search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "EngvIND"

    • இங்கிலாந்தின் 10 விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களே வீழ்த்தினர்.
    • ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னிங்சின் 10 விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முழுமையாக வீழ்த்துவது இது 7-வது நிகழ்வாகும்.

    லண்டன்:

    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடரையும் வெல்லும் நோக்கத்தில் இந்திய அணி களமிறங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் இங்கிலாந்தின் 10 விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களே (பும்ரா-6, ஷமி-3, பிரசித் கிருஷ்ணா-1) சாய்த்தனர். ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னிங்சின் 10 விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முழுமையாக வீழ்த்துவது இது 7-வது நிகழ்வாகும்.

    இந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலர் முகமது ஷமியின் ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 151 ஆக (80 ஆட்டம்) உயர்ந்தது. இதன் மூலம் 150 விக்கெட்டுகளை அதிவேகமாக எட்டிய இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

    ஒட்டுமொத்தத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கானுடன் 3-வது இடத்தை பகிர்ந்துள்ளார். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை 10 இந்தியர்கள் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். இதில் சிறந்த பந்து வீச்சை கொண்டுள்ள ஸ்டூவர்ட் பின்னி 4 ரன்னுக்கு 6 விக்கெட் (வங்காளதேசத்துக்கு எதிராக 2014) கைப்பற்றி உள்ளார். கும்பிளே (6-12), பும்ரா (6-19), ஆஷிஷ் நெஹரா (6-23), குல்தீப் யாதவ் (6-25), முரளிகார்த்திக் (6-27), அஜித் அகர்கர் (6-42), யுஸ்வேந்திர சாஹல் (6-42), அமித் மிஸ்ரா (6-48), ஸ்ரீசாந்த் (6-55), ஆஷிஷ் நெஹரா (6-59) ஆகியோர் 6 விக்கெட் வீழ்த்திய மற்ற இந்தியர்கள் ஆவர்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது ஆட்டம் நாளை நடக்கிறது. 

    • முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
    • இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஓவல்: 

    இங்கிலாந்திற்கு எதிராக ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் ரோகித் சர்மா 5 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 250 சிக்ஸ்ர்கள் குவித்த முதல் இந்தியர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனை படைத்ததில் சர்வதேச அளவில் முதல் இடத்தில் அப்ரிடி (351சிக்ஸர்), இரண்டாவது இடத்தில் கிறிஸ் கெயில் (331சிக்ஸர்), 3வது இடத்தில் ஜெயசூர்யா (270 சிக்ஸர்) உள்ளனர். ரோகித் சர்மாவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.

    நேற்றைய போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதி விரைவாக 150 விக்கெட்களை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். மொத்தம் 80 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஷமி 150 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார்.

    இதற்கு முன்னர் இந்திய வீரர் அஜித் அகர்கர் 97 போட்டிகளில் விளையாடி 150 ஒருநாள் விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். சர்வதேச அளவில் அதி விரைவாக 150 விக்கெட்களை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்ஸ் மற்றும் பாகிஸ்தானின் சக்லைன் முஷ்டாக் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

    இனிடையே நேற்றைய போட்டியில் 7.2 ஓவர் வீசிய இந்திய வேகபந்து வீச்சாளர் பும்ரா 19 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றி இருந்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    • இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பும்ரா 6 விக்கெட் வீழ்த்தினார்.
    • முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது.

    ஓவல்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 25.2 ஓவரில் 110 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 30 ரன்னும், டேவிட் வில்லி 21 ரன்னும்எடுத்தனர். முன்னணி வீரர்களான ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டோன் ஆகியோர் டக் அவுட்டாகினர்.

    இந்தியா சார்பில் பும்ரா 6 விக்கெட்டும், ஷமி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆடினர்.

    தவான் நிதானமாக ஆட ரோகித் சர்மா அதிரடியில் இறங்கினார். அரை சதம் கடந்த அவர் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

    இறுதியில், இந்தியா 18.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா76 ரன்னும், ஷிகர் தவான் 31 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • கேப்டன் ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார்.

    ஓவல்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இந்திய அணியில் காயம் காரணமாக விராட் கோலி விலகினார். அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் அய்யர் அணியில் இடம் பிடித்தார்.

    அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே இந்திய அணியினர் அசத்தலாக பந்து வீசினர்.

    தொடக்க ஆட்டக்காரரான ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டோன் ஆகியோர் டக் அவுட்டாகினர்.

    அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 30 ரன்னும், டேவிட் வில்லி 21 ரன்னும், பிரைடன் கார்சே 15 ரன்னும், மொயீன் அலி 14 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 110 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் பும்ரா 6 விக்கெட்டும், ஷமி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • 5 பந்துகள் சந்தித்த ஜேசன் ராய் பும்ரா பந்து வீச்சில் ஸ்டெம்புகள் பறக்க போல்ட் ஆனார்.
    • 5.3 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 17 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

    இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக தெரிவித்தது. இந்திய அணியில் காயம் காரணமாக விராட் கோலி விலகினார். அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் அய்யர் அணியில் இடம் பிடித்தார்.

    இதனையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் - பேர்ஸ்டோவ் களமிறங்கினர். 5 பந்துகள் சந்தித்த ஜேசன் ராய் பும்ரா பந்து வீச்சில் ஸ்டெம்புகள் பறக்க போல்ட் ஆனார். அடுத்து வந்த ரூட் 2 பந்துகள் மட்டுமே சந்தித்து பும்ரா பந்து வீச்சில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    அடுத்ததாக ஸ்டோக்ஸ் களமிறங்கினார். அவரும் வந்த வேகத்தில் முகமது சமி பந்து வீச்சில் விக்கெட்டை பறிக்கொடுத்து வெளியேறினர். அடுத்து வந்த கேப்டன் பட்லர் 2 பவுண்டரிகள் அடுத்தடுத்து விளாசினார். நிதானமாக விளையாடி வந்த பேர்ஸ்டோவ் 20 பந்தில் 7 ரன்கள் எடுத்து பும்ரா பந்து வீச்சில் அவுட் ஆனார். 5.3 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து 17 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

    • ஓவல் மைதானத்தில் ஷிகர் தவான், அஜய் ஜடேஜா ஆகிய 2 இந்திய பேட்ஸ்மேன்கள் மட்டுமே சதமடித்துள்ளார்கள்.
    • ஓவல் மைதானத்தில் ரவீந்திர ஜடேஜாவை தவிர வேற எந்த இந்திய பவுலரும் ஒரு போட்டியில் 5 விக்கெட் எடுத்ததில்லை.

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட்டில் தோல்வியடைந்து தொடரை 2-2 என சமன் செய்தது. அடுத்ததாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

    இந்நிலையில் ஒருநாள் தொடரை வெல்வதற்கு இரு அணிகளும் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் ஷிகர் தவான், முகமது சமி ஆகியோர் ஒருநாள் தொடரில் இணைகின்றனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி காயம் காரணமாக முதல் ஒருநாள் போட்டியில் இருந்து விலகி உள்ளார்.

    இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு நடக்கிறது.

    ஓவல் மைதானம் குறித்த தகவல்களை காண்போம்:-

    உலகிலேயே பழமையான மைதானங்களில் ஒன்றான ஓவல் மைதானத்தில் கடந்த 1880 முதல் சர்வதேச போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 23000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள இம்மைதானத்தில் கடந்த 1973 முதல் பல வரலாற்றுச் சிறப்புமிக்க ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன.

    இந்த மைதானத்தில் வரலாற்றில் இதுவரை மொத்தம் 74 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 30 போட்டிகளில் வென்றுள்ளன. 41 போட்டிகளில் சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளன. 3 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன.

    இங்கு 49 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து 30 வெற்றிகளைப் பெற்று வலுவான அணியாக திகழ்கிறது. 17 போட்டிகளில் தோற்றது. 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது.

    இம்மைதானத்தில் 16 போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்தியா 6 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. 9 போட்டிகளில் தோற்றுள்ளது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

    குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிராக இம்மைதானத்தில் களமிறங்கிய 8 போட்டிகளில் 5 போட்டிகளில் தோல்வியடைந்த இந்தியா 2 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்தது. 1 போட்டி ரத்து செய்யப்பட்டது.

    இம்மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த டாப் 3 இந்திய பேட்ஸ்மேன்கள்:

    1. ஷிக்கர் தவான் : 443

    2. சச்சின் டெண்டுல்கர் : 209

    3. ரோகித் சர்மா : 199

    இந்த மைதானத்தில் ஷிகர் தவான் (125) மற்றும் அஜய் ஜடேஜா (100*) ஆகிய 2 இந்திய பேட்ஸ்மேன்கள் மட்டுமே சதமடித்துள்ளார்கள். இங்கு ஷிகர் தவான் மட்டும் அதிகபட்சமாக 3 சதங்கள் அடித்துள்ளார். அதேபோல் ரோகித் சர்மா அதிகபட்சமாக 3 அரை சதங்கள் அடித்துள்ளார். இங்கு தலா 8 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் உள்ளனர்.

    இம்மைதானத்தில் ரவீந்திர ஜடேஜாவை தவிர வேற (5/36) எந்த இந்திய பவுலரும் ஒரு போட்டியில் 5 விக்கெட் எடுத்ததில்லை. இங்கு இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஸ்கோர் 352/5, ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக. குறைந்தபட்ச ஸ்கோர் 158 ஆல்-அவுட்.

    பிட்ச் ரிப்போர்ட்:

    இங்கிலாந்தில் இருக்கும் மைதானங்களில் ஓவல் மைதானம் வரலாற்றில் பேட்டிங்க்கு அற்புதமாக சாதகமளிக்கும் வகையில் இருந்து வருகிறது. இங்கு காணப்படும் ஃப்ளாட்டான பிட்ச்சில் கிடைக்கும் வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றை நம்பி பேட்ஸ்மேன்கள் அதிரடியாக பெரிய ஷாட்களை விளையாடி ரன்களை குவிக்கலாம். போட்டி நாளன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்பதால் ஆரம்பகட்ட ஓவர்களில் புதிய பந்தை ஸ்விங் செய்யும் வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுப்பார்கள்.

    மிடில் ஓவர்களில் திறமையான சுழல்பந்து வீச்சாளர்களுக்கு இம்மைதானம் கை கொடுக்கலாம். இங்கு சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 254 ஆகும். மேலும் இப்போட்டி பகலிரவாக நடைபெறுவதாலும் இங்கு இதற்கு முன் சேசிங் செய்த அணிகள் அதிகம் வென்றுள்ளதாலும் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

    • இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக நேற்றைய பயிற்சியில் விராட் கோலி பங்கேற்கவில்லை.
    • டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

    ஓவல்:

    ரோகித்சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதிய 3 ஆட்டம் கொண்ட 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

    இத் அடுத்து இந்தியா-இங்கிலாந்து அணிகள் 3 ஆட்டம் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று முதல் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது போட்டி 14-ந் தேதியும், 3-வது போட்டி 17-ந் தேதியும் நடக்கிறது.

    இந்நிலையில் காயம் காரணமாக நேற்றைய பயிற்சியில் விராட் கோலி பங்கேற்கவில்லை. விராட்சி கோலிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதில் இடுப்பில் அவருக்கு காயம் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும், முதல் ஒருநாள் போட்டியில் அவர் விளையாட வாய்ப்பில்லை என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    • சேசிங்கில் சதம் அடித்த 5-வது இந்திய வீரர் என்ற பெருமையை சூர்யகுமார் யாதவ் பெற்றார்.
    • சூர்யகுமார் யாதவிற்க்கு தற்போது பல்வேறு தரப்பிலும் இருந்தும் பெரிய அளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடந்தது. இதில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணி தோல்வியடைந்திருந்தாலும் தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் சூர்ய குமாரின் பேட்டிங் மிரட்டலாக இருந்தது. அவர் அடித்த ஒவ்வொரு ஷாட்டும் அற்புதமாக இருந்தது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

    இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் அடித்த இந்த சதத்தின் மூலம் மேலும் சில சாதனைகளுக்கு அவர் சொந்தக்காரராக மாறியுள்ளார். நான்காவது இடத்தில் களமிறங்கிய இந்திய அணியின் முன்னணி வீரரான ராகுலுக்கு பிறகு சதம் அடித்த ஒரே வீரர் இவர்தான் என்ற சாதனையையும் சூர்யகுமார் படைத்துள்ளார்.

    ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நான்காவது வீரராக களமிறங்கிய ராகுல் சதம் அடித்து அசத்தியிருந்தார். அதனை தொடர்ந்து அதே நான்காவது இடத்தில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 48 பந்துகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த சதத்தினை பூர்த்தி செய்தார். டி20 கிரிக்கெட்டில் சேசிங்கில் சதம் அடித்த 5-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.ரோஹித் சர்மாவின் அதிகபட்ச ரன்கள் (118 ரன்கள்) என்கிற சாதனையை ஒரு ரன்னில் அவர் தவற விட்டு ஆட்டமிழந்து வெளியேறினார்.

    சூர்யகுமார் யாதவிற்க்கு தற்போது பல்வேறு தரப்பிலும் இருந்தும் பெரிய அளவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஏற்கனவே இப்போட்டி முடிந்து சூர்யகுமார் யாதவின் ஆட்டம் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் ஆட்டநாயகன் ரீஸ் டாப்லீ ஆகியோர் பாராட்டிய வேளையில் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

    • முதல் போட்டி நாளை ஓவல் மைதானத்தில் நடக்கிறது. 2-வது போட்டி 14-ந் தேதியும், 3-வது போட்டி 17-ந் தேதியும் நடக்கிறது.
    • 20 ஓவர் போட்டி தொடரை கைப்பற்றியதால் அந்த உத்வேகத்தை ஒரு நாள் போட்டியிலும் தொடர இந்திய அணி முயற்சிக்கும்.

    ஓவல்:

    ரோகித்சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதிய 3 ஆட்டம் கொண்ட 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

    முதல் ஆட்டத்தில் 50 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 49 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வென்றது. நாட்டிங்காமில் நேற்றுநடந்த 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. அடுத்து இந்தியா-இங்கிலாந்து அணிகள் 3 ஆட்டம் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகின்றன.

    முதல் போட்டி நாளை ஓவல் மைதானத்தில் நடக்கிறது. 2-வது போட்டி 14-ந் தேதியும், 3-வது போட்டி 17-ந் தேதியும் நடக்கிறது.

    20 ஓவர் போட்டி தொடரை கைப்பற்றியதால் அந்த உத்வேகத்தை ஒரு நாள் போட்டியிலும் தொடர இந்திய அணி முயற்சிக்கும்.

    இந்திய அணியில் ஷிகர் தவான், கோலி, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ரிஷப்பண்ட், ஹர்த்திக் பாண்ட்யா, முகமது சமி, ஜடேஜா, சாகல், பிரசித் கிருஷ்ணா உள்ளனர். வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ஜோரூட், பேர்ஸ்டோவ், மொயின் அலி, பென்ஸ்டோக்ஸ், ஜேசன்ராய், டேவிட் வில்லி ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    20 ஓவர் போட்டி தொடரை இழந்துள்ளதால் ஒருநாள் தொடரை கைப்பற்ற இங்கிலாந்து அணி முனைப்பு காட்டும்.

    இரு அணிகளும் சமபலம் வாய்ந்துள்ளது என்பதால் இத்தொடர் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இரு அணி வீரர்கள் வருமாறு:-

    இந்தியா: ரோகித்சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், கோலி, இஷான் கிஷன், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், ஜடேஜா, சூர்யகுமார் யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா, அக்சர் படேல், சாகல், முகமது சமி, ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப்.

    இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜேசன் ராய், ஜோரூட், பேர்ஸ்டோவ், லிவிங்ஸ்டன், பிலிப் சால்ட், பென்ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, மொய்ன் அலி, ஹாரி புருக், சாம் கர்ரன், கிரேக் ஓவர்டன், பிரைடன் கார்சே, பார்கின்சன், டாப்லே.

    • இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
    • டி20 போட்டிகளில் 300 பவுண்டரிகள் அடித்த ஒரே வீரராக அயர்லாந்தை சேர்ந்த பால் ஸ்டிர்லிங் உள்ளார்.

    இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20 தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. ரோகித் சர்மா தலமையிலான இந்திய அணி முதல் டி20 போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

    முதல் டி20 போட்டியில் இடம் பெறாத விராட் கோலி, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், பும்ரா ஆகியோர் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர். இந்த போட்டியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

    பால் ஸ்டிர்லிங்

    பால் ஸ்டிர்லிங்

    டி20 போட்டிகளில் 300 பவுண்டரிகள் அடித்த ஒரே வீரராக அயர்லாந்தை சேர்ந்த பால் ஸ்டிர்லிங் உள்ளார். அவர் 325 பவுண்டரிகள் அடித்துள்ளார். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் 298 பவுண்டரிகள் அடித்துள்ளனர். இன்றைய போட்டியில் இருவரும் 2 பவுண்டரிகள் விளாசினால் பால் ஸ்டிர்லிங் சாதனையுடன் இணைவார்கள்.

    இந்திய அணி வீரர்கள் விவரம்:-

    ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், இஷான் கிஷன், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா , அவேஷ் கான், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக்

    • இங்கிலாந்து அணியின் வெற்றிப் பயணம் தொடரும்.
    • இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 நாளை நடக்கிறது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் டி20 மற்றும் ஒருநாள் தொடர் நடக்கவுள்ளது. முதலில் டி20 போட்டிகள் நாளை முதல் தொடங்க உள்ளது. இரு அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி சவுத்தம்டனில் நாளை (7-ந் தேதி) நடக்கிறது.

    இந்நிலையில் இந்திய டி20 அணிக்கு இங்கிலாந்து அணியின் புதிய கேப்டனான பட்லர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    எட்ஜ்பாஸ்டனில் இங்கிலாந்து அணியின் வெற்றி நம்பமுடியாத வகையில் இருந்தது. இந்த டெஸ்ட் அணியில் இருந்து சிறப்பான ஆட்ட நுணுக்கங்களை பெறுவதுடன் இங்கிலாந்து அணியின் வெற்றிப் பயணம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இங்கிலாந்து அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் புதிய கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். நெதர்லாந்து அணிக்கு எதிராக பட்லர் தலைமையில் ஆடிய இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டியில் 498 ரன்கள் எடுத்து வரலாற்று சாதனை படைத்தது. அந்த போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள் 3 பேர் சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.

    கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு முன்பு இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்தது இங்கிலாந்து அணி. எச்சரிக்கை விடுத்தது போல டெஸ்ட் போட்டியை வென்றது. நாளை டி20 போட்டி நடக்கவுள்ள நிலையில் இந்திய டி20 அணிக்கு பட்லர் எச்சரிக்கை விடுத்துள்ளார். எச்சரிக்கையை மீறி ரோகித் சர்மா தலைமையிலான அணி இங்கிலாந்தின் கோட்டையை தகர்க்குமா என இந்திய ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

    • ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 2019-ம் ஆண்டு 359 ரன்களை சேசிங் செய்ததே அதிகபட்ச ரன்னாக இருந்தது.
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பிரண்டன் மெக்கல்லம் இருவரின் கூட்டணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. முதல் 4 போட்டிகளில் இந்திய அணி 2 போட்டிகளிலும் இங்கிலாந்து 1 போட்டியிலும் வென்று இருந்தது. ஒரு போட்டி டிராவில் முடிவடைந்தது. கடந்த ஆண்டு கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்ட 5-வது போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடத்தப்பட்டது.

    5-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே விட்டு கொடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது. கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 378 ரன்களை சேசிங் செய்ததன் மூலம் சாதனை ஒன்றை படைத்துள்ளது.

    ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 2019-ம் ஆண்டு 359 ரன்களை சேசிங் செய்ததே அதிகபட்ச ரன்னாக இருந்தது. இந்தியாவுக்கு எதிராக 378 ரன்களை சேசிங் செய்ததன் மூலம் இந்த சாதனையை முறியடித்துள்ளது. அதற்கு முன்பு 1928-ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 332 ரன்கள் சேசிங் செய்தது.


    டெஸ்ட் கிரிக்கெட்டில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பிரண்டன் மெக்கல்லம் இருவரின் கூட்டணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இருவரின் கூட்டணியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை 3-0 என தொடரை கைப்பற்றியது. அதை தொடர்ந்து இந்திய அணியையும் அபாரமாக வென்றுள்ளது.

    எங்களது அதிரடியான அணுகுமுறையை கண்டு இனி எதிரணியினர் பயப்படுவார்கள் என பென் ஸ்டோக்ஸ் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×