search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    முதல் ஒருநாள் போட்டி: 17 ரன்னில் 4 முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்த இங்கிலாந்து
    X

    முதல் ஒருநாள் போட்டி: 17 ரன்னில் 4 முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்த இங்கிலாந்து

    • 5 பந்துகள் சந்தித்த ஜேசன் ராய் பும்ரா பந்து வீச்சில் ஸ்டெம்புகள் பறக்க போல்ட் ஆனார்.
    • 5.3 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 17 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

    இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக தெரிவித்தது. இந்திய அணியில் காயம் காரணமாக விராட் கோலி விலகினார். அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் அய்யர் அணியில் இடம் பிடித்தார்.

    இதனையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் - பேர்ஸ்டோவ் களமிறங்கினர். 5 பந்துகள் சந்தித்த ஜேசன் ராய் பும்ரா பந்து வீச்சில் ஸ்டெம்புகள் பறக்க போல்ட் ஆனார். அடுத்து வந்த ரூட் 2 பந்துகள் மட்டுமே சந்தித்து பும்ரா பந்து வீச்சில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    அடுத்ததாக ஸ்டோக்ஸ் களமிறங்கினார். அவரும் வந்த வேகத்தில் முகமது சமி பந்து வீச்சில் விக்கெட்டை பறிக்கொடுத்து வெளியேறினர். அடுத்து வந்த கேப்டன் பட்லர் 2 பவுண்டரிகள் அடுத்தடுத்து விளாசினார். நிதானமாக விளையாடி வந்த பேர்ஸ்டோவ் 20 பந்தில் 7 ரன்கள் எடுத்து பும்ரா பந்து வீச்சில் அவுட் ஆனார். 5.3 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து 17 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

    Next Story
    ×