search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் அருகே வயலில் உழுதபோது டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி
    X

    சேலம் அருகே வயலில் உழுதபோது டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி

    சேலம் அருகே வயலில் உழுதபோது டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள மாரமங்கலத்துப்பட்டியை சேர்ந்தவர் சின்ராஜ் என்ற முத்துசாமி (வயது 55). டிராக்டர் டிரைவரான இவர் நேற்று அந்த பகுதியில் உள்ள விவசாய வயலில் மண்ணை கொட்டிக் கொண்டிருந்தார்.

    பின்னர் அவர் அருகே உள்ள வயலில் மண்ணை கொட்டுவதற்காக டிராக்டரை வரப்பில் ஏற்றினார். அந்த சமயம் எதிர்பாராத விதமாக டிராக்டர் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் சின்ராஜ் டிராக்டரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த இரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சின்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சின்ராஜூக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
    Next Story
    ×