search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Election Results"

    பாராளுமன்றம் மற்றும் தமிழகத்தின் 22 சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் ரஜினிகாந்த் விரைவில் தீவிர அரசியலில் ஈடுபட ஆயத்தமாகி வருகிறார் என தெரிய வந்துள்ளது.
    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்தை அரசியலுக்கு வரக்கூறி அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். சுமார் 25 ஆண்டுகால காத்திருப்புக்கு கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முற்றுப்புள்ளி வைத்தார்.

    தனக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரசிகர்கள் முன்னிலையில் தனது அரசியல் வருகையை உறுதி செய்தார். கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் நிற்க போவதாக அறிவித்தார். அதன்பின் அவரது அரசியல் பணிகள் வேகம் எடுத்தன.

    தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றியவர் அதற்கு மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் நிர்வாகிகளை நியமித்தார். உறுப்பினர் சேர்க்கையையும் பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகளையும் துரிதப்படுத்தினார்.

    ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளின் வேகமான பணிகளால் தமிழ்நாடு முழுக்க ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கவும் 66 ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    பாராளுமன்ற தேர்தலில் களம் இறங்காத ரஜினி தனது பேட்டிகளில் ரசிகர்களை நிச்சயம் ஏமாற்ற மாட்டேன் என்றும் எப்போது சட்டமன்ற தேர்தல் வந்தாலும் கட்சி தொடங்கி சந்திப்பேன் என்றும் உறுதியாக தெரிவித்து வருகிறார்.

    பாராளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் சில நாட்களே இருக்கிறது. தேர்தலுக்கு பிறகு அரசியல் சூழல்கள் எப்படி இருக்கும்? என்பதை அறிந்துகொள்வதில் ரஜினி தீவிரம் காட்டி வருகிறார் என்கிறார்கள். ‘தர்பார்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு கடந்த வாரம் சென்னை திரும்பியவர் தினமும் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மன்றத்தின் தலைமை நிர்வாகிகள், அரசியல், திரைத்துறையை சேர்ந்த தனக்கு நெருக்கமான நண்பர்களை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

    அப்துல்கலாம் லட்சிய இந்தியா கட்சியின் நிறுவனர் பொன்ராஜ் 2 நாட்களுக்கு முன்பு ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். காலை 9.30 மணிக்குத் தொடங்கிய விவாதம் சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக நீண்டுள்ளது. இதுகுறித்து ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளிடம் பேசினோம். அவர்கள் கூறியதாவது:

    ‘ரஜினி இந்த தேர்தலில் கருத்துக் கணிப்புகள் சொல்வதைவிட களநிலவரம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறார். ரஜினிகாந்தின் வீட்டுக்கு கடந்த சில நாட்களாக அரசியல் பிரமுகர்களின் வருகை அதிகரித்தபடியே இருக்கிறது.

    ‘தர்பார்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வரும் 29-ந்தேதி தொடங்க இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலை விட தமிழக அரசை தீர்மானிக்கக் கூடிய 22 சட்டமன்றத் தொகுதிகளின் முடிவுகளும் மே 23 அன்று வெளியாக இருக்கிறது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் அரசியல் சூழல்கள் எப்படியிருக்கும்?

    உடனடியாகவோ சில மாதங்களிலோ சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பு உள்ளதா? என்பதை அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறார் ரஜினி. இதற்காக கடந்த சில நாள்களாக அரசியல் பிரமுகர்கள், விமர்சகர்கள் என அனைத்துத் தரப்பினரையும் அழைத்து மணிக்கணக்கில் விவாதித்து வருகிறார்.

    சட்டமன்றத்துக்குத் தேர்தல் வரும்போது புதிய கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார். அதில் எந்தவித மாற்றமும் இல்லை. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகான சூழல்களைப் பற்றித்தான் நண்பர்களுடனான சந்திப்பில் விவாதிக்கிறார்.

    அதிலும், தமிழக அரசியலில் அவர் தீவிர ஆர்வம் காட்டுவதால், அரசியல் சூழ்நிலைகள் எப்படியிருக்கிறது என்பதை கேட்டறிந்தார்.

    நேற்று நடந்த விவாதத்தில், தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டிலும் மத்தியிலும் என்ன மாதிரியான மாற்றங்கள் வரும்? மற்ற மாநிலங்களில் எந்தெந்த கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும், மக்கள் மனநிலை எப்படியிருக்கிறது, தேர்தல் முடிவுகள் எதை நோக்கிப் போகும்’ என ஏராளமான கேள்விகளைக் கேட்டார்.

    ‘இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள், யார் தோற்பார்கள், கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது, உண்மையான நிலவரம் எப்படியிருக்கிறது?’ என விசாரித்தார். இதில், தனக்குக் கிடைத்த தகவல்களையும் பரிமாறிக் கொண்டார்.

    இந்தச் சந்திப்புகளில், ‘என்ன செய்தால் நதிநீர் இணைப்பு சாத்தியமாகும், இதை மட்டும் செயல்படுத்தி விட்டால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்து விடும்’ என நம்பிக்கையோடு பேசியிருக்கிறார்.

    ‘தர்பார்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு இன்னும் 10 நாட்கள் இருப்பதால் அதற்குள் அரசியல் கட்சிக்கான பணிகளுக்கு வடிவம் கொடுத்துவிட வேண்டும் என நினைக்கிறார்.

    தமிழக சட்டமன்றத்தில் சூழல்கள் மாறிவிட்டால், அடுத்தகட்ட அறிவிப்புகளை ஒவ்வொன்றாக வெளியிடுவதற்குத் திட்டமிட்டிருக்கிறார். ‘போர் வரும்போது வருவேன்’ என அவர் கூறியதை விரைவில் சாத்தியப்படுத்துவார்.

    மக்கள் மன்றத்தின் பிரதிநிதிகளுக்கும் சில ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    தேர்தல் முடிவுகளை அறிவிக்க 30 மணி நேரம் தேவைப்படும் என்று ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் மற்றும் பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ந்தேதி நடைபெற்றது.

    வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்காளர் சரிபார்க்கக் கூடிய எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான ராமநாதபுரம் அண்ணா பல்லைக்கழக பொறியியல் கல்லூரியில் அந்தந்த சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டன.

    இந்த மையத்திற்கு காவல்துறை, தமிழ்நாடு காவல்துறை சிறப்புப்பிரிவு, ஆயுதம் ஏந்திய துணை ராணுவ படை வீரர்கள் என மூன்றடுக்கு காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    வருகிற 23-ந்தேதி வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான வீரராகவ ராவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்று மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர்.

    பின்னர் கலெக்டர் வீரராகவராவ் கூறியதாவது:-

    வாக்கு எண்ணிக்கையின் போது முதலாவதாக தபால் வாக்குகள், அதன் தொடர்ச்சியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் என முறையே வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறும்.

    மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகளுக்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக தலா 14 மேசைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு மேசையிலும் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர், நுண் பார்வையாளர், உதவியாளர் என 3 அலுவலர்கள் வீதம் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    ஓட்டு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் தலா 5 விவி பேட் எந்திரங்கள் வேட்பாளர் பெயருடன், சின்னத்தை பதிவு செய்துள்ள எந்திரத்தில் உள்ள வாக்காளர் உறுதி சீட்டுகளையும் எண்ண திட்டமிடப்பட்டுள்ளது.

    ஒரு விவி பேட்டில் உள்ள சீட்டுகளை எண்ணி முடிக்க இரண்டு மணி நேரம் ஆகும் என்பதால் ஒரு சுற்று முடிந்த பின் அதை உறுதிப்படுத்திய பிறகே அடுத்த சுற்று ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். இதனால் தேர்தல் முடிவுகளை அறிவிக்க 30 மணி நேரத்திற்கு கூடுதலாக அவகாசம் தேவைப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பற்றி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். #Results2018
    புதுடெல்லி:

    5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பற்றிய தலைவர்களின் கருத்துகள் வருமாறு:-

    சந்திரபாபு நாயுடு:- மக்களின் தீர்ப்பை மதிக்கிறோம். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான மாற்று அணி அமைக்க இம்முடிவுகள் வழிவகுக்கும்.

    சந்திரசேகர ராவ்:- இந்த வெற்றியை தெலுங்கானா மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன். தேசிய அரசியலில் நாங்கள் மிக முக்கிய பங்கு வகிக்க போகிறோம்.

    மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்):- ஆட்சி மிக மிக மோசமாக இருந்ததே பா.ஜனதாவின் தோல்விக்கு காரணம். பா.ஜனதா கோட்டை என்று சொல்லப்படும் 3 மாநிலங்களிலுமே மோடிக்கு ஆதரவு குறைந்தநிலையில் அவர் இனி எங்கே ஜெயிக்கப் போகிறார்?

    டி.ராஜா (இந்திய கம்யூ.):- இந்த முடிவுகள், நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜனதாவுக்கு பின்னடைவை கொடுக்கும்.

    கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி (ஜனதாதளம்-எஸ்):- சோனியா, ராகுல் காந்தி மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைத்துள்ளது. மதவாத சக்திகளை வீழ்த்த மதச்சார்பற்ற கட்சி தலைவர்கள் ஓரணியில் திரள வேண்டிய நேரம் வந்து விட்டது.

    சித்தராமையா (காங்கிரஸ்):- ஆணவம் மிகுந்த பா.ஜனதாவை மக்கள் நிராகரிப்பார்கள் என்பதை இம்முடிவு உணர்த்துகிறது. எல்லா மதச்சார்பற்ற தலைவர் களும் ஓரணியில் திரள வேண்டும்.

    உத்தவ் தாக்கரே (சிவசேனா):- தாங்கள் விரும்பாத ஆட்களை மக்கள் துணிச்சலாக நிராகரித்து உள்ளனர். அவர்களின் துணிச்சலை பாராட்டுகிறேன்.

    சஞ்சய் ராவத் (சிவசேனா):- பா.ஜனதாவுக்கு தெளிவான சமிக்ஜை விடப்பட்டுள்ளது. அக்கட்சி சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது.

    அஜித் ஜோகி (ஜனதா காங்கிரஸ்):- பா.ஜனதாவுக்கு வீழ்ச்சியை தந்துள்ள இத்தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.
    மத்திய பிரதேசத்தில் ஏ.கே.அந்தோனி மற்றும் சத்தீஸ்கரில் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். #AssemblyElectionResults2018 #AKAntony #MallikarjunKharge #MadhyaPradesh #Chhattisgarh
    புதுடெல்லி:

    ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் சத்தீஸ்கர், ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மத்திய பிரதேசத்தில் வெற்றியை நெருங்கி வருகிறது.

    தெலுங்கானா, மிசோரமில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றிக்கு அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்திக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



    இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மேலிட பார்வையாளராக ஏ.கே.அந்தோனியையும், சத்தீஸ்கரில் மேலிட பார்வையாளராக மல்லிகார்ஜுன் கார்கேயையும் நியமனம் செய்து காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. #AssemblyElectionResults2018 #AKAntony #MallikarjunKharge #MadhyaPradesh #Chhattisgarh
    சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகிவரும் நிலையில் இன்று இரவு 8 மணிவரை முன்னிலை நிலவரம் என்ன? என்பதை காண்போம். #Results2018
    புதுடெல்லி:

    மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 இடங்களில் அனைத்து தொகுதிகளுக்கும் முடிவுகள் வெளியாகிவிட்டன.
    இதில் மிசோ தேசிய முன்னணி வேட்பாளர்கள் 26 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். பா.ஜ.க. வேட்பாளர் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.  காங்கிரஸ் வேட்பாளர்கள் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். சுயேட்சை வேட்பாளர்கள் 8 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளனர். 

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 90 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 88 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 3, சமாஜ்வாதி வேட்பாளர்கள் ஒரு தொகுதியிலும், கோண்ட்வானா கந்த் தந்த்ரா கட்சி ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றனர்.  பா.ஜ.க. வேட்பாளர் 21 தொகுதியிலும், காங்கிரஸ் 23 தொகுதியிலும் சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.



    ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 199 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 12 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 24 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் 1 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய லோக் தந்திரிக் வேட்பாளர்கள் 1 தொகுதியிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். 

    61 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. 75 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.  பகுஜன் சமாஜ் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மா. கம்யூனிஸ்ட் வேட்பாளர் 2 இடத்திலும், சுயேட்சை வேட்பாளர்கள் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். பாரதிய பழங்குடியின கட்சி 2 இடங்களிலும், ராஷ்ட்ரிய லோக்தள் கட்சி ஒரு இடத்திலும், ராஷ்ட்ரிய லோக் தந்த்ரிக் 2 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 இடங்களில்  பா.ஜ.க. வேட்பாளர்கள் 14 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 57 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர் 2 தொகுதிகளிலும், சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். காங்கிரஸ் வேட்பாளர்கள் 11 தொகுதிகளிலும், பாஜக 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 இடங்களில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி வேட்பாளர் 71 தொகுதிகளில் வெற்றிபெற்று, 17 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். காங்கிரஸ் 18 தொகுதிகளில் வெற்றி பெற்று ஒரு தொகுதியில்  முன்னிலை வகிக்கிறது.  தெலுங்கு தேசம் 2 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. வேட்பாளர் 1 தொகுதியிலும், அனைத்திந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஒரு இடத்திலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.  #Results2018
    சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகிவரும் நிலையில் இன்று இரவு 7 மணிவரை முன்னிலை நிலவரம் என்ன? என்பதை காண்போம். #Results2018
    சென்னை:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 98 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 104 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 3, சமாஜ்வாதி வேட்பாளர்கள் ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றனர்.  பா.ஜ.க. வேட்பாளர் 11 தொகுதியிலும், காங்கிரஸ் 9 தொகுதியிலும் சுயேட்சை வேட்பாளர் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 199 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 30 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 35 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர்கள் 1 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய லோக் தந்திரிக் வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும், மா.கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் ஒரு தொகுதியிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 8 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். 

    44 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. 63 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.  பகுஜன் சமாஜ் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மா. கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஒரு இடத்திலும், சுயேட்சை வேட்பாளர்கள் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். பாரதிய பழங்குடியின கட்சி 2 இடங்களிலும், ராஷ்ட்ரிய லோக்தள் கட்சி ஒரு இடத்திலும், ராஷ்ட்ரிய லோக் தந்த்ரிக் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.



    சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 இடங்களில்  பா.ஜ.க. வேட்பாளர்கள் 17 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 65 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர் 2 தொகுதிகளிலும், சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். காங்கிரஸ் வேட்பாளர்கள் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

    மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 இடங்களில் அனைத்து தொகுதிகளுக்கும் முடிவுகள் வெளியாகிவிட்டன.
    இதில் மிசோ தேசிய முன்னணி வேட்பாளர்கள் 26 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். பா.ஜ.க. வேட்பாளர் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.  காங்கிரஸ் வேட்பாளர்கள் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். சுயேட்சை வேட்பாளர்கள் 8 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளனர். 

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 இடங்களில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி வேட்பாளர் 62 தொகுதிகளில் வெற்றிபெற்று, 25 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். காங்கிரஸ் 14 தொகுதிகளில் வெற்றி பெற்று 5 முன்னிலை வகிக்கிறது.  தெலுங்கு தேசம் ஒரு தொகுதியில் வெற்றி பெற்று ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது. பா.ஜ.க. வேட்பாளர் 1 தொகுதியிலும், அனைத்திந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஒரு இடத்திலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.  #Results2018
    சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகிவரும் நிலையில் இன்று மாலை 6 மணிவரை முன்னிலை நிலவரம் என்ன? என்பதை காண்போம். #Results2018
    சென்னை:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 106 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 112 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 3, சமாஜ்வாதி வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர்.  பா.ஜ.க. வேட்பாளர் 4 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 199 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 49 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 65 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய லோக் தந்திரிக் வேட்பாளர்கள் 3 தொகுதிகளிலும், மா.கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் ஒரு தொகுதியிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 9 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். 

    24 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. 33 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.  பகுஜன் சமாஜ் கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 இடங்களில்  பா.ஜ.க. வேட்பாளர்கள் 17 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 66 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர் 3 தொகுதிகளிலும், சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

    மிசோரம் மாநிலத்தில் உள்ள 40 இடங்களில் அனைத்து தொகுதிகளுக்கும் முடிவுகள் வெளியாகிவிட்டன.
    இதில் மிசோ தேசிய முன்னணி வேட்பாளர்கள் 26 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். பா.ஜ.க. வேட்பாளர் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.  காங்கிரஸ் வேட்பாளர்கள் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். சுயேட்சை வேட்பாளர்கள் 8 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளனர். 

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 இடங்களில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி வேட்பாளர் 44 தொகுதிகளில் வெற்றிபெற்று, 44 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். பா.ஜ.க. வேட்பாளர் 1 தொகுதியிலும், காங்கிரஸ் 11 தொகுதிகளில் வெற்றி பெற்று 8 முன்னிலை வகிக்கிறது.  தெலுங்கு தேசம் ஒரு தொகுதியில் வெற்றி பெற்று ஒரு தொகுதியில் முன்னிலையில் உள்ளது. அனைத்திந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஒரு இடத்திலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.  #Results2018 
    சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகிவரும் நிலையில் இன்று மாலை 5 மணிவரை முன்னிலை நிலவரம் என்ன? என்பதை காண்போம். #Results2018
    சென்னை:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 115 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர்கள் 3 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 4, சமாஜ்வாதி வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர்.  பா.ஜ.க. வேட்பாளர் 1 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 199 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 65 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 89 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர்கள் 3 தொகுதிகளிலும், ராஷ்டரிய லோக் தந்திரிக் வேட்பாளர்கள் 3 தொகுதிகளிலும், மா.கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 10 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். ஏழு தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. 12 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.  பகுஜன் சமாஜ் கட்சி 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.


    சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 83 இடங்களில்  பா.ஜ.க. வேட்பாளர்கள் 18 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 59 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர் மூன்று தொகுதிகளிலும், சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் வேட்பாளர்கள் 5 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

    மிசோரம் மாநிலத்தில் உள்ள 39 இடங்களில் மிசோ தேசிய முன்னணி வேட்பாளர்கள் 26 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். பா.ஜ.க. வேட்பாளர் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.  காங்கிரஸ் வேட்பாளர்கள் 5 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளனர். சுயேட்சை வேட்பாளர்கள் 7 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளனர்.  1 தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார்.

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 118 இடங்களில் தெலுங்கானா ராஷ்டரிய சமிதி வேட்பாளர் 19 தொகுதிகளில் வெற்றிபெற்று, 69 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். பா.ஜ.க. வேட்பாளர் 1 தொகுதியிலும், காங்கிரஸ் 4 தொகுதிகளில் வெற்றி பெற்று 15 முன்னிலை வகிக்கிறது.  தெலுங்குதேசம் 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர். அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தெஹாதுல் முஸ்லிமீன் வேட்பாளர் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.  #Results2018 
    சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தல் முடிவுகள் படிப்படியாக வெளியாகிவரும் நிலையில் இன்று மாலை 4 மணிவரை முன்னிலை நிலவரம் என்ன? என்பதை காண்போம். #Results2018
    சென்னை:

    மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 105 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 115 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 3, சமாஜ்வாதி வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 199 இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் 65 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 98 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர்கள் 5 தொகுதிகளிலும், ராஷ்டரிய லோக் தந்திரிக் வேட்பாளர்கள் 4 தொகுதிகளிலும், மா.கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் 2 தொகுதிகளிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 12 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். நான்கு தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 83 இடங்களில்  பா.ஜ.க. வேட்பாளர்கள் 13 தொகுதிகளிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 62 தொகுதிகளிலும், பகுஜன்சமாஜ் வேட்பாளர் மூன்று தொகுதிகளிலும், சத்தீஸ்கர் ஜனதா காங்கிரஸ் வேட்பாளர்கள் 5 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

    மிசோரம் மாநிலத்தில் உள்ள 39 இடங்களில் மிசோ தேசிய முன்னணி வேட்பாளர்கள் 23 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். 3 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளனர். பா.ஜ.க. வேட்பாளர் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.  காங்கிரஸ் வேட்பாளர்கள் 5 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளனர். சுயேட்சை வேட்பாளர்கள் 5 தொகுதிகளில் வெற்றிபெற்று, 3 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 118 இடங்களில் தெலுங்கானா ராஷ்டரிய சமிதி வேட்பாளர் ஏழு தொகுதியில் வெற்றிபெற்று, 79 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர். பா.ஜ.க. வேட்பாளர் 1 தொகுதியிலும், காங்கிரஸ் வேட்பாளர்கள் 21 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றனர். தெலுங்குதேசம் 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர். அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தெஹாதுல் முஸ்லிமீன் வேட்பாளர் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.  #Results2018
    சட்டசபை தேர்தல் நடைபெற்ற தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. #AssemblyElections
    ஐதராபாத்:

    சட்டசபை தேர்தல் நடைபெற்ற தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது இன்று பிற்பகலில் தெரிந்துவிடும்.

    90 இடங்களை கொண்ட சத்தீஷ்கார் மாநில சட்டசபைக்கு நவம்பர் 12 மற்றும் 20-ந்தேதிகளில் இரு கட்டங்களாகவும், 230 இடங்களை கொண்ட மத்தியபிரதேச சட்டசபைக்கும், 40 இடங்களை கொண்ட மிசோரம் சட்டசபைக்கும் நவம்பர் 28-ந் தேதியும் தேர்தல் நடைபெற்றது.



    119 இடங்களை கொண்ட தெலுங்கானா சட்டசபைக்கும், 200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கும் கடந்த 7-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ராஜஸ்தானில் ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணம் அடைந்ததால் 199 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.

    இந்த 5 மாநிலங்களிலும் மொத்தம் 679 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 8,500-க்கும் அதிகமான வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஒரு லட்சத்து 74 ஆயிரத்துக்கும் அதிகமாக வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஓட்டுப்பதிவுக்கு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

    5 மாநிலங்களிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. இதையொட்டி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த மாநிலங்களில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது இன்று பிற்பகலில் தெரிந்து விடும்.

    தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தவரை, அங்கு முதல்-மந்திரியாக இருந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் தலைவர் சந்திரசேகர ராவ் சட்டசபையை முன்கூட்டியே கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்தார். தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்குதேசம், பாரதீய ஜனதா ஆகிய 3 அணிகள் போட்டியிட்டன. இங்கு மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் 1,821 வேட்பாளர் போட்டியிட்டனர். இங்கு 43 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆளும் பாரதீய ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது.

    மிசோரம் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணி ஆகியவை மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிட்டன. பாரதீய ஜனதா 39 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. அங்கு 13 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் யாருக்கு வெற்றி? என்பதில் இழுபறி ஏற்படலாம் என்றும், தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி வெற்றியை தக்கவைத்துக்கொள்ளும் என்றும் தெரியவந்து இருக்கிறது.

    இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவு நாடு முழுவதும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல் முடிவு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    கடந்த 2014-ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் மொத்தம் உள்ள 65 தொகுதிகளில் 63 தொகுதிகளை பாரதீய ஜனதா கைப்பற்றியது. இந்த மாநிலங்களில் தற்போது பாரதீய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.

    எனவே இந்த 3 மாநிலங்களின் தேர்தல் முடிவு பாரதீய ஜனதா கட்சியை பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. #AssemblyElections
    ×