search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dulquer salmaan"

    • ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் சீதா ராமம்.
    • துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார்.

    மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் துல்கர் சல்மான். இவர் இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சீதா ராமம்'. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். மேலும், ராஷ்மிகா மந்தனா, சுமந்த் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    ஸ்வப்னா சினிமா தயாரித்துள்ள இந்தப் படத்தை வைஜெயந்தி மூவிஸ் வெளியிடுகிறது. விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் உருவாகிவுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 'சீதா ராமம்' ஆகஸ்ட் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    சீதா ராமம்

    இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. மதன் கார்க்கி வரிகளில் சீதாவை வர்ணித்து ராம் பாடும் இந்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள துல்கர் சல்மான் "இறுதியாக எங்கள் சீதா உங்களை மயக்க வந்துள்ளார்" என குறிப்பிட்டுள்ளார்.


    • ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் 'சீதா ராமம்’.
    • துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார்.

    மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் துல்கர் சல்மான். இவர் இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சீதா ராமம்'. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். மேலும், ராஷ்மிகா மந்தனா, சுமந்த் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    ஸ்வப்னா சினிமா தயாரித்துள்ள இந்தப் படத்தை வைஜெயந்தி மூவிஸ் வெளியிடுகிறது. விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் உருவாகிவுள்ள இப்படம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    சீதா ராமம்

    தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகிவுள்ளது. அதில், காஷ்மீர் ராணுவத்தில் பணிபுரியும் ராம் (துல்கர் சல்மான்) தனக்கு கடிதம் எழுத யாருமே இல்லை என்ற தகவலை வானொலி மூலம் தெரிவிக்கிறார். அதன்பின்னர், அவருக்கு ஏராளமான கடிதங்களை பொதுமக்கள் எழுதுகிறார்கள். அதில், சீதா மகாலஷ்மி என்ற ஒரு பெண் நீங்கள் தாலி கட்டிய மனைவி நான் இருக்கிறேன் என்று ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதத்தை படித்துவிட்டு ஆச்சர்யமடையும் துல்கர் சல்மான், சீதா நீ யார்? என்று கேட்கிறார். இவ்வாறு இந்த டீசர் முடிகிறது.

    சமீபத்தில் 'சீதா ராமம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மக்களிடையே வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது இப்படத்தின் டீசர் படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.



    நடிகர் விஜய்யின் நடனத்திற்கு தான் தீவிர ரசிகன் என்று பிரபல மலையாள நடிகர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்து உள்ளார்.
    மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் அவ்வப்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் இவர் நடித்த ‘வாயை மூடி பேசவும்’, ‘ஓ கே கண்மணி’, ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ உள்ளிட்ட படங்கள் வெற்றி பெற்றன. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான குரூப் திரைப்படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் நடிகர் விஜய் குறித்து அவர் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: “நடிகர் விஜய்யின் ரசிகன் நான். இதற்குக் காரணம் அவரது நடனம் தான். அவர் தனது படங்களில் ஆடும் நடனத்தை ஒவ்வொருமுறை பார்க்கும் போதும் ஆச்சர்யப்படுவேன். 

    துல்கர் சல்மான், விஜய்
    துல்கர் சல்மான், விஜய்

    குறிப்பாக மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு அவர் ஆடிய நடனம் என்னை வெகுவாக கவர்ந்தது. அத்தனை வேகத்தில் ஆடக்கூடிய நடனத்தை அவர் அசால்டாக ஆடியிருப்பார். அது எளிதான விசயமல்ல. என்னைப் பொருத்தவரை நடிகர் விஜய் எப்போதுமே ஒரு சூப்பர் ஹீரோவாக தான் தெரிகிறார். எப்போதுமே அவரது நடனத்திற்கு நான் ஒரு ரசிகனாகவே இருந்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
    பிரபல நடிகர் துல்கர் சல்மான் பற்றி அனுமோல் கூறி இருப்பது வேடிக்கையாக இருப்பதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். #Anumol #DulquerSalmaan
    தமிழ் சினிமாவில் நடிக்கும் பல நடிகைகளுக்கு தமிழ் தெரியாது. பிற மாநிலங்களில் இருந்து வருவதால் வசனங்களை ஆங்கிலத்தில் எழுதி வைத்து மனப்பாடம் செய்து பேசுகின்றனர். ஆனால் சொந்த மொழிகூட ஒரு நடிகருக்கு தெரியவில்லை என்று புகார் கூறியிருக்கிறார் ஒரு நடிகை. 

    சத்யராஜ் நடித்த ஒரு நாள் இரவில் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் அனுமோல். இவர் மலையாளத்தில் ரஞ்சித் இயக்கிய ஞான் படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்தார். படப்பிடிப்பின்போது துல்கர் தனது வசனங்களை ஆங்கிலத்தில் எழுதி வைத்து பிறகு பேசி நடித்தார். 



    அவர் இப்படி செய்ததற்கு காரணம் துல்கருக்கு மலையாளம் தெரியாது என்று அனுமோல் கூறியிருக்கிறார். மலையாள முன்னணி நடிகரான மம்மூட்டியின் மகன் துல்கருக்கே மலையாளம் தெரியாது என்று அனுமோல் கூறுவது வேடிக்கையாக இருப்பதாக ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். #Anumol #DulquerSalmaan
    மேயாதமான் படம் மூலம் மிகவும் பிரபலமான பிரியா பவானி சங்கர், அடுத்ததாக பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். #PriyaBhavaniShankar
    சின்னத்திரையில் பிரபலமான பிரியா பவானி சங்கர், ‘மேயாத மான்’ படம் மூலம் பெரிய திரைக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே அதிக கவனம் பெற்ற இவர், கார்த்தி நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்தார். இவரது நடிப்பில் மான்ஸ்டர், குருதி ஆட்டம் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

    மேலும் ஜீவா மற்றும் அருள்நிதி நடிக்கும் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்நிலையில், துல்கர் சல்மான் நடிக்க இருக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.



    ரா.கார்த்திக் இயக்க இருக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.
    தமிழில் ரீமேக் செய்ய இருக்கும் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் அல்லது துல்கர் சல்மான் இருவரில் ஒருவர் நடிக்க இருக்கிறார்கள். #Sivakarthikeyan #DulquerSalmaan
    1994-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற மலையாளப் படம் ‘பவித்ரம்‘. டி.கே.ராஜீவ் குமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மோகன்லால், திலகன், ஸ்ரீவித்யா, ஷோபனா, ஸ்ரீனிவாசன், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

    படத்தில் மோகன்லாலின் தாய் ஸ்ரீவித்யா தனது 50வது வயதில் கர்ப்பமாகிறார். அதனைத் தொடர்ந்து என்னவாகிறது என்பதுதான் கதை. இந்த கதையை போலவே இந்தியில் பதாய் ஹோ என்ற படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் நகைச்சுவையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.



    தற்போது ‘பவித்ரம்‘ படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்து வருகிறது. இதற்காக சிவகார்த்திகேயன் மற்றும் துல்கர் சல்மான் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். விரைவில் யார் நடிக்கிறார்கள், யார் இயக்குனர் என்பதை முறையாக அறிவிக்க இருக்கிறார்கள்.
    தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் கவுதம் மேனன் முக்கிய தோற்றத்தில் நடிக்கிறார். #KKK #DulquerSalmaan
    மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான், தமிழில் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நடித்து வருகிறார். தேசிங்கு பெரியசாமி இயக்கும் இந்த படத்தில் துல்கர் ஜோடியாக ரிது வர்மா நடிக்கும் நிலையில், படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்டைலிஷ் இயக்குநர் கவுதம் மேனன் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    சென்னையில் நடந்து வரும் படப்பிடிப்பில் துல்கர் சல்மான் - கவுதம் மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் தொலைக்காட்சி பிரபலம் ரக்‌ஷன் மற்றும் நிரஞ்சனி அகத்தியன் நடிக்கின்றனர்.



    துல்கர் சல்மானின் 25-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு மசாலா காஃபி என்ற மியூசிக் பேண்ட் குழுவினர் இசையமைக்கின்றனர். எஃப்.டி.எஸ் பிலிம்ஸ் சார்பில் அண்டோ ஜோசப் இந்த படத்தை தயாரிக்கிறார்கள். #KKK #DulquerSalmaan

    ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்க இருக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் பிரபல நடிகர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Kamal #Indian2
    கமல்ஹாசன் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு ரிலீசான படம் ‘இந்தியன்’. ‌ஷங்கர் இயக்கிய இந்தப் படத்தில், கமல்ஹாசன் அப்பா மகன் என இரண்டு வேடங்களில் நடித்தார். சுகன்யா, மனிஷா கொய்ராலா, ஊர்மிளா, கஸ்தூரி, நெடுமுடி வேணு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். 

    கிட்டத்தட்ட 22 வருடங்களுக்குப் பிறகு ‘இந்தியன்’ படம் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. ‌ஷங்கர் தற்போது ‘2.0’ படத்தின் ரிலீஸ் வேலைகளில் பிசியாக இருப்பதால், ரிலீசுக்குப் பிறகு இதன் வேலைகள் தொடங்க இருக்கின்றன. காஜல் அகர்வால் கமலுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். அக்‌‌ஷய் குமார் வில்லனாக நடிக்கலாம் என்றும் செய்தி வருகிறது. 



    இந்நிலையில் இந்தியன்-2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பிரபல மலையாள நடிகரான துல்கர் சல்மான் ஏற்கனவே தமிழில், ‘வாயை மூடி பேசவும்’ படம் மூலம் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து ‘ஓ காதல் கண்மணி’, ‘சோலோ’, ‘நடிகையர் திலகம்’ படங்களில் நடித்துள்ளார்.
    பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கைப் படத்தில் ஜெமினிகணசேனை தவறாக சித்தரித்துக் காட்டியிருப்பதாக கமலா செல்வராஜ் கூறியிருந்த நிலையில், படத்தால் இவர்களது குடும்பம் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. #SavithriBiopic
    பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை தமிழிலும், தெலுங்கிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேசுக்கு வாய்ப்புகள் குவிகின்றன. ஆனால் ஒன்றாக இருந்த சாவித்திரியின் குடும்பம் படத்தால் பிரிந்துவிட்டது.

    படம் வெளிவந்ததும் சாவித்திரி மகன் சதீஷ், "அம்மாவின் கடைசி நாள்களில் அவங்க தனியா இல்லை. அப்போது எனக்கு 14 வயது என்பதால், நடந்தவை எனக்குத் தெரியும். உண்மையில் என்ன நடந்ததோ, அதை மட்டுமே காட்டியிருந்தார்கள்'' என்று கூறினார். மகள் விஜய சாமுண்டீஸ்வரியும், "எங்கள் அம்மா கடைசிக்காலத்தில் கதியில்லாமல் இறந்த மாதிரிதான் எல்லோரும் நினைச்சுட்டிருந்தாங்க. இந்தப் படம் மூலமா, அப்பா கடைசி வரை அம்மாவைக் கைவிடலை என்கிற உண்மை உலகத்துக்குத் தெரியவந்திருக்கு'' என நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார்.



    ஆனால் ஜெமினியின் மகள்களில் ஒருவரான கமலா செல்வராஜ், "என் அப்பாதான் சாவித்திரிக்கு மதுப் பழக்கத்தைக் கற்றுக் கொடுத்ததாகவும், அப்பா வேலையே இல்லாமல் இருந்ததுபோலவும் படத்தில் வருகிறது. இதைச் சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி அனுமதித்தது தவறு. இந்தப் படத்தால் சகோதரிகளாகிய நாங்கள் பிரிந்ததுதான் நடந்திருக்கிறது.

    என்னையும், என் அப்பாவையும் கூர்க்கா மற்றும் நாயைவிட்டு விரட்டியடித்தவர் சாவித்திரி. அந்த மோசமான காலத்தை இந்தப் படம் நினைவுப்படுத்திவிட்டது. என் அம்மா சொல்லியபடி என் அப்பாவின் பிள்ளைகளை நான்தான் அரவணைத்து வந்தேன். ஆனால், இனிமேல் விஜி என்னுடைய தங்கை இல்லை. அவளை என் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டேன்'' என்று கோபமாகச் சொன்னார்.


     
    இதுபற்றி விஜய சாமுண்டீஸ்வரியிடம் கேட்டபோது "பிரச்னை அப்படியேதான் இருக்கு. இன்னும் சரியாகலை. கமலா அக்கா இன்னும் என்னைவிட்டு தூரமாகத்தான் இருக்காங்க. எங்களுக்கு நடுவில் பேச்சுவார்த்தை இல்லை. ஆனா அவங்க பிள்ளைகள் என்கிட்டப் பேசிட்டிருக்காங்க. அக்கா கோபம் தணியறதுக்குக் கொஞ்ச காலம் ஆகலாம். நிச்சயம் சரியாகிடும்'' என்றார். #SavithriBiopic

    கர்வான் படத்தை தொடர்ந்து அபிஷேக் சர்மா இயக்கத்தில் விராட் கோலி கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #DulquerSalmaan #ViratKohli
    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வேடத்தில் மம்முட்டியின் மகனும், மலையாள நடிகருமான துல்கர் சல்மான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. துல்கர் தமிழில் வாயை மூடி பேசவும், ஓ காதல் கண்மணி, நடிகையர் திலகம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து வருகிறார்.

    சமீபத்தில் கர்வான் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். இந்த படத்தில் இர்பான்கான், மிதிலா பால்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படம் சமீபத்தில் திரைக்கு வந்த நிலையில், மற்றுமொரு இந்தி படத்திலும் துல்கர் நடிக்க இருக்கிறார்.



    தேரே பின்லேடன், த ஷாக்கீன்ஸ், பர்மனு ஆகிய படங்களை இயக்கிய அபிஷேக் சர்மா அடுத்ததாக ஸோயா பேக்டர் என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் துல்கர் சர்மான் விராட் கோலி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக சோனம் கபூர் நடிக்கிறார். இவர் அனுஷ்கா சர்மா கதாபாத்திரத்தில் வருகிறாரா? என்பது தெரியவில்லை. படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

    இந்த படம் விராட் கோலியின் முழுமையான வாழ்க்கை கதையாக இருக்காது என்றும் கிரிக்கெட் விளையாட்டில் அவர் நிகழ்த்திய சாதனைகளை மையப்படுத்தி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. #ZoyaFactor #DulquerSalmaan #ViratKohli

    தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. #KKK #DulquerSalmaan
    மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான், தற்போது தமிழில் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நடித்து வருகிறார். தேசிங்கு பெரியசாமி இயக்கும் இந்த படத்தில் துல்கர் ஜோடியாக ரிது வர்மா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் தொலைக்காட்சி பிரபலம் ரக்‌ஷன் மற்றும் நிரஞ்சனி அகத்தியன் நடிக்கின்றனர். 

    துல்கர் சல்மானின் 25-வது படமாக உருவாகும் இந்த படத்திற்கு மசாலா காஃபி என்ற மியூசிக் பேண்ட் குழுவினர் இசையமைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. விஜய் குமார் இயக்கத்தில் வெளியான உறிபடி படத்திலும் மசாலா காஃபி குழுவினர் உருவாக்கிய 3 பாடல்கள் இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சோலோ படத்திலும் வேர்ல்டு ஆஃப் சிவா என்ற பாடலை இந்த குழு தான் உருவாக்கியிருந்தது. 

    இந்த நிலையில், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்கு பாடல் மற்றும் பின்னணி இசையமைக்க மசாலா காஃபி குழுவினர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். வருண் சுனில் ஆரம்பித்த மசாலா காஃபி குழுவில் சூரஜ் சந்தோஷ், பிரீத் பி.எஸ், டேவிட் கிரிம்சன், பாலி, ஜோ ஜான்சன், கிருஷ்ண ராஜ் மற்றும் தயா சங்கர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

    எஃப்.டி.எஸ் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. #KKK #DulquerSalmaan

    வி.கே.பிரகாஷ் இயக்கத்தில் நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் `பிராணா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. #Praana #NithyaMenon
    நித்யா மேனன் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பிசியாக நடித்து வருகிறார். தற்போது அவர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் பிராணா. ஒரே ஒரு கதாபாத்திரத்தை சுற்றி நடப்பதுபோல் இந்தப் படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

    திரில்லர் கதையைக் கொண்ட இந்த படம் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என 4 மொழிகளில் தயாராகிறது. வி.கே.பிரகாஷ் இயக்கும் இதற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரசூல் பூக்குட்டி சவுண்ட் டிசைனராக பணியாற்றுகிறார்.

    இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை, நடிகர் துல்கர் சல்மான் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு திரைப்படக் குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.



    துல்கரும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓரின சேர்க்கையாளர், ஒரே ஒரு கதாபாத்திரம் என்று வித்தியாசமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார் நித்யாமேனன். #Praana #NithyaMenon

    ×