search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டேக்வாண்டோ"

    • புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் பள்ளி மாணவர்களுக்கு, மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது.
    • 14, 17, 19 ஆகிய வயது மாணவ, மாணவிகளுக்கு 3 பிரிவுகளாக பிரித்து 2 நாட்கள் இப்போட்டி நடைபெற்றது.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் பள்ளி மாணவர்களுக்கு, மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டி நடைபெற்றது.

    14, 17, 19 ஆகிய வயது மாணவ, மாணவிகளுக்கு 3 பிரிவுகளாக பிரித்து 2 நாட்கள் இப்போட்டி நடைபெற்றது. முதல் நாள் நடைபெற்ற போட்டியில் 350 மாணவிகளும், இரண் டாம் நாள் நடைபெற்ற போட்டியில் 450 மாணவர்க ளும் கலந்து கொண்டனர்.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மஞ்சுளா வழிகாட்டு தல்படி நடை பெற்ற இப்போட்டியினை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்டச்சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர்கள்வேலுச்சாமி, குரு.மாரிமுத்து ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். போட்டியின் முடிவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது. முதல் இடத்தைப்பிடித்த மாண வர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். போட்டியினை புதிய விளையாட்டுப்போட்டிக் கான மாவட்ட இணைச்செய லாளரும், காவேரிநகர் அரசு மேல்நிலைப்பள்ளி யின் உடற்கல்வி ஆசிரியரு மான காசி.ராஜேந்திரன் ஒருங்கிணைப்பு செய்தார். இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை டேக்வாண்டோ சங்கத்தின் மாவட்டச்செயலாளர் பால சுப்பிரமணியன், நாகப்பட்டி னம் டேக்வாண்டோ சங்கத்தின் மாவட்டச்செய லாளர் தர்மா, உடற்கல்வி இயக்குநர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

    • 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் யுவராஜ், நித்தின் அபினேஷ் தங்க பதக்கம் வென்றனர்.
    • தங்க பதக்கம் வென்ற 6 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி அருகே உள்ள அச்சம்பட்டி எவரெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வருவாய் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ மற்றும் ஜூடோ போட்டிகள் நடைபெற்றது. டேக்வோண்டோ போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் பாரத் மாண்டிசோரி பள்ளி மாணவர் தேவேஷ் காளிதாஸ் தங்க பதக்கமும், சுபாஷினி வெள்ளி பதக்கமும் , பிரணவ், ஜீவா, மாணவி ஹர்சிதா ஸ்ரீ ஆகியோர் வெண்கல பதக்கமும் வென்றனர். 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் யுவராஜ் மற்றும் நித்தின் அபினேஷ் தங்க பதக்கம் வென்றனர். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் கோகுல சுதன், திருமலைவிஸ்வா, சிவபிரதீப் ஆகியோர் தங்க பதக்கம் பெற்றனர்.

    மேலும் மாணவர் செண்பகநாதன் வெள்ளி பதக்கமும், ஜெய்சன் நீல் வெண்கலப் பதக்கமும் வென்றனர். ஜீடோ போட்டியில் மாணவர் மகேஷ் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் வெள்ளி பதக்கம் பெற்று சாதனை படைத்தார். டேக்வாண்டோ போட்டியில் தங்க பதக்கம் வென்ற 6 மாணவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பாரத் கல்வி குழுமத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் காந்திமதி மோகனகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் உஷா ரமேஷ், இயக்குனர் ராதாபிரியா மற்றும் பள்ளி முதல்வர் பாலசுந்தர் ஆகியோர் பாராட்டினர். 

    • தென்னிந்திய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் மதுரை மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • தென்னிந்திய அளவிலான சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டிகள் நாமக்கல்லில் நடைபெற்றது.

    மதுரை

    தென்னிந்திய அளவி லான சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இடையேயான டேக்வாண்டோ போட்டிகள் நாமக்கல்லில் நடைபெற்றது. இதில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள கல்வி சர்வதேச பொதுப் பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் அந்த பள்ளியை சேர்ந்த 5 மாணவ-மாணவிகள் 2 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளிப் பதக்கங்கள், 1 வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

    பதக்கம் வென்ற 5 பேரும் அடுத்த ஆண்டு உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். பதக்கம் வென்ற மாண வர்களை டேக்வாண்டோ பயிற்சியாளர் மனோஜ்குமார், கல்வி சர்வதேச பொதுப்பள்ளி தலைவர் செந்தில்குமார், தாளாளர் குமரேஷ் ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.

    • ராஜபாளையத்தில் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நடந்தன.
    • இந்த போட்டியில் 275 மாணவர்கள் பங்கேற்றனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் என்.ஏ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விருதுநகர் மாவட்ட அளவிலான டேக்வாண்டோ போட்டிகள் நடந்தது. பள்ளி தாளாளர் என்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ராஜா போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    மாவட்ட அளவிலான இந்த போட்டியில் 275 மாணவர்கள் பங்கேற்றனர். நாளை (11-ந் தேதி) 230 மாணவிகள் பங்கேற்கும் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் முதல் பரிசு பெறும் மாணவ-மாணவிகள் பிப்ரவரி மாதம் 11-ந் தேதி மாநில அளவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வி.பி.ஜெயக்குமார் மற்றும் ஆசிரியர்கள் நடத்தினர்.

    ×