என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Executive Meeting"
கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கீதா ஹால் ரோட்டில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி. மனோகரன் தலைமை தாங்கினார்.
மாநில துணைத் தலைவர்கள் எம்.என்.கந்தசாமி, என்ஜினீயர் ராதாகிருஷ்ணன், மாநில பொது செயலாளர் வீனஸ்மணி முன்னாள் மாவட்ட தலைவர் மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் விஜயகுமார் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:- தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது, இந்திய ராணுவத்துக்காக ரபேல் ரக போர் விமானம் வாங்க ஏற்படுத்திய ஒப்பந்தத்தில் பிரதமர் மோடிதலைமையிலான மத்திய அரசு மிகப் பெரிய ஊழலை செய்துள்ளது. எனவே மோடி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் வருகிற 14-ந் தேதி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், அகில இந்திய செயலாளர் சஞ்சய் தத் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் பெருமளவில் தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் என்பது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர் சின்னையன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சவுந்தர்ராஜ், சிவாஜி கந்தசாமி, ரத்தின சாமி, என்.சின்னராஜ்,வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நவீன்குமார், வக்கீல் பிரிவு வரதராஜ், பிரபாகரன், ஜெகநாதன், நாகராஜன், மகிளா காங்கிரஸ் சுடர்விழி, சேவாதள தலைவர் ஆகாஷ், சிவக்குமார், ராஜேந்திரன், பேரூர் மயில், தங்கதுரை, கணேசன், பொன்னுசாமி, ரங்கசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். #Congress
விருத்தாசலம்:
விருத்தாசலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கருப்புசாமி தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர்கள் அய்யாயிரம், வெங்கடேசன், மாநில நிர்வாகிகள் குரு, நீதிவள்ளல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகர செயலாளர் முருகன் வரவேற்றார்.
இதில் மாநில நிர்வாகிகள் செம்மல், முத்தையன், தொகுதி துணை செயலாளர் பாஸ்கர், ஒன்றிய செயலாளர்கள் சுப்புஜோதி, தாமோதரன், வேல்முருகன், சந்தோஷ்குமார், ஜான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் நகர பொருளாளர் முருகன் நன்றி கூறினார். இதில் வருகிற 17-ந் தேதி அன்று பிறந்தநாள் காணும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்தநாளில் அனைத்து கிளைகள் தோறும் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவதுடன், கடலூர் மேற்கு மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் பனை கன்றுகளை நடுவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி தலைவி காஞ்சனா கமலநாதன், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை ஜூன் மாதம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது, கிருஷ்ணகிரி அணை மதகுகளை உடனடியாக சீரமைத்து, வீணாகும் தண்ணீரை சேமிக்க வேண்டும். இந்த அணையின் 8 மதகுகளையும் மாற்றிடும் வகையில் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து உதவிட வேண்டும். மத்திய அரசின் நிதியுதவியின் கீழ் செயல்படும் அங்கன்வாடி பணியாளர்களை, அரசு விதிக்கு நேர்மாறாக நியமனம் செய்வதற்கு கண்டனம் தெரிவித்துகொள்வது. இரண்டு ஆண்டுகளாக ஆணையர் இல்லாமல் கிருஷ்ணகிரி நகராட்சி நிர்வாகம் செயல்படுவதற்கு கண்டனம் தெரிவித்து கொள்வதுடன், உடனடியாக தமிழக அரசு கிருஷ்ணகிரி நகராட்சிக்கு ஆணையரையும், பிற அலுவலர்களையும் நியமனம் செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்வது, என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் சுகவனம், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் பொன்.குணசேகரன், கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப், பர்கூர் ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ரஜினிசெல்வம், துணை அமைப்பாளர் அமீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்