search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fake doctor"

    • மருத்துவ படிப்பு ஏதும் படிக்காமல் திலகவதி என்கிற பரிதபேகம் என்பவர் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • போலி பெண் டாக்டர் திலகவதி என்கிற பரிதபேகத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே தாமல் கிராமத்தில் பெண் ஒருவர் மருத்துவ படிப்பு ஏதும் படிக்காமல், நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வருவதாக சுகாதார பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்திற்கு புகார்கள் வந்தது.

    புகார்களின்பேரில் காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கோபிநாத் தலைமையிலான குழுவினர் தாமல் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

    அங்கு அவர்கள் நடத்திய சோதனையில் மருத்துவ படிப்பு ஏதும் படிக்காமல் திலகவதி என்கிற பரிதபேகம் (வயது 45) என்பவர் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கோபிநாத், பாலுச்செட்டி சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் போலி பெண் டாக்டர் திலகவதி என்கிற பரிதபேகத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கரட்டாங்காட்டில் இயங்கி வந்த விஸ்வந்த் கிளினீக் குறித்து கலெக்டருக்கு புகார் சென்றது.
    • மருத்துவத் துறையினர் கடந்ந 13ந் தேதி, 'சீல்' வைத்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் கரட்டாங்கா ட்டில் இயங்கி வந்த விஸ்வந்த் கிளினீக் குறித்து கலெக்டருக்கு புகார் சென்றது. இதனால் கிளினீக்கில் ஆய்வு நடத்திய மருத்துவத் துறையினர் கடந்ந 13ந் தேதி, 'சீல்' வைத்தனர்.

    கிளினீக் நடத்தி வந்த அண்ணாதுரை, டில்லியில் சித்த மருத்துவ படிப்பு முடித்ததாக தெரிவித்தார். அதற்கான சான்றிதழை ஆய்வு செய்ததில், அது போலி என்பது தெரிந்தது. மேலும் மருத்துவ படிப்பு முடிக்காமல், நோயா ளிகளுக்கு மருத்துவம் பார்த்து, மருந்து, மாத்திரை எழுதிக் கொடுத்து, ஊசி செலுத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கலெக்டரின் உத்தரவின்படி தெற்கு போலீசில் அண்ணாதுரை மீது புகார் அளிக்கப்பட்டது.இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சோதனையில் சிக்கினர்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அரசு மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர் லோகேஷ் உமராபாத் போலீசாரிடம் போலி டாக்டர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வெங்கட சமுத்திரம் கூட்டு ரோட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

    இமானுவேல் (60) என்பவர் மருத்துவம் படிக்காமலேயே ஆங்கில முறையில் பொதுமக்களுக்கு சிகிச்சை செய்தது தெரிந்தது. பின்னர் போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகாரிகள் கடையில் ஆய்வு செய்தபோது அங்கு சட்டவிரோதமாக நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தது உறுதியானது.
    • மருந்து கடைக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    பழனி தாராபுரம் சாலையில் உள்ள மருந்து கடையில் ஒருவர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாகவும், அதனால் மக்களுக்கு பல்வேறு விதமான உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் சுகாதாரத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணைஇயக்குனர் பூமிநாதன் தலைமையில் பழனி அரசு ஆஸ்பத்திரி டாக்டர் சதீஸ்குமார், மயக்கவியல் நிபுணர் டால்ஸ்டாய் உள்ளிட்டோர் அந்த மருந்து கடையை ஆய்வு செய்வதற்காக சென்றனர்.

    அதிகாரிகள் வருவதை அறிந்த கடையின் உரிமையாளரும், சிகிச்சை அளித்தவருமான முகமதுகவுசிக் தப்பிஓடிவிட்டார். அதிகாரிகள் கடையில் ஆய்வு செய்தபோது அங்கு சட்டவிரோதமாக நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தது உறுதியானது.

    இதையடுத்து கடையில் இருந்த மாத்திரை, மருந்துகள், ஊசிகள் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றி பழனி நகர போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர். மேலும் அந்த மருந்து கடைக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து முகமதுகவுசிக்கை தேடி வருகின்றனர்.

    • திருவெறும்பூர், துவாக்குடி பகுதியில் 2 போலி மருத்துவர்கள் சிகிச்சை? மருத்துவ அதிகாரி புகாரின் பேரில் வழக்குப்பதிவு
    • போலி மருத்துவர்களை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் லால்குடி தெற்கு ஸ்ரீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 42). இவர் மருத்துவம் படிக்காமல் திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டை மேட்டுத்தெரு பகுதியில் கிளினிக் வைத்து நடத்தி வருவதாக புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து திருச்சி முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜன் திருவெறும்பூர் போலீசில் புகார் செய்துள்ளார்.அதில் அரசின் அனுமதி பெறாமல், இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு எதிராக சுரேஷ்குமார் பொதுமக்களுக்கு ஊசி போட்டு மருத்துவம் பார்த்து வருவதாக தெரிவித்துள்ளார்.

    அதன் பேரில் சுரேஷ்குமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இதேபோன்று துவாக்குடி அசூர் கட் ரோடு வாடகை கட்டிடத்தில் மண்ணச்சநல்லூர் அழகு நகர் பகுதியைச் சேர்ந்த கலைமணி (72) என்பவரும் அரசின் அனுமதியின்றி இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு முரணாக பொதுமக்களுக்கு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக டாக்டர் கோவிந்தராஜன் துவாக்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் அவர் மீதும் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    கடந்த சில வாரங்களாக திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போலி டாக்டர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மனித உயிர்களுடன் விளையாடும் இதுபோன்ற போலி மருத்துவர்களை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


    • காரமடை பகுதியில் சிலர் டாக்டருக்கு படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக கலெக்டர் அலுவலகத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
    • முதல்கட்ட விசாரணையில் 2 பேர் போலி டாக்டர்கள் எனவும், ஒருவர் அவர்களுக்கு உதவி செய்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் காரமடை பகுதியில் சிலர் டாக்டருக்கு படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக கலெக்டர் அலுவலகத்துக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதுதொடர்பாக தகவல் காரமடை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் உஷார்படுத்தப்பட்டனர்.

    அதன்படி போலீசார் காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது கணுவாய்பாளையம் பிரிவு, வெள்ளியங்காடு, தாயனூர் ஆகிய 3 இடங்களில் செயல்பட்டு வந்த தனியார் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அதில் போலி மருத்துவ சான்றிதழ்களுடன் கிளினிக் நடத்தி வந்த 2 போலி டாக்டர்கள் உள்பட 3 பேர் சிக்கி உள்ளனர்.

    முதல்கட்ட விசாரணையில் அவர்களில் 2 பேர் போலி டாக்டர்கள் எனவும், ஒருவர் அவர்களுக்கு உதவி செய்தவர் எனவும் தெரியவந்துள்ளது. மேலும் ஒருவர் தலைமறைவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். விசாரணை நடப்பதால் பெயர் விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    போலீசாரிடம் சிக்கிய போலி டாக்டர்கள் ஏற்கனவே கொரோனா பேரிடர் பொதுமுடக்க நேரத்தில் மேல்பாவி, வெள்ளியங்காடு, தோலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தபோது பழங்குடியின மக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு தோல் நோய்கள் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக காரமடை வட்டார சுகாதார அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மருத்துவமனையை பூட்டிச் சென்றனர். இந்நிலையில் தற்போது மீண்டும் போலி மருத்துவ கும்பல் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வருவது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • விக்கிரவாண்டி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் ரகுநாத் அங்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
    • சொந்தமாக மருந்தகமும் நடத்தி வந்தது ஆய்வில் தெரியவந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்கா திண்டிவனம் வட்டம் பெரியதச்சூரில் போலி டாக்டர் கிளினிக் வைத்து சிகிச்சை அளித்து வருவதாக புகார்கள் வந்தன. இதனை அடுத்து விக்கிரவாண்டி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் ரகுநாத் அங்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது விழுப்புரம் அண்ணாமலை நகரைச் சேர்ந்த செல்வசேகர் (வயது 51) என்பவர் கிளினிக் வைத்து பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்ததை கண்டார். உடனடியாக உள்ளே சென்ற டாக்டர் ரகுநாத் அவரிடம் விசாரணை நடத்தினார். இதில் அவர் எம்.பி.பி.எஸ்., படிக்காமல் பி.எஸ்.சி. படித்து விட்டு பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.

    மேலும், இவர் சொந்தமாக மருந்தகமும் நடத்தி வந்தது ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து டாக்டர் ரகுநாத், இது குறித்து பெரிய தச்சூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன் வழக்குப்பதிந்து போலி டாக்டர் விழுப்புரம் அண்ணாமலை நகரைச் சேர்ந்த செல்வசேகரை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த போலி டாக்டர் இது போல பல முறை கைதாகி, ஜாமினில் வந்து மீண்டும் கிளினிக் நடத்தி வருகிறார். எனவே, இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • அனுமதியின்றி ரத்த பரிசோதனை நிலையம் வைத்துக்கொண்டு, அங்கு நோயாளிகளுக்கு அலோபதி சிகிச்சை அளித்து வருவதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த போலி டாக்டர் ராபர்ட்டை போலீசார் கைது செய்தனர்.

    திருவள்ளூர்:

    ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தாலுகா, பாண்டியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராபர்ட் (வயது 43). இவர், திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை பஜார் வீதியில் அனுமதியின்றி ரத்த பரிசோதனை நிலையம் வைத்துக்கொண்டு, அங்கு நோயாளிகளுக்கு அலோபதி சிகிச்சை அளித்து வருவதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ், திருத்தணி அரசு ஆஸ்பத்திரியின் தலைமை டாக்டர் ராதிகா தேவி ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் ராபர்ட், பிளஸ்-2 மற்றும் லேப் டெக்னீசியன் படித்து விட்டு அலோபதி மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. அங்கிருந்த மருந்துகள் மற்றும் உபகரணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த போலி டாக்டர் ராபர்ட்டை போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட தனிப்படை போலீசார் பள்ளிப்பட்டு பகுதியில் அரசு டாக்டர் லட்சுமி நாராயண் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பள்ளிப்பட்டு பகுதிகளில் 10-ம் வகுப்பு வரை மட்டும் படித்து விட்டு கிளினிக் நடத்தி வந்த மோகன் (47), வடிவேலு (53) ஆகிய போலி டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்.

    அதேபோல ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம், செங்கட்டானூர் பகுதியில் போலி டாக்டர் ஞானபிரகாசத்தை (40) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர், எலக்ட்ரோபதி என்ற படிப்பை முடித்துவிட்டு மருத்துவம் பார்த்தது தெரிய வந்தது.

    மேலும் திருவாலங்காடு ஒன்றியம், வீரராகவபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வீரக்கோவில் கிராமத்தில் மூதாட்டி ஒருவர், அவருடைய கணவர் கிளினிக் வைத்து நடத்திய அனுபவத்தை கொண்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக திருவாலங்காடு போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து போலீசார் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் அந்த கிளிக்கில் சோதனை நடத்தினர்.

    இதில் மூதாட்டி ரெஜினா (74) அந்த பகுதியில் 15 ஆண்டுகளாக அலோபதி மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. சுகாதாரத்துறையினர் புகாரின்பேரில் திருவாலங்காடு போலீசார் அவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதைபோல கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிறபேட்டையில் முதலுதவி மையம் என்ற பெயரில் மருந்து கடையுடன் சேர்த்து நோயாளிகளுக்கு அலோபதி மருத்துவம் பார்த்த மகேஷ் (31) மற்றும் கவரைப்போட்டையில் சித்தா மருத்துவம் படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த ஞானசுந்தரி (46) ஆகிய 2 பேரை பிடித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராஜபாளையம் அருகே போலி டாக்டருக்கு வலைவீசி தேடி வருகின்றனர்.
    • சிகிச்சைக்கு பயன்படுத்திய மருந்து, மாத்திரைகள் மற்றும் ஊசி போன்றவை இருந்தன.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முறம்பு மவுண்ட் சியோன் பகுதியில் அமலன் சேவுக ராஜ் (வயது 60) என்பவர் டாக்டர் என்று தெரிவித்து ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தார். அவரிடம் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு அமலன் சேவுகராஜ் ஊசி போட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கி வந்தார். இவர் 5-ம் வகுப்பு வரை படித்து விட்டு மருத்துவம் பார்ப்ப தாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குநர் டாக்டர் முருக வேல் தலைமையிலான குழுவினர் மவுண்ட் சியோன் பகுதிக்கு சென்று அமலன் சேவுகராஜ் நடத்தி வந்த மருத்துவமனை யில் சோதனை நடத்தினர். அப்போது அமலன் சேவுகராஜ் அங்கில்லை. அங்கு அவர் சிகிச்சைக்கு பயன்படுத்திய மருந்து, மாத்திரைகள் மற்றும் ஊசி போன்றவை இருந் தன. அதனை பறிமுதல் செய்தனர். போலி டாக்டர் தலைமறைவாகி விட்ட தால் இது குறித்து தளவாய் புரம் போலீஸ் நிலையத்தில் மருத்துவ துறை இணை இயக்குநர் டாக்டர் முருக வேல் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அமலன் சேவுகராஜை தேடி வருகின்றனர்.

    • 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு கிளினிக் நடத்தி வந்தார்
    • போலீசார் விசாரணை

    வந்தவாசி:

    வந்தவாசி காதர்ஜண்டா தெருவில் போலி டாக்டர் ஒருவர் கிளினிக் வைத்து மூல நோய்க்கு சிகிச்சை அளிப்ப தாக புகார்கள் வந்தன.

    இதை யடுத்து வந்தவாசி அரசு மருத் துவமனை தலைமை மருத் துவ அலுவலர் சிவப்பிரியா தலைமையிலான மருத்துவத் துறையினர் அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட னர்.

    இதில் வந்தவாசி கஸ்தூரி பாய் தெருவைச் சேர்ந்த ரிஷி காந்த்ராய் மகன் அனந்தகு மார்ராய் (வயது 42) என்பவர் 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு கிளினிக் வைத்து மூல நோய்க்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிந்தது. இதைய டுத்து அவரிடமிருந்து மருத் துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்த னர்.

    இதுகுறித்து மருத்துவ அலு வலர் சிவப்பிரியா வந்தவாசி தெற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனந்தகுமார்ராயை கைது செய்தனர்.

    மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 10-ம் வகுப்பு கூட தாண்டாத யோகமீனாட்சி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை பை-பாஸ் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டோக்கன் போடும் ஆயாவாக பணியில் சேர்ந்துள்ளார்.
    • உங்கள் பகுதியில் வசிக்கும் நோயாளிகளை என்னிடம் அழைத்து வாருங்கள். ஒருவரை அழைத்து வந்தால் உடனடியாக 50 ரூபாய் வாங்கிக் கொள்ளலாம் என்ற ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார்.

    மதுரை:

    மதுரை மாவட்ட சுகாதாரத்துறைக்கு ஒரு புகார் கடிதம் வந்தது. அதில் சம்மட்டிபுரம் ஸ்ரீராம் நகர் மெயின் ரோடு மனோரஞ்சிதம் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் காளிதாஸ் என்பவரின் மனைவி யோகமீனாட்சி (வயது 39) மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் செல்வராஜ், மருந்தாளுநர் பால செந்தில் மற்றும் எஸ்.எஸ். காலனி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி விசாரணை நடத்தினர். அப்போது யோகமீனாட்சி போலி டாக்டர் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. அதன் விபரம் வருமாறு:-

    10-ம் வகுப்பு கூட தாண்டாத யோகமீனாட்சி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை பை-பாஸ் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டோக்கன் போடும் ஆயாவாக பணியில் சேர்ந்துள்ளார். சில மாதங்களில் அங்கு வேலையை நன்கு கற்றுக்கொண்ட அவருக்கு நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகளை கொடுக்கும் வேலை வழங்கப்பட்டது.

    அதனையும் திறம்பட செய்த யோக மீனாட்சி அதற்கு அடுத்த கட்டமாக நர்சுகளிடம் பழகி நோயாளிகளுக்கு ஊசி போட பழகிக்கொண்டார். பின்னர் அவர் அந்த மருத்துவமனையில் டாக்டர்களின் அனுமதி இல்லாமல் நோயாளிகளுக்கு தன்னிச்சையாக ஊசி போடுவது, மருந்து வழங்குவது போன்ற வேலைகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    ஆஸ்பத்திரிக்கு டாக்டர்கள் போல் டிப் டாப்பாக உடை அணிந்து வந்த யோகமீனாட்சி தன்னை ஒரு டாக்டர் என விவரம் தெரியாத நபர்களிடம் அறிமுகம் செய்து கொண்டுள்ளார். அவர்களிடம் தனது வீட்டு முகவரியை கொடுத்து ஏதேனும் உடல் நலக்குறைவு இருந்தால் என்னிடம் வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள். குறைந்த கட்டணம் தான் என கூறி உள்ளார்.

    இதனை நம்பி சிலர் யோக மீனாட்சியை சந்தித்து ஊசி போட்டு மருந்து மாத்திரைகளை வாங்கி உள்ளனர். இதில் சில பேருக்கு உடல் நலம் சீராகி உள்ளது.

    குறைந்த கட்டணத்தில் மருத்துவம் என்ற காரணத்தால் யோக மீனாட்சியிடம் சிகிச்சை பெற்றவர்கள் மூலம் அவருக்கு பொதுமக்கள் பலர் அறிமுகமாகினர். இதன் காரணமாக யோக மீனாட்சியை நாள்தோறும் குறைந்தது 30-க்கும் மேற்பட்டோர் சந்தித்து சிகிச்சை பெற்றனர்.

    இதையடுத்து யோக மீனாட்சி தனது வீட்டின் அருகிலேயே ஒரு கிளினிக் தொடங்கினார். நாட்கள் செல்ல செல்ல கிளினிக்கிற்கு வரும் கூட்டம் அதிகரித்தது. இதனால் 24 மணி நேரமும் பிசியாக யோகமீனாட்சி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். இதற்காக ஒரு ஆண் உள்பட 2 பேரையும் வேலைக்கு சேர்த்தார்.

    அவர்களிடம், நான் ஏழை எளியோருக்கு குறைந்த செலவில் மருத்துவம் செய்ய விரும்புகிறேன். எனவே நீங்கள் உங்கள் பகுதியில் வசிக்கும் நோயாளிகளை என்னிடம் அழைத்து வாருங்கள். ஒருவரை அழைத்து வந்தால் உடனடியாக 50 ரூபாய் வாங்கிக் கொள்ளலாம் என்ற ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார்.

    இதனை நம்பி அவர்களும் 100-க்கும் மேற்பட்டோரை அழைத்து வந்துள்ளனர். இதற்காக, தான் வேலைக்கு சேர்த்த 2 பேருக்கும் யோக மீனாட்சி வெகுமதிகளை வழங்கினார். மேலும் மதுரையில் 200-க்கும் மேற்பட்டோருக்கு யோக மீனாட்சி குடும்ப டாக்டராக இருந்துள்ளார்.

    மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    10-ம் வகுப்பு கூட தாண்டாத ஒருவர் மக்களின் உயிரை பற்றி சிந்திக்காமல் மருத்துவம் பார்த்தது மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • நரசிம்மன் அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் உதவி மருந்தாளுனராக பணிபுரிந்து வருவதாக கூறி பொதுமக்களுக்கு தனது வீட்டிலேயே சிகிச்சை அளித்து வந்துள்ளார்.
    • நரசிம்மன் சிகிச்சை குறித்து வேலூர் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் மற்றும் ஊரக நல அலுவலர் ஆகியோருக்கு புகார் சென்றுள்ளது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த தேவிசெட்டி குப்பம் மந்தைவெளி கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 40). இவரது மனைவி அரியூரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    நரசிம்மன் அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் உதவி மருந்தாளுனராக பணிபுரிந்து வருவதாக கூறி பொதுமக்களுக்கு தனது வீட்டிலேயே சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் இவரது சிகிச்சை குறித்து வேலூர் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் மற்றும் ஊரக நல அலுவலர் ஆகியோருக்கு புகார் சென்றுள்ளது. அதைத்தொடர்ந்து அணைக்கட்டு அரசு மருத்துவமனை உதவி மருத்துவர் ஜெயந்தி மற்றும் சுகாதாரத்துறையினர் நரசிம்மன் வீட்டுக்கு சென்றனர்.

    அப்போது அவர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் இதுகுறித்து டாக்டர் ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில் வேப்பங்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நரசிம்மனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துசென்று விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து உள்ளதாகவும், கடந்த 20 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நரசிம்மனை கைது செய்தனர்.

    ×