search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    புதிய சாதனை படைக்க காத்திருக்கும் ரோகித் சர்மா-விராட் கோலி
    X

    விராட் கோலி - ரோகித் சர்மா 

    புதிய சாதனை படைக்க காத்திருக்கும் ரோகித் சர்மா-விராட் கோலி

    • இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
    • டி20 போட்டிகளில் 300 பவுண்டரிகள் அடித்த ஒரே வீரராக அயர்லாந்தை சேர்ந்த பால் ஸ்டிர்லிங் உள்ளார்.

    இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20 தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. ரோகித் சர்மா தலமையிலான இந்திய அணி முதல் டி20 போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

    முதல் டி20 போட்டியில் இடம் பெறாத விராட் கோலி, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர், பும்ரா ஆகியோர் மீண்டும் அணியில் இணைந்துள்ளனர். இந்த போட்டியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

    பால் ஸ்டிர்லிங்

    டி20 போட்டிகளில் 300 பவுண்டரிகள் அடித்த ஒரே வீரராக அயர்லாந்தை சேர்ந்த பால் ஸ்டிர்லிங் உள்ளார். அவர் 325 பவுண்டரிகள் அடித்துள்ளார். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் 298 பவுண்டரிகள் அடித்துள்ளனர். இன்றைய போட்டியில் இருவரும் 2 பவுண்டரிகள் விளாசினால் பால் ஸ்டிர்லிங் சாதனையுடன் இணைவார்கள்.

    இந்திய அணி வீரர்கள் விவரம்:-

    ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், இஷான் கிஷன், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா , அவேஷ் கான், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக்

    Next Story
    ×