search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "driver death"

    திண்டுக்கல் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற டிரைவர் ரெயில் மோதி பரிதாபமாக பலியானார்

    குள்ளனம்பட்டி :

    திண்டுக்கல் அருகே எருமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 48).டிரைவர்.இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று இரவு மதுபோதையில் திண்டுக்கல்-ஈரோடு ரெயில் நிலையத்திற்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், எஸ்.பி தனிப்பிரிவு காவலர் ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருத்தாசலம் புறவழிச்சாலையில் உடல் அழுகிய நிலையில் டிரைவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் புறவழிச்சாலையோர பள்ளத்தில் நேற்று அழுகிய நிலையில் ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது பற்றி விருத்தாசலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது, சப்-இன்ஸ்பெக்டர் வீரசேகரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர், மணவாளநல்லூரை சேர்ந்த கல்யாணசுந்தரம்(வயது 60) என்பதும், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர் என்பதும், தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், நரம்பு தளர்ச்சி காரணமாக கல்யாணசுந்தரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும், கடந்த 12-ந் தேதி வீட்டில் இருந்து காரில் புறப்பட்ட அவர், புறவழிச்சாலையில் உள்ள ஒரு சர்வீஸ் கடையில் காரை பழுதுநீக்கம் செய்ய நிறுத்திவிட்டு மாயமானதும் தெரியவந்தது.

    இது குறித்து கல்யாணசுந்தரத்தின் மகன் கணேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் புறவழிச்சாலையை கடந்தபோது, அவ்வழியே சென்ற வாகனம் மோதி கல்யாணசுந்தரம் இறந்தாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
    சேலம் அருகே வயலில் உழுதபோது டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள மாரமங்கலத்துப்பட்டியை சேர்ந்தவர் சின்ராஜ் என்ற முத்துசாமி (வயது 55). டிராக்டர் டிரைவரான இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள விவசாய வயலில் மண்ணை கொட்டிக் கொண்டிருந்தார்.

    பின்னர் அவர் அருகே உள்ள வயலில் மண்ணை கொட்டுவதற்காக டிராக்டரை வரப்பில் ஏற்றினார். அந்த சமயம் எதிர்பாராத விதமாக டிராக்டர் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் சின்ராஜ் டிராக்டரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த இரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சின்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சின்ராஜூக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
    கேரளாவில் சாலை சீரமைப்பின்போது பொக்லைன் எந்திரம் மீது பாறை விழுந்து தமிழக டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொழிஞ்சாம்பாறை:

    கிருஷ்ணகிரி நகர் பகுதியை சேர்ந்தவர் சுனில்குமார் (வயது 30). பொக்லைன் ஆபரேட்டர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் பெய்த பலத்த மழையால் சேதம் அடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிக்கு சுனில்குமார் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கொண்டோட்டி பகுதிக்கு சென்றார்.

    மலைப்பகுதியான அங்கு ஜே.சி.பி. எந்திரம் மூலம் சாலையோரத்தில் உள்ள ஒரு பாறையை அகற்ற முயன்றார். அப்போது உயரத்தில் இருந்த மலையின் ஒரு பகுதி பெயர்ந்து ஜே.சி.பி. எந்திரத்தின் மீது விழுந்தது.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் கொண்டோட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நீண்ட நேரம் போராடியபோதும் மீட்க முடியவில்லை. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுனில்குமாரை மீட்டு கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து கொண்டோட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரவாயலில் லாரி மீது லோடு வேன் மோதலில் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    கோவையை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 25) டிரைவர். இவர் பழனியில் இருந்து மதுரவாயலுக்கு பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியை ஏற்றிக் கொண்டு லோடு வேனில் வந்து கொண்டிருந்தார்.

    இன்று அதிகாலை 5 மணி அளவில் மதுரவாயல் பைபாஸில் வந்தபோது கட்டுபாட்டை இழந்த லோடு வேன் திடீரென முன்னால் சென்ற டேங்கர் லாரியின் பின்பக்கத்தில் வேகமாக மோதியது.

    இதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி டிரைவர் கோபிநாத் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் மினி லாரியில் இருந்த கிளீனர் மூர்த்தி அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

    இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் லோடு வேனை ஓட்டிய போது டிரைவர் தூங்கியதால் விபத்து நடந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

    சென்னை ஷெனாய் நகரை சேர்ந்தவர் கண்ணியப்பன் (வயது 60). இவர் மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து 2 வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றவர்.

    நேற்று மாலை தன் நண்பர் ஒருவருடன் காரில் ஊத்துக்கோட்டையில் உள்ள உறவினர்களை சந்திக்க வந்தார். பின்னர் அவர்கள் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றார்.

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள எல்லம்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிரே பெரியபாளையத்தில் இருந்து ஊத்துக்கோட்டை நோக்கி புளி மூட்டைகளுடன் வந்த லாரி திடீரென மோதியது.

    இதில் கண்ணியப்பன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

    கண்ணியப்பனுடன் வந்த அவரது நண்பர் படுகாயம் அடைந்தார். அவருக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த விபத்து காரணமாக பெரியபாளையம் - ஊத்துக்கோட்டை சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்போது நெரிசலில் சிக்கி நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் தாராட்சியை சேர்ந்த நவீன், பிரவீன், வைதேகி ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    திருவெண்ணெய்நல்லூர் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார்.
    அரசூர்: 

    திருச்சி எடமலைப்பட்டி புதூர் அன்பிலார் நகரை சேர்ந்தவர் செல்வம் மகன் ராஜேஷ் (வயது 33). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கூரியர் நிறுவனத்தில் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ராஜேஷ் கூரியர் நிறுவனத்துக்கான பார்சல்களை வேனில் ஏற்றிக் கொண்டு திருச்சியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார். அந்த வேன் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அடுத்த இருவேல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னாள் சென்ற லாரியை ராஜேஷ் முந்தி செல்ல முயன்றார். அந்த சமயத்தில் வேன் எதிர்பாரதவிதமாக லாரி மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் வேனின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தது. வேன் டிரைவர் ராஜேஷ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்துபற்றி தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தியதோடு, விபத்தில் பலியான ராஜேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    சிங்காரப்பேட்டை அருகே கட்டுபாட்டை இழந்த லாரி சாலையோர புளிய மரத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே டிரைவர் பலியானார்.
    ஊத்தங்கரை:

    விழுப்புரத்தில் இருந்து சவுக்கு மரம் லோடு ஏற்றி கொண்டு லாரி ஒன்று பெங்களூருக்கு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை விழுப்புரம் மாவட்டம், தேனிப்பட்டியை சேர்ந்த தமிழ் வாணன் (வயது34) என்பவர் ஓட்டி வந்தார்.

    நேற்றிரவு கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அடுத்துள்ள ஆண்டியூர் பகுதியில் சென்ற போது லாரி டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையோர புளிய மரத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தமிழ்வாணன் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிங்காரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்தில் பலியான தமிழ்வாணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    லாலாப்பேட்டை அருகே கார்கள் மோதலில் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லாலாப்பேட்டை:

    திருச்சி நெ.1 டோல்கேட் பிச்சாண்டார்கோவிலை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 60), கார் டிரைவர். இவர் நேற்றிரவு காரில் திருச்சி- கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    லாலாப்பேட்டை பகுதியில் நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டினை இழந்தது. இதில் எதிரே அடுத்தடுத்து வந்த 2 கார்கள் மீது பத்மநாபன் சென்ற கார் மோதியது.

    இந்த விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி பத்மநாபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அறிந்த லாலாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் உயிரிழந்த பத்மநாபன் உடலைமீட்டு குளித்தலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் காயமடைந்த 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    வேலூர் அருகே விபத்தில் ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் அலுமேலு ராங்கபுரம் குளத்துமேட்டை சேர்ந்தவர் முனிவேல் (வயது 37) ஆட்டோ டிரைவர். இவர் நேற்றிரவு வீட்டின் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே வந்த மற்றோரு பைக் மோதியது. இதில் முனிவேல் படுகாயமடைந்தார். அவரை மீட்ட உறவினர்கள் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்திருந்தனர். அங்கு முனிவேல் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தொப்பூர் கணவாய் பகுதி அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தருமபுரி:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே முத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் அர்ஜுனன் (வயது 36), பச்சமுத்து (38). டிரைவர்களான இருவரும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கரூருக்கு நெல்லை அரிசியாக மாற்றும் இயந்திரத்தை ஒரு லாரியில் ஏற்றி புறப்பட்டு வந்தனர். 

    அந்த லாரி நேற்று பகல் 1.30 மணியளவில் தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் அருகே வந்தது. அப்போது அங்கு தொடர் விபத்துக்கள் நடைபெறும் இடமான ஆஞ்சநேயர் கோவில் அருகே  வளைவு பகுதியில் வண்டி திரும்பும் போது வண்டி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியது. 

    இந்த விபத்தில் அர்ஜுனனுக்கு காயம் ஏற்பட்டது. பச்சமுத்து காயம் இன்றி உயிர் தப்பினர். காயமடைந்த அர்ஜுனனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு இரவு 7 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    எட்டயபுரம் அருகே லாரி கவிழ்ந்து டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    எட்டயபுரம்:

    மதுரையில் இருந்து மூலிகை செடிகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி தூத்துக்குடிக்கு சென்றுகொண்டிருந்தது. லாரியை நெல்லையை அடுத்த மானூரை சேர்ந்த மோகன்(வயது 52) என்பவர் ஓட்டினார். லாரி எட்டயபுரம் அருகே உள்ள கோடாங்கிபட்டி விலக்கு பகுதியில் பாலத்தில் சென்றபோது பின்னால் மதுரையில் இருந்து காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு ஒரு வேன் தூத்துக்குடி நோக்கி வந்தது.

    வேனை மதுரை கன்னியம்பட்டியை சேர்ந்த பிரகாசம்(31) என்பவர் ஓட்டினார். எதிர்பாராதவிதமாக லாரியின் பின்னால் வேன் பயங்கரமாக மோதியது. இதில் லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பாலத்தில் இருந்து ரோட்டோரத்தில் கவிழ்ந்தது.

    டிரைவர் மோகன் லாரிக்கு அடியில் சிக்கினார். இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து மாசார்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பலியான மோகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து பற்றி போலீசார் வழக்குபதிந்து வேன் டிரைவர் பிரகாசத்தை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    போரூர் அருகே கார் மோதி வேன் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் சக்கரபாணி (50). தனியார் கேட்டரிங் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

    சக்கரபாணி மினி வேன் மூலம் மாங்காட்டில் நடைபெறும் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு சமையல் பொருட்களை இறக்கி விட்டு திரும்பும் வழியில் அதிகாலை 1.30 மணி அளவில் போரூர் தனியார் மருத்துவமனை அருகில் வேனை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வேனை நோக்கி வந்தார்.

    அப்போது சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக சக்கரபாணி மீது மோதியது இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சக்கரபாணி பரிதாபமாக இறந்தார்.

    பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் அசோக் நகரைச் சேர்ந்த விஜயன் (37 என்பவரை கைது செய்தனர்.

    ×