என் மலர்
நீங்கள் தேடியது "fake Currency notes"
- கள்ள நோட்டு அச்சடித்த கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
- செல்வம், பிரபு ஆகியோர் கடந்த 3 மாத்துக்கு முன் மும்பை தாஜ் ஓட்டலில் அரபு நாட்டை சேர்ந்த சிலரை சந்தித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த அதர் நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (39). இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளராக இருந்து வந்தார்.
இவருக்கும் ஆவட்டி கிராமத்தை சேர்ந்த சங்கருக்கும் முன் விரோத வழக்கு ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் இருந்து வருகிறது.
இது தொடர்பாக விசாரணை நடத்த நேற்று முன்தினம் அதிகாலை 5.15 மணிக்கு செல்வம் வீட்டிற்கு ராமநத்தம் போலீசார் சென்றனர். அங்கு செல்வம் இல்லாததால் வயலில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர்.
போலீசார் வருவதை அறிந்த செல்வம் மற்றும் ஒரு கும்பல் தப்பி ஓடியது. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வீட்டை சோதனை செய்தனர்.
அங்கு கள்ள நோட்டுகள் அச்சடிக்கும் எந்திரம், துப்பாக்கி, போலீஸ் சீருடை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து செல்வத்தின் வயலில் உள்ள வீட்டிற்கு வந்த ஒருவரையும், அதர்நத்தம் வீட்டிற்கு வந்த மற்றொருவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் திட்டக்குடி ஆலந்தூர் நவீன் ராஜா (29), அதர்நத்தம் கார்த்திகேயன் (28) என்பதும் இவர்கள் இருவரும் 2 ஆண்டுகளாக செல்வத்திடம் கார் டிரைவராக வேலை செய்ததும் தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து ரூ. 85 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள், 4 வாக்கி டாக்கி,2 ஏர் கன், லேப்டாப், போலீஸ் சீருடை, ரிசர்வ் வங்கி முத்திரை, கார், லாரிகள், ஜே.சி.பி.எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் நவீன் ராஜா, கார்த்திகேயன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான செல்வம் உள்பட 11 பேர் தலைறைவாகி விட்டனர். கள்ள நோட்டு அச்சடிப்பு வழக்கில் செல்வம் தொடர்பில் இருந்ததால் அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொருளாளர் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி பொருளாளர் செல்வத்துக்கு சென்னையிலும் ஒரு தனியார் கம்பெனி உள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கும் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கள்ள நோட்டு அச்சடித்த கும்பலை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் சிறுப்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் தலைமையிலான போலீசார் ஆவட்டி கூட்டு ரோட்டில் சந்தேகத்துக்கிடமாக பதுங்கி இருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் ராமநத்தம் அடுத்த அதர்நத்தம் அரவிந்த் (30), அஜித் (24) மா.புடையூர் வடிவேல் (28), கள்ளக்குறிச்சி மாவட்டம் பெருமங்கலம் சக்திவேல் (26) என்பது தெரிய வந்தது.
இவர்கள் செல்வத்தின் லாரி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களுக்கு டிரைவராக வேலை பார்த்து வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
தோட்டத்து வயலில் விஸ்தாரமான அறையின் ஒரு பகுதியை தடுத்து மற்றொரு அறையை உருவாக்கி அதில் கள்ள நோட்டு அச்சடித்தது தெரிய வந்துள்ளது.
மாதத்திற்கு 2 நாட்கள் இரவில் மட்டும் அச்சடித்து விட்டு மற்ற நாட்களில் அறையை பூட்டி வைத்துள்ளனர். வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களை பயன்படுத்தி கள்ள நோட்டு அச்சடித்தது தெரிய வருகிறது.
கள்ள நோட்டு அச்சடித்த வழக்கின் முக்கிய குற்றவாளியான செல்வத்தின் நண்பர் ஆவட்டியை சேர்ந்த பிரபு கடந்த 2022-ல் தனது முகநூலில் ஆவட்டி டான் பிரபு என்ற பெயரில் ஆர்.பி.ஐ. ஆபீசர் போன்று போலி சான்றிதழை பதிவிட்டுள்ளார்.
மேலும் துப்பாக்கி, வாக்கி டாக்கியுடன் போட்டோ வெளியிட்டுள்ளார். செல்வம், பிரபு ஆகியோர் கடந்த 3 மாத்துக்கு முன் மும்பை தாஜ் ஓட்டலில் அரபு நாட்டை சேர்ந்த சிலரை சந்தித்துள்ளனர். மேலும் முக்கிய புள்ளிகளையும், அவர்களது நெருங்கிய உறவினர்களையும் சந்தித்துள்ளனர்.
ஸ்டார் ஓட்டலில் தங்குவது, சாப்பிடுவது என சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி செல்வம் வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் தடுக்க அவரது பாஸ்போர்ட், வங்கி கணக்கு உள்ளிட்டவைகள் முடக்கப்பட்டுள்ளது. கள்ளநோட்டு அச்சடித்த செல்வத்தின் கொட்டகை வீடு பூட்டுபோடப்பட்டு போலீசார் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.
- கள்ள நோட்டுகள், கலர் ஜெராக்ஸ் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், எரியோடு, பாளையம், குஜிலியம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் இப்பகுதியில் அதிக அளவு விவசாயம் நடைபெற்று வருவதால் வியாபாரிகள் நேரடியாக வந்து விளை பொருட்களுக்கு பணம் கொடுத்து கொள்முதல் செய்து செல்கின்றனர்.
இது தவிர அய்யலூர் ஆட்டுச்சந்தை வாரம் தோறும் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும் மையமாக உள்ளது. இது போன்ற இடங்களில் சமீப காலமாக கள்ளநோட்டுகள், கலர் ஜெராக்ஸ் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு தற்போது புதிதாக வந்துள்ள 500, 200, 100 ரூபாய் நோட்டுகளில் அசல் எது, போலி எது என கண்டுபிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. நேற்று வடமதுரையில் உள்ள ஒரு பிரியாணி கடைக்கு வந்த வாலிபர் சாப்பிட்டு விட்டு அதற்கு பதிலாக 200 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார்.
அங்கிருந்த சிறுமி சாப்பாட்டுக்கு ரூ.120 எடுத்துக் கொண்டு மீதி ரூ.80 கொடுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து அவரது தந்தை கல்லாவில் பார்த்த போது போலியான 200 ரூபாய் நோட்டு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து தனது மகளிடம் கேட்ட போது தற்போதுதான் ஒருவர் பிரியாணி சாப்பிட்டு விட்டு இதை கொடுத்துச் சென்றதாக கூறினார். உடனே மோட்டார் சைக்கிளில் தனது மகளுடன் அங்கிருந்த கடை வீதிகளில் அந்த வாலிபரை தேடிப்பார்த்தபோது அவர் சிக்காமல் தப்பி ஓடி விட்டார்.
கள்ள நோட்டுகளை மாற்றும் கும்பல் பெரும்பாலும் பெண்கள் இருக்கும் கடைகளிலும், சி.சி.டி.வி. பொருத்தாத கடைகளிலும் சென்று அதனை மாற்றி விட்டு மின்னல் வேகத்தில் சென்று விடுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பின்னர் அந்த நோட்டுகளை மற்றவர்களிடம் கொடுக்கும்போதுதான் அது போலியானது என தெரிய வருகிறது.
எனவே போலீசார் இது போன்ற கள்ள நோட்டு மற்றும் கலர் ஜெராக்ஸ் நோட்டுகளை மாற்றும் கும்பலை தீவிரமாக கண்காணித்து அவர்களை பிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் இந்த கும்பலுக்கு பின்புலத்தில் உள்ள நபர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்கள் அதிகம் கூடும் டாஸ்மாக் கடைகள், பெட்ரோல் பங்குகள் போன்றவற்றை குறி வைத்து கள்ள நோட்டுகளை மாற்றி வந்த கும்பல் தற்போது அங்கு கண்காணிப்பு கேமரா இருப்பதால் தங்களது திட்டத்தை வேறு வகையில் மாற்றி செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒரிஜினல் ரூபாய் நோட்டிற்கும் அதற்கும் வித்தியாசம் தெரியாத வகையில் டம்மி நோட்டுகள் காணப்பட்டன.
- அதிகாரிகள் பணம் எண்ணும் எந்திரங்கள் மூலம் எண்ணினார்கள்.
சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் கட்டுமான தொழில் செய்து வந்த யாகூப் என்பவர் வீட்டில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகளும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினார்கள். தொழில் அதிபர் யாகூப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதில் பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
வீட்டில் இருந்த பீரோவில் ரூ.50 லட்சம் ரொக்கப் பணத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவரது வீட்டில் ரூபாய் நோட்டு கட்டுகள் மலைபோல் குவிக்கப்பட்டிருந்தது. கட்டுகட்டாக இருந்த ரூபாய் நோட்டுகளையும் கைப்பற்றி பார்த்த போது அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்தது.
ரூபாய் நோட்டுகளை போலவே டம்மியான நோட்டுகள் அச்சடித்து கட்டுகட்டாக வைக்கப்பட்டு இருந்தது. அவை அனைத்தும் 500 ரூபாய் நோட்டுகளை போல அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
ஒரிஜினல் ரூபாய் நோட்டிற்கும் அதற்கும் வித்தியாசம் தெரியாத வகையில் டம்மி நோட்டுகள் காணப்பட்டன. அதனை அதிகாரிகள் பணம் எண்ணும் எந்திரங்கள் மூலம் எண்ணினார்கள். ரூ.9 கோடிக்கு போலி ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளது.
இது அதிகாரிகளுக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
ஒரிஜினல் ரூபாய் நோட்டுகளோடு போலி நோட்டுகளை சேர்த்து புழக்கத்தில் விட வைத்திருந்தாரா? கட்டுமான தொழில் ரீதியாக பிறருக்கு கொடுக்க வேண்டிய பணத்திற்கு இதுபோன்ற டம்மி நோட்டுகளை சேர்த்து வைத்திருந்தாரா? எதற்காக போலி நோட்டுகள் தயாரித்து வைத்திருந்தார் என்று அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.
விருதுநகர் சீதக்காதி தெருவைச் சேர்ந்த அப்துல் காதர் (வயது 52) இவர் மூலிப்பட்டி அரண்மனை முன்பு தீபாவளி பண்டிகையையொட்டி சாலையோர துணிக்கடை அமைத்திருந்தார். தீபாவளிக்கு முதல் நாள் அங்கு ஏராளமானோர் குவிந்து துணி எடுத்தனர்.
அப்போது ஒரு வாலிபர் கொடுத்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அப்துல்காதருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் வேறு ரூபாய் தரும்படி அவர் கேட்க, அந்த வாலிபர் கொடுக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பிரச்சினை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த வாலிபரை விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் வைத்திருந்தது கள்ள நோட்டு என தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த வாலிபரையும் அவரது கூட்டாளியையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்களது பெயர் கோபிநாத் (26), சூர்யா (27) என தெரிய வந்தது. விருதுநகர் செவல்பட்டியைச் சேர்ந்த இவர்கள், அதே ஊரைச் சேர்ந்த பிளம்பர் முருகன்தான் கள்ள ரூபாய் நோட்டை கொடுத்ததாக தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீசார் முருகனை பிடித்து விசாரித்தபோது கொக்கலாஞ்சேரியை சேர்ந்த திருவாசகம் (37) என்பவர் ரூ. 30 ஆயிரம் அளவில் கள்ள ரூபாய் நோட்டுகளை கொடுத்திருப்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து கள்ள ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் முருகன், சூர்யா , கோபிநாத் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் திருவாசகம் போலீசாரிடம் சிக்கினார்.
மதுரையில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுவதாக திருவாசகம்தான் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவின் பேரில் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினர். சிவகாசி அருகே உள்ள எரிச்சநத்தம் புதுக்கோட்டையைச் சேர்ந்த தேங்காய் வியாபாரி ராஜகோபால் (42) என்பவர்தான் திருவாசகத்துக்கு கள்ள ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளார். அவருக்கு மதுரை துவரிமான் பகுதியைச்சேர்ந்த இளங்கோ (52) என்பவர் கள்ள ரூபாய் நோட்டுகளை விநியோகித்துள்ளார்.
இதன் பேரில் போலீசார் இளங்கோ, ராஜகோபால், திருவாசகம் ஆகியோரை கைது செய்தனர். இளங்கோ வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கு கள்ள ரூபாய் நோட்டுகள் தயாரிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர், பிரிண்டர், மை பாட்டில்கள், மோட்டார் சைக்கிள், 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அங்கு அச்சடித்து வைக்கப்பட்டிருந்த ரூ. 36 லட்சத்து 33 ஆயிரத்து, 950 மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகளையும் போலீசார் கைப்பற்றினர்.
அதில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு 24 லட்சத்து 6 ஆயிரத்து 800 மதிப்பிலும், 500 ரூபாய் கள்ள நோட்டு 8 லட்சத்து 91 ஆயிரத்து 500 மதிப்பிலும், 200 ரூபாய் கள்ள நோட்டு 1 லட்சத்து 89 ஆயிரத்து 400 மதிப்பிலும், 100 ரூபாய் கள்ள நோட்டு 49 ஆயிரத்து 600 மதிப்பிலும், 50 ரூபாய் கள்ள நோட்டு 2 ஆயிரத்து 300 மதிப்பிலும் இருந்தது.
கள்ள நோட்டுகள் தயாரிப்பில் ஈடுபட்ட கும்பல் இதனை மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் புழக்கத்தில் விட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக இளங்கோ உள்பட 6 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையைச் சேர்ந்த ஒரு கும்பல் விருதுநகர் மாவட்டத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழகத்தில் விட்டு கைதானது. அந்த கும்பலுக்கும், தற்போது கள்ள நோட்டு தயாரித்தவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? இவர்கள் வேறு எங்கெல்லாம் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடடுள்ளார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் இளங்கோ போலீசாரிடம கூறுகையில், சென்னையை சேர்ந்த முருகேசன், வீரபத்திரன் ஆகியோர் குறைந்த விலைக்கு இரிடியம் வாங்கி தருவதாக கூறி தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், அதன் பிறகுதான் கள்ள நோட்டு அச்சடித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
கோவை சாய்பாபா காலனியில் கடையை வாடகைக்கு எடுத்து கோடிக்கணக்கில் கள்ள நோட்டுகள் அச்சடித்த கும்பல் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த 2 மாதமாக இங்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை அச்சடித்துள்ளனர். பின்னர் தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் புழக்கத்தில் விட்டுள்ளனர்.
இந்த கும்பலில் ஏஜெண்டுகள் பலர் உள்ளனர். அவர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கும் பிரிந்து சென்று ஒரிஜினல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் கள்ள நோட்டுகளையும் கலந்து புழக்கத்தில் விட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ஊட்டியில் கோடை சீசன்களை கட்டி இருந்தது. நாடு முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்ததால் அங்கு கூட்டம் அலைமோதி காணப்பட்டது. இதை பயன்படுத்தி கோடிக்கணக்கில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கிதர் முகமதுவின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் அரசியல்பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் எண்கள் இருந்துள்ளது. அவர்கள் யார்-யார்? எந்தெந்த வகைகளில் இவர்களுக்கு உதவி செய்தார்கள்? என விசாரணை நடந்து வருகிறது.
கோவையில் அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டுகள் ஏஜெண்டுகள் மூலம் கர்நாடகாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தல் நேரத்தில் புழக்கத்தில் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கும்பல் தலைவனான சுந்தருக்கு சர்வதேச அளவில் கள்ளநோட்டு கும்பல் மற்றும் கேரளாவை சேர்ந்த ஹவாலா கும்பலுடன் தொடர்பு இருந்துள்ளது. அதன் மூலம் குஜராத்தில் இருந்து நவீன வெள்ளை காகிதங்களை வரவழைத்து கள்ளநோட்டுகளை அச்சடித்துள்ளனர்.
சுந்தர் பிடிபட்டால் கள்ளநோட்டு கும்பலின் மொத்த நெட்வொர்க் பற்றியும் தகவல் கிடைக்கும் என போலீசார் கருதுகின்றனர். எனவே சுந்தரை கைது செய்வதற்காக கூடுதல் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சுந்தர் மீது கேரளாவில் கள்ளநோட்டு வழக்கு, யானை தந்தம் கடத்திய வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. தனிப்படை போலீசார் கேரளாவில் உள்ள அவரது நண்பர்கள் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரமடையில் அவர் தங்கி இருந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் அங்கு கள்ளநோட்டுகளோ, அச்சடிக்க தேவையான பொருட்களோ இல்லை.
கைதான கிதர் முகமது இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். இவரையும், ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஆனந்தையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளனர். #fakecurrency






