search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருத்தாசலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்
    X

    விருத்தாசலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    விருத்தாசலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.

    விருத்தாசலம்:

    விருத்தாசலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கருப்புசாமி தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர்கள் அய்யாயிரம், வெங்கடேசன், மாநில நிர்வாகிகள் குரு, நீதிவள்ளல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகர செயலாளர் முருகன் வரவேற்றார்.

    இதில் மாநில நிர்வாகிகள் செம்மல், முத்தையன், தொகுதி துணை செயலாளர் பாஸ்கர், ஒன்றிய செயலாளர்கள் சுப்புஜோதி, தாமோதரன், வேல்முருகன், சந்தோஷ்குமார், ஜான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    முடிவில் நகர பொருளாளர் முருகன் நன்றி கூறினார். இதில் வருகிற 17-ந் தேதி அன்று பிறந்தநாள் காணும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்தநாளில் அனைத்து கிளைகள் தோறும் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவதுடன், கடலூர் மேற்கு மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் பனை கன்றுகளை நடுவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×