என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீடு கட்ட பணம் தர மறுத்த தந்தை கொலை- மகன் கைது
Byமாலை மலர்26 Sep 2018 4:21 AM GMT (Updated: 26 Sep 2018 5:51 AM GMT)
தருமபுரி மாவட்டம் பாப்பரப்பட்டி அருகே வீடு கட்ட பணம் தர மறுத்த தந்தையை கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பாப்பரப்பட்டி அருகே உள்ள வல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 55) கூலி தொழிலாளி.
இவருக்கு அமரா(48) என்ற மனைவியும், சத்யா (30) என்ற மகளும், முருகன்(28), ஞானமூர்த்தி (25), கேசவன் (19) உள்ளிட்ட 3 மகன்களும் உள்ளனர்.
இதில் கட்டிட மேஸ்திரியான முருகன் தனக்கு சொந்தமான இடத்தில் வீடுகட்டி வருகிறார். கட்டுமான செலவு அதிகரித்து விட்டதால் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் தந்தையிடம் சென்று பணம் கேட்டுள்ளார்.
அப்போது தந்தை மகனுக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தன்னிடம் பணம் இல்லை என்றும், இருந்தாலும் கொடுக்க முடியாது என்றும் தந்தை சரவணன் மறுத்து உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் கோபத்தில் தன்னுடைய தந்தையை கீழே தள்ளி விட்டுள்ளார். அப்போது தடுமாறி கீழே விழுந்த சரவணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சரவணன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி முருகனை கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பரப்பட்டி அருகே உள்ள வல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 55) கூலி தொழிலாளி.
இவருக்கு அமரா(48) என்ற மனைவியும், சத்யா (30) என்ற மகளும், முருகன்(28), ஞானமூர்த்தி (25), கேசவன் (19) உள்ளிட்ட 3 மகன்களும் உள்ளனர்.
இதில் கட்டிட மேஸ்திரியான முருகன் தனக்கு சொந்தமான இடத்தில் வீடுகட்டி வருகிறார். கட்டுமான செலவு அதிகரித்து விட்டதால் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் தந்தையிடம் சென்று பணம் கேட்டுள்ளார்.
அப்போது தந்தை மகனுக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தன்னிடம் பணம் இல்லை என்றும், இருந்தாலும் கொடுக்க முடியாது என்றும் தந்தை சரவணன் மறுத்து உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் கோபத்தில் தன்னுடைய தந்தையை கீழே தள்ளி விட்டுள்ளார். அப்போது தடுமாறி கீழே விழுந்த சரவணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சரவணன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி முருகனை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X