search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Power supply cut off due to rain."

    • கூடலூா் மற்றும் சுற்றுவட்டராப் பகுதியில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.
    • மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அந்த பகுதியே இருளாக மாறியது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், கூடலூா் மற்றும் சுற்றுவட்டராப் பகுதியில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.

    நேற்று மழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழைக்கு ஹெல்த்கேம்ப் காவலா் குடியிருப்பு அருகில் இருந்த மரம் வேரோடு சாய்ந்து மின் கம்பி மீது விழுந்தது. இதில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.

    இதன் காரணமாக அப்பகுதிகள் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அந்த பகுதியே இருளாக மாறியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மின் ஊழியா்கள் மின் கம்பிகளை சீரமைத்தனா். ஊட்டி குன்னூரிலும் மழை பெய்து வருகிறது. இதனால் கடும் குளிர் நிலவுகிறது

    • தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது.
    • பொதுமக்கள் அவதி

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பகுதியில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

    இதன் காரணமாக தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. மேலும் இந்த மழையின் காரணமாக மின் சப்ளை துண்டிக்கப்பட்டது.

    மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.மழையால் மின் தடை செய்யப்பட்டது என்று மின்வாரி அலுவலர்கள் கூறினர்.

    பின்னர் இரவு 8.45 மணி அளவில் மின் சப்ளை வழங்கப்பட்டது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

    ×