search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அய்யலூர்"

    திண்டுக்கல் அருகே வடமதுரை, அய்யலூர் பகுதிகளில் போலி டாக்டர்கள் நடமாட்டம் மீண்டும் அதிகரித்துள்ளது.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே வடமதுரை, அய்யலூரை சுற்றி கொம்பேறிபட்டி, பூசாரிபட்டி, புதுப்பட்டி, சிலுவத்தூர், சித்தூர், மலைப்பட்டி உள்ளிட்ட மலைகிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் பருவநிலை மாற்றம் காரணமாக மர்மகாய்ச்சல் மற்றும் வாந்தி, பேதியால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    சிகிச்சை பெற திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்குதான் வரவேண்டும். இவர்களில் பெரும் பாலானோர் விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் என்பதால் அதிகதூரம் பயணம் செய்ய முடிவதில்லை. இதனால் அப்பகுதியில் உள்ள மருந்து கடைகளில் மாத்திரைகள் வாங்கி சாப்பிடுகின்றனர்.

    இதனால் தற்காலிக தீர்வு ஏற்பட்டாலும் பக்கவிளைவுகள் உள்ளது.

    இதனை பயன்படுத்தி இப்பகுதியில் போலி டாக்டர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. மலைகிரா மப்பகுதி என்பதால் அதிகாரிகளும் கண்காணிப்பு பணிக்கு வருவது குறைவு. எனவே 10, 12-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து விட்டு சொந்தமாக கிளினிக் வைத்து மருத்துவம் பார்த்து வருகின்றனர். இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார்கள் கிளம்பியதால் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

    இதனால் போலி டாக்டர்கள் வேறு இடத்திற்கு தலைமறைவானார்கள். தற்போது மீண்டும் போலி டாக்டர்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டாக்டரிடம் சிகிச்சை பெற்றவர் இறந்தார் என வதந்தி பரவியதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே இப்பகுதியில் மருத்துவ அதிகாரிகள் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×