search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fake doctor"

    • களக்காடு அருகே போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
    • மருத்துவருக்கு படிக்காமல் சுற்று வட்டார மக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்தார்.

    களக்காடு:

    திருக்குறுங்குடி சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராம கிருஷ்ணன் மற்றும் போலீசார் கைகாட்டி விலக் கில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் போலீசாரை பார்த்ததும் தப்பி செல்ல முயற்சி செய்தார்.

    போலீசார் அவரை பிடித்து அவர் வைத்திருந்த கைப்பையை சோதனையிட்டனர். அந்த பையில் மருந்து பொருட்கள் இருந்ததை கண்ட போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் கொய்யா மாவடியை சேர்ந்த பால்துரை (60) என்பதும், அவர் மருத்துவருக்கு படிக்காமல் சுற்று வட்டார மக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து மருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    திருவள்ளூர் அருகே போலி பெண் டாக்டரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த கூடப்பாக்கம் கிராமத்தில் அமுதா (வயது 48) என்பவர் கிளினிக் திறந்து கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சை அளித்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் பிளஸ்-2 வரை மட்டுமே படித்து விட்டு மருத்துவம் பார்ப்பதாக கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர் வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் கிளினிக்குக்கு சென்று அமுதாவிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் பிளஸ்-2 வரை மட்டுமே படித்து விட்டு மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அமுதாவை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    தொப்பூர் அருகே போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
    நல்லம்பள்ளி:

    தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள ஏலகிரியில் போலி டாக்டர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக மருத்துவ துறை இணை இயக்குனர் அலுவலகத்திற்கு புகார் வந்தது. அதன் பேரில் நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் ஆஷாபிடரிக் தலைமையில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் மருத்துவத்துறை அதிகாரிகள் ஏலகிரி கிராமத்திற்கு சென்று திடீர் ஆய்வு செய்தனர்.

    அப்போது சேஷம்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் ஆங்கிலம் மருத்துவம் பயிலாமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மருத்துவ துறை அதிகாரிகள் முருகேசனை தொப்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி போலி டாக்டர் முருகேசனை கைது செய்தனர்.

    தர்மபுரி மாவட்டத்தில் முறையாக மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளிக்கும் போலி டாக்டர்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என நலப்பணிகள் இணை இயக்குனர் ஆஷாபிடரிக் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின் போது டாக்டர் ராஜ்குமார், கண்காணிப்பாளர் சசி, முருகன், ராஜேஷ்முருகன், ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
    கலசபாக்கம் அருகே போலி டாக்டரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    கலசபாக்கம் தாலுகா கோவூர் கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக டாக்டர் ஒருவர் கிளினிக் வைத்து கொண்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக திருவண்ணாமலை சுகாதாரப்பணிகள் அலுவலகத்துக்கு புகார் வந்தது.

    திருவண்ணாமலை சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் பாண்டியன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் கோவூர் கிராமத்திற்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.

    அங்கு தனியார் கட்டிடத்தில் ஒருவருக்கு ஊசி போடும்போது அவரை கையும், களவுமாக அதிகாரிகள் பிடித்தனர். பின்னர் கலசபாக்கம் போலீஸ் நிலையத்திற்கு அவரை அழைத்து வந்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை கிராமத்தை சேர்ந்த ஷாஜகான் (வயது 41) என்பதும், இவர் 10 ஆண்டுகளாக மருந்து கடையில் பணி செய்துவிட்டு கோவூர் கிராமத்தில் ஒரு மாதமாக தங்கி ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்தது.

    மேலும் விசாரணையில், பிளஸ்-2 படித்துவிட்டு சட்டவிரோதமாக பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்ததும் தெரிந்தது.

    இதுகுறித்து சுகாதார பணிகள் இணை இயக்குனர் கொடுத்த புகாரின் பேரில் போலி டாக்டர் ஷாஜகானை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகே வடமதுரை, அய்யலூர் பகுதிகளில் போலி டாக்டர்கள் நடமாட்டம் மீண்டும் அதிகரித்துள்ளது.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே வடமதுரை, அய்யலூரை சுற்றி கொம்பேறிபட்டி, பூசாரிபட்டி, புதுப்பட்டி, சிலுவத்தூர், சித்தூர், மலைப்பட்டி உள்ளிட்ட மலைகிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் பருவநிலை மாற்றம் காரணமாக மர்மகாய்ச்சல் மற்றும் வாந்தி, பேதியால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சிகிச்சை பெற திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்குதான் வரவேண்டும். இவர்களில் பெரும் பாலானோர் விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் என்பதால் அதிகதூரம் பயணம் செய்ய முடிவதில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள மருந்து கடைகளில் மாத்திரைகள் வாங்கி சாப்பிடுகின்றனர்.

    இதனால் தற்காலிக தீர்வு ஏற்பட்டாலும் பக்கவிளைவுகள் உள்ளது.

    இதனை பயன்படுத்தி இப்பகுதியில் போலி டாக்டர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மலைகிரா மப்பகுதி என்பதால் அதிகாரிகளும் கண்காணிப்பு பணிக்கு வருவது குறைவு. எனவே 10, 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு சொந்தமாக கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வருகின்றனர். இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார்கள் கிளம்பியதால் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    இதனால் போலி டாக்டர்கள் வேறு இடத்திற்கு தலைமறைவானார்கள். தற்போது மீண்டும் போலி டாக்டர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டாக்டரிடம் சிகிச்சை பெற்றவர் இறந்தார் என வதந்தி பரவியதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே இப்பகுதியில் மருத்துவ அதிகாரிகள் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ஆண்டிப்பட்டி அருகே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் தங்க வணங்காமுடி. இவர் புதிய மருத்துவ கல்வி தகுதியின்றி தனியார் ஆஸ்பத்திரியில் அலோபதி மருந்து மாத்திரைகளை பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.

    இது குறித்து மாவட்ட துணை ஆட்சியர் தினேஷ் குமாருக்கு புகார் வந்தது. அதன் பேரில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரியில் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது ஆஸ்பத்திரியில் கருக்கலைப்பு மாத்திரைகள் மற்றும் காலாவதியான மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தொலை நிலை கல்வி மூலம் பி.ஏ.எம்.ஸ் படித்த தங்க வணங்காமுடி மருத்துவம் பார்ப்பதற்கான எவ்வித தகுதியும் இல்லாதவர்.

    ஆனால் மருத்துவர்கள் மட்டுமே பயன்படுத்தும் மாத்திரைகள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்தி சிகிச்சை அளித்துள்ளார் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து ஆஸ்பத்திரிக்கு சீல் வைத்தனர்.

    காங்கயத்தில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.15 லட்சம் மோசடி செய்த போலி டாக்டர், நர்சு தலைமறைவான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காங்கயம்:

    கரூர் டவுன் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 58). இவர் காங்கயம் சிவன்மலை திருப்பூர் பிரிவில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார். மேலும் தான் ஒரு ஓமியோபதி மருத்துவர் என்றும், தனது மனைவி நர்சு என்றும் கூறி அங்குள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.

    அதே இடத்தில் ஏலச்சீட்டு நிறுவனமும் நடத்தி வந்தார். தீபாவளியையொட்டி 3 வகையான சீட்டு பணம் வசூல் செய்தார். அதன்படி காங்கயம், சென்னிமலை, அவினாசிபாளையம் ஆகிய பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் சீட்டு போட்டனர். அதன்படி ரூ.15 லட்சம் வசூலானது.

    தீபாவளி முன்தினம் 300 பேரும் சேர்ந்து தங்களின் பணத்தை தருமாறு கேட்டனர். நாளை தருவாக கூறி அனுப்பி வைத்தனர். தீபாவளியன்று சென்று பார்த்தபோது மெடிக்கல் ஸ்டோர், கிளீனிக், நிதி நிறுவனம் ஆகியவை பூட்டப்பட்டிருந்தது.

    அதிர்ச்சியடைந்த முதலீட்டார்கள் குமார் மற்றும் அவரது மனைவியை தேடியபோது அவர்கள் பணத்துடன் தலைமறைவானது தெரியவந்தது.

    இதனையடுத்து காங்கயம், அவினாசிபாளையம், சென்னிமலை ஆகிய 3 போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் குமார் மருத்தாளுனருக்கு படித்ததும், அவரது மனைவி படிக்கவில்லை என்றும் தெரியவந்தது. டாக்டர், நர்சு என்று பொய் கூறி சிகிச்சை அளித்ததுடன் சீட்டு நடத்தி ரூ.15 லட்சம் மோசடி செய்ததும் தெரியவந்தது. தம்பதியை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
    சேலத்தில் போலி டாக்டர் ஒருவர் 5-வது முறையாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #FakeDoctorArrested
    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த செம்மாண்டப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் பாலு (வயது 48). இவர், பல ஆண்டுகளாக வீட்டில் வைத்து ஆங்கிலம் மருத்துவம் பார்த்து வருகிறார்.

    5-ம் வகுப்பு படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக ஓமலூர் அரசு மருத்துவமனை டாக்டரான பெருமாளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து டாக்டர் பெருமாள் மற்றும் வருவாய் அதிகாரிகள் இன்று காலை செம்மாண்டப் பட்டியில் உள்ள பாலு வீட்டுக்கு சென்று அதிரடியாக ஆய்வு நடத்தினர்.

    அப்போது பாலுவின் வீட்டில் மருந்து ஊசிகள், மாத்திரைகள், டானிக், மருத்துவ சம்பந்தப்பட்ட உபகரணங்கள் போன்றவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் பாலு மருத்துவம் சம்பந்தமான எம்.பி.பி.எஸ். படிக்காமலேயே அப்பகுதியில் உள்ள நோயாளிகளுக்கு ஊசி போட்டு, மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது.

    இது குறித்து டாக்டர் பெருமாள் ஓமலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று, பாலுவை கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்து மருத்துவ பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது.

    கைதான பாலு ஏற்கனவே இதே போல் ஆங்கிலம் மருத்துவ பார்த்து 4 தடவை கைது செய்யப்பட்டவர் என்றும், தற்போது இது 5-வது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் ஓமலூர் போலீசார் தெரிவித்தனர்.

    போலி டாக்டர் ஒருவர் 5-வது முறையாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #FakeDoctorArrested

    போலி டாக்டர்கள் பலர் உள்ளதாக புகார்கள் வந்துள்ளதை அடுத்து கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    அரக்கோணம் அருகே அன்வர்திகான்பேட்டையை சேர்ந்த ரியாஸ் (வயது 7) என்ற சிறுவன் மர்மகாய்ச்சலுக்கு பலியானான். இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் பீதியடைந்தனர்.

    இந்தநிலையில் வேலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் அந்த கிராமத்தில் முகாமிட்டு கண்காணித்தனர்.

    மேலும் அங்கு டெங்கு கொசு ஒழிப்பு பணி, தூய்மை பணியும் மேற்கொண்டனர். பொதுமக்களுக்கு பரிசோதனையும் செய்யப்பட்டது. ரியாஸ் அங்குள்ள ஒரு கிளினிக்கில் சிகிச்சை பெற்றது துணை இயக்குனருக்கு தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து அந்த கிளினிக்குக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். அதில் சிறுவனுக்கு சிகிச்சை அளித்த நபர், டாக்டருக்கு முறையாக படிக்காதது தெரியவந்தது. அவருக்கு எச்சரிக்கை விடுத்த துணை இயக்குனர் கிளினிக்கை மூட உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து கிளினிக் மூடப்பட்டது.

    இதுகுறித்து துணை இயக்குனர் சுரேஷ் கூறுகையில்:- வேலூர் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் பலர் உள்ளதாக புகார்கள் வந்துள்ளது. போலி டாக்டர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். #tamilnews
    திருவள்ளூர் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை துணை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள கட்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் நோய் தடுப்புத்துறை சார்பில் பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகளுக்கான உதடு மற்றும் அன்னப்பிளவு சிகிச்சை முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் ராமசந்திரன் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை துணை இயக்குநர் கிருஷ்ணராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:-

    திருவள்ளூர் மாவட்டத்தில் 52 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இவற்றில் கடந்த மாதம் 658 பிரசவங்கள் நடைபெற்றன. ஒரே மாதத்தில் இவ்வளவு பிரசவங்கள் நடைபெறுவது மாநிலத்தியே இதுதான் முதல் முறை. ஒரே மாதத்தில் 658 பிரசவங்கள் பார்த்து திருவள்ளூர் மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

    குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் போலி டாக்டர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம். அப்படி சிகிச்சை பெற்றால் உயிரிழப்பு ஆபத்து உள்ளது. போலி டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

    இவ்வாறு அவர் பேசினார். #tamilnews
    செஞ்சி அருகே ஓமியோபதி மருத்துவம் படித்துவிட்டு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் மூலம் சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார். #fakedoctorarrested
    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அனந்தபுரத்தை சேர்ந்தவர் கல்யாண்குமார் (வயது 57) ஓமியோபதி மருத்துவம் படித்துவிட்டு கிளினிக் நடத்தி வந்தார். ஆனால் அவர் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் மூலம் சிகிச்சை அளித்து வருவதாக புகார் எழுந்தது.

    அதன்அடிப்படையில் விழுப்புரம் மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் சுந்தர்ராஜி தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் அனந்தபுரத்தில் உள்ள அந்த கிளினிக்கிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த கிளினிக்கை நடத்தி வந்த கல்யாணகுமார் (வயது 57) என்பவர் ஓமியோபதி படித்து முடித்து விட்டு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

    இதுகுறித்து சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் அனந்தபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் கல்யாணகுமாரை கைது செய்தனர். மேலும் கிளினிக்கில் இருந்த ஆங்கில மருந்துகள், சிரஞ்சு உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட கல்யாணகுமார் தற்போது அனந்தபுரம் நகர தி.மு.க. செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #fakedoctorarrested
    ஓமலூர் அருகே ஆங்கில மருத்துவம் பார்த்த போலி டாக்டரை கைது செய்த போலீசார் கிளீனிக்கில் பயன்படுத்திய மருந்துகளை பறிமுதல் செய்தனர்.
    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டப்பட்டியில் போலி டாக்டர்கள் கிளீனிக் வைத்து நடத்தி வருவதாக சுகாதார துணை இயக்குநர் (பொறுப்பு) சத்யாவுக்கு புகார்கள் வந்தது.

    இதனை தொடர்ந்து இன்று மருத்துவக்குழுவினர், மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள், போலீசார் செம்மாண்டப்பட்டிக்கு சென்று ஆய்வு நடத்தினார்கள். அப்போது அங்கு மேச்சேரி பகுதியை சேர்ந்த பாலு (வயது 48) என்பவர் பி.ஏ. படித்து விட்டு, ஆங்கிலம் மருத்துவம் நோயாளிகளுக்கு பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலி டாக்டர் பாலுவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த கிளீனிக்கில் சோதனை போட்டத்தில் தடை செய்யப்பட்ட ஆங்கில மருந்துகள் மற்றும் மாத்திரைகள் இருந்தது. மேலும் அங்கு கால்நடைகளுக்கு பயன்படுத்தக்கூடிய மருந்து, மாத்திரைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இதை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கிளீனிக்கை சீல் வைத்தனர். இவர் ஆங்கில மருத்துவம் பார்த்து தொடர்ந்து 3-வது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    ×