்புலியூர் பகுதி தி.மு.க. சார்பில் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் வண்டிப்பாளையம் சூரசம்ஹார வீதியில் நடந்தது. கூட்டத்துக்கு பகுதி செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்முருகன், மாரி யப்பன் ஆகியோர் முன்னி லை வகித்தனர். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர் சேலம் சுஜாதா, அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மாவட்ட அவை தலைவர் தங்கராசு, மாநகர செயலாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு, அரசின் 2 ஆண்டுகள் சாதனைகள் குறித்து விளக்கி பேசினர்.   இதில் மண்டலக்குழு தலைவர் சங்கீதா செந்தில் முருகன், மாநகராட்சி கவுன்சிலர்கள் சாய்துன்னிஷா சலீம், சசிகலா, விஜயலட்சுமி செந்தில், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள் அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், பகுதி துணை செயலாளர்கள் ஜெயசீலன், சாமுவேல், ரகுராமன், வட்ட செயலாளர் குப்பு ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் வட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

    • தி.மு.க. சாதனை விளக்க கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பதாக மாவட்ட செயலாளர் மணிமாறன் தெரிவித்தார்.
    • வார்டு மற்றும் கிளை செயலாளர்கள் அனைவரும் கலந்துகொள்கிறார்கள்

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடி அருகில் உள்ள கலைஞர் திடலில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக கூட்டம் இன்று மாலை நடக்கிறது.

    மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் தலைமை தாங்குகிறார். இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

    கூட்டத்தில் மதுரை தெற்கு மாவட்ட நிர்வாகி கள், மாநில தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில அணி நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் மற்றும் வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், அனைத்து அணிகளின் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள், வார்டு மற்றும் கிளை செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள்

    இந்த தகவலை தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரத்தில் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை கலெக்டர் திறந்து வைத்தார்.
    • ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பிரபாகரன், சித்தார்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் முஸ்தாரி ஷாஜகான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் சித்தார் கோட்டையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் "ஓயா உழைப்பின் ஓராண்டு கடைகோடி தமிழர்களின் கனவுகளை தாங்கி" அரசின் சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சி நடந்தது. கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கி கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் அதிநவீன மின்னணு வாகனம் மூலம் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க திரைப்படம் பொதுமக்கள் பார்க்கும் வகையில் திரையிடப்பட்டது.

    இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார், மாவட்ட வன அலுவலர் பகான் ஜெகதீஷ் சுதாகர், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், , உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன், செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) வினோத், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பிரபாகரன், சித்தார்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் முஸ்தாரி ஷாஜகான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தொடர்ந்து இரண்டு மணி நேரம் பல்வேறு வகையான சிலம்பம் சுற்றி உலக சாதனை.
    • 6 முதல் 60 வயது வரை உள்ள சிலம்பம் கற்றவர்கள் ஒரே இடத்தில் கூடி இம்மாபெரும் உலக சாதனையை நிகழ்த்தினர்.

    சீர்காழி:

    சீர்காழியில் பழமை வாய்ந்த வீரத்தமிழர் சிலம்பாட்டக் கழகம் இயங்கி வருகிறது.

    இதன் நிறுவனர் மற்றும் பயிற்றுநராக சிலம்பாட்ட ஆசான் சுப்ரமணியன் இருந்து வருகிறார்.

    இம்மாணவர்கள் தமிழகம், வெளிமாநிலம் உட்பட வெளிநாட்டுகளிலும் சிம்பாட்ட போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை பெற்றுள்ளனர்.

    இந்நிலையில் வீரத்தமிழர் சிலம்பாட்ட சார்பாக மாபெரும் உலக சாதனை நிகழ்ச்சி தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

    இதில் வீரத்தமிழர் சிலம்பாட்ட கழக மாணவ, மாணவிகள் யோகேஸ்வரன் 3 விதமான ஆயுதம் 6 மணிநேரம் சுற்றியும், கலைமொழி, இனியவளவன், நித்திஸ், அண்டரசன், ஸ்ரீநிவாஸ், கிஷோர், விமல் உள்ளிட்ட 25 பேர் தனிநபர் உலக சாதனை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

    6 மணி நேரம் முதல் 24 மணிநேரம் வரை ஒற்றைக்கம்பு, இரட்டை கம்பு, வாள் வீச்சு, சுருள்வாள், வேல் கம்பு, கரலாக்கட்டை உள்ளிட்ட ஆறு வகையான ஆயுதங்களை பயன்படுத்தி உலக சாதனை செய்தனர்.

    மேலும் தமிழகம் முழுவதும் இருந்து 340 சிலம்பாட்ட மாணவ, மாணவிகள் தொடர்ந்து இரண்டு மணி நேரம் பல்வேறு வகையான சிலம்பம் சுற்றி உலக சாதனை செய்தனர்.

    குறிப்பாக 6 வயது சிறுவன் முதல் 60 வயது வரை சிலம்பம் கற்றவர்கள் ஒரே இடத்தில் கூடி இம்மாபெரும் உலக சாதனையை நிகழ்த்தினர்.

    இவர்களின் சாத னையை ஜாக்கி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அமைப்பை சேர்ந்த ஜேக்கப்ஞா னசெல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு அங்கீகரித்து சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினர்.

    அப்போது வீரத்தமிழர் சிலம்பாட்ட கழக கௌர வத்தலைவர் சரண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • தென்னிந்திய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் மதுரை மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • தென்னிந்திய அளவிலான சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டிகள் நாமக்கல்லில் நடைபெற்றது.

    மதுரை

    தென்னிந்திய அளவி லான சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டிகள் நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள கல்வி சர்வதேச பொதுப் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் அந்த பள்ளியை சேர்ந்த 5 மாணவ-மாணவிகள் 2 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள், 1 வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

    பதக்கம் வென்ற 5 பேரும் அடுத்த ஆண்டு உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். பதக்கம் வென்ற மாண வர்களை டேக்வாண்டோ பயிற்சியாளர் மனோஜ்குமார், கல்வி சர்வதேச பொதுப்பள்ளி தலைவர் செந்தில்குமார், தாளாளர் குமரேஷ் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.

    • தேர்வில் முதலிடம் பெற்று சாதனை படைத்த மாணவி.
    • மாணவி வீட்டுக்கு சென்று சால்வை அணிவித்து பாராட்டி ரூ.10 ஆயிரம் வழங்கினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி அபிநயா.

    இவர் தமிழ் திறனாய்வு தேர்வில் தமிழக அளவில் நடைபெற்ற தேர்வில் முதலிடம் பெற்றார்.

    சாதனை படைத்த அபிநயாவை ஆசிரியர்கள், மாணவிகள், பாராட்டினர்.

    நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் நேரில் அழைத்து தனது இருக்கையில் அமரச் செய்து சால்வை அணிவித்து வாழ்த்தினார் .

    இந்நிலையில் நாகை மாவட்ட மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் , அபிநயா வீட்டுக்கு சென்று சால்வை அணிவித்து பாராட்டி ரூ.10 ஆயிரம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட தி.மு.க. துணைசெயலாளர் ரவிச்சந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம்முருகையன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம், நகர செயலாளர் புகழேந்தி , மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தாமரை செல்வன், ஒன்றியகுழு உறுப்பினர் உஷாராணி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • சிறுவயது முதலே பார்த்ததை செய்யும் திறன் அதிகம் இருந்ததை உணர்ந்த பெற்றோர் புதிர் அட்டைகளை இணைக்கும் பயிற்சியை முறையாக வழங்கினர்.
    • நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சார்பாக சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    சுவாமிமலை:

    மயிலாடுதுறையை சேர்ந்த கல்யாண்குமார், உமாமகேஸ்வரி தம்பதியனரின் 5 வயது மகன் சாய் மித்ரன். இவர் தஞ்சை மாவட்டம் திருபுவனம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் யு.கே.ஜி. படித்து வருகிறார்.

    சிறுவயது முதலே பார்த்ததை செய்யும் திறன் அதிகம் இருந்ததை உணர்ந்த பெற்றோர் புதிர் அட்டைகளை இணைக்கும் பயிற்சியை முறையாக வழங்கினர். இதனை அடுத்து நோபல் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் சார்பில் திருபுவனம் மகரிஷி வித்யா பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 30 நிமிடங்களில் 300 புதிர் அட்டைகளை இணைக்க வேண்டும் என நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் மாணவன் சாய் மித்திரன் 29.5 நிமிடங்களில் 350 புதிர் அட்டைகளை இணைத்து நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் செய்துள்ளார்.

    அவருக்கு நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சார்பாக சிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் இது போன்ற மாணவர்களின் திறனை மேம்படுத்த தங்களது பள்ளி முழு ஒத்துழைப்பு நல்கும் என பள்ளியின் நிர்வாகிகள் கூறினர்.

    ×