என் மலர்
செய்திகள்

திருவள்ளூர் அருகே போலி பெண் டாக்டர் சிக்கினார்
திருவள்ளூர் அருகே போலி பெண் டாக்டரை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கூடப்பாக்கம் கிராமத்தில் அமுதா (வயது 48) என்பவர் கிளினிக் திறந்து கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சை அளித்து வந்தார்.
இந்த நிலையில் அவர் பிளஸ்-2 வரை மட்டுமே படித்து விட்டு மருத்துவம் பார்ப்பதாக கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர் வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் கிளினிக்குக்கு சென்று அமுதாவிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் பிளஸ்-2 வரை மட்டுமே படித்து விட்டு மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அமுதாவை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூரை அடுத்த கூடப்பாக்கம் கிராமத்தில் அமுதா (வயது 48) என்பவர் கிளினிக் திறந்து கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சை அளித்து வந்தார்.
இந்த நிலையில் அவர் பிளஸ்-2 வரை மட்டுமே படித்து விட்டு மருத்துவம் பார்ப்பதாக கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர் வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் கிளினிக்குக்கு சென்று அமுதாவிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் பிளஸ்-2 வரை மட்டுமே படித்து விட்டு மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அமுதாவை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Next Story






