search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lorry van crash"

    திருவெண்ணெய்நல்லூர் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார்.
    அரசூர்: 

    திருச்சி எடமலைப்பட்டி புதூர் அன்பிலார் நகரை சேர்ந்தவர் செல்வம் மகன் ராஜேஷ் (வயது 33). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கூரியர் நிறுவனத்தில் வேன் டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ராஜேஷ் கூரியர் நிறுவனத்துக்கான பார்சல்களை வேனில் ஏற்றிக் கொண்டு திருச்சியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார். அந்த வேன் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அடுத்த இருவேல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னாள் சென்ற லாரியை ராஜேஷ் முந்தி செல்ல முயன்றார். அந்த சமயத்தில் வேன் எதிர்பாரதவிதமாக லாரி மீது பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் வேனின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தது. வேன் டிரைவர் ராஜேஷ் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்துபற்றி தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தியதோடு, விபத்தில் பலியான ராஜேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்தால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    வேப்பூர் அருகே லாரி மீது பெரம்பலூர் வேன் மோதியதில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 13 பேர் படுகாயமடைந்தனர்.
    வேப்பூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குறும்பலூர்பாளையத்தை சேர்ந்தவர் நல்லுசாமி(வயது 40). இவர் பெரம்பலூரில் சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் தனது வேனில் சென்னைக்கு புறப்பட்டார். அப்போது அவர் பெரம்பலூர் பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் 14 பேரை தனது வேனில் ஏற்றிக்கொண்டார்.

    நள்ளிரவு 1 மணியளவில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கொளப்பாக்கம் அருகே வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது கொளப்பாக்கம் கிராமத்தில் இருந்து வந்த லாரி ஒன்று திடீரென திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றது. இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக லாரி மீது வேன் பயங்கரமாக மோதியது. இதில் வேனின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.

    இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த சென்னை ஆழ்வார்நகரை சேர்ந்த பிரிட்டோ மனைவி தேன்மொழி(40) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் வேன் டிரைவர் நல்லுசாமி, பெரம்பலூர் அருகே கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த நிஜாமுதீன், விஜயா, முகமது இனியா, லாடபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன், பெரம்பலூரை சேர்ந்த செல்வகுமாரி, சென்னை ஈக்காட்டு தாங்கலை சேர்ந்த சாரதா, ஆகாஷ், வேப்பந்தட்டையை சேர்ந்த அனிதா, சென்னை மகாத்மா காந்தி நகரை சேர்ந்த ஜெனிதா உள்பட 14 பேர் படுகாயமடைந்தனர்.

    இவர்களை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நல்லுசாமி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 13 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் பலியான தேன்மொழியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×