search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cuddalore"

    • போலீசார் ரகசியமாக கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது கையில் துப்பாக்கியுடன் வந்த ஒரு கும்பலை சுற்றி வளைத்து போலீசார் பிடித்தனர்.
    • நாடுகாணி வனச்சரகர் வீரமணி உள்ளிட்ட வனத்துறையினர் மற்றும் வருவாய், போலீசார் இணைந்து கைது செய்யப்பட்ட புஷ்பராஜ் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.

    ஊட்டி:

    கூடலூர் தாலுகா மரப்பாலம் அருகே பால்மேடு பகுதியில் ஒரு கும்பல் வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக தேவாலா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து கடந்த 3- ம் தேதி நள்ளிரவு போலீசார் ரகசியமாக கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது கையில் துப்பாக்கியுடன் வந்த ஒரு கும்பலை சுற்றி வளைத்து போலீசார் பிடித்தனர்.

    தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த 2 மூட்டைகளை சோதனை செய்த போது கடமான் இறைச்சி 50 கிலோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார். அப்போது கள்ளத்துப்பாக்கி மூலம் கடமானை வேட்டையாடியது தெரிய வந்தது.

    மேலும் அவர்களிடமிருந்து துப்பாக்கி தோட்டாக்கள், கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பால் மேட்டைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 38), ஓ வேலி பேரூராட்சி பெரிய சூண்டியைச் சேர்ந்த மைக்கேல் (30) அருண் (26) மற்றும் சூண்டி மரப்பாலத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் (33) ஆகியோரை கைது செய்தனர்.

    மோப்ப நாயுடன் வீட்டில் சோதனை பின்னர் போலீசார் பறிமுதல் செய்த கடமான் இறைச்சியை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து நாடுகாணி வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் உத்தரவின் பேரில் உதவி வன பாதுகாவலர்கள் சீனிவாசன், ஷர்மிலி, நாடுகாணி வனச்சரகர் வீரமணி உள்ளிட்ட வனத்துறையினர் மற்றும் வருவாய், போலீசார் இணைந்து கைது செய்யப்பட்ட புஷ்பராஜ் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது முதுமலை வனத்துறைக்குச் சொந்தமான மோப்ப நாயும் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டது. தொடர்ந்து வீட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள், 250 கிராம் வெடி மருந்து பொருட்கள், தலையில் அணியக்கூடிய டார்ச் லைட் ஆகியவற்றை வனத்துறையினர் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

    பின்னர் போலீசாரிடம் வனத்துறையினர் ஒப்படைத்தனர். தொடர்ந்து வன குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கவியப்பா ஓடிச் சென்று புலியை விரட்டினார். கண்ணிமைக்கும் நேரத்தில் புலி பசுமாட்டை கொன்றுவிட்டு கவியப்பா மீது பாய்ந்தது.
    • தொழிலாளிகளை தாக்கிய புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்

    ஊட்டி:

    கர்நாடக மாநிலம் கோபால்சாமி பேட்டையை சேர்ந்தவர் கவியப்பா (வயது 58). இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் மாடுகள் மேய்க்க சென்றார்.

    அப்போது லக்கிம்புரா வனத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாட்டை புலி ஒன்று கடித்தது. இதைக் கண்ட கவியப்பா ஓடிச் சென்று புலியை விரட்டினார். கண்ணிமைக்கும் நேரத்தில் புலி பசுமாட்டை கொன்றுவிட்டு கவியப்பா மீது பாய்ந்தது.

    இதில் வலது கண் மற்றும் முகம் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அதிர்ஷ்டவசமாக புலியிடம் இருந்து கவியப்பா உயிர் தப்பினார். மேலும் புலியும் அங்கிருந்து சென்றது. பின்னர் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்து கவியப்பாவை மீட்டு மைசூரு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதனிடையே அதே நாளில் மாலை நேரத்தில் மற்றொரு தொழிலாளி ராஜேஷ் என்பவரையும் புலி தாக்கியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். தொடர்ந்து பொதுமக்கள் மைசூரு அரசு ஆஸ்பத்திரியில் அவரை சிகிச்சைக்காக சேர்த்தனர். இதைத்தொடர்ந்து புலியைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்று வட்டார கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் போராட்டம் நடத்தவும் முயற்சி செய்தனர்.

    இதனால் சம்பவ இடத்துக்கு 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு புலியை தேடும் பணி நேற்று நடைபெற்றது. அப்போது ஒரு கும்கி யானை மீது பந்திப்பூர் புலிகள் காப்பக கால்நடை டாக்டர் வெங்கடேஷ் மயக்க ஊசி செலுத்தும் துப்பாக்கியுடன் அமர்ந்து இருந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்.

    பின்னர் நீண்ட நேரத்துக்கு பிறகு தனியார் விவசாய நிலத்தில் பதுங்கியிருந்த புலியை வனத்துறையினர் கண்டனர். தொடர்ந்து கால்நடை டாக்டர் வெங்கடேஷ் புலி மீது மயக்க ஊசியை செலுத்தினார். 10 வயது ஆண் புலி சிக்கியது இதனால் வலியால் புலி அங்கிருந்து சிறிது தூரம் ஓடி மயங்கி விழுந்தது.

    அதைத்தொடர்ந்து வனத்துறையினர் ராட்சத வலைக்குள் புலியை அடைத்து கொட்டும் மழையில் தூக்கிச் சென்றனர். பிடிபட்ட ஆண் புலிக்கு சுமார் 10 வயது இருக்கும் என கூறப்படுகிறது. பின்னர் புலியை கூண்டில் அடைத்து மைசூரு வன உயிரின மறுவாழ்வு சிகிச்சை மையத்துக்கு கொண்டு சென்றனர். இது குறித்து கர்நாடக வனத்துறையினர் கூறும் போது, ஆண் புலியின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருக்கிறது. இதனால் வேட்டையாடும் திறனை இழந்துள்ளதால் மாடு, மனிதர்களை தாக்கி வருகிறது. இதைத் தொடர்ந்து அதைப் பிடித்து மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • கூடலூா் மற்றும் சுற்றுவட்டராப் பகுதியில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.
    • மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அந்த பகுதியே இருளாக மாறியது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், கூடலூா் மற்றும் சுற்றுவட்டராப் பகுதியில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.

    நேற்று மழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழைக்கு ஹெல்த்கேம்ப் காவலா் குடியிருப்பு அருகில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து மின் கம்பி மீது விழுந்தது. இதில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.

    இதன் காரணமாக அப்பகுதிகள் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அந்த பகுதியே இருளாக மாறியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மின் ஊழியா்கள் மின் கம்பிகளை சீரமைத்தனா். ஊட்டி குன்னூரிலும் மழை பெய்து வருகிறது. இதனால் கடும் குளிர் நிலவுகிறது

    • கடந்த மாதம் கோடை சீசன் என்பதால் தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் இயக்கப்பட்டது.
    • நடுவட்டம் தொடங்கி கூடலூர் வரை பள்ளதாக்கான சாலை என்பதால் பெரும்பாலான வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது.

    ஊட்டி:

    கேரளா-கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சென்று திரும்புகின்றனர். கடந்த மாதம் கோடை சீசன் என்பதால் தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் இயக்கப்பட்டது.

    அப்போது மலைப்பிரதேசத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பல டிரைவர்கள் பின்பற்றாததால் விபத்துகள் அதிகரித்தது. ஊட்டியில் இருந்து வரும் போது நடுவட்டம் தொடங்கி கூடலூர் வரை பள்ளதாக்கான சாலை என்பதால் பெரும்பாலான வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது.

    இதனால் மலைப்பாதையில் 2-வது கியரை பயன்படுத்தி வாகனங்களை ஓட்ட வேண்டும் என போக்குவரத்து போலீசார் சாலையோரம் நின்று வெளிமாநில டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கி வந்தனர். இதனால் விபத்துகள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கூடலூர்-கேரள சாலைகள், ஊட்டி செல்லும் சாலை ஆகிய இடங்களில் கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகி வருகிறது. சமீபத்தில் ஸ்ரீமதுரையில் இருந்து கூடலூர் நோக்கி வந்த ஒரு வேன் நம்பாலக்கோட்டை என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    அதிர்ஷ்டவசமாக வேனை ஓட்டி வந்த டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக கேரள மாநிலம் சுல்தான்பத்தேரி சென்று கொண்டிருந்த ஒரு கார் 2-ம் மைல் பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    அப்பகுதியில் மின்கம்பம் இருந்ததால் அதில் கார் தடுத்து நின்றது. இதனால் கார் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கடும் நடவடிக்கை இதேபோல் பல இடங்களில் வாகனங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருகின்றன. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறும்போது, மலைப்பாதையில் வாகனங்களை அதிவேகத்தில் இயக்கக்கூடாது. மேலும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    • பொது மக்கள் கோரிக்கைகளை மனுக்களாக சமர்ப்பிக்கலாம்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி தாசில்தார் காயத்ரி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோத்தகிரி தாலுகா வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட கோத்தகிரி, கீழ் கோத்தகிரி, நெடுகுளா உள் வட்டத்திற்கான ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) முகாம் வருகிற 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 3 நாட்கள் கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதற்கு குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி தலைமை தாங்குகிறார்.

    28-ந் தேதி கோத்தகிரி, 29-ந் தேதி கோத்தகிரி, 30 ந் தேதி கோத்தகிரி சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படும். பெறப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற உள்ளதையொட்டி ஊழியர்கள் ஆவணங்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கூடலூர் தாசில்தார் சித்தராஜ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப் பில் கூறப்பட்டு உள்ளதாவது:

    கூடலூர் தாலுகாவில் பசலி 1431-க்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) தாலுகா அலுவலகத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் தேவர்சோலை உள்வட்டத்துக்கும், 29-ந் தேதி கூடலூர் உள்வட்டத்துக்கும் ஜமாபந்தி நடக்கிறது. கூடலூர் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் தலைமை தாங்குகிறார். எனவே, பொது மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக சமர்ப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.
    • விபத்தில் பட்டாசு ஆலையின் அறைகள் தரைமட்டமானது.

    கடலூர் எம்.புதூரில் சிறிய நாட்டு பட்டாசு தயாரிப்பு ஆலை செயல்பட்டு வந்தது.

    இங்கு ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    வாணவேடிக்கை பட்டாசுகள் வெடித்துச் சிதறி 3 பேர் உயிரிழந்த நிலையில் 2 பேர் காயமடைந்துள்ளனர்.

    விபத்தில் பட்டாசு ஆலையின் அறைகள் தரைமட்டமானது.

    • கூடலூர் அருகே நள்ளிரவில் குடியிருப்புக்குள் யானை புகுந்தது.
    • தெழிலாளி வீட்டை அந்த யானை சேதப்படுத்தியது.

    கூடலூர், ஜூன்.11-

    கூடலூர் தாலுகா நாடுகாணி அருகே பொன்னூர் பகு தியை சேர்ந்தவர் சிரஞ்சீவி. தொழிலாளி. இவர் தனது குடும்பத்தினருடன் இரவு தூங்கிக் கொண்டிருந்தார்.

    அப்போது ஊருக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று வீடுகளை முற்றுகையிட்டது. தொடர்ந்து சிரஞ்சீவி வீட்டின் பின்பக்க சுவரை உடைத்து சேதப்படுத்தியது. இந்த சமயத்தில் சத்தம்கேட்டு சிரஞ்சீவி குடும்பத்தினர் எழுந்தனர்.

    தொடர்ந்து கூச்ச லிட்டதால் அப்பகுதி மக்கள் விரைந்து வந்து காட்டு யானையை விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகு றித்து அப்பகுதி மக்கள் கூறும் போது, காட்டு யானை சேதப்படுத்திய வீட்டை சீரமைக்க வனத்துறையினர் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    • ஏ.குச்சிபாளையம் கிராமத்தில் கெடிலம் ஆற்றில் குளித்த 7 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.
    • அரசு சார்பில் அமைச்சர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவி வழங்கினர்.

    கடலூர்:

    கடலூர்அருகே ஏ. குச்சிபாளையம் கிராமத்தில் கெடிலம் ஆற்றில் குளித்த 7 பேர் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. இதனை தொடர்ந்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.

    மேலும் அரசு சார்பில் அமைச்சர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து நிவாரண உதவி வழங்கினர். அ.தி.மு.க. சார்பில் ஆறுதல் தெரிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயாகாந்த கடலூர் மாவட்டத்துக்கு வந்தார்.முதல் கட்டமாக அயன் குறிஞ்சிப்பாடிக்கு சென்று அவர் ஆறுதல் கூறினார். அதன்பினனர் ஏ.குச்சிபாளையத்துக்கு வந்தார். அங்கு ஆற்றில் மூழ்கி பலியானவர்களுக்கு குடும்பத்துக்கு பிரேமலதா ஆறுதல் தெரிவித்தார். அப்போது அவர்கள்பிரேமலதா கண்ணீருடன் தங்களது குடும்ப நிலவரங்களை தெரிவித்தனர். பின்னர் பிரேமலதா நிவாரண நிதி மற்றும் பொருட்களை வழங்கினார்.

    அவருடன் மாவட்ட செயலாளர் சிவகொழுந்து, அவைதலைவர் ராஜாராம், ஒன்றிய குழு துணை தலைவர் அய்யனார், நகர செயலாளர்கள் சரவணன், கஜேந்திரன் மற்றும் பலர் சென்றனர்.

    • அத்தியாவசியப் பொருட்களை பெறுவதற்குரிய அங்கீகாரச் சான்று கோரி மனுக்களை அளிக்கலாம்.
    • கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம்

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-

    கடலூர் மாவட்டத்தில் நாளை மறுதினம் (11- ந்தேதி) கீழ்கண்ட வட்டங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

    பொதுவிநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் கடலூர் தோட்டப்பட்டு, பண்ருட்டி சிறுகிராமம், குறிஞ்சிப்பாடி ஆதிநாராய–ணபுரம் (கிழக்கு), சிதம்பரம் கிள்ளை (தெற்கு), காட்டுமன்னார்கோயில் குமாரகுடி, புவனகிரி சி. புதுப்பேட்டை, விருத்தாசலம் மாத்தூர், திட்டக்குடி எறையூர், வேப்பூர் மண்ணம்பாடி, திருமுட்டம் சோழதரம் கிராமங்களில் வசித்து வரும் பொது மக்கள் தங்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை நகல் குடும்ப அட்டை, கைப்பேசி எண் பதிவு மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும்.

    மேற்குறிப்பிட்ட கிராமங்களில் கைரேகையினை பதிவு செய்ய இயலாத 65 வயதிற்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் 60 சதவீதம் ஊனத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் நியாய விலைக் கடைகளுக்கு சென்று பொது விநியோகத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை பெறுவதற்குரிய அங்கீகாரச் சான்று கோரி மனுக்களை அளிக்கலாம்.

    கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம்.மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுப்பட்டு இருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்கு மனுக்கள் அனுப்பலாம் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களையும் அளிக்க–லாம்.

    தனியார் சந்தைகளில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய மனுக்களை முகாம்களில் அளித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள். மேற்படி முகாம் நடைபெறும் இடங்களில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை–களான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடை பிடித்தல் மற்றும் கிருமி நாசினி பயன்படுத்திட வேண்டும்.

    இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

    • கொள்ளிடம் அருகே பழைய பாளையம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் இயங்கி வருகிறது.
    • ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் கேபிள் வயர் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழைய பாளையம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் இயங்கி வருகிறது.

    இந்த நிறுவன வளாகத்தில் விலை உயர்ந்த கேபிள் வயர்கள் மற்றும் இரும்பு பொருட்கள் உள்ளன.

    இங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள கேபிள் வயரை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள இடத்திற்குள் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை வடக்கு தெருவைச் சேர்ந்த சத்யன் (வயது 24), கடலூர் சுனாமி நகர் வடக்கு தெருவை சேர்ந்த மதன் (28), கொள்ளிடம் அருகே உள்ள வழுதலைகுடி கிராமம் முத்து (26), செல்வராஜ்( 55) ஆகிய 4 பேரும் புகுந்து கேபிள் வயர்களை திருடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    அப்போது அதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அந்த 4 பேரையும் பிடித்து புதுப்பட்டினம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் மேற்கண்ட நான்கு பேரையும் கைது செய்து அவர்கள் பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    • ஆறு, குளங்களில் குளிக்கச் செல்வோரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என முதலமைச்சர் வேண்டுகோள்
    • ஆழமான ஆற்றுப்பகுதிகள் மற்றும் குளங்களுக்கு அருகே தேவையான எச்சரிக்கைப் பலகைகளை வைக்கவேண்டும்

    சென்னை:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இன்று கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழ் அருங்குணம் கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றங்கரையில் 7 சிறுமியர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நாம் அனைவருக்கும் மிகுந்த மனவேதனையை அளித்தது. ஆறு, ஏரி மற்றும் குளங்கள் போன்ற நீர்நிலைகளில் குளிக்கச் செல்லும் சிறுவர் சிறுமியர் மற்றும் இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று, சம்பந்தப்பட்ட குடும்பங்கள் வாழ்நாள் முழுவதும் தீரா துயரில் ஆழ்ந்துவிடும் நிலையும் ஏற்பட்டு விடுகிறது. அது மட்டுமின்றி, இத்தகைய உயிரிழப்புகள் நம் சமுதாயத்திற்கும், ஒரு பேரிழப்பாக அமைந்து விடுகிறது. எனவே, இதில் நாம் அனைவரும் தீவிர அக்கறையும் கவனமும் செலுத்தி, இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் ஏற்படாத வண்ணம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    குறிப்பாக, கிராமப்புற பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் சிறுவர் சிறுமியர் மற்றும் இளைஞர்கள் குளிக்கச் செல்லும் போது, பெற்றோர்கள் அல்லது பெரியோர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும், அவர்கள் பாதுகாப்பான முறையில் நீர்நிலைகளைப் பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

    "வந்தபின் தவிப்பதை விட வருமுன் காப்பது மேல்" என்பதை நாம் அறிவோம். இது போன்ற துயர நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடக்காமல் தடுப்பதற்கு சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் பங்குண்டு. குறிப்பாக, ஆறுகள், குளங்கள் உள்ள நீர்நிலைப் பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெரியவர்கள், இளைஞர்கள், உள்ளாட்சி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், காவல் துறையினர், அனைவரும் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குறிப்பாக சிறுவர் சிறுமியர் மற்றும் இளைஞர்களுக்கு நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய ஆபத்துகளை எடுத்துச்சொல்வதோடு, அவ்வாறு யாரேனும் பாதிக்கப்பட்டால், உடனடியாக முதலுதவி அளிப்பது குறித்த பயிற்சிகளும் வழங்கி, பொதுமக்கள் நீர்நிலைகளைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவது குறித்து விளக்கிச் சொல்லவேண்டும் என்றும் இந்த தருணத்தில் அன்போடும், அக்கறையோடும் கேட்டுக் கொள்கிறேன்.

    ஆழமான ஆற்றுப்பகுதிகள் மற்றும் குளங்களுக்கு அருகே தேவையான எச்சரிக்கைப் பலகைகளையும், தடுப்புகளையும் வைக்கப்படுவதை உள்ளாட்சி அமைப்புகளும், பொதுப்பணித் துறையும் மேற்கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.

    வாழவேண்டிய இளந்தளிர்கள் இவ்வாறு இழக்கப்படுவது இனியாவது தடுக்கப்படும் வகையில், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என உறுதி ஏற்குமாறும் உங்கள் ஒவ்வொருவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் கூறி உள்ளார்.

    • உயிரிழந்தோரில் ஐந்து பேர் குச்சிப்பாளையம் கிராமத்தையும், இருவர் அயன் குறிஞ்சிப்பாடி கிராமத்தையும் சேர்ந்தவர்கள்.
    • உயிரிழந்தவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு முதல்வர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழ் அருங்குணம் கிராமத்தில் உள்ள கெடிலம் ஆற்றங்கரையில் இன்று 12.45 மணியளவில் குளிக்கச் சென்ற சங்கவி (வயது 18) த/பெ. சங்கர், பிரியா (வயது 19) த/பெ.குணாளன், மோனிஷா (வயது 16) த/பெ. அமர்நாத், நவநீதம் (வயது 20) த/பெ. மோகன், சுமிதா (வயது 18), த/பெ. முத்துராமன், காவியா (எ) திவ்யதர்ஷிணி (வயது 10), த/பெ. ராஜ்குரு, மற்றும் பிரியதர்ஷிணி (வயது 15), த/பெ. ராஜ்குரு ஆகிய 7 பேர் குளிக்கும் இடத்தில் அதிக அளவில் பள்ளம் இருந்ததால், அந்தப் பள்ளப் பகுதியில் உள்ள ஆற்று மணலில் சிக்கி எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

    உயிரிழந்தோரில் ஐந்து பேர் குச்சிப்பாளையம் கிராமத்தையும், இருவர் அயன் குறிஞ்சிப்பாடி கிராமத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த துயர சம்பவத்தைக் கேள்வியுற்று, மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் உயிரிழந்த ஏழுபேரின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக தலா ஐந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

    ×