என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » fake currency notes
நீங்கள் தேடியது "fake currency notes"
ரூ. 36 லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகளுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து கம்ப்யூட்டர் மற்றும் பிரிண்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர்:
விருதுநகர் சீதக்காதி தெருவைச் சேர்ந்த அப்துல் காதர் (வயது 52) இவர் மூலிப்பட்டி அரண்மனை முன்பு தீபாவளி பண்டிகையையொட்டி சாலையோர துணிக்கடை அமைத்திருந்தார். தீபாவளிக்கு முதல் நாள் அங்கு ஏராளமானோர் குவிந்து துணி எடுத்தனர்.
அப்போது ஒரு வாலிபர் கொடுத்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அப்துல்காதருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் வேறு ரூபாய் தரும்படி அவர் கேட்க, அந்த வாலிபர் கொடுக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பிரச்சினை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த வாலிபரை விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் வைத்திருந்தது கள்ள நோட்டு என தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த வாலிபரையும் அவரது கூட்டாளியையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்களது பெயர் கோபிநாத் (26), சூர்யா (27) என தெரிய வந்தது. விருதுநகர் செவல்பட்டியைச் சேர்ந்த இவர்கள், அதே ஊரைச் சேர்ந்த பிளம்பர் முருகன்தான் கள்ள ரூபாய் நோட்டை கொடுத்ததாக தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீசார் முருகனை பிடித்து விசாரித்தபோது கொக்கலாஞ்சேரியை சேர்ந்த திருவாசகம் (37) என்பவர் ரூ. 30 ஆயிரம் அளவில் கள்ள ரூபாய் நோட்டுகளை கொடுத்திருப்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து கள்ள ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் முருகன், சூர்யா , கோபிநாத் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் திருவாசகம் போலீசாரிடம் சிக்கினார்.
மதுரையில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுவதாக திருவாசகம்தான் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவின் பேரில் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினர். சிவகாசி அருகே உள்ள எரிச்சநத்தம் புதுக்கோட்டையைச் சேர்ந்த தேங்காய் வியாபாரி ராஜகோபால் (42) என்பவர்தான் திருவாசகத்துக்கு கள்ள ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளார். அவருக்கு மதுரை துவரிமான் பகுதியைச்சேர்ந்த இளங்கோ (52) என்பவர் கள்ள ரூபாய் நோட்டுகளை விநியோகித்துள்ளார்.
இதன் பேரில் போலீசார் இளங்கோ, ராஜகோபால், திருவாசகம் ஆகியோரை கைது செய்தனர். இளங்கோ வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கு கள்ள ரூபாய் நோட்டுகள் தயாரிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர், பிரிண்டர், மை பாட்டில்கள், மோட்டார் சைக்கிள், 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அங்கு அச்சடித்து வைக்கப்பட்டிருந்த ரூ. 36 லட்சத்து 33 ஆயிரத்து, 950 மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகளையும் போலீசார் கைப்பற்றினர்.
அதில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு 24 லட்சத்து 6 ஆயிரத்து 800 மதிப்பிலும், 500 ரூபாய் கள்ள நோட்டு 8 லட்சத்து 91 ஆயிரத்து 500 மதிப்பிலும், 200 ரூபாய் கள்ள நோட்டு 1 லட்சத்து 89 ஆயிரத்து 400 மதிப்பிலும், 100 ரூபாய் கள்ள நோட்டு 49 ஆயிரத்து 600 மதிப்பிலும், 50 ரூபாய் கள்ள நோட்டு 2 ஆயிரத்து 300 மதிப்பிலும் இருந்தது.
கள்ள நோட்டுகள் தயாரிப்பில் ஈடுபட்ட கும்பல் இதனை மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் புழக்கத்தில் விட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக இளங்கோ உள்பட 6 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையைச் சேர்ந்த ஒரு கும்பல் விருதுநகர் மாவட்டத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழகத்தில் விட்டு கைதானது. அந்த கும்பலுக்கும், தற்போது கள்ள நோட்டு தயாரித்தவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? இவர்கள் வேறு எங்கெல்லாம் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடடுள்ளார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் இளங்கோ போலீசாரிடம கூறுகையில், சென்னையை சேர்ந்த முருகேசன், வீரபத்திரன் ஆகியோர் குறைந்த விலைக்கு இரிடியம் வாங்கி தருவதாக கூறி தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், அதன் பிறகுதான் கள்ள நோட்டு அச்சடித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
விருதுநகர் சீதக்காதி தெருவைச் சேர்ந்த அப்துல் காதர் (வயது 52) இவர் மூலிப்பட்டி அரண்மனை முன்பு தீபாவளி பண்டிகையையொட்டி சாலையோர துணிக்கடை அமைத்திருந்தார். தீபாவளிக்கு முதல் நாள் அங்கு ஏராளமானோர் குவிந்து துணி எடுத்தனர்.
அப்போது ஒரு வாலிபர் கொடுத்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அப்துல்காதருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் வேறு ரூபாய் தரும்படி அவர் கேட்க, அந்த வாலிபர் கொடுக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பிரச்சினை ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த வாலிபரை விருதுநகர் மேற்கு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் வைத்திருந்தது கள்ள நோட்டு என தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த வாலிபரையும் அவரது கூட்டாளியையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்களது பெயர் கோபிநாத் (26), சூர்யா (27) என தெரிய வந்தது. விருதுநகர் செவல்பட்டியைச் சேர்ந்த இவர்கள், அதே ஊரைச் சேர்ந்த பிளம்பர் முருகன்தான் கள்ள ரூபாய் நோட்டை கொடுத்ததாக தெரிவித்தனர்.
அதன் பேரில் போலீசார் முருகனை பிடித்து விசாரித்தபோது கொக்கலாஞ்சேரியை சேர்ந்த திருவாசகம் (37) என்பவர் ரூ. 30 ஆயிரம் அளவில் கள்ள ரூபாய் நோட்டுகளை கொடுத்திருப்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து கள்ள ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் முருகன், சூர்யா , கோபிநாத் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் திருவாசகம் போலீசாரிடம் சிக்கினார்.
மதுரையில் கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுவதாக திருவாசகம்தான் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவின் பேரில் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினர். சிவகாசி அருகே உள்ள எரிச்சநத்தம் புதுக்கோட்டையைச் சேர்ந்த தேங்காய் வியாபாரி ராஜகோபால் (42) என்பவர்தான் திருவாசகத்துக்கு கள்ள ரூபாய் நோட்டுகளை கொடுத்துள்ளார். அவருக்கு மதுரை துவரிமான் பகுதியைச்சேர்ந்த இளங்கோ (52) என்பவர் கள்ள ரூபாய் நோட்டுகளை விநியோகித்துள்ளார்.
இதன் பேரில் போலீசார் இளங்கோ, ராஜகோபால், திருவாசகம் ஆகியோரை கைது செய்தனர். இளங்கோ வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கு கள்ள ரூபாய் நோட்டுகள் தயாரிக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர், பிரிண்டர், மை பாட்டில்கள், மோட்டார் சைக்கிள், 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அங்கு அச்சடித்து வைக்கப்பட்டிருந்த ரூ. 36 லட்சத்து 33 ஆயிரத்து, 950 மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகளையும் போலீசார் கைப்பற்றினர்.
அதில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு 24 லட்சத்து 6 ஆயிரத்து 800 மதிப்பிலும், 500 ரூபாய் கள்ள நோட்டு 8 லட்சத்து 91 ஆயிரத்து 500 மதிப்பிலும், 200 ரூபாய் கள்ள நோட்டு 1 லட்சத்து 89 ஆயிரத்து 400 மதிப்பிலும், 100 ரூபாய் கள்ள நோட்டு 49 ஆயிரத்து 600 மதிப்பிலும், 50 ரூபாய் கள்ள நோட்டு 2 ஆயிரத்து 300 மதிப்பிலும் இருந்தது.
கள்ள நோட்டுகள் தயாரிப்பில் ஈடுபட்ட கும்பல் இதனை மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் புழக்கத்தில் விட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக இளங்கோ உள்பட 6 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையைச் சேர்ந்த ஒரு கும்பல் விருதுநகர் மாவட்டத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழகத்தில் விட்டு கைதானது. அந்த கும்பலுக்கும், தற்போது கள்ள நோட்டு தயாரித்தவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? இவர்கள் வேறு எங்கெல்லாம் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடடுள்ளார்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் இளங்கோ போலீசாரிடம கூறுகையில், சென்னையை சேர்ந்த முருகேசன், வீரபத்திரன் ஆகியோர் குறைந்த விலைக்கு இரிடியம் வாங்கி தருவதாக கூறி தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், அதன் பிறகுதான் கள்ள நோட்டு அச்சடித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
மார்த்தாண்டம் பகுதியில் உள்ள வங்கியில் கள்ளநோட்டுகள் டெபாசிட் செய்தது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. இது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியின் கிளைக்கு மாநிலம் முழுவதிலும் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பணம் பாதுகாப்பாக அனுப்பப்படுவது வழக்கம்.
இதுபோல மார்த்தாண்டம் பகுதியில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் இருந்து கடந்த 2017-ம் ஆண்டு மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் பாங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் 8 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களும், 500 ரூபாய் நோட்டுகள் 8 -ம் என மொத்தம் ரூ.12 ஆயிரத்திற்கு கள்ளநோட்டுகள் இருந்ததை ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதுபற்றி சென்னை ரிசர்வ் பங்கியின் உதவி பொது மேலாளர் ரவீந்திரன் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்திடம் புகார் செய்தார். அதில் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள வங்கியில் இருந்து டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில் ரூ.12 ஆயிரத்திற்கு கள்ளநோட்டுகள் இருந்ததை கண்டுபிடித்து உள்ளோம்.
அதனை வங்கியில் செலுத்தியவர்கள் யார்? என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.
இப்புகார் மனுவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க எஸ்.பி.ஸ்ரீநாத் உத்தரவிட்டார். அதன்படி குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மரிய பிரான்சிஸ்கா வழக்குபதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளார்.
இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் கடந்த 2017-ம் ஆண்டில் குறிப்பிட்ட வங்கியில் அந்த பணத்தை டெபாசிட் செய்த நபர் யார்? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை கள்ளநோட்டு கும்பலுடன் அரசியல்பிரமுகர்கள், தொழில் அதிபர்களுக்கு தொடர்பு இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. #fakecurrency
கோவை:
கோவை சாய்பாபா காலனியில் கடையை வாடகைக்கு எடுத்து கோடிக்கணக்கில் கள்ள நோட்டுகள் அச்சடித்த கும்பல் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த 2 மாதமாக இங்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை அச்சடித்துள்ளனர். பின்னர் தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் புழக்கத்தில் விட்டுள்ளனர்.
இந்த கும்பலில் ஏஜெண்டுகள் பலர் உள்ளனர். அவர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கும் பிரிந்து சென்று ஒரிஜினல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் கள்ள நோட்டுகளையும் கலந்து புழக்கத்தில் விட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ஊட்டியில் கோடை சீசன்களை கட்டி இருந்தது. நாடு முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்ததால் அங்கு கூட்டம் அலைமோதி காணப்பட்டது. இதை பயன்படுத்தி கோடிக்கணக்கில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கிதர் முகமதுவின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் அரசியல்பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் எண்கள் இருந்துள்ளது. அவர்கள் யார்-யார்? எந்தெந்த வகைகளில் இவர்களுக்கு உதவி செய்தார்கள்? என விசாரணை நடந்து வருகிறது.
கோவையில் அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டுகள் ஏஜெண்டுகள் மூலம் கர்நாடகாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தல் நேரத்தில் புழக்கத்தில் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கும்பல் தலைவனான சுந்தருக்கு சர்வதேச அளவில் கள்ளநோட்டு கும்பல் மற்றும் கேரளாவை சேர்ந்த ஹவாலா கும்பலுடன் தொடர்பு இருந்துள்ளது. அதன் மூலம் குஜராத்தில் இருந்து நவீன வெள்ளை காகிதங்களை வரவழைத்து கள்ளநோட்டுகளை அச்சடித்துள்ளனர்.
சுந்தர் பிடிபட்டால் கள்ளநோட்டு கும்பலின் மொத்த நெட்வொர்க் பற்றியும் தகவல் கிடைக்கும் என போலீசார் கருதுகின்றனர். எனவே சுந்தரை கைது செய்வதற்காக கூடுதல் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சுந்தர் மீது கேரளாவில் கள்ளநோட்டு வழக்கு, யானை தந்தம் கடத்திய வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. தனிப்படை போலீசார் கேரளாவில் உள்ள அவரது நண்பர்கள் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரமடையில் அவர் தங்கி இருந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் அங்கு கள்ளநோட்டுகளோ, அச்சடிக்க தேவையான பொருட்களோ இல்லை.
கைதான கிதர் முகமது இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். இவரையும், ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஆனந்தையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளனர். #fakecurrency
கோவை சாய்பாபா காலனியில் கடையை வாடகைக்கு எடுத்து கோடிக்கணக்கில் கள்ள நோட்டுகள் அச்சடித்த கும்பல் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த 2 மாதமாக இங்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை அச்சடித்துள்ளனர். பின்னர் தமிழ் நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் புழக்கத்தில் விட்டுள்ளனர்.
இந்த கும்பலில் ஏஜெண்டுகள் பலர் உள்ளனர். அவர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கும் பிரிந்து சென்று ஒரிஜினல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் கள்ள நோட்டுகளையும் கலந்து புழக்கத்தில் விட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ஊட்டியில் கோடை சீசன்களை கட்டி இருந்தது. நாடு முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்ததால் அங்கு கூட்டம் அலைமோதி காணப்பட்டது. இதை பயன்படுத்தி கோடிக்கணக்கில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர்.
இதற்காக கோவையில் இருந்து கள்ளநோட்டுகளை ஐஸ் வியாபாரிகள் போல நடித்து மோட்டார் சைக்கிள்கள் மூலம் ஐஸ்கிரீம் டப்பாவுக்குள் மறைத்து வைத்து கடத்தி சென்றுள்ளனர். சில நேரங்களில் பஸ்களில் சாதாரண பயணிகள் போல பயணம் செய்தும் கள்ளநோட்டுகளை கொண்டு சென்று ஊட்டியில் புழக்கத்தில் விட்டுள்ளனர்.
கிதர் முகமது
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கிதர் முகமதுவின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் அரசியல்பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் எண்கள் இருந்துள்ளது. அவர்கள் யார்-யார்? எந்தெந்த வகைகளில் இவர்களுக்கு உதவி செய்தார்கள்? என விசாரணை நடந்து வருகிறது.
கோவையில் அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டுகள் ஏஜெண்டுகள் மூலம் கர்நாடகாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தல் நேரத்தில் புழக்கத்தில் விடப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கும்பல் தலைவனான சுந்தருக்கு சர்வதேச அளவில் கள்ளநோட்டு கும்பல் மற்றும் கேரளாவை சேர்ந்த ஹவாலா கும்பலுடன் தொடர்பு இருந்துள்ளது. அதன் மூலம் குஜராத்தில் இருந்து நவீன வெள்ளை காகிதங்களை வரவழைத்து கள்ளநோட்டுகளை அச்சடித்துள்ளனர்.
சுந்தர் பிடிபட்டால் கள்ளநோட்டு கும்பலின் மொத்த நெட்வொர்க் பற்றியும் தகவல் கிடைக்கும் என போலீசார் கருதுகின்றனர். எனவே சுந்தரை கைது செய்வதற்காக கூடுதல் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சுந்தர் மீது கேரளாவில் கள்ளநோட்டு வழக்கு, யானை தந்தம் கடத்திய வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. தனிப்படை போலீசார் கேரளாவில் உள்ள அவரது நண்பர்கள் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காரமடையில் அவர் தங்கி இருந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் அங்கு கள்ளநோட்டுகளோ, அச்சடிக்க தேவையான பொருட்களோ இல்லை.
கைதான கிதர் முகமது இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். இவரையும், ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஆனந்தையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளனர். #fakecurrency
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X