என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Jamabanthi"
- மக்களிடமிருந்து இலவச வீட்டு மனைப்பட்டா, பட்டா மாற்றம் உள்ளிட்ட 302 பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
- மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு 2 நாட்களில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை டவுன் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 24-ந் தேதி முதல் தொடங்கி நடை பெற்று வருகிறது.
நிகழ்ச்சிக்கு டவுன் தாசில்தார் வைகுண்டம் தலைமை தாங்கினார். வருவாய் தீர்வாய அலுவலராக மாவட்ட வழங்கல் அலுவலர் வள்ளிக்கண்ணு நியமிக்கப்பட்டு மனுக்களை பெற்றார்.
நிகழ்ச்சியில் மக்களிடமிருந்து இலவச வீட்டு மனைப்பட்டா, பட்டா மாற்றம் உள்ளிட்ட 302 பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
இதில் 10 பேருக்கு முதியோர் உதவிதொகை பெறுவதற்கான உடனடி ஆணைகள் வழங்கப் பட்டன. மீதமுள்ள கோரி க்கை மனுக்கள் அந்தந்த வருவாய் ஆய்வாளர்கள் மூலம் பரிசீலனை செய்யப்பட்டு 2 நாட்களில் தீர்வு காண்ப தற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் பறக்கும் படை தாசில்தார் சுப்பு, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் லட்சுமி, சிவில் சப்ளை தாசில்தார் மோகனா, துணை தாசில்தார் நாரா யணன், உமா மகேஸ்வரி, கூடுதல் துணைதாசில்தார் வேல் முருகன், கிராம உதவி யாளர்கள் சண்முக வேலு, முண்டசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.
- பொது மக்கள் கோரிக்கைகளை மனுக்களாக சமர்ப்பிக்கலாம்.
கோத்தகிரி,
கோத்தகிரி தாசில்தார் காயத்ரி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோத்தகிரி தாலுகா வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட கோத்தகிரி, கீழ் கோத்தகிரி, நெடுகுளா உள் வட்டத்திற்கான ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) முகாம் வருகிற 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை 3 நாட்கள் கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதற்கு குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி தலைமை தாங்குகிறார்.
28-ந் தேதி கோத்தகிரி, 29-ந் தேதி கோத்தகிரி, 30 ந் தேதி கோத்தகிரி சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படும். பெறப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் ஜமாபந்தி நடைபெற உள்ளதையொட்டி ஊழியர்கள் ஆவணங்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கூடலூர் தாசில்தார் சித்தராஜ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப் பில் கூறப்பட்டு உள்ளதாவது:
கூடலூர் தாலுகாவில் பசலி 1431-க்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) தாலுகா அலுவலகத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் தேவர்சோலை உள்வட்டத்துக்கும், 29-ந் தேதி கூடலூர் உள்வட்டத்துக்கும் ஜமாபந்தி நடக்கிறது. கூடலூர் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் தலைமை தாங்குகிறார். எனவே, பொது மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்