search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பும்ரா, ஷமி அசத்தல் - முதல் ஒருநாள் போட்டியில் 110 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து
    X

    பும்ராவை பாராட்டும் சாஹல்

    பும்ரா, ஷமி அசத்தல் - முதல் ஒருநாள் போட்டியில் 110 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து

    • முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • கேப்டன் ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார்.

    ஓவல்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இந்திய அணியில் காயம் காரணமாக விராட் கோலி விலகினார். அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் அய்யர் அணியில் இடம் பிடித்தார்.

    அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே இந்திய அணியினர் அசத்தலாக பந்து வீசினர்.

    தொடக்க ஆட்டக்காரரான ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டோன் ஆகியோர் டக் அவுட்டாகினர்.

    அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 30 ரன்னும், டேவிட் வில்லி 21 ரன்னும், பிரைடன் கார்சே 15 ரன்னும், மொயீன் அலி 14 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 110 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் பும்ரா 6 விக்கெட்டும், ஷமி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    Next Story
    ×