search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thoppur"

    தொப்பூர் அருகே போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
    நல்லம்பள்ளி:

    தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள ஏலகிரியில் போலி டாக்டர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக மருத்துவ துறை இணை இயக்குனர் அலுவலகத்திற்கு புகார் வந்தது. அதன் பேரில் நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் ஆஷாபிடரிக் தலைமையில் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் மருத்துவத்துறை அதிகாரிகள் ஏலகிரி கிராமத்திற்கு சென்று திடீர் ஆய்வு செய்தனர்.

    அப்போது சேஷம்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் ஆங்கிலம் மருத்துவம் பயிலாமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மருத்துவ துறை அதிகாரிகள் முருகேசனை தொப்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி போலி டாக்டர் முருகேசனை கைது செய்தனர்.

    தர்மபுரி மாவட்டத்தில் முறையாக மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளிக்கும் போலி டாக்டர்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என நலப்பணிகள் இணை இயக்குனர் ஆஷாபிடரிக் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின் போது டாக்டர் ராஜ்குமார், கண்காணிப்பாளர் சசி, முருகன், ராஜேஷ்முருகன், ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
    தொப்பூர் மலைப்பாதையில் தனியார் ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 36 பயணிகள் உயிர் தப்பினர். பஸ் எரிந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Omnibus #Fireaccident
    தருமபுரி:

    மதுரையில் இருந்து பெங்களூருவுக்கு பிரபல தனியார் நிறுவன ஆம்னி சொகுசு பஸ் புறப்பட்டு வந்தது. இந்த பஸ்சை சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த மாதேஸ்வரன் (வயது 58) என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த பஸ்சில் 36 பயணிகள் இருந்தனர். இந்த பஸ் திண்டுக்கல், கரூர், சேலம் வழியாக இன்று அதிகாலை 4.30 மணிக்கு தருமபுரி மாவட்டம் தொப்பூர் மலைப்பாதையில் ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்து கொண்டு இருந்தது. அப்போது பஸ்சின் பின் பகுதியில் உள்ள ஏர்கண்டி‌ஷன் எந்திரத்தில் புகை வந்தது. இதை பின்னால் வந்த ஒரு வாகன டிரைவர் கண்டுபிடித்து ஆம்னி பஸ்சின் டிரைவர் மாதேஸ்வரனிடம் கூறினார். உடனே அவர் பஸ்சை ரோட்டு ஓரமாக நிறுத்திவிட்டார். ஆஞ்சநேயர் கோவில் குழாயில் உள்ள தண்ணீரை எடுத்து வந்து அதில் டிரைவர் ஊற்றினார். பின்னர் பஸ்சில் இருந்த பயணிகள் 36 பேரையும் கீழே இறக்கி மாற்று பஸ்களில் பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தார்.

    இதுகுறித்து அந்த தனியார் நிறுவன மெக்கானிக்குக்கு டிரைவர் போனில் தகவல் தெரிவித்தார். ஆனால் மெக்கானிக் வர காலதாமதம் ஆனது. பின்னர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தருமபுரியில் இருந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.


    ஆம்னி பஸ் தீப்பிடித்து எரியும் காட்சி.

    இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு மீண்டும் பஸ்சில் தீப்பிடித்தது. உடனே ஆம்னி பஸ் டிரைவரும், பொதுமக்களும் அந்த வழியே வந்த வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டனர். இதனால் அந்த பஸ்சில் இருந்து மற்ற வாகனங்களுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது. இதுகுறித்து மீண்டும் தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் மீண்டும் வந்து தீயை அணைத்தனர்.

    பஸ் எரிந்த சம்பவம் தொடர்பாக தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ் எரிய காரணம் என்ன? என்று பஸ்சின் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் நடந்தபோது பயணிகள் அனைவரும் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தனர். டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி பயணிகளை எழுப்பி விட்டதால் அவர்கள் அனைவரும் உயிர் தப்பினார்கள். மேலும் அந்த வழியே வந்த வாகனங்களை நிறுத்திவிட்டதால் மேலும் வாகனங்கள் எரிவதும் தடுக்கப்பட்டது.

    கடந்த 2 மாதத்துக்கு முன்பு இதே மலைப்பாதையில் தேங்காய் எண்ணெய் லாரிக்கு டிரைவர் தீவைத்தார். அந்த லாரி பின்னோக்கி வந்தபோது இன்னொரு கியாஸ் டேங்கர் லாரி, 2 கார்கள் எரிந்து சேதமாகின. நல்லவேளை தனியார் ஆம்னி பஸ் எரிந்தபோது அங்கிருந்த பொதுமக்களின் உதவியால் பெரிய அளவில் சேதம் அடைவது தடுக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தினால் அந்த பாதையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.  #Omnibus #Fireaccident

    தமிழகத்தில் 5 இடங்களில் செய்யப்பட்ட ஆய்வைத் தொடர்ந்து மதுரையில் சுமார் 1500 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். #AIIMS #AIIMSinMadurai #Thoppur
    சென்னை:

    நாட்டின் தலைசிறந்த மருத்துவமனையாக கருதப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை 5 மாநிலங்களில் அமைய இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் தேர்வு செய்வது தொடர்பாக செங்கல்பட்டு, மதுரை, செங்கிபட்டி, பெருந்துறை, மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.



    இதையடுத்து, மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியினை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 750 படுக்கை அறைகளை கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட இருப்பதாகவும், இந்த மருத்துவமனையில் 100 மருத்துவ படிப்புக்கான வசதி மற்றும் நர்சிங் படிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை 1500 கோடி ரூபாய் செலவில் உருவாகப்பட உள்ளதாகவும், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து தரும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். #AIIMS #AIIMSinMadurai #Thoppur
    ×