search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "father murder"

    கோவை அருகே மது குடிக்க பணம் தராததால் தந்தையை கொலை செய்தேன் என்று மகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    கோவை:

    கோவை இருகூர் அண்ணா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது70).

    இவர் சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பத்மாவதி.

    இவர்களது மகன் செந்தில் குமாருக்கு(40) கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்துவேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து சென்று விட்டார்.இதனால் செந்தில்குமார் பெற்றோருடன் வசித்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. மது குடிக்க பணம் கேட்டு அடிக்கடி பெற்றோருடன் தகராறு செய்துள்ளார்.

    நேற்று மாலை பத்மாவதி வெளியே சென்றிருந்தார். அப்போது செந்தில்குமார் தனது தந்தையிடம் குடிக்க பணம் கேட்டார். அவர் பணம் கொடுக்க மறுத்ததோடு, மகனை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த செந்தில்குமார் கத்தியால் சுப்பிரமணியின் நெஞ்சு, இடுப்பு உள்ளிட்ட இடங்களில் குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தையை கொலை செய்த சுப்பிரமணி அப்பகுதியில் சுற்றித்திரிந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    அவரது கையில் காயங்கள் இருந்தது. அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.

    செந்தில்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் கூறியதாவது:-

    நான் மதுகுடிப்பதற்காக எனது தந்தையிடம் பணம் கேட்டேன். ஆனால் அவர் பணம் தரவில்லை. மாறாக, எந்த வேலைக்கு செல்லாமல் இவ்வாறு சுற்றுகிறாயே என என்னை கண்டித்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே வீட்டில் இருந்த கத்தியால் அவரை குத்தினேன். இதில் அவர் இறந்து விட்டார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இதனை வாக்கு மூலமாக போலீசார் பதிவு செய்தனர்.

    இன்று அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

    புத்தாண்டை கொண்டாடி விட்டு தாமதமாக வந்ததை தட்டிக்கேட்ட தந்தையை மகன் அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #NewYearCelebration
    அம்பத்தூர்:

    சென்னை முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் நவீன்குமார் (19).

    நேற்று இரவு நண்பர்களோடு புத்தாண்டு கொண்டாடுவதற்காக நவீன் குமார் வெளியில் புறப்பட்டார். வெங்கடேசன் மகனை தடுத்துள்ளார். புத்தாண்டு கொண்டாடுவதற்கு வெளியில் செல்ல வேண்டாம் என்று அவர் நவீன் குமாரிடம் கூறியுள்ளார்.

    ஆனால் தந்தையின் பேச்சை கேட்காமல் புத்தாண்டை கொண்டாடுவதற்காக வெளியில் சென்ற நவீன் நள்ளிரவு 1½மணி அளவில் வீட்டுக்கு வந்தார்.

    வீட்டு கதவை திறந்துவிட்ட தாய் கண்ணகி,‘‘ஏண்டா இவ்வளவு நேரம்’’ என்று கேட்டார். அப்போது தூங்கிக் கொண்டிருந்த தந்தை வெங்கடேசும் வந்து மகன் நவீன்குமாரை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் அது மோதலாக மாறியது.

    இதனால் ஆத்திரம் அடைந்த நவீன்குமார் வெங்கடேசனை தந்தை என்றும் பாராமல் சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டார். இதில் விட்டு சுவற்றிலும் இரும்பு கதவிலும் விழுந்த வெங்கடேசனின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு வெங்கடேசனை தூக்கிச் சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் நொளம்பூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தந்தையை கொலை செய்த நவீன்குமார் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புத்தாண்டை கொண்டாடி விட்டு தாமதமாக வந்ததை தட்டிக்கேட்ட தந்தையை மகன் அடித்துக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    வெங்கடேசனின் சொந்த ஊர் ஆரணி ஆகும். அவர் உயிரிழந்ததும் போலீசுக்கு தெரியாமல் ஆரணிக்கு உடலை கொண்டு செல்ல உறவினர்கள் முயற்சி மேற்கொண்டனர். வீட்டிலேயே உடலுக்கு இறுதிச் சடங்குகளை செய்தனர். பின்னர் உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்சையும் வரவழைத்தனர். ஆம்புலன்ஸ் டிரைவர் இறப்பு சான்றிதழை கேட்டார்.

    இதன் பிறகுதான் வெங்கடேசன் கொலை செய்யப்பட்ட சம்பவம் போலீசுக்கு தெரிய வந்தது. அவர்கள் சென்று உடலை கைப்பற்றினர். #NewYearCelebration
    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தந்தையை மகனே அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஏதாநெமிலி பகுதியை சேர்ந்தவர் பாவாடை(வயது 68). இவரது மகன் பார்த்திபன்(28). இவர் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். 2 பேரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் பார்த்திபன் அவரது தந்தைக்கு சரியாக உணவு வழங்காமலும், பணம் எதுவும் கொடுக்காமலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பாவாடை அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று உணவு வாங்கி சாப்பிட்டு வந்தார்.

    மற்ற வீடுகளுக்கு சென்று பாவாடை உணவு வாங்கி சாப்பிடுவதை பார்த்திபன் கண்டித்தார். ஆனாலும் பாவாடை தொடர்ந்து அந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று உணவு வாங்கி சாப்பிட்டார்.

    இந்தநிலையில் நேற்று மாலை மதுகுடித்துவிட்டு பார்த்திபன் அவரது தந்தையிடம் மற்ற வீடுகளுக்கு சென்று உணவு வாங்கி சாப்பிடக்கூடாது என கூறினார்.

    இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பார்த்திபன் அவரது தந்தை பாவாடையை அடித்து உதைத்து கீழே தள்ளினார். இதில் பாவாடைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே பார்த்திபன் அங்கிருந்து தப்பிஓடிவிட்டார். தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாவாடையை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பாவாடை பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து பார்த்திபனை கைது செய்தனர்.

    தந்தையை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தருமபுரி மாவட்டம் பாப்பரப்பட்டி அருகே வீடு கட்ட பணம் தர மறுத்த தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாப்பரப்பட்டி அருகே உள்ள வல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 55) கூலி தொழிலாளி.

    இவருக்கு அமரா(48) என்ற மனைவியும், சத்யா (30) என்ற மகளும், முருகன்(28), ஞானமூர்த்தி (25), கேசவன் (19) உள்ளிட்ட 3 மகன்களும் உள்ளனர்.

    இதில் கட்டிட மேஸ்திரியான முருகன் தனக்கு சொந்தமான இடத்தில் வீடுகட்டி வருகிறார். கட்டுமான செலவு அதிகரித்து விட்டதால் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் தந்தையிடம் சென்று பணம் கேட்டுள்ளார்.

    அப்போது தந்தை மகனுக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தன்னிடம் பணம் இல்லை என்றும், இருந்தாலும் கொடுக்க முடியாது என்றும் தந்தை சரவணன் மறுத்து உள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் கோபத்தில் தன்னுடைய தந்தையை கீழே தள்ளி விட்டுள்ளார். அப்போது தடுமாறி கீழே விழுந்த சரவணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சரவணன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

    இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி முருகனை கைது செய்தனர்.
    மகேந்திரமங்கலம் அருகே மதுகுடித்து விட்டு தகராறில் ஈடுபட்டதால் தந்தையை கொன்றதாக கைதான மகன் தருமபுரி கிளை சிறையில் அடைக்கப்பட்டான்.
    பாலக்கோடு:

    தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே கொம்மனூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 54), பெயிண்டர். இவரது மகன் சூர்யா (33).

    துரைசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ள மகன் மற்றும் உறவினர்களிடம் தகராறு செய்வாராம்.

    சம்பவத்தன்று மீண்டும் குடித்துவிட்டு வந்து துரைசாமி தகராறு செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சூர்யா இரும்பு கம்பியை எடுத்து அவரது தலையில் தாக்கினார். தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற துரைசாமி சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்.

    இதுகுறித்து மகேந்திர மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தந்தையை கொன்ற மகன் சூர்யாவை கைது செய்து பாலக்கோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் தன் தந்தையை கொன்றதாக சூர்யா வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.
    25 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை கொல்லப்பட்டத்தற்கு பழிக்குப்பழியாக மகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
    நாமக்கல்:

    நாமக்கல்-சேந்தமங்கலம் ரோட்டில் உள்ள தாதம்பட்டிமேடு பகுதியை சேர்ந்தவர் நல்லுசாமி (வயது 50). மரம் வெட்டும் தொழிலாளி. கடந்த 10-ந்தேதி இவர் பரமத்திரோடு காவேட்டிப்பட்டியில் உள்ள ஒரு லாரி பட்டறை அருகே அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இது குறித்து அவரது மகன் சுரேஷ்(26) நாமக்கல் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த போதுப்பட்டி காலனியை சேர்ந்த குட்டி என்கிற தமிழ் செல்வன்(39), அவரது நண்பர்கள் லட்சுமி நகரை சேர்ந்த குமார் என்கிற ஜெயக்குமார்(42), போதுப்பட்டி காலனியை சேர்ந்த வினோத்குமார்(32) மற்றும் மாரிகங்காணி தெருவை சேர்ந்த முருகேந்திரன்(35) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட இவர்கள் 4 பேரும் நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சேலம் மத்திய ஜெயலிலில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:-

    குட்டி என்கிற தமிழ்செல்வனின் தந்தை அன்பழகனை கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு நல்லுசாமி, பூபதி ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்து விட்டனர். இதற்காக நல்லுசாமி சிறை தண்டணை அனுபவித்து கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளியில் வந்துவிட்டார். கரூரில் தங்கி இருந்து மரம் வெட்டும் வேலை செய்து வந்தார். பூபதி சில ஆண்டுகளுக்கு முன்பு மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் தாதம்பட்டியில் குடியிருக்கும் தனது மகன் சுரேசை பார்க்க அவ்வப்போது நல்லுசாமி நாமக்கல் வந்து செல்வது வழக்கம். தனது தந்தையை கொலை செய்தவர்களைப் பழிதீர்க்கத்திட்டமிட்ட குட்டி, தனது நண்பர் குமாரிடம் நல்லுசாமி நாமக்கல் வரும்போது தனக்கு தகவல் தெரிவிக்கும்படி கூறியிருந்தார்.

    இந்த நிலையில் தான் சம்பவத்தன்று நாமக்கல்- போதுப்பட்டி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்துக்கொண்டிருந்த நல்லுசாமியை பார்த்த குமார், உடனே குட்டியை அங்கு அழைத்து வந்தார். அங்கு வைத்து நல்லுசாமிக்கு மது வாங்கி கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளனர்.

    பின்னர் குட்டி தனது நண்பர்களுடன் சேர்ந்து நல்லுசாமியை பரமத்திரோட்டில் உள்ள லாரி பட்டறைக்கு அழைத்துச் சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.

    கைது செய்யப்பட்ட குட்டி மீது நாமக்கல் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே ஆள்கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இவர் பெயர் ரவுடி பட்டியலில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    25 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை அன்பழகன் கொல்லப்பட்டத்தற்கு பழிக்குப்பழியாக மகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ×